Thursday, April 30, 2015

உத்தமன் ராமனை உதயத்தில் எழுகையில் உள்ளத்தில் நினைவாய் மனமே


உத்தமன் ராமனை உதயத்தில் எழுகையில்
உள்ளத்தில்  நினைவாய் மனமே 

                                                                              ( ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன்)



உத்தமன் ராமனை உதயத்தில் எழுகையில்
உள்ளத்தில்  நினைவாய் மனமே
அனுதினமே  (உத்தமன்)

தர்மத்தை நிலைநாட்ட  தரணிக்கு வந்தவன்
தந்தை சொல் காக்கவே அரியணை விடுத்து
ஆரண்யகம் சென்றவன் (அந்த உத்தமன் )

காண்போர் அனைவரையும் அன்பால்
தன்வசம் ஈர்த்தவன் (2)
கல்லாய்கிடந்த அகலிகைக்கு
கருணை காட்டி உயிர் கொடுத்தவன் (அந்த)

அனைவரின் நலம் நாடி வேள்விகள் செய்த
தவசிகளை அரக்கர்களிடமிருந்து காத்தவன்
பெருமை வாய்ந்த  சூரிய குலத்தில்
அடியவர்களை  காக்க  உதித்தவன் (அந்த)


 ( ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன்)

அன்னை  சீதையுடன்
அருள் வடிவாய் காட்சி தருபவன்
"ராமா" ராமா" என்று பாடி பரவிய பக்தர் தமை
பரிவோடு கண்ணிமைபோல் காப்பவன் (அந்த)







                                                  ( ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன்)

அனைவரின் நலம் நாடும்
அனுமனின் இதயத்தில் உறைபவன்
அபயம் என்றுவருவோரை
அரவணைத்து அருள்பவன் (அந்த)



                                                        ( ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன்)

அகிலத்து மாந்தர் வாழ்வில் அமைதியும்
ஆனந்தமும் என்றும் நிலைத்திட
பிறருக்கு இன்னல் இழைக்கும் மனிதர்
திருந்தி வாழ்ந்திட அருள் செய்யும் (அந்த) 

Wednesday, April 29, 2015

இசையும் நானும் (10)



இசையும் நானும் (10)

இசையும் நானும் (10)

மவுதார்கனில் என்னுடைய அடுத்த பாடல் 




கோரா காகஸ் என்னும் இந்தி திரைப்படத்தில் 
வரும் "மேரா ஜீவன் கோரா காகஸ் என்னும் பாடல்.

எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கும். 

இணைப்பு கீழே.


https://www.youtube.com/watch?v=giiuC4GHUJ8&feature=youtu.be

Saturday, April 18, 2015

இசையும் நானும் (9)

இசையும் நானும் (9)

மவுதார்கனில் என்னுடைய அடுத்த பாடல் 

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின்
மிகவும் பிரபலமான "கேலதி மம ஹ்ருதயே "

மனமே ஸ்ரீ ராமனை இதயத்தில் நிலை நிறுத்துவாய் 
உயர்ந்ததோர் நிலையை அடைந்திடுவாய் 




ஸ்ரீ சதா சிவ  பிரம்மேந்திரரின் கீர்த்தனைகள்
மிகவும் இனிமையானவை பொருள் பொதிந்தவை
.பக்தி ரசம் சொட்டுபவை

கேட்பவர்களின் இதயத்தில் நிலைத்து நின்று
அமைதியையும் ஆனந்தத்தையும் அளிப்பவை.







எனக்கு பிடித்த பாடல்உங்களுக்காக.மவுதார்கன் இசையில்

யு டியூப் இணைப்பு.

.https://www.youtube.com/watch?v=7df5jHggQOI&feature=youtu.be

Saturday, April 11, 2015

இசையும் நானும் (8)

இசையும் நானும் (8)


இசையும் நானும் (8)

மவுத் தார்கனில் என்னுடைய 8 வது பாடல்.






ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி (செஞ்சுருட்டி)
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி 

அனுபல்லவி 

ஆகம வேத கலா மய  ரூபிணி 
,
அகில சராசர ஜனனி நாராயணி 

நாக கங்கண நடராஜ மனோஹரி 

ஞானவித்யேச்வரி ராஜ ராஜேஸ்வரி 

சரணம் 

பல விதமாய் உன்னை பாடவும் ஆடவும் (புன்னாகவராளி )

பாடி கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும் 

உலகமுழுதும் என தகமுறக் காணவும் 

ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி 


உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் (நாதநாமக்ரியா)

உயரிய பெரியோருடன் ஒன்றிட கூட்டி வைத்தாய் 

நிழலென தொடர்ந்த முன்நூழ் கொடுமையை நீங்க செய்தாய் 

நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி (சிந்து பைரவி) 
துன்ப புடத்திலிட்டு என்னை தூயவனாக்கி வைத்தாய் 

தொடந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனை தந்தாய் 

அன்பை புகட்டி உந்தன் ஆடலை காண செய்தாய் 

அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி

பாடலை கேட்க இணைப்பு கீழே 

https://www.youtube.com/watch?v=-S6MGUVCT7A&feature=youtu.be