Monday, August 27, 2012

தவறை உணர்ந்து திருந்தாவிடில்

கடவுள் எங்கிருக்கின்றான் ?

அவன் எல்லா இடத்திலும் இருக்கின்றான் .எல்லா பொருட்களிலும் இருக்கின்றான்?

ஏன் அவன் கடவுள் எங்கே என்று கேட்பவன் 
உள்ளத்திலும் இருக்கின்றான்? 

கல்லுக்குள் சிலையாய் இருக்கின்றான்.ஒரு சிற்பி சிலையை செதுக்கி உள்ளிருக்கும் கடவுளை வழிபாட்டிற்கு வெளி கொண்டு வருகின்றான்.

உயிர்கள் தாகத்தால் தவிக்கும் போது நீராய் உட்சென்று உயிர் காக்கின்றான்

பசியால் மயங்கி உயிர் பிரியும் நேரத்தில் உணவாக இருக்கின்றான் 
அந்த நேரத்தில் உணவை உண்பவனுக்கு உணவு அளிப்பவன் இறைவனாய் காட்சி அளிக்கின்றான் 

ஒரு மனிதன் வழி தெரியாமல் தவிக்கும் போது ஒருவன் வழி காட்டினால் 
அவன் அவனுக்கு தெய்வம் போல் வந்து வழி காட்டினீர்களே என்று உதவி செய்தவனை போற்றுகின்றான்

நாம் அனைவரும் நம்மை மறந்து உறங்கும்போது நம் உடலில் அனைத்து இயக்கங்களையும்  விழிக்கும்வரை செம்மையாக செயல்பட உதவுகின்றான்.

நாம் உறங்கும்போது நமக்கு எந்தவிதமான ஆபத்துக்களும் வராமல் காக்கின்றான்.

நாம் செய்யும் அனேக தவறுகளை மறைத்து ,பலமுறை மன்னித்து நாம் 
திருந்தி வாழ வழி செய்கின்றான் 

நாம் செய்யும் பிரார்த்தனைகளை ஏற்று அருள் புரிகின்றான் 

இன்னும் அவன் நமக்கு செய்யும் நன்மைகள் ஏட்டில் அடங்கா ,சொல்லில் அடங்கா 

இருப்பினும் நாம் செய்நன்றி மறந்து கடவுள் இல்லை என்றும் எல்லாம் தன்னால்தான் நடைபெறுகிறது என்று ஹிரண்யகசிபு போல் நமக்குள் இருக்கும் கடவுளை அறியாமல் அகந்தை கொண்டு திரிகிறோம். நம்மை சுற்றியுள்ள உலகத்தை பாழ்படுதுகிறோம். நம்மை அண்டி வந்தவர்களை உதாசீன படுத்துகிறோம் மனம் நோக செய்கிறோம். 

அதனால்தான் இன்று மனித குலம்  சொல்லொணா  துன்பங்களை அனுபவித்து வருகிறது. தான் செய்யும் தவறுகளை உணராது பிறர் மீது குற்றம் சுமத்தி போரிட்டுக்கொண்டு மன நிம்மதியில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறது....


இதை இந்த தவறை உணர்ந்து திருந்தாவிடில் ஹிரணி யகசிபுவிர்க்கு இறைவன் கொடுத்த தண்டனையை போல ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் துன்பங்களையும் துயரங்களையும்  அனுபவிப்பதை யாரும் தடுக்க முடியாது 

1 comment:

  1. பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete