Monday, October 30, 2017

இறைவா நீ எங்கிருக்கின்றாய்?

இறைவா நீ எங்கிருக்கின்றாய்?

இறைவா நீ எங்கிருக்கின்றாய்?
இறைவனை பற்றி சிந்திப்பவர்கள் அனைவரும்
கேட்கும் பொதுவான கேள்வி.

இந்த கேள்வியை யார் யாரிடம் கேட்கிறார்கள்
என்பது அடுத்த கேள்வி.

இந்த கேள்வியை யார் கேட்கிறார்கள்?

நான்  கேட்கிறேன்.

அந்த "நான்" யார் என்பது பகவான் ரமணரின் கேள்வி.

அந்த " நான்"யார் என்பதை கண்டுபிடி.
உன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்பது அவர் நமக்கு அளித்த பதில்.

இறைவன் நமக்குள் இருக்கின்றான். அவனை நம் உள்ளே சென்றுதான்   அறிய வேண்டும். வெளியே தேடினால் நம் கண் முன்னே அவன் இருந்தும் நம்மால் அவனை அறிந்து கொள்ள முடியாது.

ஏனென்றால் அவன்  எப்படி இருப்பான் என்று அவனை அறியாதவர்களுக்கு
விளங்காது.

முதலில் அவனை அறிந்துகொள்ள உள்ள ஏதாவது ஒரு மார்க்கத்தில் நிலையாக நின்று பிற மார்க்கங்களை பழித்திடாது விடா முயற்சியுடன் பயணம் செய்தால் வழி கிடைக்கும் .விழி திறக்கும்.

No comments:

Post a Comment