Saturday, May 30, 2015

நான் யார்?

நான் யார்?

நான் யார் என்றார் கேள்வியைக் கேட்டால்
அனைவரும் கை காட்டுவது
பகவான் ரமணரின் " நான் யார் " என்ற அறிவிப்பை தான்

படிக்க நன்றாக இருக்கிறது.

ஆனால் நடைமுறைப்படுத்த
யாரும் தயாராக இல்லை.

நான் யார் என்ற கேள்விக்கு  பதில் நமக்குள்ளே
உள்ளது என்கிறார் பகவான்

நாம் உறக்கத்திலிருந்து
விழித்ததும் அனைத்து செயல்களுடன்
இந்த "நான்" ஒட்டிக்கொள்கிறது.

ஆனால் உண்மையில் இந்த "நான்" உண்மையான
"நான்" இல்லை

உண்மையில் உறங்கும்போதும்,
உறக்கத்திலிருந்து விழிக்கும்போதும்
நம்மை கண்காணித்துக்கொண்டு ஒரு வஸ்து இருக்கிறது
அதுதான் உண்மையான "நான்"

அதன் குரலைக் கேட்க வேண்டுமென்றால்
மனதில் உள்ள அனைத்து எண்ணங்களின்
இரைச்சல்   ஓயவேண்டும்

எந்த செயலை செய்தாலும் "நான்" செய்தேன்
செய்கிறேன்  என்ற எண்ணமின்றி செயல்படத் தொடங்கினால்
முன்னேற்றம்  காணலாம்