Monday, December 29, 2014

(பாசுரம்(15) ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(15)

 

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(15)


பாடல்-15 
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின்  நங்கையீர் !
போதர்கின்றேன் வல்லை நின் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக 
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள் 
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை 
மாயனைப் பாடேலோ ரெம்பாவாய் 
விளக்கம் 




14 பாசுரங்களில் உறக்கத்தை விட்டொழித்து 
உலகளந்த உத்தமனின் பேரை பாடி கோயிலுக்கு சென்று வணங்குமாறு  அறிவுறுத்தியும் ஜீவன்கள் உறங்குவதிலேயே சுகம் கண்டு கொண்டு அதிலிருந்து எழுவதற்கு மனம் வராமல் படுக்கையில் இருந்துகொண்டே காலத்தை கடத்தி கொண்டிருக்கின்றனர். 


இந்த உலகில் நல்லதோர் வாழ்க்கை வாழவேண்டுமென்றால் ல்லதோர் சத்சங்கத்தில் நம்மை இணைத்துக்கொள்ளவேண்டும். அதை விடுத்து தீயவர்களுடன் இணைந்தால் நம் வாழ்வு கேலிக்குரிய பொருளாகிவிடும். 


ஆன்மீகத்தில் உண்மையான முன்னேற்றம் ஏற்படவேண்டுமேன்றால் 
சத்சங்கத்தை நாடுவதை விட சிறந்த சாதனம் இல்லை.

காலம் யாருக்காகவும் காத்திருக்காது .
அடுத்த கணம் என்ன நடக்கும் என்று யாரும் அறிய முடியாது. 

கடந்த காலத்தை  வீணடித்ததுபோல்
 நிகழ்காலத்தையும் வீணடிப்பவர்கள் மதியிருந்தும்
 உண்மையை உணராது வீணே மாண்டுபோகின்றனர்

விலங்குகளைப் போல் உண்டு உறங்கி 
இரை தேடி உறவுகொண்டு. 
பந்தத்திலும்>பாசத்திலும்> மோகத்திலும்>சிக்கி கர்வம் கொண்டு திரிந்து அரிதாய்க் கிடைத்த பிறவியை 
ஹரியை எண்ணாமல் 
அழிகின்றனர். 



காலையில் எழுந்த ஆதவன் 
மேற்கே மறைவதைக் கண்டும்
 நம் கண்முன்னே பிறந்த கன்று வளர்ந்துமுதுமை அடைந்து 
 மடிவதைக் கண்ட பிறகும்>
நம்மோடு வாழ்ந்து திடீரென்று மாண்டு 
மறைந்து போனவர்களைக் கண்டும்
 வாழ்வின் நிலையாமையை உணராது 
வெட்டிக் கதைகள் பேசி திரிவதைப் பார்த்த
 ஆண்டாள் உறக்கத்தை விட்டொழித்து 
லீலைகள் பல புரிந்த கண்ணனை 
வணங்க வருமாறு மீண்டும் அன்புடன் அழைக்கிறாள். 

இந்த உலகத்தில் நாம் காணும் புற எதிரிகளைவிட நம் உள்ளத்திலேயே இருந்துகொண்டு நம்மை அழிவுப்பாதைக்கு  கொண்டு செல்லும் தீயஎண்ணங்களே கொடிய எதிரிகள்.

அவர்களை இனம் கண்டுகொள்வது மிகவும் கடினம். கண்ணுக்கு தெரியாத அந்த எதிரிகளை அழிக்க வேண்டுமென்றால் நமக்குள்ளேயே இருந்து நம்மைக் காக்கும் கண்ணனின் திருவடிகளை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.

  ஆண்டாளின் அறிவுரையை கேட்டு அவன் திருவடிகளில் பக்தி செலுத்தி
 பிறவி பயனை அடைவதில்
 நாட்டம் கொள்வோமாக. 

No comments:

Post a Comment