Wednesday, April 16, 2014

அம்பிகையே! அம்பிகையே !

அம்பிகையே! அம்பிகையே ! 




அன்பின் உருவமே
அம்பிகையே !

ஆற்றலின் பிறப்பிடமே
அம்பிகையே !
உந்தன் மலர்ப்பாதம் பணிகின்றேன்.

அலைகடலெனப் பெருகி வரும்
ஆசைகள் என்னை ஆட்டி வைத்தன
அனு  தினமும் என்னை

அவைகளெல்லாம்
காணாமல்  போயின
என் மனம் உன் திருவடியில்
லயித்த பின்னே

மாயையிலே மூழ்கிய என்னை
மனம் கனிந்து மீட்ட அம்பிகையே !

மாளாப்  பிறப்பறுப்பவளே
மகேஸ்வரியே !

திருவெண்காட்டில்
உறையும் பிரமராம்பிகையே
என்றும் என் உள்ளத்தை
விட்டு அகலாமல் நிலையாய்
நின்றருள் செய்வாயே.  

5 comments:

  1. அம்பிகையே.... ஈஸ்வரியே...

    ReplyDelete
    Replies
    1. அறியாமையை அழிக்கும் மகிஷியும் அவள்தான்

      Delete
  2. அன்பின் உருவம்
    அம்பிகையே..
    ஆற்றலின் பிறப்பிடம்
    அம்பிகையே..

    சரணம்.. சரணம்!..

    ReplyDelete
    Replies
    1. அபயம் அளிக்கும் அபயாம்பிகையும் அவள்தான்

      Delete