Tuesday, March 6, 2012

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா

எத்தனை கோடி இன்பம் 
வைத்தாய் இறைவா 

பாசத்தினால் இந்த உயிர்களை 
கட்டி போட்டு வைத்திருக்கிறாய்

பாசத்தினால் இந்த உயிர்கள் 
இன்ப துன்பங்களில் மாட்டிகொண்டு
மீண்டும் பாவ புண்ணியம் 
மற்றும் இறப்பு இறப்புகளில் சிக்கி 
தான் யார் என்பதை மறந்து
 படைத்த  உன்னையும் மறந்து
இந்த பூஉலகில் மீண்டும் மீண்டும் 
வந்து அல்லல்படுவதை 
கண்டு அவர்கள் மீது கருணை
கொண்டு காக்க நினைத்தால்தான்
உயிர்களுக்கு விமோசனம் பிறக்கும்
 
பாச வலையில் சிக்கிய மனிதர்களும்
சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகளும் 
அதிலிருந்து மீள்வது   மிகவும் அரிது 
 
பாசம் மனிதர்களுக்கு மட்டுமன்று 
விலங்குகளுக்கும் தானே 
கீழே பூனையின் பாசம் எப்படி?

1 comment:

  1. பாராட்டிற்கு நன்றி.
    சில மாதங்கள் எங்களோடு
    வாழ்ந்தது ஒரு பூனை கூட்டம்
    அப்போது அவைகளின் பாச மழையில்
    நாங்கள்நெகிழ்ந்து போனோம்.
    அப்போது கிளிக்கின படங்களில்
    ஒன்றுதான் இந்த படம்.
    எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும்
    அந்த பிஞ்சுகளை பார்த்துகொண்டிருந்தால்
    அனைத்தும் பறந்துவிடும்
    பிறகு அவைகளை விட்டு
    பிரிந்துவிட்டோம்.

    ReplyDelete