Saturday, April 27, 2013
ஞானபழமாம் மாம்பழத்தை பெற வாருங்கள்
ஞானபழமாம் மாம்பழத்தை
பெற வாருங்கள்
ஒரு ஊருக்கு வெளிப்புறத்தில்
ஒரு இடம் இருந்தது
அந்த இடத்தை சுற்றி முழுவதும்
உயரமான சுற்று சுவர் எழுப்பப்பட்டு இருந்தது
அதன் உள்ளே என்ன இருக்கிறது
என்று யாருக்கும் தெரியாது
மக்கள் அவரவர் பிரச்சினைகளிலே
எப்போதும் மூழ்கியிருந்ததால்
அதை பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை
அவர்களில் ஒருவன் அந்த சுவற்றிற்கு
பின்னால் என்னதான் இருக்கிறது
என்று பார்ப்போமே
என்று அதன் மேல் ஏறி பார்த்தான்.
உள்ளே இருப்பதை பார்த்ததும்
ஆச்சரியப்பட்டு உள்ளே குதித்துவிட்டான்
அவன் சென்றதை பார்த்த மற்றொருவன்
சுவற்றின் மீது ஏறினான்.
ஆஹ்ஹா இதன் உள்ளே இவ்வளவு
ஆச்சரியம் இருக்கிறதா என்று
கத்திக்கொண்டே அவனும் குதித்துவிட்டான்
இதைக்கண்ட மற்றொருவன்.
சுவற்றின்மீது நின்றுகொண்டு
உரக்க சொன்னான்
உள்ளே நிறைய மல்கோவா மாம்பழங்கள்
காய்த்து தொங்குகின்றன
எல்லோரும் வாருங்கள் என்று
அவனும் குதித்துவிட்டான்
இப்படி உள்ளே சென்றவர்கள்
அங்கே இருந்த பழங்களை வயிறார
சாப்பிட்டுவிட்டு
அங்கேயே கிடந்தார்கள்.
அவர்கள் திரும்பிவரவில்லை.
ஆனால் ஒருவன் வெளியே வந்து
அனைவருக்கும் தெரிவித்து அவர்களையும்
சென்று சாப்பிட்டு மகிழ சொன்னான்.
ஆனால் ஒரே ஒருவன் மட்டும் அனைவரையும்
அங்கு செல்ல வசதியாக வழி ஏற்படுத்தி
கொடுத்து அவர்களையும் இன்புற செய்தான்.
இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?
நம்முடையே உடல்தான் அந்த ஊர்
நாம் எப்போதும் புறவுலகிலே புலன்கள் மூலம்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நமக்கு அருகே அகத்தில் சுவையான
இனிப்பான மாம்பழங்கள் காய்த்து பழுத்து
தொங்குவதை அறிவதில்லை.
அதை அறிந்த மகான்கள் சிலர்
நமக்கு அறிவிக்கிறார்கள்
அப்போதும் நாம் அதை
உணர்ந்துகொள்வதில்லை
ஆனால் சில ஞானிகள் மட்டும்
தாம் பெற்ற இன்பம்
பெருக இவ்வையகம் என்று
மற்றவர்களையும்
அழைத்து சென்று அந்த இன்பத்தை
நாமும் பெற வழி செய்கிறார்கள்.
கால காலமாக இது போன்ற
கருணை உள்ளங்கள்
மனித குலத்தின்மீது அன்பு கொண்டு
வழி காட்டி வருகின்றனர்.
அன்று விநாயகன்
அந்த மாங்கனியை உண்டான்.
அவனே கற்பக கனியானான்.
கனியை தேடி நமக்கெல்லாம்
அருள் செய்ய உலகை வலம் வந்தவனோ
ஞானப்பழமாக இங்கேயே தங்கிவிட்டான்
அவர்களை போல ஒரு மகான்தான் சமீப காலத்தில்
நம்மோடு வாழ்ந்து நமக்கெல்லாம் வழி காட்டி
மனஇருள் போக்கி மந்த மாருதம்போல் வீசி
சண்ட மாருதம்போல் பேசி இன்றும்
நம் எண்ணங்களில் வாழும்
காஞ்சி மாமுனி பெரியவா அவர்கள்.
அவர் அறிவுரைகளை உள்ளத்தில்
கள்ளம் தவிர்த்து கருத்தில் கொள்ளுவோம்.
கடைத்தேறுவோம்
நல்ல கதை + விளக்கம்... நன்றி ஐயா...
ReplyDelete