Tuesday, October 31, 2017

இறைவன் கண்டு கொள்ள முடியாதவனா?


இறைவன் கண்டு கொள்ள முடியாதவனா?

இறைவனை தேடி தேடி களைத்து விட்டேன்
என்று புலம்புகிறார்கள்
பலர்.

நீ இருக்குமிடம் தெரியவில்லையே
என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள்.

ஆனால் பலருக்கும் உண்மை தெரிவதில்லை.

இறைவன் எப்படி இருப்பான் என்று தெரியாது.

சரி அவன்  அப்படி எதிரில் வந்தாலும்
அவனை அடையாளம் கண்டுகொள்ளவும் தெரியாது.

அப்படி வந்துவிட்டாலும் அவனிடம்
எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரியாது.

எதற்காக அவனை  அழைத்தார்கள் என்றும் தெரியாது.

கண்ணெதிரே தோன்றினாலும் அவனிடம் என்ன பேச வேண்டும்

என்ன கேட்க வேண்டும் என்றும் தெரியாது.

இந்த கேள்விகளுக்கெல்லாம்.  நம்முடைய இதிஹாசங்களிலும், இறைவனை நேரில் கண்ட  பக்தர்களின் வாழ்க்கை  சரிதங்களிலும் விடைகள் ஏராளமாக உள்ளன.

அவைகளை மன  ஒருமையுடன் ஊன்றி படித்து சிந்தித்தால் அனைத்து கேள்விகளுக்கும் விடை எளிதாக கிடைக்கும்.

அதற்க்கு ஈடுபாடு, பக்தி, நம்பிக்கை தேவை.

நம்பிக்கை இல்லாது  அவனை அணுகுவதில் எந்த பயனும் இல்லை.

அதுபோல் ஏதாவதொரு  கோரிக்கையுடனும் மட்டும் அவனை அணுகுவதில் பயனில்லை.

நாம் அயற்சியில்லாமல்  தளர்ச்சியில்லாமல் அவனை நோக்கி
மற்ற எல்லா எண்ணங்களையும் விட்டுவிட்டு அவனை அறிய வேண்டும் என்ற ஒரே கோணத்தில் மட்டும் அணுகினால் அவன் நமக்கு புலப்படுவான்

ஆனால் அது நம் நோக்கம் நிறைவேறும்வரை தொடரவேண்டும். எந்த இடையூறு வந்தாலும் பொருட்படுத்தாது.

ஆசா பாசங்கள் நிறைந்த மனதினால் இறைவனை அடைய முடியாது.

அதே நேரத்தில் மனதின் துணையின்றியும் அவனை அறிய முயற்சி கைகூடாது.

கட்டிடம் கட்ட சாரம் தேவைப்படுவதுபோல் உள்ளத்தில் இறைவனை நிலை நிறுத்த  மனதின் உதவி தேவை. கட்டிடம் கட்டி முடித்தபின் அதன் வேலை அவசியம் இல்லை.

முயற்சி திருவினையாக்கும். .

Monday, October 30, 2017

இறைவா நீ எங்கிருக்கின்றாய்?

இறைவா நீ எங்கிருக்கின்றாய்?

இறைவா நீ எங்கிருக்கின்றாய்?
இறைவனை பற்றி சிந்திப்பவர்கள் அனைவரும்
கேட்கும் பொதுவான கேள்வி.

இந்த கேள்வியை யார் யாரிடம் கேட்கிறார்கள்
என்பது அடுத்த கேள்வி.

இந்த கேள்வியை யார் கேட்கிறார்கள்?

நான்  கேட்கிறேன்.

அந்த "நான்" யார் என்பது பகவான் ரமணரின் கேள்வி.

அந்த " நான்"யார் என்பதை கண்டுபிடி.
உன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்பது அவர் நமக்கு அளித்த பதில்.

இறைவன் நமக்குள் இருக்கின்றான். அவனை நம் உள்ளே சென்றுதான்   அறிய வேண்டும். வெளியே தேடினால் நம் கண் முன்னே அவன் இருந்தும் நம்மால் அவனை அறிந்து கொள்ள முடியாது.

ஏனென்றால் அவன்  எப்படி இருப்பான் என்று அவனை அறியாதவர்களுக்கு
விளங்காது.

முதலில் அவனை அறிந்துகொள்ள உள்ள ஏதாவது ஒரு மார்க்கத்தில் நிலையாக நின்று பிற மார்க்கங்களை பழித்திடாது விடா முயற்சியுடன் பயணம் செய்தால் வழி கிடைக்கும் .விழி திறக்கும்.

Saturday, October 28, 2017

இசையும் நானும் (242) -திரைப்படம் -கார்த்திகை தீபம் பாடல்:எண்ணப்பறவை சிறகடித்து


இசையும் நானும் (242)

திரைப்படம் -கார்த்திகை தீபம்  பாடல்:எண்ணப்பறவை சிறகடித்து 


MOUTHORGAN

கார்த்திகை தீபம்(1965)

HeroS.A.Asokan
Music DirectorR.Sudharsanam
LyricistKannadasan
SingersTMS
Year1965


எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா (எண்ணப்பறவை)
தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா
உன் துயர் கண்டால் என்னுயிர் இங்கே
துடிப்பது தெரியல்லையா
உண்மையறிந்தும் உள்ளம் வருந்த
நடப்பது தவறில்லையா (எண்ணப்பறவை)
ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி
அருகில் நெருங்கிடவா
உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே
அள்ளி அணைத்திடவா
அன்னையைப்போலே உன்னுடல் தன்னை
வருடி கொடுத்திடவா
நீ அமைதியுடன் துயில் கொள்ளும்
அழகை ரசித்திடவா (எண்ணப்பறவை)

Tuesday, October 24, 2017

இசையும் நானும் (241) திரைப்படம் -திரைப்படம் -அச்சாணி பாடல்:மாதா உன் கோவிலில் மணி தீபமேற்றினேன்


இசையும் நானும் (241)  

திரைப்படம் -திரைப்படம் -அச்சாணி 

பாடல்:மாதா உன் கோவிலில் மணி தீபமேற்றினேன் 

பாடல் வரிகள்-கண்ணதாசன் 
இசை :இளையராஜா 
பாடியவர்: எஸ்.

ஜானகி 






Tuesday, October 17, 2017

இசையும் நானும் (240) மாதா அமிர்தானந்தமயி பஜன் பாடல்:அம்மா அம்மா என உன்னை




இசையும் நானும் (240)  

மாதா அமிர்தானந்தமயி  பஜன் 

பாடல்:அம்மா அம்மா என  உன்னை

MOUTHORGAN VEDIO 


இசையும் நானும் (239) திரைப்படம் -பழநி (1965) பாடல்:அண்ணன் என்னடா தம்பி என்னடா


இசையும் நானும் (239)  

திரைப்படம் -திரைப்படம் -பழநி (1965)

பாடல்:அண்ணன் என்னடா தம்பி என்னடா 

பாடல் வரிகள்-கண்ணதாசன் 
இசை :MSV/RM
பாடியவர்: TMS

அண்ணன் என்னடா தம்பி என்னடா 
அவசரமான உலகத்திலே 
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே (அண்ணன்)
பெட்டை  கோழிக்கு கட்டு சேவலை 
கட்டி வைத்தவன் யாரடா .ஆ..ஆ.
அவை எட்டு குஞ்சுகள் பெத்தெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா (சோறு)
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்தபோதிலும் வருந்தவில்லையே தாயடா 
மணித் ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா (மனதினால்)(அண்ணன் )
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா 
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா (மதித்து)
பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசமே ஏனடா 
பதைக்கும் நெஞ்சிலே அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா (அண்ணன்)

இசையும் நானும் (238) திரைப்படம் -திரைப்படம் -செஞ்சுலக்ஷ்மி பாடல்:பாற்கடல்தனிலே சேஷசயனமதில் துயிலும் மாலே தேவா

இசையும் நானும் (238)  

திரைப்படம் -திரைப்படம் -செஞ்சுலக்ஷ்மி 

பாடல்:பாற்கடல்தனிலே சேஷசயனமதில் துயிலும் மாலே தேவா 



MOUTHORGAN VEDIO
பாடல் வரிகள்-கண்ணதாசன் 
இசை :MSV/RM
பாடியவர்: பி.சுசீலா