ramarasam

Sunday, December 30, 2018

இசையும் நானும் (343)-திரைப்படம்- பாரதி .... (2000) பாடல்-நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே



இசையும் நானும் (343)-திரைப்படம்- பாரதி ....  (2000) பாடல்-நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

இசை -இளையராஜா 
குரல்:ஹரிஷ் ராகவேந்திரா 
வரிகள்: மஹாகவி சுப்ரமணிய பாரதியார்.

MOUTHORGAN VEDIO-343






நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ சொப்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ வானகமே இளவெயிலே மரச்செறிவே வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ (வானகமே)
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ(நிற்பதுவே) காலம் என்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ(காலம்)
காலம் என்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ

காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ (நிற்பதுவே)


Posted by kankaatchi.blogspot.com at 8:38 AM 3 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, December 5, 2018

இசையும் நானும் (339)-திரைப்படம்- அவன்தான் மனிதன் (1975) பாடல்- ஆட்டுவித்தால் யாரொருவர்...

.

இசையும் நானும் (339)-திரைப்படம்- அவன்தான் மனிதன்  (1975) பாடல்- ஆட்டுவித்தால் யாரொருவர்....

பாடல்- ஆட்டுவித்தால் யாரொருவர்.

இசை :எம்.எஸ்.விஸ்வநாதன் 
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

MOUTHORGAN VEDIO-339




ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா 
ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா (ஆட்டுவித்தால் )

நீ நடத்தும் நாடகத்தில் நானும் ஒன்று 
என் நிழலில் கூட அனுபவத்தின் சோகமுண்டு 
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே 
ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே (நண்பனிடம்) (ஆட்டுவித்தால்) 

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் 
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் 
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் 
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் (நன்மை)(ஆட்டுவித்தால்)

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் 
அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் 
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா 
அதை உணர்ந்துகொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா (உணர்ந்துகொண்டேன்) (ஆட்டுவித்தால்) 

images courtesy-google images 

Posted by kankaatchi.blogspot.com at 7:31 AM 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, December 4, 2018

இசையும் நானும் (338)-திரைப்படம்- பாவ மன்னிப்பு (1961) பாடல்- அத்தான் என்னத்தான்




இசையும் நானும் (338)-திரைப்படம்- பாவ மன்னிப்பு (1961) பாடல்- அத்தான் என்னத்தான்

பாடல்- அத்தான் என்னத்தான்

இசை :விஸ்வனாதன்-ராமமூர்த்தி


குரல்: பி .சுசீலா 
வரிகள்: கண்ணதாசன்

MOUTHORGAN VEDIO-338





அத்தான் என்னத்தான்
அவர் என்னைத்தான்
எப்படி சொல்வேனடி...(அத்தான்)..
எப்படி சொல்வேனடி

அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான் ..எப்படி சொல்வேனடி..(அத்தான்) 

ஏன்  அத்தான் என்னை பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித்தான் (2)
சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான்
அழைத்தான் பிடித்தான் அணைத்தான் (எப்படி).(அத்தான்)

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துதான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான்
வளைத்தான் பிடித்தான் அணைத்தான் (எப்படி)(அத்தான்)

.



Posted by kankaatchi.blogspot.com at 3:02 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, December 2, 2018

இசையும் நானும் (337)-திரைப்படம்- பாவ மன்னிப்பு (1961) பாடல்- வந்த நாள் முதல் இந்த நாள் வரை


இசையும் நானும் (337)-திரைப்படம்-

பாவ மன்னிப்பு (1961)


பாடல்- வந்த நாள் முதல் இந்த நாள் வரை

இசை :விஸ்வனாதன்-ராமமூர்த்தி
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

MOUTHORGAN VEDIO-337



57 ஆண்டுகளாகியும் என் நினைவில் நீங்காது நிற்கும் பாடல்.  
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
 நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)

நிலை மாறினால் குணம் மாறுவான்  - பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான்  - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான்  - அது
வேதன் விதியென்றோதுவான் 
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே 
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

ம் ஹ்ம் ம் ஹ்ம்

(வந்த நாள்) . 

Posted by kankaatchi.blogspot.com at 5:09 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, November 24, 2018

இசையும் நானும் (335)-திரைப்படம்-அசோக்குமார் (1941) பாடல்-பூமியில் மானிட ஜென்மம் அடைந்து...

இசையும் நானும் (335)-திரைப்படம்-அசோக்குமார் (1941) பாடல்-பூமியில் மானிட ஜென்மம் அடைந்து...

இசையும் நானும் (335)-திரைப்படம்-அசோக்குமார்   (1941) பாடல்-பூமியில் மானிட ஜென்மம் அடைந்து...




MOUTHORGAN VEDIO-335 

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..ஓஊ...
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே 


காமமும் கோபமும் உள்ளம்  நிரம்பவே 
காலமும் செல்லமடிந்திடமோ
காலமும் செல்லமடிந்திடமோ

உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம் ...ஓஊ....
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம் 
சத்திய ஞான  தயாநிதியாகிய சத்திய ஞான  தயாநிதியாகிய 
புத்தரை  போற்றுதல் நம் கடனே
புத்தரை  போற்றுதல் நம் கடனே

உண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில் இந்  நர  ஜென்மமிதேஉண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில் இந்  நர  ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே - பொதிதாங்கிய
பாழ்மரமே- வெறும் பாமரமேமண்மீதிலோர் சுமையே - பொதிதாங்கிய
பாழ்மரமே- வெறும் பாமரமே

திரைப்படம்:  அசோக்குமார்
பாடல்:  பூமியில்மாநிடஜன்மம்
பாடகர்கள்:  MK. த்யாகராஜ பாகவதர்
இசை:  பழையது
பாடல் ஆசிரியர்:  பாபநாசம் சிவன் 
77 ஆண்டுகளாகியும் இன்னும் முந்தய தலைமுறையின் நினைவில் நிற்கும் பாடல். 




Posted by kankaatchi.blogspot.com at 5:18 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, November 11, 2018

இசையும் நானும் (332)-திரைப்படம்-கலைக்கோயில் (1964) பாடல்-தேவியர் இருவர் முருகனுக்கு....


இசையும் நானும் (332)-திரைப்படம்-கலைக்கோயில் (1964) பாடல்-தேவியர் இருவர் முருகனுக்கு....



இசையும் நானும் (332)-திரைப்படம்-கலைக்கோயில் (1964)


பாடல்-

தேவியர் இருவர் முருகனுக்கு...


MOUTHORGAN VEDIO(332)


Movie: 

கலைக்கோயில் (1964)

Music: விஸ்வநாதன்-ராமமூர்த்தி 
Singer(s):பி.சுசீலா 
Lyricist: கண்ணதாசன்
தேவியர் இருவர் முருகனுக்கு 
திருமால் அழகன் முருகனுக்கு 
ஏனடி தோழி அறிவாயோ 
எனக்கோர் இடம் நீ தருவாயோ [தேவியர்]

கலைகளிலே  அவன் மறைந்திருந்தான் 
கை  விரலில் அவன் பிறந்து வந்தான் 
இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான் 
என்னோடு தன்னை அவன் இணைத்துவிட்டான் [தேவியர்]

ஒரு முகம்  அவனை உணர்ந்ததடி 
இருமுகம் ஒன்றாய் கலந்ததடி 
அறிமுகம் சுவையாய் முடிந்ததடி 
அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி [தேவியர்]



Posted by kankaatchi.blogspot.com at 2:24 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, October 17, 2018

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.


ஆங்கிலத்திலே ஒரு பழமொழி ஒன்று உண்டு.
அது" Jack of all trades but master of none" 

அதுபோல் எனக்கும் எல்லாவற்றின் மீதும் ஒரு 
ஈர்ப்பு உண்டு. 

ஆனால் ஒன்று எனக்கு பிடித்துவிட்டால் அதை 
எத்தனை ஆண்டுகளானாலும் விடாப்பிடியாய் 
முயற்சி செய்து அதை நிறைவேற்றிக்கொண்டு விடுவேன். 

அதில் ஓவியம் வரைவது எனக்கு பிடித்த ஒன்று. 
1973 ஆம் ஆண்டு என் நண்பன் ஒருவன் பென்சிலால் 
வரையப்பட்ட நாகேஷின்  முகத்தை காண்பித்தான். 
அப்படியே அது கருப்பு வெள்ளை புகைப்படம் போல் இருந்தது. 

அதை பார்த்தவுடன் நாமும் அதை முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது. 

அதனால் அவ்வப்போது பென்சிலால் படங்கள் வரைந்து அதை 
மெருகேற்றுவதில் தனி ஆனந்தம் .

இன்று பென்சிலால் முப்பரிமாண படங்களை வரைந்து  உலகெங்கும் ஓவியர்கள் கலக்குகிறார்கள். 

அதையும் ஒரு நாள் தொட்டுவிடுவேன். என்னுள்ளே இருக்கும் jack அதற்க்கு அனுமதிக்கவேண்டும். 

மயில்கள் எனக்கு மிகவும் பிடித்த பறவைகள். அதுவும் அது கூவும் அழகே அழகு. அதை அடிக்கடி கேட்டு பார்த்து ரசிப்பேன். அதன் அசைவுகள். ஆட்டம் பார்வை எல்லாமே அழகோ அழகு. 

அந்த பென்சில் ஓவியம் இதோ. 


Posted by kankaatchi.blogspot.com at 7:26 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, October 14, 2018

நானும் ஒரு ஓவியன் தான்



நானும் ஒரு ஓவியன் தான்


இந்த தலைப்பின் கீழ் 16.10 2015 ல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை வரைந்து வெளியிட்டிருந்தேன். அதற்கு  திரு ஸ்ரீராம் மட்டும் கருத்து  தெரிவித்திருந்தார். 

அதற்குப் பிறகு உடல்நிலை சரியில்லாமையால் படம் வரைவதை நிறுத்திவிட்டேன். (இப்போது மட்டும் யார் கேட்டார்கள்? என்ற கேள்வி காதில் விழுகிறது). 

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பென்சில் ஓவியம் வரைந்ததை அவருக்காக வெளியிடுகிறேன். 


Posted by kankaatchi.blogspot.com at 5:38 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, October 3, 2018

மனிதா நீ எதற்கு கோயிலுக்கு செல்கிறாய்?

மனிதா நீ எதற்கு கோயிலுக்கு செல்கிறாய்?

மனிதா  நீ எதற்கு கோயிலுக்கு செல்கிறாய்?

எனக்கு இன்று உண்மை  தெரிஞ்சாகணும்.

கோயிலுக்கு இறைவனை வணங்க செல்கின்றேன்.

ஏன் அங்கு மட்டும்தான் இறைவன் உள்ளானோ ?

பலருக்கு அப்படிதான் தோன்றுகிறது. அதனால்தான் அவனை
அங்கு காண  செல்வதாக கூறுகிறார்கள்.

இறைவன் உன்னுள்ளும் உள்ளான். உன்னை சுற்றியுள்ள
அனைத்திலும் உள்ளான் என்பது தெரியுமா .

சிலருக்கு தெரியும். பலருக்கு தெரியாது.

மனிதன் ஐம்புலன்களால்தான் இந்த உலகோடு தொடர்பு  கொள்ளுகிறான்.

அவனை உணரும் வரை மனதை நாம் ஒதுக்கி  தள்ள முடியாது.

கோயிலில் சிலர் அங்கு  கிடைக்கும் பிரசாதங்களை சுவைக்க செல்வதில் தவறேதும் இல்லை.

ஆனால் அந்த ஐம்புலன்களும் தங்கள் தனிப்பட்ட சக்திகளையும் செயல்பாடுகளையும் மறந்து ஒருங்கிணைந்தால்தான் ஒன்றேயான பரம்பொருளை உணர முடியும்.

அதற்கான வழி வகைகளை ஏற்படுத்தி தரும் இடம்தான் ஆலயம் என்பதை உணர வேண்டும்.

அதை உணராது தினமும் கோயிலுக்கு சென்று வருவது. மனம் என்னும் மாடு வெறுமனே  வெளியில் சென்று புல்  மேய்ந்து வருவதற்கு (கோயில் பிரசாதம் சாப்பிட்டு வருவதற்கு) மட்டுமே சமம்.

கோயிலின் வாசலில் நாம் போட்டுக்கொண்டிருக்கும் காலணிகளை வெளியிலேயே விடுவது (நாம் உடல் மீது கொண்டுள்ள அபிமானத்தை விடுவது)நம்முடைய உயிர் அணிந்துகொண்டிருக்கும் தோலால் மூடப்பட்ட நம் உடம்பைக் குறிக்கும்.

கோயிலின் உள்ளே பலி பீடத்தின் முன்பு வணங்குவது நம்  மனதில் உள்ள   நான் மற்றும் எனது எண்ணங்களையும் மற்றும் அனைத்து  தீய எண்ணங்களையும் விட்டு விட்டு தூய தெளிவான மனதுடன்
கருவறையில் நுழைவதைக் குறிக்கும்

கருவறையில் இருளில் உள்ள இறை வடிவம் மனிதர்களின் இதயத்தில்
உள்ளே உள்ள இருளில் உள்ள இறை வடிவம் போன்றது.

தீபத்தின் ஒளியில் வடிவம் தோன்றுவதைபோல் நம் உள்ளத்திலும்
தீபத்தின் ஒளி தோன்ற வேண்டும்.

தீப  ஆரத்தி காட்டப்படும்போது அனைத்தும் மறந்து(வடிவம் மறைகிறது-நாமும் நம்மை மறக்கின்றோம்) வெறும் ஒளி மட்டுமே நம் மனதில் நிறைகிறது. அனைத்தையும் மறந்து விளக்கின் ஒளியிலே விளக்க வொணா அமைதியை அடைகின்றோம்.

இந்த நிகழ்வு நம் மனதில் நிகழும் வரை கோயிலுக்கு செல்லவேண்டும்.

நினைத்தவுடன் அந்த நிலையை நாம் அடையும் நிலை வந்துவிட்டால்  அந்த நிலையிலேயே  நாம் இருந்து நிலையான இன்பத்தை அடையலாம்.

அதை விடுத்து மற்றவைகளில் கவனம் செலுத்துவதால் பயன் ஏதும்  இல்லை.

வழிபாட்டின் தத்துவம் அறிந்து வழிபாடு செய்யாவிடில் கோயில் சிலைகளின் மேல் ஓடும் பல்லிகளுக்கும் , எலிகள் போன்ற சிறு பிராணிகளுக்கும்  ,கரப்பான் பூச்சிகளுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லை.
Posted by kankaatchi.blogspot.com at 7:14 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, September 26, 2018

யாருக்காக யார் சாவது ?





யாருக்காக யார் சாவது ?

இராமன் என்பவர் இறந்து விட்டார். 
அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.

அவரது மனைவி,9 வயதான மகன்,பெற்றோர் 
அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

இந்தக் குடும்பத்துக்கே குருஜியாக விளங்கும் அறிஞர் 
ஒருவர் அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் 
மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.

இராமனின் மனைவி சொன்னாள் ”குருஜி!இவ்வளவு இளம் வயதில் என்னையும்
 என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே? 
நான் என்ன செய்வேன்?

அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்”
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி 
சமாதானப் படுத்த முயன்றார் 
ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை.

கடைசியில் அவர் கேட்டார்”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.

பின் சொன்னார்”இராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர்,
இந்தத் தண்ணீரை அருந்தலாம்.இராமன் திரும்பி வருவார்.
ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்”

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆனால் யாரும் முன் வரவில்லை.

அவர் இராமனின் தந்தையைக் கேட்டார்” 
ஐயா! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?”

தந்தை சொன்னார்”நான் இறந்து விட்டால் 
என் மனைவிக்கு யார் ஆதரவு?அவளுக்காக நான் வாழ வேண்டும்”

தாயைக் கேட்க அவள் சொன்னாள்”
அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம்.
நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது?”

மனைவி சொன்னாள்”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது? 
அவனுக்காக நான் வாழ வேண்டும்”
குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்”
குழந்தாய்,உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?”

அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக்கொண்டு சொன்னாள் 
”குருஜி,உங்களுக்கென்ன பைத்தியமா?
அவன் ஒரு குழந்தை.இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது
. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?”

குருஜி சொன்னார்”உங்கள் அனைவருக்கும்
 ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். 
அப்படியானால் இராமனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது.
 எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் .

 இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்”
சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.

ஆம் பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.

எந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் 
என்பது அவன் எடுக்கும் முடிவு.

நாம் யார் அதைக் குறை சொல்ல?
 கேள்வி கேட்க?“நாம் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறோம்,
அதில் பச்சை இலைகள் இருக்கும் வரை இலைகள் வாடிப்போய்,
 அது உயிரற்ற குச்சியானால் அதை நாம் கவனிக்கப் போவதில்லை.
 அதனிடம் அன்பு செலுத்தப் போவதில்லை.”

”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்
”“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”.

K.N.RAMESH <knramesh@gmail.com>

Posted by kankaatchi.blogspot.com at 6:50 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, September 21, 2018

மனித பிறவி எடுத்தென்ன பயன்?

மனித பிறவி எடுத்தென்ன பயன்?

மனித பிறவி 
எடுத்தென்ன பயன்?

அரக்கர் குலத்தில்  பிறந்த விபீஷணன்
இவ்வுலகில் அவதரித்த அரங்கனை
அடையாளம் கண்டு அறிந்து கொண்டு
அடைக்கலம்  அடைந்தான்.

அரக்கனுக்கே மகனாய் பிறந்த
பிரகலாதன்  அரவணைப்    பள்ளியானை
அன்போடு உபாசித்து அவன் மடியிலேயே
அமர்ந்துகொண்டான்.

ஆடு மேய்க்கும் இடையர்கள் அகிலத்தை
தன்னுள்ளே கொண்ட இறைவனாம்
கண்ணனை தங்கள் குலத்தில் அவதரிக்கச்
செய்து ஆனந்த வாழ்வு  வாழும்
பேறு  பெற்றனர்.

வானர குலத்தில்  பிறந்த அனுமனோ
ராமனாய் வந்த மாதவனை அறிந்துகொண்டு
அவன் சேவகனாய் சேவை செய்து இன்புற்றான்

நம்மையெல்லாம் கடைத்தேற்ற
நம்மிடையே மனிதனாய் தோன்றி
மா மனிதனாய் நம்மோடு வாழ்ந்து
இன்றும் அவன் பக்தர்களின் இதயத்திலே
வாழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீ ராம பிரானை
அறிந்து உய்யாது  போனால் மனித பிறவி
எடுத்தென்ன பயன்?
Posted by kankaatchi.blogspot.com at 7:20 PM 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

தூணுக்குள் மறைந்து நின்ற மாயவா !

தூணுக்குள் மறைந்து நின்ற மாயவா !



ஐம்பூதத்தால் அமைந்த  அணுக்களின்
கோட்டையில் உடலினுள் ஆனந்தமாய்
என் இதயத்தில் வீற்றிருக்கின்றாய்
என் அழகிய சிங்கமே

உன் அன்பென்னும் விழி பார்வையால்
என்றென்றும் ஆனந்தம் அடைய செய்வாய்

என்றும் வற்றாத ஸ்ரீநிதியை
உன்னோடு கொண்டவனே
காட்டாற்று வெள்ளம்போல் வந்து
மறையும் நிலையில்லா இவ்வுலக
பொருட்களின் மீதான மோகத்தை
நீக்கி  அருளுவாய்

தூணுக்குள் மறைந்து நின்ற மாயவா !
என் ஊனுக்குள்ளும் மறைந்து நிற்கும்
மாயம் செய்யும் தூயவா

துவாரகையில் யாதவர்கள் கண்டு
மகிழ அன்று கண்ணனாய் தோன்றினாய்

நவ துவாரங்கள் கொண்ட என் உடலின்
உள்ளே உன்னை காண இக்கணமே  அருளுவாய்

விண்ணும் மண்ணும் அளந்த வித்தகா
இவன் இந்த மண்ணுக்குள் செல்லுமுன்
விரைவில் தோன்றி எனக்கு விடுதலை
தருவாய் முகுந்தா

கல்லிலும் முள்ளிலும் உன்னை தேடும்
என் மனம் கள்ளமில்லா இதயத்தில் தானே
நீ வந்தமர்வாய் கோவிந்தா என்பதை
இன்னும் உணர்ந்தேனில்லை

அகிலத்தையெல்லாம் நீ ஒருவனே இயக்கும்போது
அதை அறியாத  தேவர்கள் கூட்டம் தானே
அனைத்திற்கும் காரணம் என்று
தலைக் கனம் கொண்டலைகின்றனர் இன்றும்

அனைத்தும் உன் உடைமையாய்  இருக்க
எல்லாம் தனதென்று அகந்தை கொண்டலைகிறது
அரக்கர் கூட்டம் அகிலமெங்கும்

தேவரும் அரக்கரும் எண்ணங்கள் வடிவில்
என் அகத்தில் அமர்ந்துகொண்டு உன்னை
எண்ணவிடாமல் செய்துகொண்டு என்னை
ஆட்டிப் படைப்பதை நீ அறிந்திருந்தும் நீ
இன்னும் அவர்களை விரட்டியடிக்காமல்
வாளாவிருப்பதேனோ?

என் உள்ளத்தின் உள்ளே நித்திரை கொண்டுள்ள
நிமலனே ,
பாலாழியில் பள்ளி கொண்டுள்ள
பரந்தாமனே
பதம் பணிந்து உன்னை நாடுகின்றேன்
என் ஜீவன் என்னை விட்டு ஓடிவிடுவதற்குள்
என்னை அவர்களிடமிருந்து விடுவிப்பாயாக

Posted by kankaatchi.blogspot.com at 6:38 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, September 19, 2018

அமைதியில்லா உலகம்.

அமைதியில்லா உலகம்.

அமைதியில்லா உலகம். 

இன்று உலகின்  பல பகுதிகளில் தேவையற்ற  போர்கள் மூண்டு
கோடிக்கணக்கான அப்பாவி மக்கள் தங்கள் நாட்டை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

போரில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டு விட்டனர்.

கணக்கிலடங்கா மக்கள் வெள்ளம் பல நாடுகளில் தஞ்சம் அடைந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அவர்கள் நாட்டில் நடைபெறும் போர்களுக்கு அந்த நாட்டு மக்கள் எள்ளளவும் காரணமில்லாத நிலையில் நாட்டை ஆள்பவர்களுக்கும்  அவர்களை எதிர்ப்பவர்களுக்கும் நடக்கும் ஆணவ சண்டைகளில் அப்பாவி மக்கள் துன்பப்படுகின்றனர்.

கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் ஆயுத வல்லரசுகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்நாட்டு வளங்களை கொள்ளையடிக்கின்றனர்.

உலகில் எங்கும் அமைதியில்லை .

இந்த மனிதசமூகம் மதம், ஜாதி, இனம், மொழி இவற்றால் பிரிவுபட்டு  பிளவுபட்டு ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல்  அறிவில்லா விலங்குகள் போல் வீணே சண்டையிட்டு வீட்டிலேவிட்டில்  பூச்சிகள்போல் சாகின்றனர்.

உலகம் தோன்றிய நாள் முதல் இப்படித்தான் இருக்கிறது.
எண்ணங்களில்  மாற்றம் ஏதும் இல்லை.

கர்வம் மற்றும் பொறாமை பிடித்தவர்களின் செயல்பாடுகள்
அன்றும் இன்றும் என்றும் ஒன்றுதான்.
Posted by kankaatchi.blogspot.com at 9:00 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Monday, September 17, 2018

மனமே உன்னைப்போல் உற்ற துணை இவ்வுலகில் யாரேனும் உண்டோ?


மனமே உன்னைப்போல் உற்ற துணை 
இவ்வுலகில் யாரேனும் உண்டோ?

மனமே உன்னைப்போல்
உற்ற துணை இவ்வுலகில்
யாரேனும் உண்டோ என்றால்
அது  பொய்யாகுமோ ?

எல்லையில்லா வானம்போல்
எண்ணற்ற தகவல்களை உன்னுள்ளே
அழியாமல் சேமித்து வைத்து
வேண்டுவோர்க்கு வேண்டும் நேரத்தில்
அளித்து உதவிடும் உன் திறமையை
என்னவென்று புகழ்வது?

ஆயிரமாயிரம் எண்ணங்கள் வற்றாத
ஜீவநதிபோல் என் முன்னே
ஓடிக்கொண்டிருந்தாலும்
எனக்கு தேவையானஒன்று
அதில் தெரிந்தால்
அதை அழைத்தால்
உடனே ஓடி வந்து
என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்
உன் செயலுக்கு ஈடு இணை
உண்டோ இவ்வுலகில்?

என்றோ நடந்து முடிந்து
காலத்தால் கடந்துபோன இன்பம்
தந்த அந்த நிகழ்வை
அப்படியே மாறாமல் பதிவு செய்து
அதை நினைக்கும்போது கண  நேரத்தில்
கண்முன்னே தோற்றுவித்து
மகிழ்ச்சியில் ஆழ்த்தும் உன்
பாங்கு சொல்லால்
வடிக்க இயலுமோ?

உன்னுடன் உனக்கு துணையாய்
ஓய்வின்றி உழைக்கும் ஐம்புலன்களின்
சேவையை பாராட்ட மனமில்லாத
சோம்பேறிகள் அவர்களை
ஐம்புலக் கள்வர்கள் என்று விமரிசிப்பதை
கண்டு கொள்ளாமல்
என் கடன் பணி 
செய்து கிடப்பதே என்று கீதையில்
கண்ணன்  காட்டிய வழியில் நீங்கள்
செல்லுவது நான் கற்றுக்கொள்ள
வேண்டிய முக்கிய பாடம்.
Posted by kankaatchi.blogspot.com at 7:56 PM 4 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, September 16, 2018

EXPLORING THE SELF IN YOU

EXPLORING THE SELF IN YOU

EXPLORING THE SELF IN YOU 


I am the immortal self as vast as Universe in the space
without any boundary and 
not the mortal self limited to body, space and time
as projected by the little mind

I am the eternal self which has 
neither  beginning nor end

I not not the limited self as conceived by the mind
during dream and waking state

I am the self embodiment of love to all creations 
in the universe and not the little self of limiting the love
to kith and kin as conceived  by the mind. .

I am the self  as the vast space undisturbed the 
activities of the countless planets and stars 

I am not the fragile little self  easily become a prey  to the
conflict of emotions created by the mind

I am the eternal self inside  simply witnessing the activities 
in and around and remain at peace at all times 

I am not the little  self reacting to each and every thought 
passing out of the mind and loose the mental balance
because of ego

A thought originates from the mind will become an object 
when its comes out.and given a name.which
will become a memory in the mind.
like a planet when formed in the space is named  
and started started moving.

The eternal self is like a sun centered in the space .

The planets are like thoughts circling around the sun.
thus cause chains of changes in the planets
like day and night,morning and evening,
cold and hot weather etc etc.

But the sun remains constant 
radiating light and energy

If we realize that our self is like the sun
the revolving thoughts like planets of the mind around the eternal  self inside it will not make any impact and the permanent peace can be  be obtained.

Understanding the self outside 
is never possible going on reading 
thousands of scriptures  again and again 
for millions of years or meditating on the 
forms of deities which are all 
are all belong to the mind only.

The eternal self is beyond the 
imagination of the mind. 

The mind is not permanent 
Mind is nothing but thoughts of the past and future things 
projected outside  in the dream state and waking state.only

To know the eternal self inside 
the mind should be silenced and 
then the eternal self will appear before you 
like a sun with all its glory .

The eternal self inside should be approached without any precondition .and with an imagination by the mind as it is beyond description and concept of the things known to the mind 
and which cannot be found in our memory
which will  be revealed and experienced by the self only. 


To be quiet without doing anything physically and mentally 
even for a moment the dawn of enlightenment and bliss 
is blossomed a like flower.

once we taste this it will remain for ever. and go to that state to remain in eternal peace whenever we are disturbed in the dream and waking state .

Posted by kankaatchi.blogspot.com at 7:00 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Followers

Blog Archive

  • ►  2023 (1)
    • ►  July (1)
  • ►  2021 (1)
    • ►  October (1)
  • ►  2020 (1)
    • ►  November (1)
  • ►  2019 (36)
    • ►  June (1)
    • ►  April (5)
    • ►  March (2)
    • ►  February (5)
    • ►  January (23)
  • ▼  2018 (60)
    • ▼  December (4)
      • இசையும் நானும் (343)-திரைப்படம்- பாரதி .... (2000)...
      • இசையும் நானும் (339)-திரைப்படம்- அவன்தான் மனிதன் (...
      • இசையும் நானும் (338)-திரைப்படம்- பாவ மன்னிப்பு (19...
      • இசையும் நானும் (337)-திரைப்படம்- பாவ மன்னிப்பு (19...
    • ►  November (2)
      • இசையும் நானும் (335)-திரைப்படம்-அசோக்குமார் (1941)...
      • இசையும் நானும் (332)-திரைப்படம்-கலைக்கோயில் (1964)...
    • ►  October (3)
      • நானும் ஒரு ஓவியன் தான்.
      • நானும் ஒரு ஓவியன் தான்
      • மனிதா நீ எதற்கு கோயிலுக்கு செல்கிறாய்?
    • ►  September (12)
      • யாருக்காக யார் சாவது ?
      • மனித பிறவி எடுத்தென்ன பயன்?
      • தூணுக்குள் மறைந்து நின்ற மாயவா !
      • அமைதியில்லா உலகம்.
      • மனமே உன்னைப்போல் உற்ற துணை இவ்வுலகில் யாரேனும் உண்டோ?
      • EXPLORING THE SELF IN YOU
    • ►  August (7)
    • ►  July (5)
    • ►  June (2)
    • ►  May (10)
    • ►  February (1)
    • ►  January (14)
  • ►  2017 (157)
    • ►  December (19)
    • ►  November (22)
    • ►  October (7)
    • ►  September (11)
    • ►  August (14)
    • ►  July (20)
    • ►  June (14)
    • ►  May (18)
    • ►  April (5)
    • ►  March (8)
    • ►  February (8)
    • ►  January (11)
  • ►  2016 (133)
    • ►  December (7)
    • ►  November (13)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (17)
    • ►  July (17)
    • ►  April (12)
    • ►  March (14)
    • ►  February (24)
    • ►  January (24)
  • ►  2015 (183)
    • ►  December (28)
    • ►  November (12)
    • ►  October (18)
    • ►  September (32)
    • ►  August (28)
    • ►  July (16)
    • ►  June (13)
    • ►  May (1)
    • ►  April (4)
    • ►  March (3)
    • ►  February (1)
    • ►  January (27)
  • ►  2014 (295)
    • ►  December (33)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (6)
    • ►  August (20)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (26)
    • ►  April (41)
    • ►  March (42)
    • ►  February (39)
    • ►  January (65)
  • ►  2013 (472)
    • ►  December (50)
    • ►  November (23)
    • ►  October (27)
    • ►  September (26)
    • ►  August (47)
    • ►  July (38)
    • ►  June (74)
    • ►  May (44)
    • ►  April (71)
    • ►  March (33)
    • ►  February (23)
    • ►  January (16)
  • ►  2012 (137)
    • ►  December (16)
    • ►  November (17)
    • ►  October (4)
    • ►  September (16)
    • ►  August (19)
    • ►  July (2)
    • ►  April (11)
    • ►  March (11)
    • ►  February (18)
    • ►  January (23)
  • ►  2011 (74)
    • ►  December (26)
    • ►  November (40)
    • ►  October (8)

About Me

kankaatchi.blogspot.com
View my complete profile
Simple theme. Powered by Blogger.