Tuesday, March 12, 2013

யோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (5)

யோகிகளும் 
மகரிஷிகளும் ஞானிகளும் (5)


அருள்வனத்தில் என்ன இருக்கிறது?(3)

வாக்கு தரும் ,நல் வாழ்வு தரும் 
தாழ்வு அகலும் உள்ளத்தில் 
உவகை பொங்கும் ஏகதந்தனே
என் வினைகளை களைவாய் 
ஆனந்த விநாயகா !அடிபணிந்தேன் உன்னை 
அனவரதமும் காப்பாய் என்னை  

ஓம் நற்பவீ மூர்த்தயே நமோ நமஹ 















சத்தியத்தின் வடிவமாம் அகத்தியனே 
ஒவ்வொரு கணமும் அருட்சேய்களை காத்து 
நல்வழி காட்டும் சிவமே உன் அடியொற்றி
அடி  பணிந்தோரை காக்கும் லோபாமுத்திரை அன்னையே 
எந்நாளும் மறவேன் உன் திருவடிகளை 




பக்த சிரோன்மணியாம் பிரஹலாதனை 
கொடுமை செய்து அழிக்க நினைத்த 
இரணியந்தன்னை நரசிங்கவடிவம் தாங்கி
அழித்த சத்வமூர்த்தியாம் நாரணனும் 
சம்ஹாரமூர்த்தியாம் சங்கரனும் இணைந்து 
சரபமூர்த்தியாய் காட்சி தரும் இறைவா 
பக்தியோடு உன் பாதம் பணிகின்றோம் 
உன் திருவடிகளே எங்களுக்கு காப்பு. 



























அருள்மாரி பொழிகின்ற கருமாரி அன்னையே
அருள்மாமணியின் அருள்வாக்கில் நடமிடும் நாமகளே
அச்சம் தவிர்த்து அமைதி  தந்து ஆனந்த வாழ்வு 
தரும் ஆதி சக்தியே அடைக்கலம் அடைந்தேன் 
உன் திருவடிகளை என்னை ஆதரித்தருள்வாயே 

(இன்னும் வரும்) 
இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/

No comments:

Post a Comment