Thursday, January 26, 2017

இசையும் நானும் (159)Film படகோட்டி -கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்

இசையும் நானும் (159)Film படகோட்டி -கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் 

இசையும் நானும் (159)

இசையும் நானும் (159) Mouthorgan song-தமிழ்  song-


Film படகோட்டி


by TR PATTABIRAMAN


பாடல் வரிகள்-வாலி 
இசை-விஸ்வநாதன்-ராமமூர்த்தி 

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் 
அவன் யாருக்காக கொடுத்தான் 
ஒருத்தருக்கா கொடுத்தான் -இல்லை 
ஊருக்காக கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால்,
தென்றல் வர வெறுத்திடுமா ?
மாலை நிலா ஏழை என்றால் 
வெளிச்சம் தர  மறுத்திடுமா ?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று 
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை 


படைத்தவன் மேல் பழியும் இல்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட  சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி  நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எது வந்த போதும்  பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை  வாழ்த்திடுவோம்




Saturday, January 21, 2017

இசையும் நானும் (158)--தமிழா தமிழா என்று சொல்லு!

இசையும் நானும் (158)--தமிழா தமிழா என்று சொல்லு!


இசையும் நானும் (158)-

தமிழா தமிழா என்று சொல்லு!


இசையும் நானும் (158) Mouthorgan song-தமிழ்  song-


written and played 

by TR PATTABIRAMAN




தமிழா தமிழா என்று சொல்லு!

தமிழா தமிழா என்று சொல்லு
நெஞ்சம் நிமிர்த்தி  நீ எழுந்து நில்லு (தமிழா தமிழா)

தமிழர்  பண்பாட்டை
சிதைக்க முற்படும் வீணர்களை
ஒன்றிணைந்து விரட்டிடுவோம்
அந்த ஈனர்களை
 நம் நாட்டை  விட்டே
 துரத்திடுவோம் (தமிழா தமிழா)

பிறந்த மண்ணும் காளையும் என்றும்
தமிழனின்  அடையாளம்

Image result for jallikattu

அதை பிரிக்க நினைக்கும்
கயவர்களின் எண்ணம்
என்றும் ஈடேறாது என்று முழக்கமிடு (தமிழா தமிழா)

தமிழனின் மாண்பை பாதுகாக்க
வரலாறு காணாத உங்கள் எழுச்சி

சாதியும்  மதமும்
தடையல்ல அதற்கு 
என்று நிலை நாட்டிய
புது முயற்சி (தமிழா தமிழா)

தமிழரை பிளவுபடுத்தும்
கட்சிகள்  நமக்கு
இனி இங்கே  தேவையில்லை

கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு
கல்லை
எரியும்  குணம் கொண்டோருக்கு
இனி நம் நாட்டில் வேலையில்லை (தமிழா தமிழா)


இனியும் பலிக்கடா ஆகாதே தமிழா 
இதுபோல பிரிவின்றி தொய்வின்றி
என்றும் நாம்  இணைந்திருப்போம்

இழந்துபோன உரிமைகளைமீட்டெடுத்து
அனைவரும் இன்பமாய் வாழ்ந்திடுவோம். (தமிழா தமிழா)


Wednesday, January 18, 2017

வலியால் துன்புறும் மாந்தர்கள் !

வலியால் துன்புறும் மாந்தர்கள் !

நம் உடலிலோ அல்லது உள்ளத்திலோ
ஏதாவது ஒரு வகையில் வலி தோன்றி
நம்முடைய வலிமையை குறைத்து அல்லது
அடியோடு நம்மை செயலிழக்க வைத்து விடுகிறது.

சில  வலிகள் சாதாரணமாக பொறுத்துக்கொள்ளும்
வகையில் இருக்கும். அப்படியே விட்டுவிட்டு
நம் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுவிட்டால்
அது தானே மறைந்து விடும்.

சில வலிகள் எதாவது உணவோ அல்லது பானமோ
உட்கொண்டால் சரியாகி விடும்.

சில வலிகள் காற்றோட்டமாக வெளியில் சென்று
உலாவி விட்டு வந்தால் பறந்து போய்  விடும்.

சில வலிகள் மாத்திரைகள், மருந்துகள், போன்றவற்றால்
கட்டுப்படுத்தப்பட்டுவிடும்.

ஒவ்வொருவருக்கும் சில வலிகள் திரும்ப திரும்ப வந்து
தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் .அதற்க்கு ஏற்கெனவே
கையாண்ட வழிமுறைகளை மேற்கொண்டு தற்காலிக
தீர்வை எல்லோரும் அடைவது நடைமுறை .

ஆனால் என் அந்த வலிகள் தனக்கு வருகிறது
என்பதை ஆராய்ந்து பார்ப்பதும் கிடையாது
அப்படி ஆராய்ந்து பார்த்து நிரந்தர தீர்வை
பெற முயற்சிப்பதும் கிடையாது.

அவ்வாறு சேர்த்து வைத்த  வலிகள் முற்றிப் போய்
ஒன்று திரண்டு  ஒருநாள் சுனாமி போல் நம்மை தாக்கி
நிலை குலைய செய்யும்போது நமக்கு பெரும்
பாதிப்பை ஏற்படுத்துகிறது

இந்த பதிவின் நோக்கம் வேறு.

மருந்தில்லாத ஒரு மருத்துவம்
செலவில்லாத மருத்துவம்

பக்க விளைவில்லாத ஆன்மீக மருத்துவம்
ஒன்றை நான் கடைபிடித்து நன்மை அடைந்துள்ளேன்.

அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

உண்மையான ஆர்வம் உள்ளவர்கள்.
பயன்படுத்தி உடனடி நிவாரணம் காணலாம். 

Tuesday, January 17, 2017

இசையும் நானும் (157)Film காதலன் -என்னவளே அடி என்னவளே

இசையும் நானும் (157)Film காதலன் -என்னவளே அடி என்னவளே


இசையும் நானும் (157)

இசையும் நானும் (157) Mouthorgan song-தமிழ்  song-

Film காதலன்


by TR PATTABIRAMAN


Image result for ennavale adi ennavale lyrics
Movie Name:

காதலன்

Song Name:



என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் - இன்று
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்

(என்னவளே)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டயும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி - இது
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

(என்னவளே)

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் - என்
காதலின்தேவையை  காதுக்குள் ஓதிவைப்பேன் - உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்

(என்னவளே)


Friday, January 13, 2017

போகி பண்டிகை

போகி பண்டிகை

போகி பண்டிகை 





போகி என்றால் என்ன?

போகி என்றால் போகங்களை அனுபவிப்பவன்
அதாவது எல்லாவிதமான 
சுகங்களையும் அனுபவிப்பவன்.
என்று பொருள்.

எல்லாவிதமான சுகங்களையும்
தர்மத்திர்க்குப்பட்டு  அனுபவிக்கத்தான் 
இந்த உலகில் நம்மை பிறக்க 
வைத்திருக்கிறான் இறைவன். 

எனவே அதில் தவறொன்றும் இல்லை. 
ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும் என்பதை 
நாம் நினைவில் கொள்ளாமையால்தான் வந்த வினைகள்தான் 
இத்தனை அலங்கோலத்திர்க்குக்  காரணம் 

ஒரு பழமொழி உண்டு 

ஒரு வேளை உண்பவன் யோகி 



இருவேளை உண்பவன் போகி 


மூன்று வேளைஉண்பவன் ரோகி 



நாம் வசிக்கும்  இந்த உடல் வெறும் 
பௌதிக  உடல் மட்டுமல்ல 
இதனுள் ஏராளமான விஷயங்கள் உள்ளன.
அவைகளை நம்மால் அறியமுடியாது. '

ஏனென்றால் இந்த உடலில் குடலை
நிரப்புவதைத்தான் நாம் பிரதான வேலையாக 
தற்காலத்தில் நினைத்துகொண்டு. 
எப்போது பார்த்தாலும் உணவுகளை பற்றியே 
சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

எந்த ஊடகத்தைப் பார்த்தாலும். 
இந்த பிரச்சினை பற்றியே பேசிக் கொண்டிருக்கிரார்கள், 
எழுதி கொண்டிருக்கிறார்கள்,

இதற்கெனவே படித்து பட்டம் பெற்று 
கட்டணம் வசூலித்துக் கொண்டு 
பலர் ஏதாவது புளுகிக்கொண்டு 
காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

எத்தனை, வகைகள், எத்தனை உணவு முறைகள், 
உடலைப் பெருக்க ,உடலை இளைக்க,
உடல் நோயுற்றால் அதற்கு ஒரு உணவு முறை,
என நாவிற்கு அடிமையாகி நாய் படாத பாடு படுகிறோம்.

உணவைத் தியாகம் செய்து கல்வி கற்கிறோம். 
காசு சேர்க்கிறோம். 

முடிவில் உடல்நலம் மன நலம் கெட்டுப்போய்
எந்த உணவையும் உண்ணமுடியாமல் நீரிழிவு,ரத்த கொதிப்பு நோயினாலும், கவலைகளினாலும் இன்று உலகில் 90 விழுக்காடுகள் 
மக்கள் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

மருத்துவ மனையில் நுழைந்தால் பல லட்சம் காலி. 
நாம் வாழும் வாழ்க்கையின் அவலட்சணம் 
இவ்வளவுதான் இன்று. 

திருவள்ளுவர். ஒரு தடவை உண்ட உணவு 
நன்றாக செரிமானமான பிறகு  பசி எடுத்து 
உணவு உண்டால் நோய்கள் 
நம்மை அணுகாது என்கிறார். 

ஆனால் அவர் சொல்லை 
யார் கேட்கிறார்கள். ?

எப்போதும் ஏதாவது ஒன்றை 
தின்று கொண்டிருப்பதுதான் 
நன்று என்று என்பதுதான் 
இன்றைய உருப்படாத கலாசாரம். 

கண்டதை நம்மை தின்ன சொலும் நாவு 
விரைவில் நம்மை எமனுக்கு கொடுக்கும் காவு 
அதை அறியாமல் போனால் விரைந்து வரும் சாவு. 

தரமற்ற நஞ்சு உணவுகள். எங்கு பார்த்தாலும் மருத்துவ மனைகள்,
மருந்து கடைகள், பரிசோதனைக் கூடங்கள்.
மக்களில் பாதி பேர் மருத்துவ மனைகளில் 
தன் வாழ்நாளைக் கழிக்கிறார்கள். 

இந்நிலை மாற வேண்டுமென்றால் 
ஒரு வேளை உணவுதான் உண்ணவேண்டும். 
அது நல்ல உணவாக இருக்கட்டும்
சத்துள்ளதாக இருக்கட்டும்.

 நாம் யோகி ஆகாவிட்டாலும்
 ரோகி ஆகாமல் இருக்கலாம். 

இல்லையேல் சம்பாதிக்கும் காசு அனைத்தும் 
மருத்துவர்களுக்கும், மருந்து கம்பனிகளுக்கும், 
தான் போய்  சேரும்.
நாமும் நோயில் விழுந்து 
பயனற்ற வாழ்க்கையை
வாழ்ந்து விரைவில் 
ஒன்றுக்கும் உதவாமல்
போய்ச் சேர்ந்து விடுவோம். 

ஒரு ஜீவன் ஒரு தாயின் வயிற்றில் சவம்போல்தான் கிடக்கிறது உயிர் இருந்தாலும்.
ஏனென்றால் சவம்போல் நீரில் மிதக்கிறது .தன்னைத் தானே, எதுவும் செய்யமுடியாது. 
அப்போது அதற்கு அதை சுமந்துகொண்டிருக்கும் தாய்தான் உலகம் .அவள் எதை நினைக்கிறாளோ, அவள் எதைக் கேட்கிறாளோ , அவள் எதை செய்கிறாளோ, எதை உணகின்றாளோ ,எந்த மன நிலையில் இருக்கின்றாளோ அவைஅனைத்தும் தான் அந்தஜீவனின் வாழ்க்கையை உருவாக்குகின்றன. அவன் எண்ணங்களை ஆட்சி செய்கின்றன என்பதை யாரும் உணருவதில்லை 

அதனால்தான் ஒரு பெண் கருவுற்றவுடன் அவளுக்கு நல்லசாத்வீக உணவுகளையும், மகிழ்ச்சியான சிந்தனைகளையும் ,நல்ல  ஆரோக்கியமான சூழலையும்  அவளுக்கு அளித்தார்கள். 
நல்ல தெய்வீகமான சிந்தனைகளை வளர்க்கும்போருட்டு தெய்வ வழிபாடுகளையும், நல்ல நூல்களையும், படித்து ,கடைபிடித்தமையால் உத்தம புத்திரர்கள் பிறந்தார்கள். இந்த உலகத்தில் வலிமையோடு .புகழோடு வாழ்ந்தார்கள். உலகத்திற்கும் உபயோகமாக வாழ்ந்து அவர்களும் நன்மைபெற்றார்கள் உலகத்திற்கும் நன்மையைச் செய்தார்கள். 



தற்காலத்தில் தாயாகும் பெண்ணை பல குடும்பங்களில் ஒரு எதிரியாகத்தான் அனைவரும் பார்க்கிறார்கள். 



அவளை பலவிதங்களில், காயப்படுத்துகிறார்கள். மன உளைச்சல் ஒரு புறம். உடல் அசதி ஒரு புறம். மாமியார், நாற்றமெடுக்கும் எண்ணம் கொண்ட நாத்தனார்கள் ஒருபுறம்,காம வக்கிரங்களை தூண்டும் தொலை காட்சிகள், வக்கிரமான ,தீய எண்ணங்களையும், பயங்களையும் அதிர்ச்சியையும்  குழந்தையின் ஆழ் மனதில் தங்கி அவர்கள் இவ்வுலகில் வந்தவுடன் அவர்களை ஆயுள் முழுவதும் பாதிக்கக்கூடிய வகையில் அந்த ஜீவனின் தாய் உட்பட அனைவரும் மூடத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.

அதனால்தான் இன்று எவர் மனதிலும் அமைதியில்லை. மகிழ்ச்சியில்லை.

எல்லாம் வெளி வேஷம். கூடி கும்மாளமிட்டு கலைந்துபோகும் காக்கைக் கூட்டங்கலாகிவிட்டன. 

சமீபத்தில் 16 வயது பெண் திருமணத்திற்கு முன் கருவுற்ற காரணத்தினால் தான் பெற்ற குழந்தையை கழிவறையிலிருந்து எடுத்து வெளியே வீசிவிட்டாள் .அது இறந்து போய்விட்டது. 

மேல்நாட்டு கலாசாரம் நம் நாட்டு மக்களை 
மாக்களாக மாற்றிவிட்டது. 
ஒரு ஒழுக்கம் இல்லை. ஒழுங்கும் இல்லை.
தான் பெற்ற உயிர்கள் மீது இரக்கம்  இல்லை. 
தன்னை வளர்த்து ஆதரித்த உறவுகள் 
மீதும் அன்பு  இல்லை. 

எல்லாம் காசுதான் 

அதனால்தான் சிவானந்தர் சொல்லுவார் காசா லேசா என்பார். 
அதை தொடர்ந்து சொன்னோமானால் காசாலே சா என்று வரும் 



உலகில் அதுதான் இன்று ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. 
இந்நிலை மாறவேண்டும்

இந்த போகி நன்னாளிலிருந்து  நம் மனதில் உள்ள தீய பண்புகளான பொறாமை, குறைகூறுதல், பிறரை மனத்தால்,உடலால், துன்புறுத்தும் போக்கு, சுயநலம் , விருப்பு வெறுப்பு போன்ற தீய குணங்களை த்அறிவு என்னும் தீயில் போட்டு பொசுக்குவோம். 



நச்சு வாயுக்களை வெளிவிடும், ரப்பர் டயர்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் தீயிலிட்டு கொளுத்தி நமக்கு நாமே  நோய்களை வரவழைத்துக் கொள்ளாமல் இருப்போம். 

விலங்குகள்போல் கண்ட கண்ட இடங்களில் மலஜலம் கழிப்பதையும் குப்பைகளை வீசி எறிவதையும் நிறுத்துவோம். 

புடம் போட்ட தங்கம் போல் சுத்தமாவோம். 
நம் அகம் சுத்தமானால் புறமும் தானே சுத்தமாகிவிடும். 

நல்ல மாற்றம் நிகழ இறைவன் நமக்கு அறிவு அளிப்பானாக 

படங்கள்-கூகிள் -நன்றி 

Thursday, January 12, 2017

இசையும் நானும் (156)Film பக்த பிரகலாதா-நாராயண மந்த்ரம் -அதுவே நாளும் பேரின்பம்

இசையும் நானும் (156)Film பக்த பிரகலாதா

இசையும் நானும் (156)

இசையும் நானும் (156) Mouthorgan song-தமிழ்  song-

Film பக்த பிரகலாதா 


by TR PATTABIRAMAN



Movie Name:

பக்த பிரகலாதா 

Song Name:


நாராயண மந்த்ரம் -அதுவே 
நாளும் பேரின்பம் 





ஓம் நமோ நாராயணாய 
ஓம் நமோ நாராயணாய 
ஓம் நமோ நாராயணாய 

நாராயண மந்த்ரம் -அதுவே நாளும் பேரின்பம் 

பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து பரமன் அருள் 
தரும் சாதனம் 

உடலினை வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயனில்லை 

உயிர்களை வதைத்து ஓமங்கள்  வளர்க்கும் 
யாகங்கள் தேவையில்லை 

மாதவா மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை 

ஆதியும் அந்தமும் நாராயணனே 
அன்னையும் தந்தையும் நாராயணனே 
பக்தியும் முக்தியும் நாராயணனே 
பகலும் இரவும் நாராயணனே 

பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து பரமன் அருள் தரும் சாதனம் 

நாராயணா  ஹரி நாராயணா 
நாராயணா லட்சுமி நாராயணா 

நாராயணா  ஹரி நாராயணா 
நாராயணா  ஹரி நாராயணா 

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Eqzi9qlaVMk" frameborder="0" allowfullscreen></iframe>

https://youtu.be/Eqzi9qlaVMk


Saturday, January 7, 2017

கடவுள் என்றால் என்ன ?(2)

கடவுள் என்றால் என்ன ?(2)


சரி .கடவுள் என்ற அது 
ஒவ்வொரு உயிரின் உள்ளே இருக்கிறது.

சரி.உடனே உள்ளே சென்று அதை 
கண்டுவிட வேண்டியதுதானே 

கேட்பதற்கு எளிதாக இருக்கிறது.

எப்படி உள்ளே செல்வது?
அது உடலில் எங்கே இருக்கிறது ?
அது எப்படி இருக்கும்?

அதை நாம் பார்த்தால் நமக்கு என்ன கிடைக்கும்
அல்லது நமக்கு அதனால் என்ன பயன்?
என்றெல்லாம் கேள்விகள் எழுவது இயல்பு.

இன்னும் சிலர் நாம் எதற்காக  போய் 
அதை தேட வேண்டும் அல்லது 
நாட வேண்டும் என்றும் கேட்கிறார்கள். 

நமக்கும் கடவுளுக்கும் இடையில் 
எது வந்து அதை அறிய விடாமல் 
தடுக்கிறது?

ஏன்  நினைத்தவுடன் அந்த 
செயலைச் செய்ய முடியவில்லை.?

சற்று ஆழ்ந்து  சிந்தித்துப் 
பார்க்க வேண்டும். 

இவ்வுலகம்அ தோன்றிய காலம் 
முதற்கொண்டு அவ்வாறு  ஆழ்ந்து சிந்தித்து 
பல உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள் 
பல ஆழ்வார்களும், நாயன்மார்களும் மற்ற 
எண்ணற்ற சித்த மகான்களும் ரிஷிகளும். 

அவற்றில் ஏதாவது ஒன்றை ஊன்றி 
பற்றிக்கொண்டு அவ்வழி நின்றால் 
அந்த உண்மைப்பொருளை 
உணர்ந்து கொள்ளலாம்.

 (இன்னும் வரும்)


கடவுள் என்றால் என்ன ?

கடவுள் என்றால் என்ன ?

கடவுள் என்றால் என்ன ?

கடவுள் என்றால் என்ன?
அது அதுவா அல்லது
அவனா அல்லது
அவளா அல்லது
இரண்டுமா ?

எல்லாவற்றையும் கடந்து உள்ளே
சென்றால் அங்கிருப்பது கடவுள் என்கிறார்கள்.

அதற்கு  இந்த உயிர் இடம் கொண்டுள்ள
உடலே ஆலயம் என்கிறார்கள்.
புறத்தே திரியும் நம் மனதை
உள்ளே திருப்பினால் இந்த
உடலுக்குள் இருக்கும் "அதை"
காணலாம் என்கிறார்கள்.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில்
புறத்தே ஆலயங்களை நிர்மாணித்தார்கள்.

அதன் கருவறையில் ஒரு வடிவத்தை அமைத்தார்கள்.
இருளில் ஒன்றும் தெரியாமையால் ஒரு தீபத்தை
ஏற்றி வைத்தார்கள்.

அப்படியும்  தெளிவாக தெரியாமையால்
சூடத்தை ஏற்றி தெளிவாக வடிவத்தை காணுமாறு
செய்தார்கள்.

அந்நேரம் கோயில் மணி ஒலிக்கச் செய்தார்கள்

அங்கு குழுமியிருந்த அனைவரும் அனைத்தையும் மறந்து.தன்னையும் மறந்து சுற்றுப்புறத்தையும் மறந்து அந்த வடிவத்தின் மீதும் ஒளியின் மீதும்
தங்கள் கவனத்தை சிதறாமல் நிலைக்க செய்தார்கள்.

அந்த குறிப்பிட்ட நொடியில் அடைந்த அமைதியும் ஆனந்தத்தை
தினமும் தங்கள் வாழ்வில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அனுதினமும்  ஆலய வழிபாடு செய்ய சொன்னார்கள்.

இவ்வாறு செய்த புற  வழிபாட்டை அக  வழிபாடாக  செய்து
பழகுமாறு அறிவுறுத்தப்பட்டது.

செய்தவர்கள் தனக்குள் அந்த கடவுளை கண்டுகொண்டார்கள்

செய்யாதவர்கள் இன்னும் ஆலயங்களுக்கு இயந்திரம் போல்
சென்று வந்து கொண்டு இருக்கிறார்கள்.

நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள்  மனதிற்கு தோன்றிய
கருத்துக்களை பரப்பிக்கொண்டிருக்கிறர்கள்.

இன்னும் தொடரும்

இருக்கின்ற காசை எல்லாம்


இருக்கின்ற காசை எல்லாம் 

இருக்கின்ற காசை எல்லாம்
இங்கேயே செலவு செய்துவிடு
ஞான தங்கமே

கையில் இருக்கின்ற காசை எல்லாம்
இங்கேயே செலவு செய்துவிடு
ஞான தங்கமே

உடலை விட்டு உயிர் நீங்கும்போது
அதில் ஒரு சல்லிக்  காசு கூட
உன் கூட வாராது என்பதை
உணர்ந்துகொள் ஞானத்தங்கமே

தேவைக்கு அதிகமாய் உடலுக்கும்
குடலுக்கும் போடும் காசு
உபத்திரவத்தைத்தான் தரும் என்பதை
உணராதுபோனால் ஊசி போட்டே
கொன்னு போடுவான் மருத்துவன்
உன்னிடம் உள்ள காசை எல்லாம்
பறித்துக்கொண்டு  (இருக்கின்ற)

அதிகமாக ஆசைப்பட்டால்
இளமையிலேயே மீசை நரைக்கும்
இதயம் வேகமாக துடிக்கும்
இன்பம் பறிபோய்விடும்
துன்பமே பரிசாக கிடைக்கும் (இருக்கின்ற)

இருப்பதை இல்லாதவரிடம் பகிர்ந்து கொள்
பொல்லாதவரைக் கண்டால் நில்லாது ஓடு
நல்லவரோடு நட்பு கொண்டு நல்லவை எண்ணி
நல்ல செயல்கள்; செய்து நன்றி மறவாமல்
வாழ்ந்து நன்மை அடைவாய் மனிதா (இருக்கின்ற)


Thursday, January 5, 2017

இசையும் நானும் (155)-பச்சை கிளி பாடுது

இசையும் நானும் (155)-பச்சை கிளி பாடுது


இசையும் நானும் (155)-பச்சை கிளி பாடுது


இசையும் நானும் (155)

இசையும் நானும் (155) Mouthorgan song-தமிழ்  song-


Film அமர தீபம்  (1956)

 

by TR PATTABIRAMAN




Singers:ஜிக்கி 


Music Director:

டி .சலபதிராவ் -ஜி.ராமநாதன் 


Cast:சிவாஜி கணேசன் -பத்மினி 





61 ஆண்டுகள் கடந்தும்  இனிக்கும் இசை.

பச்சை கிளி பாடுது
பக்கம் வந்தே ஆடுது -இங்கே பாரு
உன் துன்பம் பறந்தோடுது ( பச்சை)

கள்ளம் அறியாதது -ரொம்ப சாது
வேறெங்கும் ஓடாது- உன் சொல்லைத் தள்ளாது (பச்சை )

உன்னைக் காணாவிட்டால் உயிர் வாடும்
கண்டால் இன்பம் கூடும்
சந்தோஷம்  கொண்டாடும் (பச்சை)

காதல் கதை சொல்லவோ மனம் கூசும்
கண்ணால் அதை பேசும் அன்பால் வலை வீசும். (பச்சை)


Wednesday, January 4, 2017

இசையும் நானும் (154)-ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

இசையும் நானும் (154)-ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது


இசையும் நானும் (154)

இசையும் நானும் (154) Mouthorgan song-தமிழ்  song-

Film பச்சை விளக்கு 

by TR PATTABIRAMAN




Singers:டி எம் .சௌந்தரராஜன்


Music Director:

Viswanathan Ramamoorthy 


Cast:சிவாஜி கணேசன் 

Image result for olimayamana ethirkaalam lyrics



ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

(ஒளிமயமான)

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் (நால்வகை)

மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

(ஒளிமயமான)
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக (குங்குமச்)

மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக

(ஒளிமயமான)