Saturday, January 30, 2016

மனம் படுத்தும் பாடு (2)

மனம் படுத்தும் பாடு (2)


மனம் என்று ஒன்று 
இல்லாவிட்டால்  என்ன ஆகும்?

மனதை ஒழித்துவிடு அல்லது 

அழித்துவிடு அல்லது 

மனம் என்ற ஒன்றை இல்லாமல் செய்துவிடு என்று 

சில மகான்கள் சொல்லுகிறார்கள். 

அதன் உண்மைப் பொருள் 
என்னவாக இருக்க முடியும்? 


மனம் என்ற ஒன்று 
இல்லாமல் இருக்க முடியுமா ?

இந்த உலகில் இயங்க முடியுமா 
என்ற கேள்வி பலருக்கு எழும் 

மனம் என்றால் என்ன? 

அது எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?

அது எவ்வாறு செயல்படுகிறது ?

அதை செயல்பட வைப்பது எது ? 

மனதை முழுவதுமாக அழிக்க முடியாது 

அது ஒரு மாபெரும் சக்தி 

அது உளதை இலதாக்கும் 
இலதை உளதாக்கும் 

எனவே அதை நெறிப்படுத்தி நம் கட்டுப்பாட்டில் 

கொண்டு வந்து நமக்கு நன்மை தரும் வகையில் 

பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும். 


சில மகான்கள் மனதிற்கு உபதேசம் செய்கிறார்கள் 


மனமே நீ அங்குமிங்கும் அலையாமல் ஒருமையுடன் நின்று 

எனக்கு நான் நினைத்ததை அடைய உதவி செய்வாயாக என்று .


மனதை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி நம் புத்திக்கு இருக்கிறது. 

அதற்கு நமக்கு நல்ல புத்தி இருக்க வேண்டும் 

தீய புத்தி இருக்ககூடாது 

ஏனென்றால் மனம் என்பது கூரான கத்தி  போன்றது 


அது அதை பயன்படுபவர்களின் சக்தியையும் நோக்கத்தையும் 

பொறுத்து அது நமக்கு நன்மையையோ தீமையையோ விளைவிக்கும். 


நமக்கு  நல்ல புத்தியை தருவது அந்த இறைவன்தான் 


அதற்கு நாம் இறைவனை நம் புத்தியில் வைத்து 

போற்றி தொழ   வேண்டும். என்று திருமூல தேவர் 

திருமந்திரத்தில் கூறுகின்றார். 

அவர் கூறும் இந்த முக்கியமான அருளுரையை ஏற்போம்

உண்மைப் பொருளை உணர்ந்திட உரிய வழி வகைகளை 

ஆராய்ந்து தெளிவோம். . 




Friday, January 29, 2016

காந்தியைப் போலொரு ...

காந்தியைப் போலொரு ...

காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனை
காண்பதும் எளிதாமோ ?

சாந்தி நிலவ வேண்டும்
உலகிலே சாந்தி நிலவ வேண்டும் ..

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியரே--

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது..

என்ற வரிகளை கேட்கும்போது யார் நினைவுக்கு

வருகிறார். இப்போதுள்ள மக்களுக்கு அல்ல

50 வயதைக் கடந்த மக்களுக்கு.

ஆம் அவர்தான் மகாத்மா காந்தி

இன்று அவரை இந்த உலக பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்த தினம்.

ஒரு காலத்தில் அவரை மகாத்மா என்று உலகமே போற்றி கொண்டாடியது.

பல உலக நாடுகள் உட்பட .

ஆனால் இன்று சில சக்திகள் அவருக்கு எதிராக அவரிடம் காணப்பட்ட

சில குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி அவர் ஆற்றிய அரும்பெரும்

செயல்களை மூடி மறைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது காந்தியின்

பக்தர்களுக்கு வருத்தமடைய செய்கிறது.

அவரைப் போல் திரைப்படத்தில்  நடிக்க கூட நம் நாட்டில் ஒருவரும் இல்லை

அதற்க்கு ஒரு மேலை நாட்டவர் தேவைப்பட்டது.

இப்படி எதை பற்றியும் ஒரு முழு அறிவையும் இல்லாத மக்களைக்  கொண்டது நம் இந்திய சமூகம்.

எதையும் உணர்ச்சியின் அடிப்படையில் அணுகி முடிவுக்கு வருவது நம்முடைய பண்பாட்டில் ஊறிப்போன விஷயம். .

இந்த உலகத்தில் இறைவன் ஒருவனே குறையில்லாதவன் .அவன்

படைப்புகள் அனைத்தும் குறைகள் உடையவைகள்தான். என்பதை

நடுநிலையாளர்களே உணர முடியும்.

அவருக்கு என் அஞ்சலி-மவுதார்கன் இசை.

https://youtu.be/VwOCEeUFQfM

https://www.youtube.com/watch?v=VwOCEeUFQfM

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/VwOCEeUFQfM" frameborder="0" allowfullscreen></iframe>


our enemies



our enemies 

Tears and fears are our worst enemies 
Cheers and smiles are our best friends 

Selfishness leads us to disappointments in life 
Selflessness leads us to freedom from confrontation 

It is a sin to eat a lavish food in 
front of an  hungry man is in front of you 

Amassing of wealth disproportionate to one 
needs will never give them  joy 

Greediness is the worst form of 
mental disease which will destroy everything 
you have acquired in life 

The real happiness can be obtained only when you 
make the unhappiness person happy. 

The person who exploits other'a weakness for his
personal benefit is a worst coward in the world 

Having born as human if you failed to love 
fellow beings you are considered as a  wild beast
in human form only. 

The highest goal of human life is not 
amassing wealth or fame or name 

To attain the quality of even mindedness 
even at the stage of losing everything 

Thursday, January 28, 2016

இசையும் நானும் (103)

இசையும் நானும் (103)


இசையும் நானும் (103)

இசையும் நானும்  என்னும் தொடரில் 103  வது காணொளி 

மவுதார்கன் இசை 

ஹிந்தி பாடல்  Tera Mera Pyar Amar 

The lyrics of 'Tera Mera Pyar Amar' song from hindi movie 'Asli Naqli'.

Song
: Tera Mera Pyar Amar
Movie
: Asli Naqli 
Singer(s)
Lata Mangeshkar
Music By
Shankar-Jaikishan
Lyricist(s)
Shailendra 


Tera Mera Pyar Amar Lyrics from Asli Naqli


 Tera mera pyar amar phir kyo mujhako lagataa hai dar - 2
 Mere jivan saathi bataa kyun dil dhadake rah rah kar
 
 Kyaa kahaa hai chaand ne jisako sunake  chaandani
 Har lahar pe jhumake kyo ye naachane lagi
 Chaahat kaa hai harasu asar phir kyo mujhako lagataa hai dar
 Tera mera pyar amar phir kyo mujhako lagataa hai dar
 
 Kah rahaa hai meraa dil ab ye raat na dhale
 Khushiyo kaa ye silasilaa aise hi chalaa rahe
 Tujhako dekhun dekhun jidhar phir kyo mujhako lagataa hai dar
 Tera mera pyar amar phir kyo mujhako lagataa hai dar
 
 Hai shabaab par umag har khushi javaan hai
 Meri dono baaho me jaise aasmaan hai
 Chalati hun mai taaro par phir kyo mujh ko lagataa hai dar
 Tera mera pyar amar phir kyo mujhako lagataa hai dar

 காணொளி இணைப்பு 


Wednesday, January 27, 2016

இசையும் நானும் (102)

இசையும் நானும் (102)


இசையும் நானும் (102)

 இசையும் நானும் தொடரில் என்னுடைய 102 வது  காணொளி 

 மவுதார்கன் இசை 

திரைப்படம்-பாம்பே-இசை -எ . ஆர்.ரெஹ்மான் -பாடியவர் -ஹரிஹரன்-சித்ரா 

"உயிரே உயிரே "  எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று 

காணொளி  இணைப்பு.

கழிவறையும் கல்லறையும்

கழிவறையும் கல்லறையும்

கழிவறையும் கல்லறையும் 

இன்றைய செய்தி.

”அப்பா எனக்கு வெட்கமாக இருக்கிறது..”: வீட்டில் கழிவறை இல்லாததால் தற்கொலை செய்த மாணவி
[ புதன்கிழமை, 27 சனவரி 2016, 08:01.02 AM GMT +05:30 ]
தெலுங்கனாவில் வீட்டில் கழிவறை இல்லாததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


வீட்டில் கழிவறை கட்டி தர பெற்றோரால் (வறுமை மற்றும் இடமின்மை காரணமாக கூறப்படுகிறது) இயலாத காரணத்தால் ஒரு மாணவி
தற்கொலை செய்துகொண்டாள்

நம்முடைய 67 வது குடியரசு தினத்தில் நம் நாட்டின் நிலைமை 
இதுதான். 


Image result for open defecation in india

மேலை நாட்டினர் இந்திய நாடு ஒரு திறந்தவெளி கழிப்பிடம் என்று ஏளனம் செய்கின்றனர்.

Image result for open defecation in india

சாலை ஓரங்களாகட்டும், ரயில்வே பாதைகளாகட்டும், பேருந்து, ரயில்வே மற்றும் , நீர் நிலைகளின் கரைகளாகட்டும் , பொது இடங்களாகட்டும் ஆடு மாடுகளை விட கேவலமாக காலாற நடந்து போய் கழிந்துவிட்டு அங்கு தேங்கியுள்ள அனைத்து  கிருமிகளின் பிறப்பிடம் மட்டும் உறைவிடமான அழுக்கு தண்ணீரில் கழுவிக்கொண்டு ஆனந்தமாக தேநீர்   கடைக்கு சென்று செய்தி தாள்களை படித்து பொது அறிவை விருத்தி செய்யும் அற்புதமான கலாசார பின்னணியை கொண்டுள்ள முன்னேறிய சமுதாய மக்கள் கொண்டது நம் பாரத நாடு.

Image result for open defecation in india

ஏன்  அரசு பொது கழிப்பிடங்களை கட்டி கொடுத்தால் ஒரே மாதத்தில் அங்குள்ள அனைத்தையும் நாசம் செய்து மூடு விழா செய்வதில் மும்முரமாக ஈடுபடும் ஒரு உன்னத கலாசாரத்தை  கொண்ட இனம் தமிழ் இனம்.

Image result for open defecation in india


உடலின் உள்ளே தள்ளும் உணவை வெளியே பாதுகாப்பாக சுகாதாரமாக வெளியேற்ற வகை செய்ய இயலாத கையாலாகாத அரசு நிர்வாகங்கள்.
நிறைந்த  நம் நாடு .

என்றோ நடக்கப் போகும்/இல்லை நடக்காமலே போகலாம் /போர்களுக்கு
பல லட்சம் கோடிகளை வரி இறைக்கும் நம் அரசுகள் இந்த அடிப்படை
வசதிகளை இன்னும் வறுமை நிறைந்த லட்சக்கணக்கான கிராமங்களில்
ஏற்படுத்தி தர முடியவில்லை.

இருக்கும் உலகில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து
தராது எங்கோ கண்ணுக்கு தெரியாமல் கிடக்கும் கோள்களை ஆராய கோடிகளை வாரி இறைக்கும் வக்கற்ற அரசுகள்.

அசிங்கங்களை அகற்ற அக்கறை காட்டாது  சிங்கம் 1,2,3, என்று திரைப்படங்களில் மூழ்கி கொசுக்களையும் கிருமிகளையும் உற்பத்தி செய்து அதனால்  நோயுற்று நோயாளிகளை மடியும் மூட மக்கள்.

ஆனால் அரசுகள் மீதும் முழு குற்றத்தையும் சுமத்த  முடியாது.

Image result for open defecation in india

நாடு சுதந்திரம் அடைந்த பின் பல்லாயிரம்  கோடிகளை இதற்காக செலவிட்டுள்ளது ஆனால் சில மாநில அரசுகள் இந்த திட்டத்தில் போதிய அக்கறை காட்டவில்லை.

பொதுமக்களும் இந்த முக்கியமான திட்டத்தில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் பொறுப்பற்ற மக்களும்தான் மூல காரணம் 

இருந்தாலும் மாவட்ட நிர்வாகங்கள் இது போன்று உதவி தேவைப்படும் மக்களையாவது கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தால் போதும் இது போன்ற இழப்புகள் தவிர்க்கப்படும். 

இதற்காக அவர்கள் ஒரு மையம் அமைத்து உதவி செய்யலாம். 

நமது மக்கள் தொகையில் சரி பாதி அளவு உள்ள பெண்ணினத்திற்கு 
உரிய கவுரவம் மற்றும் பாதுகாப்பு தருவது அனைவரின் கடமையாகும்/ஆனால் அதை கவனியாது மற்ற இனங்களில் மட்டும் முனைப்பு காட்டுவது உண்மையான வளர்ச்சி ஆகாது. 

பெண்களை தெய்வங்களாக மட்டும் கும்பிடுவதால் பயன் ஏதும் இல்லை. உண்மையாக நம் கண் முன்னே நடமாடும் தெய்வங்களுக்கு உரிய மரியாதை தரப்படவேண்டும் இல்லையேல் அனைத்து வழிபாடுகளும் வெறும் வெற்று  சடங்காகத்தான் கருத இயலும் 

Monday, January 25, 2016

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கண்டு !

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கண்டு !

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கண்டு !


கல்விக் கூடங்களா  இல்லை கொலைக் களங்களா 

இன்றைய நாளிதழில் ஒரு மாணவி நீச்சல் பிரிவில் பல 
பதக்கங்களை பெற்றவள் பள்ளிக்கு செல்லும் பேருந்து 
பயணக் கட்டணத்தை செலுத்த இயலாமையினால் 
தன் வாழ்வை முடித்துக்கொண்டாள் 

தமிழ் நாட்டில் கல்லூரி மாணவிகள் இதுபோன்ற நிலை காரணமாக 
தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டனர்.கல்லூரி முதல்வர்  கைது. 

தினமும் இது போன்ற செய்திகள் ஊடகங்களை வந்து கொண்டு இருக்கின்றன 

நாம் அனைவரும் படித்துவிட்டு அடுத்த செய்திக்கு தாவிக் கொண்டிருக்கிறோம். 

மிருகம் போல் வாழ்பவனை மனித்னாக்குவதுதான் கல்வி. 

அது ஒரு சேவை 

ஏறக்குறைய 25 ஆண்டுகள் பல கோடி ரூபாய் செலவு செய்து 
ஒரு பட்டத்தை  பெற்று பிறகு மற்றவரிடம் அடிமை சேவகம் செய்து மாதம் சில ஆயிரம் முதல் சில லட்சம் வரை ஊதியம் பெறுவதற்கு வழி செய்யும் 
இந்த உருப்படாத கல்வி முறையினால் ஆகும் பயன் என்ன  என்று புரியவில்லை? 


ஆம் நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக

கல்வி துறையில் நடக்கும் பகல் கொள்ளைகள்,


கண்டிப்பு என்ற போர்வையில் நடத்தப்படும்

காட்டுமிரண்டிதனமான அடக்குமுறைகள்


ஜாதி, ஏழ்மை போன்றவற்றை குறி வைத்து

அப்பாவி மாணவர்கள் மீது தொடுக்கப்படும்

தாக்குதல்கள்,


அதனால் ஏற்படும் மன உளைச்சலிலிருந்து

விடுபட முடியாமல் மரணத்தை தழுவும்

நம் நாட்டின் எதிர்கால செல்வங்கள்,


இதை எந்த அமைப்புகளும் அரசுகளும்

கண்டு கொள்ளாமல் கண்டன அறிவிப்புகளை

மட்டும் வெளியிட்டுவிட்டு தங்களின்

அடுத்த போராட்டத்திற்கு தாவும்  முதுகெலும்பற்ற

அரசியல் கட்சிகள்


வெறும் உதவி தொகைகளை மட்டும் அறிவித்துவிட்டு

பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க

திராணியற்ற கையாலாகாத அரசுகள்


இதற்கு என்றுதான் முற்றுப்புள்ளி யார்

வைக்கப் போகிறார்களோ தெரியவில்லை.?


கல்வி நிறுவனங்கள் முதல் போட்டு லாபம் பார்க்கும்

வியாபார நிறுவனங்களாக மாறி விட்டதால்தான்

இந்த கொடுமைகள் அனு  தினமும் அரங்கேறி வருகின்றன


காசு இருப்பவன் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு

செய்து படிக்கட்டும் .கவலையில்லை


காசில்லாதவன் காசு இல்லாவிடில் படிக்கக் கூடாதா ?


அவன் கல்வி நிறுவனங்களால் சிறுமை படுத்தப்பட்டு

தனிமைப்படுத்தப்பட்டு சீரழியத்தான் வேண்டுமா?

என்பதுதான் என் கேள்வி.


கோடிக்கணக்கான பணத்தை வீணடிக்கும் அரசுகள்

மக்களை ஏமாற்றி பிழைக்கும் தொலைகாட்சி ஊடகங்கள்,

கவைக்குதவாத சக்கைகளை நம் தலையில் கட்டி கோடி கோடியாய்

கொள்ளையடிக்கும் பன்னாட்டு சுரண்டல் நிறுவனங்கள்

வாழ்வில் உண்மையை கடை பிடிக்காமல் வெறும்

நடிப்பையே மூலதனமாக  வைத்து  லட்சக்கணக்கில்

கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் நடிகர்கள்  போன்றோர்

இந்த அபாக்கியவான்களுக்கு உதவ ஏன் முன்வரக்கூடாது ?


எந்த ஒரு மாணவனையும் அவனுடைய இயலாமையினை

காரணம் காட்டி அவர்களை மரணக் குழியில் தள்ள நினைக்கும்

மதி கேடர்கள் மனம் திருந்தி அவர்களை அந்த நிலையிலிருந்து

மீட்கும் உயர்ந்த குணம் வரவேண்டும்.


தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியை நாம் வறுமையில் வாடவிட்டு சாகடித்த வள்ளல் பரம்பரை அளவோ நம் தமிழ் சமுதாயம்

இதைத் தடுத்து நிறுத்த  நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறிதான்?

மனம் படுத்தும் பாடு

மனம் படுத்தும் பாடு 

மனம் என்று ஒன்று  இருக்கிறது

அது எங்கே இருக்கிறது ?

இந்த உடலில் இருக்கிறது

பலரும் மனது இருக்குமிடத்தை கேட்டால்

தங்கள் மார்பை கையால் தொட்டுக் காட்டுகிறார்கள்.

ஆனால் மனம் என்பது என்ன ?

அது எப்படி இருக்கும் என்று உருவகப்படுத்த முடியுமா?

அது என்ன பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது.

அது எவ்வாறு செயல்படுகிறது ?

அது தானாக செயல்படுகிறதா?

அல்லது வேறு ஒரு வெளி சக்தியின் தூண்டுதலால்

செயல்படுகிறதா?

மனதின் நிலையை ஒவ்வொருவரும் 

ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்துகிறார்கள் 

ஒருவன் தனக்கு மனசே சரியில்லை என்கிறான்

மற்றவனோ என் மனதில் அமைதியே சிறிதும் இல்லை  என்கிறான்

ஒரு சிலரோ என் மனதில் பயம் கப்பிக்கொண்டு என்னை

பாடாய் படுத்துகிறது என்கிறார்கள்

ஒரு சிலரோ என் மனதில் எதைக் கண்டாலும் யாரைக் கண்டாலும்
வெறுப்பாக இருக்கிறது என்கிறார்கள்

இன்னும் சிலர் என் உயர்வைக் கண்டு மகிழ்வடையாமல்

பொறாமை தீயால் வெந்து தவிக்கிறது.

என் மனம் எதிலும் நாட்டமில்லாமல் கிடக்கிறது என்கிறார்கள் பலர்.

என் மனம் எதிலும் நிலையில்லாமல் சென்றுகொண்டிருப்பதால்

வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது.

இப்படியாக மனதை பற்றி நினைத்தால் அதன் செயல்பாடுகளைப் பற்றி

விவரங்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் மனதைப் பற்றி ஆராய முற்படுவோம். (தொடரும்)


ஏது நமக்கு நேரம் ?


 ஏது  நமக்கு நேரம் ?






ஆயிரமாயிரம் வடிவங்கள்
ஆயிரம் நாமங்களால் துதிக்கப் பெறும்
ஆயிரம் தலை ஆதி சேஷன் மேல்
பள்ளி கொண்டுள்ள ஆராவமுதனுக்கு
ஒன்றை ஒன்று மிஞ்சும்  அழகோ அழகு
கண்டு மகிழ  நமக்குதான்  இல்லை பொழுது

அதுவும் இருப்பதோ இரு கண்கள்
அவை இரண்டும் ஒன்று சேர
நோக்கினாலும் மனம் ஒன்றாவிடில்
யாது பயன்?

அது இல்லை இது இல்லை என்று
அழுது புலம்பத்தான் அவனியில்
அனைவருக்கும் நேரம் கழிகிறது
காலம் முழுதும்

ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றும்
அதிகாலை முதல் ஆழ் துயில் கொள்ளும் வரை



அழியும் பொருள் மீது ஆசை கொண்டு
தேடுவதும் பின் அதை பாதுகாப்பதும்
அகன்றால் துயரத்தில் ஆழ்வதும்
அனைவரின் வாழ்க்கையில் வாடிக்கையாகிவிட்ட
நிலையில் நிலைத்த பதம் அருளும்
அரங்கனின் திருவடிகளை நினைத்து
வணங்க ஏது  நமக்கு நேரம் ?

Friday, January 22, 2016

இசையும் நானும் (101)

இசையும் நானும் (101)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய 
101 வது காணொளி.

மவுதார்கன் இசை. 
வெங்கடாசல நிலையம் 
வைகுந்தபுர  வாசம் என்ற என்ற புரந்தரதாசரின் 
புகழ்  பெற்ற இனிமையான பக்தி மணம் கமழும்   பாடல். 



This is one of the famous songs sung by many பாடகர்கள்  on Shri Lord Venkateshwara, and written by Shri Purandara Dasaru. The song is written in Sanskrit.
வெங்கடாசல நிலையம் வைகுண்ட புர  வாசம் 
பங்கஜ நேத்ரம்  பரம பவித்ரம் 
சங்க சக்ர  தர சின்மய  ரூபம்
வெங்கடாசல நிலையம் வைகுண்ட புர  வாசம் 

அம்புஜோத்பவ வினுதம்  அகணித குண நாமம் 
தும்புரு நாரத கான விலோலம் 
வெங்கடாசல நிலையம் வைகுண்ட புர  வாசம் 

Ambujodbhava Vinutam Aganita Guna Namam
Tumbur Narada Gana Vilolam Ambudishayanam Aatmabhiramam
Venkatacala Nilayam Vaikunta Pura Vasam || 1 ||
Pahi Pandava Paksham Kaurava Madaharanam
Bahu Parakrama Purnam
Ahalya Shapa Bhaya Nivaranam
Venkatacala Nilayam Vaikunta Pura Vasam || 2 ||
Sakala Veda Vicharam SarvaJeevana Karam

(மேற்கண்ட வரிகளை யாரும் பாடுவதில்லை 
நானும் அதனால் பாடவில்லை)(ஏனென்றால் எனக்கு தெரியாது )
மகர குண்டல தர மதன கோபாலம் 
பக்த போஷக  ஸ்ரீ புரந்தர விதலம் 
வெங்கடாசல நிலையம் வைகுண்ட புர  வாசம் 


காணொளி இணைப்பு ;

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/X_bkjaOX5lM" frameborder="0" allowfullscreen></iframe>


https://www.youtube.com/watch?v=X_bkjaOX5lM&feature=youtu.be

Thursday, January 14, 2016

இசையும் நானும் (100)


இசையும் நானும் (100)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய 
100 வது காணொளி. 

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மீது பாடல். 

"துங்கா தீர விராஜம் 
பஜமன  ராகவேந்திர குரு ராஜம்"

காணொளி இணைப்பு 

https://youtu.be/bKBII6-T_3w


315" src="https://www.youtube.com/embed/bKBII6-T_3w" frameborder="0" allowfullscreen></iframe>

Wednesday, January 13, 2016

இசையும் நானும் (99)

இசையும் நானும் (99)


இசையும் நானும் (99)

இசையும் நானும் தொடரில் என்னுடைய 
99 வது காணொளி 

மவுதார்கன்  இசை.


Indha Pachai Kilikoru

Movie: Needhikku Thalai Vanangu




காணொளி. இணைப்பு

https://www.youtube.com/watch?v=VyEDKqw7mto&feature=youtu.be

Tuesday, January 12, 2016

ராமகிரி கில்லா

ராமகிரி கில்லா 


Image result for ramagiri khilla

அடர்ந்த காட்டினிடையே யாரும்
காணாது அடங்கிக் கிடக்கும்
ஸ்ரீ ராமச்சந்திர  மூர்த்தியின்
கோயில் தெலிங்கானாவில்   உள்ளது.


Image result for ramagiri khilla



Image result for ramagiri khilla

கடந்த காலத்தில் பெரும் புகழோடு
விளங்கிய மன்னர்களால் கட்டப்பட்ட
மாபெரும் கோட்டையின் மிச்சங்கள்
இன்னும் பிரமிப்பை ஊட்டுகின்ற அளவிற்கு உள்ளது.

Image result for ramagiri khilla

மாநில  அரசுகளும், மைய   அரசுகளும்
இந்த பொக்கிஷத்தை கண்டு கொள்ளாமல்
இருப்பது மிகவும் வேதனைக்குரியது

இது குறித்த ஒரு காணொளி உங்கள் பார்வைக்கு.

https://www.youtube.com/watch?v=irUmoXnFnCA

அடுத்த வர்களின் பசி தீர்ப்பது,


அடுத்த வர்களின் பசி தீர்ப்பது, பரமனுக்கே படைப்பதற்கு நிகராகும்

அன்பு இருந்தால், அகிலத்தை ஆள்வதுடன், ஆண்டவனையே நம்மை தேடி வர வைக்கலாம் என்பதற்கு, சேந்தனார் வரலாறே சான்று...
சிவ பக்தரான சேந்தனார், விறகு வெட்டி, அதை விற்று கிடைத்த காசில், உணவு சமைத்து, அடியார்களுக்கு உணவு இட்ட பின், தான் உண்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஒரு நாள் கொட்டும் மழையிலும், கிடைத்த தானியத்தை வைத்து களி தயாரித்து, அடியாரை தேடிப் புறப்பட்டார் சேந்தனார். வயது முதிர்ந்த அடியார் ஒருவர் அகப்பட, அவரை அழைத்து வந்து, களியமுதை படைத்தார்.
மிகுந்த பசியுடன் வந்த முதியவரோ, வயிறு நிறைய சாப்பிட்டு, சிறிதளவு களியை மேல் துண்டில் கட்டி எடுத்துச் சென்றார். அதன்பின், மீதி இருந்ததை, சேந்தனாரும், அவர் மனைவி, மக்களும் உண்டனர்.
அதே நேரம், அரண்மனையில், சிவ பக்தியில் சிறந்தவரான செல்வச்சோழ மகாராஜா, தூக்கமின்றி தவித்தார். காரணம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், இரவு பூஜை முடிந்த பின் ஒலிக்கும் மணியோசை கேட்ட பின்னரே, உணவு உண்பது அவர் வழக்கம். அன்று, நள்ளிரவைத் தாண்டியும் மணியோசை கேட்கவில்லை.
இதனால், மன வருத்தம் அடைந்த மன்னர், சிறிது நேரத்தில் தன்னை அறியாமல் தூங்கி விட்டார். அப்போது அவர் கனவில், நடராஜப் பெருமான் காட்சியளித்து, 'மன்னா... என் அன்பன் எனக்கு களியமுது படைத்தான்; அதனாலே தாமதமானது...' என்று கூறி, மறைந்தார்.
பொழுது விடிந்ததும், தன் ஆசார அனுஷ்டானங்களை முடித்த மன்னர், 'இறைவனுக்கே உணவிட்ட அந்த அடியாரை நான் எப்படி தரிசிப்பது...' என்று நினைத்தபடி, சிதம்பரம் ஆலயத்தை அடைந்தார். அங்கே, திருவம்பலத்தில் முற்றம் முழுதும், களி சிதறி, இனிமையான மணம் வீசியது. 
அது எப்படி வந்தது என்று எல்லாரும் குழம்ப, சோழமன்னன், தன் கனவில் நடராஜப் பெருமான் கூறியதை சொல்லி, 'அந்த அடியார் தந்த களியே, இங்கு இறைவனால் சிதறப்பட்டுள்ளது...' என விவரித்தார்.
அச்சமயம், சிதம்பரத்தில், மார்கழி திருவாதிரை திருநாள் நடைப்பெற்றது. அன்று, வெகு விமரிசையாக நடக்க வேண்டிய தேரோட்டம், தேர் கிளம்பாததால் தடைபட்டது; என்ன முயன்றும் பலனில்லை. அப்போது, 'சேந்தா... தேர் நகர பல்லாண்டு பாடுக...' என்று வானில் அசரீரி கேட்டது.
கும்பலோடு கும்பலாக நின்றிருந்த சேந்தனார், பல்லாண்டு பாட, தேர் வடம் பிடிக்காமல் தானே ஓடியது. அனைவரும், சேந்தனாரின் தூய்மையான பக்தியையும், நடராஜப் பெருமானின் கருணையையும் வியந்து துதித்தனர்.
அவர் களிப்போடு களி படைத்த அந்த வைபவத்தை முன்னிட்டே, நாமும் திருவாதிரை களி செய்து, 'திருவாதிரைக்களி ஒருவாக் களி' எனக் கொண்டாடுகிறோம்.
தன் வீட்டிற்கு உணவுண்ண வந்தது, சிவபெருமான் என்பது, சேந்தனாருக்கு தெரியாது. அடுத்த வர்களின் பசி தீர்ப்பது, பரமனுக்கே படைப்பதற்கு நிகராகும் என்பதை நிரூபித்தவர் சேந்தனார். அவருக்கு அருள் புரிந்த ஆதிரையான், நமக்கும் அருள் புரிய வேண்டுவோம்! 

'Ramakrishnan K S' via Amritha Vahini




Monday, January 11, 2016

இசையும் நானும் (94)

இசையும் நானும்  (94)

இசையும் நானும் தொடரில் என்னுடைய 94 வது காணொளி 

மவுதார்கன் இசை.
                   
(பாடல்- மூலம்- கடையநல்லூர் திரு.வெங்கடராமன் பாலசுப்ரமணியம்)

(இசைக்காக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது )
ஆயிரமாயிரம் கோயில் கொண்டவளே 
அழகிய நங்கை நல்லூரில் வாசம் செய்யும் நாரணியே       (ஆயிரம்)        
அநுபல்லவி;
ராஜராஜேஸ்வரியே உந்தன் திருவடி சரணம் சரணம் தாயே   (ஆயிரம்)
சரணம்:
கரும்பு வில்லால் காமனை வென்றாய் 
காவியமும் ஓவியமும் அருளும் கலைத் தாயும் ஆனாய் 
காலன் என்னை அணுகாமல் 
காத்தருளும் கருணை தெய்வமாய் நின்றாய்  (ஆயிரம்)

ஒருதரமேனும்  உன்  திருமுகம்   கண்டவர்க்கு 
வாழ்வில் இடறேது துன்பமேது  ?
ஈன்ற தாய் நீ எப்போதும் துணையிருக்க 
இவ்வுலகில் எந்நாளும் இன்பமே    (ஆயிரம்)

காணொளி இணைப்பு. 
<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/KZZxl0FN1SE" frameborder="0" allowfullscreen></iframe>

Wednesday, January 6, 2016

இசையும் நானும் (93)

இசையும் நானும் (93)

இசையும் நானும்  தொடரில்
என்னுடைய 93 வது காணொளி

மவுத்தார்கன் இசை 

பாரதியார் -பாடல் -  காக்கை சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

https://www.youtube.com/watch?v=4AjAOqZLHhs&feature=youtu.be

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/4AjAOqZLHhs" frameborder="0" allowfullscreen></iframe>

Tuesday, January 5, 2016

உண்மையில் யார் ஞானி ? - ஸ்ரீ கிருஷ்ணர்

உண்மையில் யார் ஞானி ? - ஸ்ரீ கிருஷ்ணர்

உண்மையில் யார் ஞானி ? - ஸ்ரீ கிருஷ்ணர்ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது. அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான். அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.
இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.
மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.
கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.
பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.



Anbudan
<>KSR<>

Courtesy
swasthiktv

Pattabi Raman vijayakoti33@gmail.com

6:45 AM (0 minutes ago)
to RamakrishnanAbridged
வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.

அருமையான தத்துவம். முயற்சி செய்து பார்க்கலாம். 

TRPattabiraman 

இசையும் நானும் (92)


இசையும் நானும் (92)

இசையும் நானும் தொடரில் என்னுடைய 92 வது 

காணொளி.

மவுதார்கன் இசை 

ஸ்ரீ  ராகவேந்திர சுவாமி மீது பாடல்-  துங்கா தீர விராஜம் 


Poojyaya Raghavendraya Sathya Dharma Ratha Yacha
Bajatham Kalpavrukshaya Namatham Kamadenuve.
Which means, the worship of Sri Raghavendraswamy, who is the embodiment of Sathya andDharma (Truth and Righteousness), bestows whatever boon one aspires like Kalpavruksha, the Celestial Tree, and Kamadhenu, the Celestial Cow. Incessant chanting of this hymn is a panacea for all ills and problems in life, especially in this age of tension.
Also, chanting of “Om Sri Raghavendraya Namaha“, helps immensely.
Thunga theeravirajam bhajamana
Raghavendra guru rajam bhajamana
Mangala kara mantralayavasam
sringaranana rajithahasam
Raghavendra guru rajam bhajamana
Karadritha dhanda kamandalu malam
suruchira chelam dhrita mani malam
Raghavendra guru rajam bhajamana
Nirupama sundara kaya susheelam
Varakamalesha pita nija sakalam
Raghavendra guru rajam bhajamana

https://www.youtube.com/watch?v=KYlY_PqRA0w

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/KYlY_PqRA0w" frameborder="0" allowfullscreen></iframe>