Wednesday, August 29, 2012

ஒரு ஜீவனின் யாத்திரை

ஒரு ஜீவனின் யாத்திரை 

கிராமத்தில் இருக்கும் ஒருவன் நகரத்திற்கு செல்கிறான்.
அப்போது வீட்டில் இருப்பவர் வீட்டிற்கு தேவையான
முக்கியமான பொருட்களை வாங்கி வருமாறு. கேட்டுகொள்கிறார்.
நகரத்திற்கு கிளம்புபவன் அந்த சீட்டை எங்கோ மறந்து வைத்துவிடுகிறான் 

வெகுநேரம்  அதை தேடுகிறான். 
ஒருவழியாக அந்த சீட்டு அவன் சட்டை  பையிலேயே இருப்பது தெரிந்ததும் அந்த சீட்டை எடுத்து அதில் எழுதப்பட்டுள்ள விவரங்களை தெரிந்துகொண்டதும் அந்த சீட்டை தூக்கி போட்டுவிட்டு கிளம்புகிறான்.
இதைபோல்தான் ஒவ்வொரு ஜீவனும் 
இந்த உலகத்திற்கு பிறப்பெடுத்து வருகிறது 
அவ்வாறு வரும்போது அதற்குள் இருக்கும் ஆன்மா
சென்ற பிறவியை வீணடித்தது போல் 
இந்த பிறவியையும் உலக மாயையில் சிக்கி ஏமாந்துவிடாதே 
என்று சில அறிவுரைகளை சொல்லி அனுப்புகிறது 

ஆனால் தாயின் வயிற்றிலிருந்து  வெளியே வந்த ஜீவன் 
தாய் , தந்தை சுற்றங்கள் ,நண்பர்கள் ,ஆசைகள் ,பாசம் என 
பல பந்தங்களில் சிக்கி தான் உலகிற்கு 
வந்த நோக்கத்தையே  மறந்துவிடுகிறது. 

கணக்கற்ற ஆசைகள் மனதை பற்றிக்கொள்ள 
அதை நிறைவேற்றிக்கொள்ள உழைக்க, 
அதற்க்கு தடை செய்பவர்கள் மீது கோபம் கொண்டு 
பல  சிக்கல்களில் சிக்குகிறது.
,
பாடுபட்டு சேர்த்த காசை
செலவு செய்ய மனமில்லாமல் 
பிறர் பயன்படுத்தவும் விடாமல்
கஞ்சத்தனமும் ,கருமித்தனமும் மேலோங்கி
மனைவி, மக்கள், பொருட்கள் என மோஹம் மிக கொண்டு 
தன்னிடம் எல்லாம் இருக்கிறது என்று 
அகந்தையும் மிக கொண்டு 
பல நேரங்களில் தன்னை விட 
செல்வாக்கு உள்ளவர்களை கண்டு 
பொறாமை என்னும்  அழுக்காற்றில் மூழ்கிபோய் 
ஜீவன் நோய் வந்து அழுகுவதும் 
துன்பத்தால் அழுவதும் 
வாடிக்கையாகிவிடுகிறது. 

அப்போதுதான் அதற்க்கு தான் இந்த 
உலகிற்கு வந்த  நோக்கம் 
நினைவிற்கு வர அதை நிறைவேற்றும் வழி தெரியாது 
புத்தகங்களிலும்,போலி  காவி வேட்டி 
கட்டிய புரட்டர்களிடமும் சிக்கி தடுமாறுகிறது.



முடிவில் ஒரு உண்மையான் ஞானியை சந்தித்தவுடன் அவர் நினைவுபடுத்துகிறார்.உன்னுடைய அனைத்து துன்பங்களுக்கும் திறவுகோல் உன் சட்டைப்பையில் இருக்கிறது,அதாவது நீ தேடும்  பொருள் உனக்குள்ளே இருக்கிறது. 




அதை உன் உள்ளே சென்று தேடு என்று நினைவுபடுத்துகிறார். .
சிலர் அதை புரிந்துகொண்டு சாதனையில் இறங்கி வெற்றி பெறுகிறார்கள்.
ஆனால் பலர் இவ்வுலகில் பலகாலம் அனுபவித்த இன்பங்களும் துன்பங்களின் பதிவுகளும் நிறைவேறாத ஆசைகளும் மனதை வாட்ட மரணத்தை தழுவுகிறார்கள் மீண்டும் அடுத்த பிறவியில் தேடுவதற்கு
ஆனால் அடுத்த மனித பிறவி கிடைப்பதற்கு முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே மீண்டும் மனித பிறவி கிடைக்கும் என்பதை இந்த பதிவை படிப்பவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். இக்கணத்திலிருந்தே அதற்க்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.  

ஒவ்வொரு அணுவும் ஒரு ஆன்மா என்று உணரவேண்டும் 
பலகோடி அணுக்களில் ஒன்றுக்குத்தான் மனித பிறவி கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது. எனவே 
விடுதலையை விரும்புபவர்கள் இந்த உண்மையை புரிந்துகொள்ளட்டும்.. 

Tuesday, August 28, 2012

ஆன்மிகம் என்னும் பல்பொருள் அங்காடி

ஆன்மிகம் என்னும் பல்பொருள் அங்காடியில் 
லட்சகணக்கான பொருட்கள் கிடைக்கின்றன
சில பொருட்கள் எல்லோருக்கும் பயனாக உள்ளது 
சில குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பயனளிக்கும்.
சில ஒரு கால கட்டத்தில் பயனளிக்கும் .பிறகு பயனளிக்காது.
சில என்றும் யாருக்கும் பயன்படாது.

மனம் உடையவன் மனிதன்.
மனதின் துணை கொண்டுதான் 
அவன் இந்த உலகத்தோடு தொடர்பு கொள்கிறான்.
மனதின் துணை இல்லாவிடில் அவனுக்கு எண்ணங்களோ 
அதன் விரிவாக்கமான செயல்களோ 
இந்த உலகமோ காலமோ இல்லை. 

மனம் புறத்தே வரும்போது புற உலகும் 
உறக்கத்தில் கனவுலகும் தோன்றுகின்றன. 
இரண்டும் வெறும் மாய தோற்றங்களே. 
ஆழ்ந்த உறக்கதிலோ,மயக்க நிலையிலோ ஏதும் இல்லை. 
இந்த இரண்டு நிலைகளையும் 
ஒரு வஸ்து நமக்குள் இருந்துகொண்டு பார்த்து கொண்டிருக்கிறது .
அதுதான் நமக்கு இரண்டு நிலைகளையும் உணர்த்துகிறது.
 இந்த இரண்டு நிலைகளையும் நாம் கடக்கும் வரை 
நமக்கு இன்பதுன்பங்களும் பிறப்பிறப்புக்களும்  இருக்கும் 
.
மனம் எண்ணங்கள் இல்லாமல் காலியாக வேண்டும் 
அதுவரை விமோசனம் இல்லை. 
அனைத்து மார்கங்களும் காட்டும் வழிகள் எல்லாம் 
தற்காலிகமானவையே. 

ஒவ்வொரு குருவாக போய்கொண்டிருந்தால் 
ஒரு பயனும் இல்லை.ஏனெனில் பொதுவாக 
ஒரு குரு சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை .
அவரவர்கள் தாங்கள் சென்ற/செல்லும் பாதைதான் சரியானது 
என்று கூறிவிட்டு அவர்கள் காலம் முடிந்தவுடன்.  
இவ்வுலகைவிட்டு சென்றுவிடுகின்றனர்
எனவே  உண்மையை உண்மையாக உணர்ந்த 
உண்மையான குருவை கண்டுபிடித்து.
நம் அகந்தையை விட்டு ஞானத்தை தேடவேண்டும்.
எதுவும் சுலபமாக  கிடைக்காது .













புத்தகங்கள் மூலம் ஒன்றும் கிடைக்காது.
புத்தகம் வெளியிட்டவர்களுக்கு காசு வேண்டுமானாலும் கிடைக்கலாம். 

தனக்குள்ளே உறையும் கடவுளை
தனக்குள்ளே தேடினால்தான் அவன் கிடைப்பான். 
அதற்க்கு வாழ்நாள்முழுவதும் முயற்சி தேவை.
அதற்க்கு நம்மை சுற்றி உள்ளோர் அனுமதிக்க மாட்டார்கள்.
அதையும் தாண்டி உண்மையை அறிய 
கடுமையான மன உறுதி மற்றும் நம்பிக்கை தேவை.

Monday, August 27, 2012

தவறை உணர்ந்து திருந்தாவிடில்

கடவுள் எங்கிருக்கின்றான் ?

அவன் எல்லா இடத்திலும் இருக்கின்றான் .எல்லா பொருட்களிலும் இருக்கின்றான்?

ஏன் அவன் கடவுள் எங்கே என்று கேட்பவன் 
உள்ளத்திலும் இருக்கின்றான்? 

கல்லுக்குள் சிலையாய் இருக்கின்றான்.ஒரு சிற்பி சிலையை செதுக்கி உள்ளிருக்கும் கடவுளை வழிபாட்டிற்கு வெளி கொண்டு வருகின்றான்.

உயிர்கள் தாகத்தால் தவிக்கும் போது நீராய் உட்சென்று உயிர் காக்கின்றான்

பசியால் மயங்கி உயிர் பிரியும் நேரத்தில் உணவாக இருக்கின்றான் 
அந்த நேரத்தில் உணவை உண்பவனுக்கு உணவு அளிப்பவன் இறைவனாய் காட்சி அளிக்கின்றான் 

ஒரு மனிதன் வழி தெரியாமல் தவிக்கும் போது ஒருவன் வழி காட்டினால் 
அவன் அவனுக்கு தெய்வம் போல் வந்து வழி காட்டினீர்களே என்று உதவி செய்தவனை போற்றுகின்றான்

நாம் அனைவரும் நம்மை மறந்து உறங்கும்போது நம் உடலில் அனைத்து இயக்கங்களையும்  விழிக்கும்வரை செம்மையாக செயல்பட உதவுகின்றான்.

நாம் உறங்கும்போது நமக்கு எந்தவிதமான ஆபத்துக்களும் வராமல் காக்கின்றான்.

நாம் செய்யும் அனேக தவறுகளை மறைத்து ,பலமுறை மன்னித்து நாம் 
திருந்தி வாழ வழி செய்கின்றான் 

நாம் செய்யும் பிரார்த்தனைகளை ஏற்று அருள் புரிகின்றான் 

இன்னும் அவன் நமக்கு செய்யும் நன்மைகள் ஏட்டில் அடங்கா ,சொல்லில் அடங்கா 

இருப்பினும் நாம் செய்நன்றி மறந்து கடவுள் இல்லை என்றும் எல்லாம் தன்னால்தான் நடைபெறுகிறது என்று ஹிரண்யகசிபு போல் நமக்குள் இருக்கும் கடவுளை அறியாமல் அகந்தை கொண்டு திரிகிறோம். நம்மை சுற்றியுள்ள உலகத்தை பாழ்படுதுகிறோம். நம்மை அண்டி வந்தவர்களை உதாசீன படுத்துகிறோம் மனம் நோக செய்கிறோம். 

அதனால்தான் இன்று மனித குலம்  சொல்லொணா  துன்பங்களை அனுபவித்து வருகிறது. தான் செய்யும் தவறுகளை உணராது பிறர் மீது குற்றம் சுமத்தி போரிட்டுக்கொண்டு மன நிம்மதியில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறது....


இதை இந்த தவறை உணர்ந்து திருந்தாவிடில் ஹிரணி யகசிபுவிர்க்கு இறைவன் கொடுத்த தண்டனையை போல ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் துன்பங்களையும் துயரங்களையும்  அனுபவிப்பதை யாரும் தடுக்க முடியாது 

Sunday, August 26, 2012

What is your status in this world?

What is your status in this world?

You own nothing .

That is the real status. How?

To move ,to do, to act,  in this this world GOD gives you  
a fresh lively,machine called human body
which look after its maintenance by itself. 
free of cost  for you for the good things
done in previous lives from birth to death 

To think GOD he has given you a 
powerful machine called  mind 

But due to the thought 
come out of ego humans think everything belongs to them ,
and everything is done by them 
when everything is done by GOD 

Due to this humans develop selfishness and arrogance 
and thus cause sufferings to fellow beings and 
themselves harm them by way of sufferings
by body and also of mind  .

They want to rule over others and grab others possessions
by illegal means and possess legal titles
and thus earn lot of sins to make their life hell 

 


To escape from this trouble and to enjoy the life in this world 
always keep in mind that everything belongs to GOD and
he has given us everything for the welfare of all and 
do your duties with humility at heart and with love 
as destined by GOD without any attachment. 

Chant the name of GOD all the time and remember him 
that your heart will fillup with divine love and 
the ego will leave from your heart and 
make you pure to receive the blessings of GOD

Saturday, August 25, 2012

வால் -வாலை -வாலறிவு

வால் -வாலை -வாலறிவு 
வால் என்றவுடன் பக்தர்களின் 
நினைவுக்கு வருவது ஹனுமானின் வால் 

அந்த வாலை கொண்டு அவர் செய்த 
சாகசங்கள் ஏராளம் 
தன் வாலில் தீயை வைத்த ராவணனின் 
அயோக்கியர்களின் கூடாரமான 
லங்காபுரியையே 
தீக்கு இரையாக்கினார்

தன் வாலினால்தான் கோட்டை கட்டி 
ராமபிரானிடமிருந்து 
தன்னை காப்பாற்ற வேண்டுமென்று
 சரணடைந்த ஒரு மன்னனை 
தான் ராமபிரானிடம் கொண்ட 
பக்தியால் ஹனுமார் காப்பாற்றினார்

இது போன்று ஏராளமான சம்பவங்கள் ராமாயணத்தில் 
காணலாம்

அதனால்தான் வாலில் மணியோடு கூடிய 
ஹனுமானை பக்தர்கள் பணிந்து கொண்டாடி மகிழ்கிறார்கள்
  
வெற்றியை அடைந்த அனுமான் 
வெற்றியைதரும் கடவுளாக கருதி 
வெற்றிலை மாலை அணிவித்து .பூஜிக்கிறார்கள்

தடைகளை தகர்த்த அனுமானுக்கு
 தங்கள் வாழ்விலும் 
தடைகள் நீங்க வேண்டி 
உளுந்து வடைகளால் 
செய்த மாலைகளை 
சாற்றி வழிபடுகிறார்கள்

ராம நாமத்தை கேட்டவுடன் வெண்ணையை போல் எளிதில் உருகிவிடும் அனுமானுக்கு வெண்ணை காப்பு சாற்றி  தங்களுக்கும் அந்த பக்தி நிலை கைவர வேண்டும் என்று வேண்டுகிறார்கள் 


வாலியின்  வாலில்தான் பத்து தலை பூச்சி என விளையாட்டுக்காக 
வாலியின் மகனான அங்கதன் குழந்தையாய் தொட்டிலில் படுத்து கிடந்தபோது கட்டி தொங்கவிடப்பட்ட ராவணன் மாட்டிகொண்டு தப்பினோம் பிழைத்தோம் என்று பயந்து சரணடைந்து உயிர் பிச்சை பெற்றான்


பாமர மக்களுக்கு தவறுகளை தொடர்ந்து செய்பவர்களை குறிக்கும் போது வால் என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன செய்தாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது

தன்னை எதிர்ப்பவர்களின், வாலை ஓட்ட நறுக்கிவிடுவேன் என்று சிலர் கூறுவது உண்டு 

வாலில்லா குரங்குகள், சிங்கவால் குரங்கு என்ன குரங்குகளில் பலவகை உண்டு

திருக்குறள் படித்தவர்களுக்கு நினைவுக்கு வருவது கல்வி கற்பதனால் 
பெறும் பயன் என்னவென்றால் வாலறிவு எனப்படும் இறைவனை
உணர்ந்த நல்லவர்களுடைய திருவடிகளை அடைந்து உய்வதுதான் என்பர்

பள்ளியின் வால் துண்டுபட்டு கீழே விழுந்தாலும் சில உயிரோடு 
அது துடித்துகொண்டிருக்கும்.
சில பாம்புகளுக்கு வாலில் விஷம் உண்டு 

சித்தர்களின் தெய்வம் வாலை 
அவள் என்று குமரியாய் இருப்பதால்  வாலைக்குமரி.
அண்டங்களையும் அதில் உயிர்களையும்  ஈன்றெடுத்த பின்னரும்
அவள் குமரியாய் விளங்குகிறாள் அதுவும் கன்னியா குமரியாய் 
.
வால் மிளகு , வால் பாறை, வாலீஸ்வரர் ,வாலாஜா ,வாலிஸ்  என வால் தொடர்புடைய பொருட்களும், இறை நாமங்களும் ,ஊர் பெயர்களும் ஏராளம்

எது எப்படி இருந்தாலும் வாலின் மகத்துவம் அதை புரிந்துகொண்டவர்களுக்கு தெரியும். அதை உடைய ஸ்ரீராம பக்த ஹனுமானின் பக்தர்கள் அவருக்குஅவர் எடுத்த விஸ்வரூபத்தை போல் பெரிய அளவில் கோயில்கள் எழுப்பி வழிபாட்டு வருவது வால் என்று சொல்லுக்கு இருக்கும் மகத்துவத்தை பறைசாற்றுகிறது 

Wednesday, August 22, 2012

அன்னை பூமியும் அண்டங்களும்


அன்னை பூமியும் அண்டங்களும் 

இந்த அண்டத்தில் உயிர்களும் 
அவைகள் வசதியாக வாழ்ந்து மடிந்து மீண்டும் பிறந்து மீண்டும் பிறவா நிலையை அடைய வாய்ப்பும் வசதிகளும் இறைவன் அளித்துள்ளான் 
இதை போன்ற தட்ப வெட்ப நிலைமை,மற்றும், பஞ்ச பூதங்களான நிலம் நீர் நெருப்பு ,காற்று,ஆகாயம் வேறு எந்த கோளிலும் கிடையாது 

மற்ற கோள்களில் பஞ்ச பூதங்களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு தான் இருக்கும் .அவைகளில் நம் பூமியை போன்ற உயிர்கள் வாழ ஏற்ற சூழ்நிலைகள் கிடையாது. 

புராணங்களும் வரலாறுகளும் தெரிவித்துள்ள செய்திகள்படி வேற்று உலகத்து உயிர்கள் பூமிக்கு வந்து மனித உயிர்கள் போல் வாழ்ந்து உயர் நிலையை அடைந்ததாகத்தான் செய்திகள் உள்ளன 
அதேபோல் தெய்வங்களும் இந்த பூமிக்குத்தான் வந்து தவம் செய்து 
உயர் நிலையை அடைந்ததாக அடைந்ததாக செய்திகள் உள்ளன 

இறை அவதாரங்கள் எல்லாம் இந்த பூமியில்தான் நிகழ்ந்துள்ளன 

அதுவும் பாரதத்தில்தான் அதிக அளவில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடும்தவம் இயற்றி இறைவனிடம் வரங்கள் பல பெற்று 
அகந்தையினால்  பல வரங்கள் பெற்று உயிர்களுக்கு தீங்கிழைத்த அரக்கர்களும் இறைவனால் அழிக்கப்பட்டதும் இந்த பூமியில்தான்.

சொர்கத்திற்கு இணையான வாழ்க்கையும், நரகத்திற்கு இணையான துன்பங்களும் இந்த பூமியில்தான் உள்ளன 

பண்டைய நாளில் தன்னை எதிர்ப்போரை சுயனலதிர்க்காக மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் அரக்கர்களை போல், காரணமின்றி கண்டவரை எல்லாம் எல்லாம் கொன்று குவித்த ஹிட்லர்,முசோலினி, போன்ற சர்வாதிகாரிகளும் தோன்றியது இங்கேதான் 

இன்றளவும் வல்லரசு நாடுகளும், தீவிரவாதிகளும் மதவாதிகளும், சமூக விரோதிகளும் மக்களுக்கு துன்பம் விளைவித்து கொண்டு சொகுசாக வாழ்வதும் இந்த பூமியில்தான் 

எனவே மற்ற கோள்களில் மனித இனத்தை போன்ற உயிரினங்கள் கிடையாது என்பது கலப்படமற்ற உண்மை 

அதை உணராது பூமியின் வளங்களை கொள்ளையடிக்கும் வல்லரசு நாடுகள் மற்ற கோள்களுக்கு விண்கலங்களை அனுப்புவதால் எந்த பயனும் இல்லை 

உலகில் பல கோடி மக்கள் இருக்க இருப்பிடமின்றி,உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, சுதந்திரமின்றி தவிக்கும் போது அவர்களின் துன்பங்களை துடைக்க நடவடிக்கை எடுக்காமல் ஆயதங்களை உற்பத்தி செய்து இயற்க்கை வளத்தை வீணடிக்கும் வன்முறையை  கட்டவிழ்த்து விடும் அரக்கர்கள் விரைவில் அந்த இறைவனால் கடுமையாக தண்டிக்கபடுவார்கள் என்பது உறுதி

தொடர்ந்து தவறுகள் செய்யும் அவர்களை அழிக்க இறைவன் அவதாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. அவனின் கரங்களாக உள்ள பஞ்சபூதங்களே போதும். உலகில் தினம் தினம் எங்காவது புயலும், வெள்ளமும், சுனாமிகளும், பூகம்பங்களும் ,வெடி விபத்துகளும் நிகழ்ந்து கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. 

அவனன்றி ஓர் அணுவும் அசையாது

அவனன்றி ஓர் அணுவும் அசையாது 

அவனுக்கு தெரியாமல் ஒன்றும் நடவாது

ஒரு சம்பவம் நடப்பதும் நடவாமல் தடுப்பதும் அவனே

அவனை யாரும் ஏமாற்ற முடியாது

நடப்பவை நடந்தே தீரும் 

ஒரு சர்வாதிகாரி பல லட்சம் மக்களை கொன்று குவிக்கிறான்
யாரும் அவனை தடுக்க முடிவதில்லை .வரலாற்றில் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சர்வாதிகாரி பிறக்கிறான். இறைவன் அவனுக்கு விதிக்கப்பட்ட கொலைகளை திட்டம் போட்டு அரங்கேற்று கொண்டுதான் இருக்கிறான். முடிவில் அவனும் மாண்டு போகிறான்.

ஒரு தீவிரவாதி சில நூறு மக்களை கொன்று குவிக்கிறான்
யாரும் அவனை பிடிக்க முடியவில்லை

ஒரு சுனாமியோ, புயலோ, வெள்ளமோ, பூகம்பமோ லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்குகிறது.எத்தனை  விஞ்ஞான கருவிகள் இருந்தாலும் அது வரும் நேரத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை .
வந்தால் அழிவுகளை தடுக்கும்சக்தி மனிதர்களுக்கு இல்லை  

உலகங்களை தோற்றுவிப்பதும் அதில் உயிர்களை நடமாட விடுவதும்
அவைகளை அழிப்பதும் இறைவனுக்கு மட்டுமே உள்ள தனிப்பெரும்
சக்தி

அதில் அவன் படைப்புக்கள் யாரும் தலையிடமுடியாது

நீ ஒழுக்கமாக இருக்க முயற்சி செய்

நீ உன் சுற்றங்களோடு அன்பாக இருக்க முயற்சி செய்

இயலாதவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்

இந்த அண்டத்தில் எது நடந்தாலும் அது நன்மையோ தீமையோ (உன் பார்வையில்) இறைவனின் ஆணைப்படிதான் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் 


      அதை விடுத்து உலகில் நடைபெறும் ஒவ்வொரு மாற்றங்களுக்கும் செயல்களுக்கும் காரணம் கற்பிக்க நினைத்தால் அல்லது 
தலையிட்டால் உனக்கு குழப்பமே மிஞ்சும் 



Sunday, August 19, 2012

இறைவன் எங்கிருக்கிறான்?

இறைவன் எங்கிருக்கிறான்? 

இறைவனை உண்மையாக தேடுபவர்களுக்கு மட்டும்
அவன் புலப்படுகிறான்

புலன்கள் மூலம் இறைவனை காண முடியுமா?

நிச்சயம் முடியாது

ஏன் ?

புலன்கள் சக்தி மிக மிக குறைந்தவை .ஒரு வரையறைக்குட்பட்டவை
அதனால் அளவிடமுடியாததும் எந்த வரைமுறைக்குள்ளும் அடக்கமுடியாத
சக்தியான இறைவனை புலன்களால் அடையமுடியாது

இறைவனை நினைத்து புலம்புவதால் இறைவனை அடையமுடியுமா?

முடியும்

எப்படி?

இறைவனை நினைத்து புலம்பும்போது மனம் மற்ற எண்ணங்கள் எதையும் சிந்திப்பது கிடையாது. இறைவனை மட்டும் சிந்திப்பதால் மனம் மற்ற சிந்தனைகளிலிருந்து விடுபட்டு இறைவனோடு ஒன்றுபடுவதால் இறைவனை அடையமுடியும் .

மயிலையில் கபாலீச்வரர் கோயில் உள்ளது .இறைவனுக்குஏன் அந்த பெயர் வந்தது?

எண் ஜாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பார்கள் .
இறைவன் நம்முடைய தலையில்தான் ஒளி வடிவமாக ஒரு புள்ளி வடிவில் இருக்கிறான்.
தலைக்கு கபாலம் என்று பொருள்.
அந்த கபாலத்தில் உறையும் ஈஸ்வரனுக்கு கபாலீஸ்வரன் என்று பெயர்.

எனவே கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கும் போது இந்த சிந்தனையோடு வணங்கினால்  நமக்குள் இறைவனை உணரும் பாக்கியம் கிடைக்கும்


Thursday, August 16, 2012

கடவுளை ஏன் காண முடியவில்லை?

கடவுளை ஏன் காண முடியவில்லை?

கடவுள் அனைத்து  உயிரினங்களிலும் உள்ளார்

அவற்றில் அவர் ஆன்ம ஒளியாக இருந்து அவைகளை இயக்குகின்றார்

நாம் வடிவங்களைதான் காண்கின்றோம் அதன் உள்ளிருக்கும் இறைவனை பற்றி சிந்திப்பதில்லை

அவர் பஞ்ச பூதங்களாக இருந்துகொண்டு இந்த உலகின் நிர்வாகத்தை திறமையாக நடத்தி வருகின்றார்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் தாங்கும் இந்த உடலும்
பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது

உயிர் இந்த உடலை விட்டு பிரிந்த பின் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களோடு சேர்ந்து விடும்.

கடவுள் ஆகாசமாக இந்த பிரபஞ்சம் முழுவதும்  வியாபித்துள்ளார்
ஆகாசத்தில்தான் அனைத்து  அண்டங்களும் மிதக்கின்றன தோன்றுகின்றன,மறைகின்றன

நாம் நம் சிற்றறிவுக்கு எட்டியபடி கற்பனை செய்து வைத்துள்ள கடவுள்
என்பது நம் அறியாமையின் உச்ச கட்டம்

நம்முடைய செயல்பாடுகள் அனைத்தும் நாம் தங்கியுள்ள இந்த அழியும் உடல் தொடர்பானதே 

என்று நம் இந்த உடல் நாம் அல்ல என்றும் இந்த உடலில் உள்ள அழியாத ஆன்மாதான் நாம் என்று உணர்கிறோமோ அப்போதுதான் கடவுளை பற்றிய உண்மை ஞானம் நமக்கு கிடைக்கும்

அதுவரை இன்ப துன்பங்களிலும் அறியாமையிலும் உழன்று கொண்டிருப்பதை தவிர வேறு வழியில்லை 

Wednesday, August 15, 2012

பிறப்பிற்கான விதை எது?

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம்

அதுதான் வாழ்க்கை

அது வாழ்வதர்க்குதானே ஒழிய கவலைப்பட்டு
கிடைத்த வாழ்க்கையை வீணடிக்க அல்ல

வாழ்க்கையில் கடந்த கால நினைவுகளில் மூழ்குவதை விட்டுவிட்டு ,எதிர்கால கனவுகளில் உலவுவதை விட்டுவிட்டு நம் கையில் உள்ள நிகழ் காலத்தை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ பழக வேண்டும்

இதை புரிந்துகொள்வதற்குள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது

மீண்டும் பிறப்பு இறப்பு இப்படியே தொடர்கதை
திரும்பவும் முதலிலிருந்து தொடங்க வேண்டும்

எப்போதுதான் இந்த சுழலிலிருந்து விடுதலை கிடைக்கும் ?

விடுதலையை பெற போராட வேண்டும்

எப்படி போராடுவது?

பிறப்பிற்கான விதை எதுவோ அதை கண்டுபிடித்து
அதை அழித்து விட்டால் மீண்டும் பிறவி வராது

பிறப்பிற்கான விதை எது?

ஆசைகள்

ஆசைகளை ஒழித்துவிட்டால்,மீண்டும் புதிய ஆசைகள் தோன்றாமல்
பார்த்துகொண்டால் பிறவி பிணி நீங்கிவிடும் .மீண்டும் எந்த உடலிலும் புகுந்து துன்பப்பட வேண்டியதில்லை

Sunday, August 12, 2012

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி 

சினம் என்ற உணர்ச்சி இன்று உலகில்
அனைவரிடமும் மிகையாகவே காணப்படுகிறது

தனி மனிதனிடம் காணப்படும்சினம் 
அவன் வாழ்வை அழிக்கிறது
அவன் ஆரோக்கியத்தை அழிக்கிறது 
அவன் குடும்பத்தை அழிக்கிறது 

மற்ற மனிதர்களால் தூண்டிவிடப்பட்ட சினம்
அவன் வாழும் சமூகத்தையே அழிக்கிறது

ஒரு சிலையை வைக்க போராட்டம்
சிலர் சிலையை வைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
சிலவிஷமிகள் சிலையை உடைத்தால்அதற்க்கு போராட்டம்
இதனால் பொது சொத்துக்களுக்கு சேதம் பொதுமக்களுக்கு பாதிப்பு
பல உயிரிழப்புகள்

வதந்திகளால் 
ஓரிடத்தில்தொடங்கும் போராட்டம்
நாடு முழுவதும் பரவும்
ஊடகங்களின் உதவியினால் 

மதவெறி சாதி வெறிஇரண்டும் இன்று
இந்தநாட்டை நாசபடுதிகொண்டு வருகின்றன 
ஆளும் வர்க்கமும் அரசியல் கட்சிகளும் 
தங்கள் சுய லாபத்திற்காகஇந்த தீயை 
அணையாமல் காத்து தங்களை வள ப்படுதிகொள்ளவும்  வலுப்படுதிகொள்ளவும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு வருகின்றன

இதனால்வீட்டினிலும் அமைதியில்லை 
நாட்டினிலும் அமைதியில்லை
உலகெங்கிலும் அமைதியில்லை 

மக்களிடம் சிந்திக்கும்திறன் மங்கிவிட்டது 
விட்டுக்கொடுத்து வாழும் போக்கு அருகிவிட்டது
சுயநலம் பெருகிவிட்டது 

இந்நிலை மாறி மக்களின் மனங்களின்
 நல்ல சிந்தனைகள் துளிர்விட்டு பெருகி
உலகில் அமைதியும் ஆனந்தமும் பெருக
இறைவன் அருள் செய்ய வேண்டும் 


Thursday, August 9, 2012

கல்லா கட்டும் பாபாக்கள்


கல்லா கட்டும் பாபாக்கள்

கல்லா கட்டும் பாபாக்கள்

காவி உடை உடுத்தி ஆடம்பர வாழ்வு நடத்தும் ஸ்வாமிகள்
ஆன்மிகம் பேசி ஆடம்பர கார்களில் உலா வரும் ஆனந்தாக்கள்

மனம் முழுவதும் குப்பைகளை நிரப்பிக்கொண்டு 
அதை வெளியே அப்புறபடுத்த வழி அறியாமல் 
அலையும் மனித இனம்
பிறரை வஞ்சித்து பொருள் சேர்த்து மகிழ்ச்சியாக 
வாழலாம் என்று நினைத்து ஆப்பசைத்து மரத்தின் இடுக்கில் வால் மாட்டிகொண்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் 
தவிக்கும் குரங்குகள் போல் பலர்
சுயலாபத்திர்க்காக பலரின் வாழ்க்கையை சீரழித்து
தங்களின் சொந்த வாழ்க்கை 
பறிபோய் தவிக்கும் பலர்
மனிதர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டு
மனித நேயமற்ற செயல்களில்
ஈடு பட்டுகொண்டிருக்கும் ஒரு கூட்டம்
உலகம் முழுவதும் தன் மதம்தான் உயர்ந்தது என்று கருதிக்கொண்டு மற்ற மதத்தை பின்பற்றுபவர்களை இழிவுபடுத்துவதும், கொடுமைப்படுத்துவதும் சிறுமைபடுத்துவதும் கொன்று குவிப்பதுமாக வெறி பிடித்து அலையும் தீவிரவாத  கும்பல்கள் 

ஒரு பக்கம் செல்வசெழிப்பில் புரளும் மனிதர்கள்
மறுபக்கம் உணவுக்கு  வழியில்லாமல் மடியும்  கோடிக்கணக்கான மக்கள் கூட்டம்

பூவுலகை ,பாழுலகமாக மாற்றும் பாதகர் கள் பெருகிவிட்டனர்
அணு உலைகளை நிறுவி அனைவரையும் அழிக்க திட்டம் தீட்டும்
அணு வல்லரசுகள் நிறைந்து அரக்கர் கூட்டம் பெருகிவிட்டது

நம்மை வாழவைக்கும் நதிகளை நாற்றமெடுக்கும் சாக்கடையாக 
மாற்றிவிட்டனர் நாகரீகமில்லா நாசக்கார பேய் மனித கூட்டம்

மனிதகுலம்  வாழ உணவையும் மழையையும் தந்து தாய் போல் காக்கும் கடலில் அனைத்து  கழிவுகளையும் விட்டு மாசுபடுத்தும் பொறுப்பில்லா மக்கள்
 
கடற்கரையை ,நீர்நிலைகளின் கரைகளை, சாலை ஓரங்களை பொது இடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்தும் கருங்காலி கூட்டம் 

நிலத்தடி நீர் வழங்கும் ஏரிகளை சேரிகளாக்கி  அரசியல் துணையுடன் அசுத்த படுத்தும் அராஜக கூட்டம் .அதற்க்கு துணை போகும் அரசியல் கட்சிகள்  

தெய்வங்கள் என்று போற்றி வணங்கும் பெண்களின் வாழ்வை சீரழிக்கும் ஈவு இரக்கமற்ற ஆண் மற்றும் பெண்கள் 

அறிவை மயக்கி அழிவு பாதையில் கொண்டு செல்லும் மது, மாது, மேனாட்டு கலாசார சீர்கேடுகள், மூட நம்பிக்கைகள், மத வாதம், தீவிர வாதம் ,கலப்படம், போலி மருந்துகள்,போதை, வாழ்வில் அனைத்திலும் புகுந்து கொண்டு நம்மையெல்லாம் அழித்தொழிக்கும், லஞ்சம், நேர்மையின்மை ,ஒழுக்கமின்மை என இன்று மானிட இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது 

இந்த மானிட இனம் இனி திருந்த வாய்ப்பில்லை 










இறைவா நீ அவதாரம் எடுத்து 
இவைகளையெல்லாம்
சரி செய்ய விரைவில் வரவேண்டும்.
வேறு வழியில்லை 


Wednesday, August 8, 2012

பக்தி என்று நினைத்து கொண்டிருக்கும்?

பக்தி என்று நினைத்து கொண்டிருக்கும்?

பக்தி என்றால் என்ன?
பிறரை ஏமாற்ற பட்டை போடுவது,மறைவில் பட்டை அடிப்பது பக்தி அல்ல

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று ஆண்டில் சில நாட்கள் பாடுவது 

அது முடிந்ததும் ஆண்டு முழுவதும் கள்ளும் உயிர்களை வதைத்து முள்ளால் குத்தி கறி சோறு தின்பதும் பக்தி அல்ல
தன்னை காப்பாற்ற வேண்டி கோவிந்தா கோவிந்தா என்று கோயிலில் கூவிவிட்டு வெளியில் வந்ததும் தன்னை  நம்பியவர்களை நட்டாற்றில் விட்டு வேடிக்கை பார்ப்பது பக்தியல்ல

தன் ஒரு கன்னத்தில்  அறைந்தவனுக்கு மறு கன்னத்தை காட்டு என்று வசனம் படித்துவிட்டு கன்னத்தில் அறைந்த நாட்டின் மீதே படையெடுத்து அப்பாவி அந் நாட்டு மக்களையே அழித்தொழிப்பது பக்திஅல்ல
ஒரே இறைவன்,அனைவரும் சகோதர்கள் என்று அனு தினமும் போதித்து கொண்டு தன் சகோதர மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவிப்பது பக்தியல்ல 

அன்பே சிவம் அன்பே சிவம் என்று ஒவ்வொரு கணமும் உச்சரித்துக்கொண்டு வாயில்லா அப்பாவி பிராணிகளை கொன்று தின்று வயிறு வளர்ப்பது   பக்தியல்ல

அகிம்சையே உயர்ந்த தர்மம் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு உதவுவதுபோல் கடன் கொடுத்து அநியாய வட்டி வாங்கி பிழைப்பு நடத்துவதும் பக்தி ஆகா
தான் வாழ இவ்வுலகில் உரிமை இருப்பதுபோல் அனைத்து உயிர்களும் வாழ உரிமை இருப்பதை உணர்ந்துகொண்டு எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமல் அன்பு கொண்டு வாழ்வதே உண்மையான பக்தி
அந்நிலையில்தான் உலகில் அமைதி நிலவும். 

நாம் நாமாக இருக்கிறோமா ?

நாம் நாமாக இருக்கிறோமா ?

இல்லை என்றுதான் சொல்லவேண்டும்

நாம் சுயமாக எண்ணி செயல் புரிகிறோமா ?

இல்லை என்றுதான் சொல்லவேண்டும்

ஏன் இவ்வாறு இருக்கிறோம் ?

இந்த கேள்வியை நாம் எப்போதும் நமக்குள் கேட்பதேஇல்லை

ஏனென்றால் நம் உள்ளம் சொல்வதை நாம் கேட்க தயாரில்லை

பிறரிடம் ஆலோசனை கேட்டே நாம் வாழ பழக்க பட்டிருக்கிறோம்

நாம் சந்தித்த மனிதர்கள் நம்மை வளர்த்தவர்களின் குண நலன்கள் பள்ளியில் நமக்குகற்பித்த ஆசிரியர்கள் நாம் படித்த புத்தகங்கள் என நம்முள்வாங்கிக்கொண்ட செய்திகளே நம்மை வழி நடத்தி செல்கின்றன
பழக்கபடுத்தப்பட்ட மிருகங்களை போல நாம் மற்றவர்களின் சுயநலத்திற்கு அடிமையாகி பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையைநாசமாக்கி கொள்கின்றனர்

அவைகள் நம் மனதை விட்டு என்றும் அகலுவதில்லை

நாமும் நம் அடுத்த தலைமுறையினை அதைபோல்தான் வளர்த்துக்கொண்டு வருகிறோம்

மனிதர்கள் என்று கூறி கொள்வதற்கு அருகதையற்ற பல செயல்களை செய்து வருகிறோம்

நல்ல கல்வி கற்றிரிருந்தும் பண்பில்லாமல் நடந்துகொள்வது இன்றைய நாகரீகமாகிவிட்டது

நம்மை பற்றி அறிந்துகொள்வதை விட பிறரை பற்றியும் அவர்களின் அந்தரங்கங்களை பற்றியும் தேவையற்ற செய்திகளை தெரிந்துகொள்வதிலும்அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதிலும்தான் நம் வாழ்நாளில் பெரும்பகுதி போய்க்கொண்டிருக்கிறது

ஒரு கூட்டம் அரசியல்வாதிகளின் பின்னால் போய்க்கொண்டு இருக்கிறது
ஒரு கூட்டம் சினிமா நடிகர்கள் பின்னால் மற்றும் சாமியார்களின் பின்னாலும் போய்க்கொண்டிருக்கிறது
ஒரு கூட்டம்  மதுக்கடைகளின் வாசலில் தங்கள் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கின்றது

உழைக்காமல் கொழுத்து கிடக்கும் கூட்டம் ஒருபுறம்
உழைத்து உழைத்து சாலையோரம் ஒடுங்கி கிடக்கும் கூட்டம் ஒருபுறம்
எதுவும் செய்யாமல் பிறரை சுரண்டியே பிழைப்பை நடத்தும் கூட்டம் ஒரு புறம்
இங்கு யாருக்கும் சுதந்திரம் கிடையாது
சட்டத்தினை மதித்து நடபவர்களுக்கு தண்டனை
சட்டத்தை மிதிப்பவர்களுக்கு பாதுகாப்பு
நம் நாட்டின் நிலைமை இதுதான் 

Tuesday, August 7, 2012

மனதை அடக்க முடியுமா ?

மனதை அடக்க முடியுமா ?

மனதை அடக்க முடியாது

ஏன்?

அது ஒருமாபெரும் சக்தி 
அதை அடக்க நினைத்தால் 
அது நம்மை ஏமாற்றி விடும் 

பிறகு எப்படி அதை அடக்குவது ?

மனதை அடக்க நினைக்க கூடாது 
அதை முதலில் நம் கட்டுபாட்டிற்குள்  
கொண்டு வரவேண்டும் 
பிறகு அதை நாம் வழி நடத்த வேண்டும் 

மனம் என்றால் என்ன ?

மனம் என்றால் நம் கடந்த கால நினைவுகளின் பதிவுகள் 
அவைகள் இருக்கும் வரையிலும் அந்த எண்ணங்கள் நம்மை பாதித்து கொண்டிருக்கும். நம்மை அடிமைபடுத்தி கொண்டிருக்கும் 
அதை நாம் முழுவதுமாக மறக்க வேண்டும் 

அதை எப்படி செய்வது?

எண்ணங்கள் தோன்றும்போது இது ஏற்கெனவே முடிந்து போன சம்பவங்களின் பதிவுகள் இதனால் நமக்கு ஒன்றும் பயனில்லை என்று அவற்றை எண்ணம்தோன்றும்போதே ஒதுக்கி தள்ள வேண்டும்
பிறகு புதிதாக எண்ணங்கள் தோன்றாமல் பார்த்துகொள்ளவேண்டும்  

அதை எப்படி செய்வது ?

நிகழ்காலத்தில்மட்டும் நாம் வாழ பழக வேண்டும் 
பிறகு அதையும் மறந்துவிட வேண்டும் ஒவ்வொரு நொடியையும் உள்ளது உள்ளவாறு ஏற்றுகொள்ள பழகவேண்டும் .எந்த செயலைசெய்தாலும் அதை முழு மனதோடு சரியாகசெய்துமுடிக்கவேண்டும் அந்த செயலை கடந்த கால சம்பவங்களுடன்  எதிர்கால கற்பனைகளோடும் ஒப்பிட்டு குழப்புவதைநிறுத்த வேண்டும் 

நம்மையெல்லாம் விரட்டுவது எது?

நம்மையெல்லாம் விரட்டுவது எது?

முதலில் ஆசைகள் .பிறகு பேராசைகள்

நாம் ஒன்றும் செய்யாமல் வெறுமனே இருக்கவேண்டும் என்றாலும்
நம்மால் சும்மா இருக்க விடாமல் செய்வது எது ?

மனக்கட்டுப்பாடு இல்லாமை 

நமக்கு சம்பந்தமில்லாத செயல்களில் நம்மை ஈடுபடுத்துவது எது ?

நமக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை 

நாம் தேவையில்லாமல் பிறர் விஷயங்களில் தலையிட்டு சிக்கல்களில் மாட்டிகொள்கிறோம் ?

தன்னை மற்றவர்களிடம் புத்திசாலிகள் என்று காட்டிக்கொள்ள

நாம் செய்வது தவறு என்று தெரிந்து கொண்ட பின்பும் மீண்டும் அந்த
தவறை செய்ய காரணம் ?

நாம் தவறுகளிலிருந்து பாடம் கற்று கொள்ளாததுதான் தான் 





Thursday, August 2, 2012

செருப்புக்கு செருப்பா?

செருப்புக்கு செருப்பா?

ஆம் நாம் செருப்புக்கு செருப்பு போடுகிறோம்
எப்படி ?
நாம் இருக்கும் உடல் தோலால் மூடப்பட்டுள்ளது
ஆகையால் உடல் தோல் இல்லாமல் இயங்கமுடியுமா?
இல்லை நம் கால்கள் தோலால் மூடப்படாமல் இருந்தால் நடக்கத்தான் முடியுமா?

அப்படி இருந்தும் வீட்டை  விட்டு வெளியே செல்லவேண்டுமென்றால் கூடுதலாக தோல் செருப்புகளை அணிந்து கொள்கிறோம்.
வீட்டிற்குள் நுழையும்போது செருப்புகளை வீட்டின் வெளியே விட்டு விடுகிறோம்

அதைபோல் இறைவனை வணங்க கோயிலுக்குள் செல்லும்போதும் செருப்புகளை வெளியே விட்டுவிட்டு நாம் மனதினை மட்டும் துணையாக கொண்டு இறைவனை வணங்குகிறோம்

அதைபோல்தான் நம்முடைய இதயத்திற்குள் உறையும் இறைவனை நாம் வணங்க வேண்டுமென்றால் உடலின் போல் போர்த்தபட்டுள்ள இந்த தோலினால் ஆன உடலை மறந்துவிட்டு  மனதின் துணை கொண்டு இறைவனை அணுக வேண்டும் அணுகிய பின்பு மனம் உடல் இரண்டையும் மறந்து  இறைவனோடு ஒன்றி போக வேண்டும்

உலக தேவைகளுக்காக நாம் என்றும் இறைவனை
பிரார்த்திக்க வேண்டிய அவசியமில்லை 
ஏனென்றால் நாம் செய்யும்
நன்மை தீமைகளுக்கேற்ப்பதான் 
நமக்கு நன்மைகளும் வாழ்வும்  தானே அமையும்
நம் வாழ்வும் தாழ்வும் நம் கையில்தான் இருக்கிறது  

எனவே இறைவனிடம் வேண்டுதல்கள்  செய்வதை விடுத்து
இறைவனை மட்டும் வேண்டி பிரார்த்தனை செய்வதுதான்
உண்மையான வழிபாடு


   

நம்பிக்கை


நம்பிக்கை 
மனிதனுக்கு நம்பிக்கை தேவை 
அது அவனுக்கு மிக மிக அவசியம்

ஒருவனுக்கு முதலில் தன் மீது நம்பிக்கை இருக்கவேண்டும் 
அது இல்லாத நிலையில் தன்னை படைத்த இறைவன் மீது 
நம்பிக்கை இருக்க வேண்டும்

இரண்டும் இல்லாதவன் உயிர் இருந்தும் இறந்தவனுக்கு ஒப்பானவன்

தன் மீது வைக்கும் நம்பிக்கை ஒரு நிலை வரைதான் உதவும் 
அதை கடந்த நிலையில் இறை மீது வைக்கும் நம்பிக்கைதான் 
நம்மை அனைத்து துன்பங்களிலும் காப்பாற்றும் என்பது 
பக்தர்கள் கண்ட வழி

இறைவனின் உண்மையான அன்புக்கு நாம் பாத்திரமாக 
வேண்டுமென்றால் அவனிடம் மனப்பூர்வமாக நம் உள்ளதையும் 
நம்மிடம் உள்ளதனைதையும் ஒப்படைத்துவிடவேண்டும் 
அதோடு மட்டுமலாமல் நம்முடைய,நமக்கு விதிக்கப்பட்ட 
கடமைகளையும் எந்த குறையும்மில்லாது,
பலனை எதிர்பார்க்காது செய்யவும்  வேண்டும் 

இறைவனிடம் ஒப்படைத்துவிட்டோம் என்று
கடமைகளை செய்யாதிருப்பவனை 
இந்த  உலகமும் வெறுக்கும் இறைவனும் 
அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டான் 

இதைதான் மகாத்மா காந்தியடிகள் தன் வாழ்நாளில் 
நடைமுறை படுத்தி காட்டியுள்ளார். 
அவர் பிரார்த்தனையையும்  சேவையையும் 
ஒன்றிணைந்து செயல்படும் வித்தையை
 நமக்கு காட்டியுள்ளார்.
.




எனவே ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டே 





நம் கடமைகளை சுயநலமில்லாது ஆற்றுவோமானால்
நமக்கு நன்மைகள் விளையும் என்பதில் ஐய்யமில்லை  

ராம பக்தர்கள்





படங்களும் தகவல்களும்-ஓம் சக்திமாத இதழ்  மே -1990