Saturday, March 31, 2012

ஸ்ரீ ராம நவமி சிந்தனைகள்





ஸ்ரீ ராம நவமி சிந்தனைகள் 




இராமனை .துதி மனமே 
சீதா ராமனை துதி மனமே

கனவிலும் நனவிலும் இன்பம்தரும்
ஆத்மாராமனை துதி மனமே

நன்மையையும் செல்வமும் நாளும்
நல்கிடும் நாராயணின் அவதார 
ராமனை துதி மனமே

திண்மையும் பாவமும் சிதைத்து
தேய்த்திடும் சிவராமனை துதி மனமே

நம் மனதில் பதுங்கி நம்மை துன்புறுத்தி
வாழும் அரக்க ராஷத எண்ணங்களை
கொன்றழிக்கும் வல்வில்  ராமனை துதி மனமே

பிறபிறப்பை அறுக்கும் ராமநாமம்
அஞ்சனை மைந்தனின் நினைவில்
நிறைந்த ராம  நாமம்

ராம நாமம் சொல்லியே எளிதாக
கடந்திடலாம் இந்த சம்சார சாகரத்தை

ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்   
ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
   

Wednesday, March 21, 2012

கடவுளும் குயவனும்

கடவுளும் குயவனும் 

இருவரும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள்
ஆனால் குயவனை யாரும் ஒன்றும் சொல்வதில்லை

ஆனால் கடவுளை மட்டும் அனைவரும் எதற்கெடுத்தாலும் 
குறை சொல்கிறார்கள் குற்றம் சுமத்துகிறார்கள்
எப்படி? 

குயவன் மண்ணை பிசைந்து கால்களால் மிதித்து துவைத்து 
மண்ணை மிருதுவாக்கி விதவிதமான் பானைகளை வெவ்வேறு
அளவுகளில் செய்கிறான். 
சூரிய ஒளியில் காய வைத்து தீ மூட்டி சுட்டு எடுக்கிறான் 
பிறகு விற்பனைக்கு அனுப்புகிறான்
வேகாத பானைகளை உடைத்து போடுகிறான்
சில எடுத்து வைக்கும்போதும் வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போதும் உடைந்து போகின்றன 

எல்லா பானைகளும் ஒரே மண்ணினால் செய்யபட்டாலும்
ஒரு பானை கோயிலில்  கலச  நீர்  வைக்க  செல்லுகிறது ,ஒன்று  உணவு  சமைக்க  செல்லுகிறது, சில பிணத்தின்  கூட  நெருப்பை  சுமந்து செல்லுகிறது  சில சுடுகாட்டில் பிணம் எரித்த பின் எலும்புகளையும் சாம்பலையும் வைக்க பயன்படுகிறது

அதேபோல்தான் மனிதர்களையும் இறைவன் ஒன்றாக நன்றாகத்தான் படைக்கின்றான்
ஒவ்வொரு மனிதனின்  செயல்பாடுகளுக்கு ஏற்ப அவன் வாழ்வு நல்லதாகவோ துன்பமானதாகவோ அமைகிறது.

 மண்பானைகளுக்கு தன வாழ்வை அமைத்து கொள்ளும் சுதந்திரம் கிடையாது

ஆனால் கடவுள் மனிதனுக்கு அறிவையும் சுதந்திரத்தையும்  அபரிமிதமாக 
வழங்கியிருக்கிறான். 
அதை நல்ல வகையில் பயன்படுத்திகொள்வது அவன் கையில்தான் இருக்கிறது 

அதை தவறாக பயன்படுத்தி தனக்கு தானே துன்பத்தை வரவழைத்துகொண்டு கடவுளையும் மற்றவர்களையும் குறை கூறுவது அறிவீனம் என்பதை மனிதர்கள் உணரவேண்டும். 

Monday, March 19, 2012

எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான்

பணம் ஏராளமாக இருக்கிறது வாழ்க்கையை நடத்த அனைத்து வசதிகளும் இருக்கிறது உதவி செய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள் எல்லாம் இருந்தும் இன்று பல கோடி பேர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கும் எல்லாம் இருந்தும் ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை? மனதின் போக்கை சரியாக புரிந்துகொள்ள இயலாமையால் மனம் போன போக்கில் மீளமுடியாத தவறான் பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி பெரும்துன்பதிர்க்கு ஆளாகிவிடுகிறார்கள். தன் முட்டாள்தனத்தினால் விளைந்த செயல்களுக்கு பிறர் மீது குற்றம் செலுத்தி தனி மனிதர்கள் அனைவருக்கும் கேடு விளைவிக்கிறார்கள் அதை போன்ற எண்ணம் கொண்ட சில நாடுகளின் தலைவர்கள் மற்ற நாடுகளின் மீது போர் தொடுத்து கோடிகணக்கில் பணத்தை வீணடித்து, லட்சகணக்கில் மக்களை கொன்று குவித்து உலகில் அமைதியை குழி தோண்டி புதைக்கிறார்கள். முடிவில் அவர்களும் புதையுண்டு போகிறார்கள். ஆனால் அவர்கள் தோற்றுவித்த அழிவுகள் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் . இதுபோன்ற மன நோயாளிகளின் போக்கிற்கு காரணம் சுயநலம்தான்.அவர்களிடம் கூட்டு சேரும் அதுபோன்ற சில மனிதர்களும்தான் இந்த நிலைமைக்கு காரணம். எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான் அதில் உள்ள எண்ணங்கள்தான் காரணம் அது இந்த உலக பொருட்கள் மீது இன்பத்தை தேடுகிறது உயிரற்ற பொருட்கள் இன்பத்தை எப்படி தரமுடியும் என்று யாரும் யோசிப்பதில்லை அழகிய உயிருள்ள பூனைக்குட்டியோ நாய்க்குட்டியோ தரும் இன்பம் தங்க நகைகளோ வைர நகைகளோ தர இயலுமா? அழகிய உயிருள்ள குழந்தையின் ஒவ்வொரு அசைவும் மழலையும் தரும் மட்டற்ற இன்பம் ஒரு பொம்மை தர இயலுமா? பிணமாகிவிட்டால் பணமோ இந்த வசதிகளோ நம்முடன் வருமா என்பதை ஒவ்வொருவரும் தினமும் ஒரு கணமாவது சிந்தித்து பார்க்கவேண்டும் உயிருடன் இருக்கும்போதே அனைவருடன் அன்போடு பழக வேண்டும் வேதனையை தரும் வெறுப்பை நீக்க வேண்டும் பிறர் மனம் நோகும்படி வார்த்தைகளை கூறாமல் பிறர் மீது புறங்கூறாமல், பிறருக்கு துன்பம் விளைவிக்காமல், பிறர் சொத்துக்களை .அபகரிக்காமல் , இல்லாதவருக்கு உதவுவதும், பிறர் துன்பங்களை நீக்க பாடுபடுவதும் துன்பங்களையும், ஏமாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள பழகிகொள்வதும், எல்லாம் வல்ல இறைவன் மீது நம்மையும் இந்த உலகையும் படைத்த இறைவன் மீது எப்போதும் நம்பிக்கை வைத்து அகந்தையில்லாமல் வாழ்க்கை நடத்த பழகி கொண்டால் எந்நிலையிலும் கவலைகள் இல்லாமல் வாழலாம். இவ்வுலகில் அமைதி தவழ நம்மை படைத்த இறைவனை தினமும் காலையில் கண் விழித்ததும் பிரார்த்தனை செய்வோம

Tuesday, March 13, 2012

உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால் 
உலகத்தில் போராடலாம் 
என்றான் கண்ணதாசன்

நீயே பிரம்மம் என்கிறது 
உபநிதடங்கள் 

நானே பிரம்மம் என்றார் ஆதி சங்கரர் 

சர்வம் பிரம்ம மயம்  என்றார் 
சதாசிவ ப்ரம்ம்ஹேந்திர  ஸ்வாமிகள்

தன்னை அறிந்து இன்புற 
ஒரு தந்திரம் சொல் நிலாவே 
என்றான் மஹாகவி பாரதி 

பிரம்மனே பிரம்மத்தை அறிந்திடாது
முருகனிடம் குட்டு வாங்கினார்
என்று புராணங்கள் சொல்கிறது
சிவபெருமானே முருகனிடம் 
பாடம் கேட்டார் பிரம்மத்தை பற்றி

அப்படியானால் பிரம்மம் என்றால் என்ன?

பிரம்மம் பற்றிய ஞானத்தை அறிந்தவன்தான்
பிராம்மணன் என்றார் மராட்டிய ஞானி 
ஞானேஸ்வர்

பிரம்மத்தை ஒருவன் அறிந்துகொண்டேன் என்று 
சொன்னால் அவன் பிரம்மத்தை அறியாதவன் என்று 
பொருள் 
ஏனெனில் வார்த்தைகளால் 
விளக்கமுடியாத ஒன்றை கண்டேன் 
என்று சொன்னால் எப்படி ஏற்றுகொள்வது என்று பொருள்

பிரம்மம் என்றால் அங்கு இங்கு எனாதபடி 
எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்த பொருள்
எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்த பொருளை 
அதில் ஒரு சிறு பகுதியான மனிதன் எவ்வாறு 
விவரிக்கமுடியும்?
கடலில் உள்ள ஒரு நீர் துளி கடலை 
குறித்தாலும் அது கடலாகுமோ? 
அதுபோல்தான் இதுவும்

எங்கும் பரந்துள்ளது பிரம்மம்
எல்லாவற்றிற்குள்ளும் புகுந்துகொண்டு
இயக்குவதும் பிரம்மம்தான் 
தோற்றுவித்த அனைத்தையும் தனக்குள் 
மறைத்துக்கொள்வதும் 
கொள்வதும் பிரம்மம்தான்

புலன்களின் உதவியால்தான் நாம் 
இந்த உலகோடு தொடர்பு கொள்கிறோம்
வெளியே செல்லும் புலன்களை உள்முகமாக
திருப்பினால் நம் கேள்விகள் அனைத்திற்கும் 
விடை கிடைக்கும்
முயற்சி செய்வோம்  

Sunday, March 11, 2012

அடிமுடி காணா எம்பெருமான்

























அடிமுடி காணா எம்பெருமான்
அண்ணாமலையானே
சோதி பிழம்பாய் நின்றவனே 
குளிர்ந்து மலையாய் ஆனவனே 

உண்ணாமுலை அம்மனுடன் 
உறைபவனே

கார்த்திகை தீபத்தில்
ஒளியாய் ஒளிர்பவனே

ஆதவனை சுற்றும் கோள்கள் போல்
உன்னை கிரி வலம் வரும் 
பக்தர்களை காப்பவனே 

செல்வ செருக்குற்றவரும்
கற்ற கல்வியினால் கர்வம்
கொண்டவரும் காண இயலா 
கைலாயவாசனே 

எளியோனே,எங்கும் நிறைந்தவனே
எல்லோர்க்கும் இறையோனே

உலகில் கோயில் அமைத்தோர்க்கும் 
உள்ளத்தில் கோயில் அமைத்து உள்ளத்தில் 
பூஜித்தொர்க்கும்  ஒருசேர அருள் செய்வோனே 

சிவாய நம என்றிருப்போர்க்கு 
அபாயம் தவிர்க்கும் இறைவனே
அடிபணிந்தோம் என்றென்றும் 
எல்லோரும் வாழ்கவென்று  

Friday, March 9, 2012

காண்பதனைத்தும் இறைவனே


காண்பதனைத்தும் இறைவனே

காண்பதனைத்தும் இறைவனே

ஆம் நாம் இவ்வுலகில் காண்பதனைத்தும் இறைவனே

காண்பதனைத்தும் அவனின் கைவண்ணமே தவிர வேறெதுவுமில்லை

நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் அவனுடையதே
நம்முடைய உயிரும் அது தங்கியுள்ள உடலுமவன் அளித்ததே


நமகென்று எதுவுமே சொந்தமில்லாத நிலைமையில்
நான் என்றும் .எனது என்றும் என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது ?

அதுதான் மாயை
மாயை நீங்க மாயவனை சிந்திக்க வேண்டும்
அப்போதுதான் உடல் மீதும் உடைமைகள்
 மீதும் மோகம் நீங்கி ஞானம் சித்திக்கும்

ஏமாற்றமில்லாமல் வாழ எந்த செயலையும்
 பலன் கருதாது செய்யவேண்டும்

அகந்தை நீங்க இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து 
அனைவரையும் இறைவனின் வடிவங்களாக கருதி
சேவை செய்ய வேண்டும்

தனக்கு துன்பம் விளைவிக்கிறவர்களிடமும்
அன்பு காட்டபழக  வேண்டும் .

மேலே கண்டவற்றை நினைவில் கொண்டு வாழ்க்கையை 
நடத்தினால் துன்பமில்லா வாழ்வும்
ஞானமும் ஒருங்கே சித்திக்கும் .

இவுலகில் அனேக மகான்கள் பாடுபட்டு 
இறைஅருளை அடைந்திருக்கிறார்கள் 
.நாமும் முயற்சி செய்தால் 
அந்த நிலையை அடைவது சாத்தியம் 

குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது உண்மையா?


குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது உண்மையா?

குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது உண்மையா?
அதில் என்ன சந்தேகம்?
எப்படி?

எங்காவது ஒரு குரங்கு வந்தால் அதை பார்ப்பதற்கு
அவன் ஓடுகிறானே .தன்னுடைய முன்னோடியை
 காணாமல் அவனால் இருக்க முடியாது
.
மிருக காட்சி சாலையில் கூண்டில் வைக்கப்பட்டுள்ள
 குரங்குகளை பார்க்க கூடும் கூட்டமே இதற்க்கு சான்று
.
அவன் உடளவில்,தோற்றத்தில் மட்டும் மாறினானே 
ஒழிய மனதளவில் இன்னும் அவன் குரங்காகத்தான் இருக்கிறான்

அவன் தன்னுடைய மனம் ஒரு குரங்கு என்று சொல்வதில் 
இன்னும் பெருமைபட்டுகொண்டு இருக்கிறான்.

அவன் மனம் குரங்கு ஒரு கிளையிலிருந்து 
மற்றொரு கிளைக்கு தாவி கொண்டிருப்பது போல் 
நிலையான எண்ணம் இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கிறது .
 என்பது அனைவரும் அறிந்ததே
.
அவன் இன்னும் தன் மூதாதையாரனான 
குரங்கை ஹனுமான் உருவத்தில் கோயில் கட்டி 
வழிபட்டு கொண்டு இருக்கிறான். 
காரணம் என்ன தெரியுமா?

ஹனுமான் தன் குரங்கு உருவத்தை 
அப்படியே வைத்துக்கொண்டார்

மனதளவில் தெய்வமாக மாறிவிட்டார்

ஆனால் மனிதனோ உடலளவில்
 மனிதனாக மாறினாலும் 
இன்னும் மனதளவில்
குரங்காக இருப்பதால்தான்.

Tuesday, March 6, 2012

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா

எத்தனை கோடி இன்பம் 
வைத்தாய் இறைவா 

பாசத்தினால் இந்த உயிர்களை 
கட்டி போட்டு வைத்திருக்கிறாய்

பாசத்தினால் இந்த உயிர்கள் 
இன்ப துன்பங்களில் மாட்டிகொண்டு
மீண்டும் பாவ புண்ணியம் 
மற்றும் இறப்பு இறப்புகளில் சிக்கி 
தான் யார் என்பதை மறந்து
 படைத்த  உன்னையும் மறந்து
இந்த பூஉலகில் மீண்டும் மீண்டும் 
வந்து அல்லல்படுவதை 
கண்டு அவர்கள் மீது கருணை
கொண்டு காக்க நினைத்தால்தான்
உயிர்களுக்கு விமோசனம் பிறக்கும்
 
பாச வலையில் சிக்கிய மனிதர்களும்
சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகளும் 
அதிலிருந்து மீள்வது   மிகவும் அரிது 
 
பாசம் மனிதர்களுக்கு மட்டுமன்று 
விலங்குகளுக்கும் தானே 
கீழே பூனையின் பாசம் எப்படி?

Sunday, March 4, 2012

சுகம் என்பது என்ன?

சுகம் என்பது என்ன?


சும்மா இருப்பதுதான் சுகம் என்று 
சொல்கிறார்கள் சித்தர்கள்

ஆனால் உலகில் மக்கள் ஏதாவது சுகத்தை நாடி 
வாழ்நாள் முழுவதும் கிடைக்கின்ற இருக்கின்ற 
சுகத்தை இழந்து வாழ்நாளை வீணடித்து 
கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை

கல்வி கற்பதற்காக குழந்தபருவ இன்பங்களை 
குழந்தைகள் இழக்கின்றார்கள் 

வாலிப பருவத்தில் காதலில் சிக்கி தங்கள்நிகழ் காலத்தை
பாழாக்கி கொண்டிருக்கிறது இன்றைய இளைய சமுதாயம் 

குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக தங்கள் 
வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் கிடைக்கின்ற 
மகிழ்சிகளை பெற்றோர்கள் இழந்து கொண்டிருக்கின்றார்கள் 

இப்படிதான் என்றோ எங்கோ கிடைக்கபோகும் 
ஒரு சுகத்தை எண்ணி நிகழ்காலத்தை இழந்து 
ஏமாற்றத்திலும்  ஏக்கத்திலும் துன்பத்திலும் 
வாழ்க்கையை கழித்துக்கொண்டிருக்கிரார்கள் 
இன்றைய உலக மக்கள். 

எதிர்காலத்தையே நினைத்து நிகழ்காலத்தை 
மகிழ்ச்சியின்றி கழிப்பதை விடுத்து 
ஒவ்வொரு கணத்தையும் 
அப்படியே ஏற்றுக்கொண்டு 
வாழ்க்கையை மனநிறைவோடு 
வாழ்வதுதான் சுகம்.  

Friday, March 2, 2012

இறைவன் வழி காட்டட்டும்


உலகில் இறைவனுக்காக 
பல்லாயிரக்கணக்கான கோயில்கள் கட்டப்பட்டன 

அவைகளில் பல கோடி மக்கள் வழிபாடுகள் செய்தனர்.
 நன்மைகளும், மன அமைதியும் பெற்று 
இன்பமாக வாழ்ந்து வந்தனர். 

மனிதன் தான் உழைத்து சம்பாதித்த மிக உயர்ந்த 
பொருட்களான தங்கம், வைரம் போன்ற 
விலைமதிப்பில்லாத பொருட்களை 
இறை வடிவங்களுக்கு சாற்றி மகிழ்ந்தான் 

காலபோக்கில் இறை வடிவங்களுக்கு 
முக்கியத்வம் அளித்த மனிதன் இறைவன் 
அனைத்து உயிர்களிலும் இறைவன் 
வாசம் செய்கின்றான் என்பதை மறந்து போனான்

தெய்வ வடிவங்களுக்கு அவன் கொடுத்த முக்கியத்வதை
தன்னோடு வாழும் சக மனிதர்களுக்கும் உயிர்களுக்கும் 
கொடுக்காமல் அவர்களை துன்புறுத்துவதில் இன்பம் காணலானான்

மனிதர்களை திருத்த எண்ணிய இறைவன் 
மனிதர்களில் சில பகுதியினரை இறை வடிவங்கள் 
மட்டும் கடவுளல்ல என்ற கொள்கையினை 
மக்களிடையே பரப்ப எண்ணி கோயில்களை அழிக்க செய்தான் 
.
பொருட்கள் மீது கொண்ட மோகத்தை அழிக்க 
அவைகளை கொள்ளை போகுமாறு  செய்தான்
அதனால்தான் ஏராளமான கோயில்கள் அழிக்கப்பட்டன.
செல்வங்கள் கொள்ளை போயின

இறைவன் படைப்பில் அனைவரும் சமம் என்று புத்தரும்,
 மகாவீரரும், ஆதி சங்கரரும், திருவள்ளுவரும் , வள்ளலாரும்,
 ராமகிருஷ்ண பரமஹம்சரும் ,ராமானுஜரும் ,
முகமது நபியும், கிறிஸ்துவும் ,சீரடி சாயியும் 
என கணக்கற்ற மகான்கள் மக்களிடையே தோன்றி 
அன்பின் பாதையை உலகிற்கு காட்ட வந்தனர் 
.மீண்டும் உலகில் உண்மையான இறைவன் 
தத்துவம் உணரப்பட்டது.
 
ஆனால் சில காலம் கழித்து அவர்களின் கொள்கைகள் 
காற்றில் பறக்கவிடப்பட்டு மக்கள் ஒருவரை ஒருவர் 
சுயநலத்தால் தாக்கிகொண்டு கோடிகணக்கில் மாண்டு போயினர்
மதங்களின் பெயரால் சண்டையிட்டு மடிந்தனர்.
 
மதங்களின் உண்மையான தத்துவங்கள் பின்னுக்கு 
தள்ளப்பட்டு மக்கள் போலிகளின் பின்னால் மக்கள் இன்று 
அணிவகுத்து சென்று கொண்டு தானும் துன்பத்திற்கு 
ஆளாகி உலக மக்களையும் துன்பதிற்க்க்கு ஆளாக்கிகொண்டிருக்கின்றனர்.

இந்நிலை மாற வேண்டும் உலகில் அன்பு கோலோச்ச வேண்டும், பகைமை ஒழிக்கப்படவேண்டும். அதற்க்கு இறைவன் வழி காட்டட்டும்
என்று நல்ல உள்ளங்கள் அனைத்தும். பிரார்த்தனை செய்ய வேண்டும்.  

Thursday, March 1, 2012

காண்பதனைத்தும் அவனே

நாம் எதற்கு நாம் உண்ணும் உணவை 
இறைவனுக்கு படைக்க வேண்டும்? 

சிலைகள், படங்கள் முன்பு வைத்து 
படைக்கப்படும் உணவுகளை இறைவன் உண்கிறாரா 
என்று பல பேர்களின் உள்ளத்தில் கேள்விகள் எழும் 

ஆனால் எல்லோரும் செய்கின்றார்கள் என்று 
அவர்களும் செய்து விட்டு போகின்றார்கள்.
 
இறைவனுக்கு நமக்கு இருப்பதுபோல்
மாமிச உடலும் 
குடல்களும் கிடையாது 
அதனால் நாம் அளிக்கும் 
உணவுகளினால் அவருக்கு  
எந்த பிரயோஜனமும் இல்லை
அவன் ஒளி மயமானவன்
  
இருந்தும் ஏன் இந்த செயலை 
காலம் காலமாக இந்து
மதத்தை சார்ந்தவர்கள் 
செய்து வருகிறார்கள் ?

நமக்கு ஒரு வடிவம் கொடுத்து 
நமக்குள் அவன் புகுந்து கொண்டு
நம்மை இயக்குகின்றான்

நம்முடைய புலன்கள் எப்போதும் 
வெளியே சென்று கொண்டிருப்பதால் 
நம் உள்ளிருந்து அவன் நம்மை இயக்குவதை 
நாம் அறிய இயலுவதில்லை

நமக்கு வடிவம்  கொடுத்த அவனுக்கு நாம் ஒரு 
வடிவம் கொடுத்து அவன் நமக்கு செய்வதை எல்லாம் நாம் 
அவனுக்கு நன்றி கடனாக திருப்பி செய்யும் பாவனையில்தான் 
இந்த செயல்களை செய்து வருகின்றோம்
 
நமக்குள் அவன் இருந்து செயல்படுவதை உணர்ந்த பின்பு
இது போன்ற புற வழிபாடுகள் தேவையற்றதாகிவிடும் 

அதன் பின் நாம் செய்யும் 
அனைத்து செயல்களும் 
வழிபாடுகள் ஆகிவிடும்

அந்த நிலையை அடைந்த பின் 
காண்பதனைத்தும் அவனே என்று 
உணர்ந்து கொண்டு இவ்வுலக வாழ்வை
இன்ப துன்பம் கடந்த நிலையில் 
ஆனந்தமாக வாழலாம்