Wednesday, August 15, 2012

பிறப்பிற்கான விதை எது?

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம்

அதுதான் வாழ்க்கை

அது வாழ்வதர்க்குதானே ஒழிய கவலைப்பட்டு
கிடைத்த வாழ்க்கையை வீணடிக்க அல்ல

வாழ்க்கையில் கடந்த கால நினைவுகளில் மூழ்குவதை விட்டுவிட்டு ,எதிர்கால கனவுகளில் உலவுவதை விட்டுவிட்டு நம் கையில் உள்ள நிகழ் காலத்தை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ பழக வேண்டும்

இதை புரிந்துகொள்வதற்குள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது

மீண்டும் பிறப்பு இறப்பு இப்படியே தொடர்கதை
திரும்பவும் முதலிலிருந்து தொடங்க வேண்டும்

எப்போதுதான் இந்த சுழலிலிருந்து விடுதலை கிடைக்கும் ?

விடுதலையை பெற போராட வேண்டும்

எப்படி போராடுவது?

பிறப்பிற்கான விதை எதுவோ அதை கண்டுபிடித்து
அதை அழித்து விட்டால் மீண்டும் பிறவி வராது

பிறப்பிற்கான விதை எது?

ஆசைகள்

ஆசைகளை ஒழித்துவிட்டால்,மீண்டும் புதிய ஆசைகள் தோன்றாமல்
பார்த்துகொண்டால் பிறவி பிணி நீங்கிவிடும் .மீண்டும் எந்த உடலிலும் புகுந்து துன்பப்பட வேண்டியதில்லை

1 comment:

  1. /// ஆசைகளை ஒழித்துவிட்டால்,மீண்டும் புதிய ஆசைகள் தோன்றாமல் பார்த்துகொண்டால் பிறவி பிணி நீங்கிவிடும். மீண்டும் எந்த உடலிலும் புகுந்து துன்பப்பட வேண்டியதில்லை. ///

    உண்மை... நன்றி...

    ReplyDelete