Thursday, February 27, 2014

பசுமைதான் கடவுள்

பசுமைதான் கடவுள் 





கடவுள் எங்கே என்று
எல்லோரும் தேடுகிறார்கள்.

கடவுள் நம் முன்னேதான் எப்போதும்
காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றான்

அவன் எப்போதும் நம்மோடுதான்
இருந்துகொண்டிருக்கின்றான்

இருந்தும் நாம் அவனை
அறிந்துகொள்ள இயலவில்லை

ஏனென்றால் நம் மனதில் கடவுளைப்
பற்றிய உண்மை வடிவம் இல்லை.

பல்லாயிரம் ஆண்டுகளாக நம் மனதில்
அவரைப் பற்றிய தவறான தகவல்கள்
பதிந்து கிடப்பதால் நம்மால்
எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

எவ்வளவோ ஞானிகள் அவனைப் பற்றி
உண்மைகளை வெளிப்படுத்தி இருந்தும்.
நாம் அவற்றைக்  கண்டு கொள்வதில்லை.

தொண்டரடிப் பொடி  ஆழ்வார் அவனை
பச்சைமா மலைபோல் மேனி என்று வர்ணிக்கிறார்.

இந்த படத்தைப் பாருங்கள்.
ஆழ்வார் அரங்கனைக் கண்ட மனநிலையோடு
படத்தைக் காணுங்கள்
உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். 

No comments:

Post a Comment