Thursday, August 2, 2012

நம்பிக்கை


நம்பிக்கை 
மனிதனுக்கு நம்பிக்கை தேவை 
அது அவனுக்கு மிக மிக அவசியம்

ஒருவனுக்கு முதலில் தன் மீது நம்பிக்கை இருக்கவேண்டும் 
அது இல்லாத நிலையில் தன்னை படைத்த இறைவன் மீது 
நம்பிக்கை இருக்க வேண்டும்

இரண்டும் இல்லாதவன் உயிர் இருந்தும் இறந்தவனுக்கு ஒப்பானவன்

தன் மீது வைக்கும் நம்பிக்கை ஒரு நிலை வரைதான் உதவும் 
அதை கடந்த நிலையில் இறை மீது வைக்கும் நம்பிக்கைதான் 
நம்மை அனைத்து துன்பங்களிலும் காப்பாற்றும் என்பது 
பக்தர்கள் கண்ட வழி

இறைவனின் உண்மையான அன்புக்கு நாம் பாத்திரமாக 
வேண்டுமென்றால் அவனிடம் மனப்பூர்வமாக நம் உள்ளதையும் 
நம்மிடம் உள்ளதனைதையும் ஒப்படைத்துவிடவேண்டும் 
அதோடு மட்டுமலாமல் நம்முடைய,நமக்கு விதிக்கப்பட்ட 
கடமைகளையும் எந்த குறையும்மில்லாது,
பலனை எதிர்பார்க்காது செய்யவும்  வேண்டும் 

இறைவனிடம் ஒப்படைத்துவிட்டோம் என்று
கடமைகளை செய்யாதிருப்பவனை 
இந்த  உலகமும் வெறுக்கும் இறைவனும் 
அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டான் 

இதைதான் மகாத்மா காந்தியடிகள் தன் வாழ்நாளில் 
நடைமுறை படுத்தி காட்டியுள்ளார். 
அவர் பிரார்த்தனையையும்  சேவையையும் 
ஒன்றிணைந்து செயல்படும் வித்தையை
 நமக்கு காட்டியுள்ளார்.
.




எனவே ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டே 





நம் கடமைகளை சுயநலமில்லாது ஆற்றுவோமானால்
நமக்கு நன்மைகள் விளையும் என்பதில் ஐய்யமில்லை  

2 comments:

  1. நல்லதொரு நம்பிக்கை பதிவு... பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி DD sir

    ReplyDelete