Wednesday, November 30, 2011

உலகத்திலேயே தீர்க்கமுடியாத பிணி பிறப்பும் பசியும்தான்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்
இன்று நோயில்லாத மனிதர்களே இல்லை
நோய்கள் பலவிதமான அவதாரங்களை எடுத்து
மனிதர்களை வாட்டி வதைக்கின்றன
பிறக்கும்போதே நோயுடன் பிறக்கும் குழந்தைகள்
எப்போதாவது வந்து போகும் நோய்கள்
வந்தபிறகு நிரந்தர பாதிப்பை விட்டு செல்லும் நோய்கள்
வாழ்நாள் முழுவதும் வேதனைபடுத்தும் நோய்கள்
உணவிற்கு பதில் மருந்துகளே உண்டு வாழவேண்டிய நோய்கள்
மனதை பாதிக்கும் நோய்கள்
உடலை பாதிக்கும் நோய்கள்
மனம் உடல் இரண்டும் பாதிக்கும் நோய்கள் இப்படியாக நோய்களால்
மனித குலம் மிகுந்த துன்பங்களை சந்திதுகொண்டிருக்கிறது என்பது உண்மை
நோய் வந்தால் நோயால் பாதிக்கபடுபவர் மட்டும் துன்பபடுவது மட்டுமல்லாமல்
பெற்ற்றோர்கள் அவர்களை சார்ந்தவர்களும் துன்பபடுவது இயற்கையே
நோய்க்கு மருத்துவ சிகிச்சைகள் ஒரு புறம் இருக்க, மந்திரம்
,ஜோதிட பரிகாரம் மாந்திரீகம் கோயில்கள்,போலி சாமியார்கள் என தீர்வை தேடி அலைவது வேறு மக்களை அலைக்கழிப்பது நடக்கிறது
இப்படி நோய்களுக்கு ஏழைகள், செல்வந்தர்கள் என்ற விதிவிலக்கு கிடையாது
இந்த உலகில் பிறந்தவர்கள் நோயில்லாமல் வாழமுடியாதா?
நிச்சயம் முடியாது .நம்முடைய முன் வினைபயன்களால் நோய் வருகிறது
அதை பொறுமையுடன் அனுபவித்துதான் தீர்க்கவேண்டும்.
இனிமேலாவது தவறுகள் செய்யாவண்ணம்
வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்
செல்வம் உள்ளவர்கள் துன்பபடுவோர்க்கு உதவவேண்டும்
உடல் நலம் உள்ளவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்
எதுவும் செய்ய இயலாதவர்கள் இறைவனிடம் பிறர் துன்பம் தீர பிரார்த்தனை செய்ய வேண்டும்.
உலகத்திலேயே தீர்க்கமுடியாத பிணி பிறப்பும் பசியும்தான்
பிறந்தால் இறக்கவேண்டும் இறந்தால் மீண்டும் பிறக்கவேண்டும்
பசி உண்டால் நிற்கும் செரிமானம் ஆகியவுடன் மீண்டும் பசிஎடுக்கும்
தீர்க்க இயலா இரண்டு பிணிகளையும் தீர்க்க
இறைவனை சரணடைவதை தவிர வேறு வழியில்லை
மற்ற பிணிகளுக்கு நிச்சயம் இந்த உலகில் மருந்துண்டு. அதை தேடி பெறலாம்.

துஷ்டத்தனம் செய்யும் குழந்தைகளை தந்தையான இறைவன் பார்த்துக்கொள்ளுவார்

என்னாட்டவருக்கும் இறைவா என்கிறீகள்
அப்போது அந்த சிவபெருமான் மற்ற மதத்தினருக்கும் இறைவன்தானே
ஹிந்துக்கள் அவனுக்கு குழந்தைகள் என்றால் அவர்களும் அவனுக்கு குழந்தைதானே
ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை
ஒருவன் ஆன்மீகவாதியாக இருக்கிறான்
ஒருவன் நாத்திகனாக இருக்கிறான்
ஒருவன் பண்புள்ளவனாக இருக்கிறான்
இவன் தீயவனாக இருக்கிறான்
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றனர்
ஆனால் இறைவனுக்கு அனைவரும் ஒன்றே
இறைவனை அறிந்துகொண்டால்தான் மற்றவர் மீது விருப்பு வெறுப்பு அகலும்
தன்னை அறிந்தவனுக்குதான் பிறரை அறிந்துகொள்ளமுடியும்
அனைவரையும் இணைப்பது அன்பு ஒன்றுதான்
தனக்கு நன்மை செய்பவனும்,தன்னை வெறுப்பவனும் ஞானிகளுக்கு ஒன்றாகத்தான் தெரிகிறார்கள்
துஷ்டத்தனம் செய்யும் குழந்தைகளை தந்தையான இறைவன் பார்த்துக்கொள்ளுவார்
மற்றவர்களை திருத்தும் பொறுப்பை அவனிடம் விட்டுவிட்டு அவனிடம் பக்தி மட்டும் செலுத்துங்கள்
மற்ற மதத்தினரிடம் அவர்கள் செய்வது தவறேயாயினும் அவர்களிடம் விரோதம் பாராட்டுவதை விடுத்து நம் மதத்தினரின் நம்பிக்கைகளை பலபடுத்தும் செயல்களை ஊக்குவித்தால் நன்மைகள் விளையும்

தியாகம்தான் உலகில் உயர்ந்தது

மரங்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
என்ன மரங்கள் என்றால் மட்டமா?
மனிதனுக்குள் ஆத்மா இயங்குவதுபோல்
ஒவ்வொரு மரத்திற்கும் உயிர் இருக்கிறது
.அதனுள்ளே ஆத்மா இருக்கிறது.
மரமும் ஒரு பிறவிதான்
பாகவதம் படித்தால் தெரியும்
நிர்வாணமாக திரிந்த இரு மனிதர்கள் ஆடையில்லாத
மரமாக பிறவி அடைந்தனர்
அவர்களுக்கு கண்ணபிரான் முக்தி அளித்தான்
மரங்கள் எங்கும் செல்வதில்லை.
ஆனால் அது வளருகிறது,பூக்கிறது,காய்க்கிறது,
கனிகள் தருகிறது,அடுத்த தலைமுறைக்கு விதைகள் தருகிறது.
வெயில் நேரத்தில் நிழல் தருகிறது.கால்நடைகளுக்கு உணவாகிறது.
ஆயிரகணக்கான பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் தங்க இடம் தருகிறது
.மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தருகிறது.
அவன் பிறக்கும்போது தொட்டிலாகவும் வாழும்போது கட்டிலாகவும்,உட்காரும்போது இருக்கையாகவும்,அவன் மரிக்கும்போது பாடையாகவும்,அவனை எரித்து சாம்பலாக்க விறகாகவும் உதவுகிறது.
மனிதர்கள் வெளிவிடும் கரிமிலவாயு போன்ற நச்சு வாயுக்களை
உட்கொண்டு உயிரினம் வாழ பிராணவாயு தருகிறது.
இப்படி தனக்கு என்று எதையும் வைத்துக்கொள்ளாமல்
அனைத்தையும் தியாகம் செய்துவிடுகிறது
அதனால்தான் அதற்க்கு வேண்டியதனைத்தையும்
இறைவன் அது இருக்கும் இடத்திற்கே அளித்து விடுகிறான்.

இவ்வுலகில் தனக்கென்று எதுவும் வைத்துகொள்லாமல் பிறருக்கேன்றே வாழும் உத்தமர்கள் இன்னும் இருப்பதால்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது

ஆனால் மனிதன் வாழ்நாள் முழுவதும் சுயநலத்துடன் பொருளை தேடி அங்குமிங்கும் அலைந்து எதிலும் திருப்தியில்லாமல் திரிந்து மனதில் இருள் சூழ்ந்து மடிந்துபோகின்றான்
மரத்தை பார்த்தாவது இனியாவது மனிதர்கள் திருந்தட்டும்

தியாகம்தான் உலகில் உயர்ந்தது அதனால்தான் இந்த உலகம் அழியாமல் காப்பாற்றப்பட்டுவருகிறது

இறைவன் எங்கிருக்கிறார்?

இறைவன் எங்கிருக்கிறார்?
சங்கரர் சொல்கிறார்,நீயே கடவுள்
ராமானுஜர் சொல்கிறார் ,நீ பகவானுக்கு சரீரம்,
அவனிடம் பக்தி பண்ணு என்கிறார்
மத்வர் சொல்லுகிறார் பகவான் வேறு நீ வேறு
நீ அவனுக்கு தொண்டு செய்பவன் மட்டுமே
சதாசிவ ப்ரம்மேந்திரர் சொல்லுகிறார்
எனக்கு எல்லாம் ப்ரம்மாமாக காட்சியளிக்கிறது
ராமதாசர் சொல்கிறார் இந்த அண்டமனைத்தும் ராம மயம்
கண்ண பரமாத்மா சொல்கிறார் காண்பதனைத்தும் நானே ,
அதன் உள்ளிருந்து இயக்குவதும் நானே என்கிறார்
பொதுவாக எது எப்படி இருந்தாலும் இறைவன் ஆலயங்களில்
உறைந்து அருள் செய்வதாக நம்புகின்றனர்.அங்கு சென்று வழிபாடு என்ற பெயரில் எதையோ நினைந்து,எல்லோரும் செய்வதை செய்து விட்டு தங்கள் ஆன்மீக கடமை முடிந்துவிட்டதாக திருப்திபட்டு கொள்கின்றனர்

இறைவன் எல்லா இடத்திலும் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளதாக வேதங்கள் சொல்கின்றனவே ,ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று ஆன்மீக பிரசாரகர்களை கேட்டால் ஒரு உதாரணம் சொல்கின்றனர்

நமக்கு பால் வேண்டுமென்றால் பசுவின் வாலையோ அல்லது கொம்பையோ பிடித்து கறந்தால் பால் கிடைக்குமா ? அல்லது அதன் மடியின் காம்புகளை பிடித்து கறந்தால் பால் கிடைக்குமா என்று கேட்கின்றனர்.
இறைவனின் சக்தி எல்லா இடத்திலும் நிறைந்திருந்தாலும் கோயிலில் பல காரணங்களால் அங்கு அதிக அளவில் சேமித்து வைக்கபட்டிருக்கிறது என்று விளக்கம் கொடுக்கின்றனர்.

தன்னிடம் கடவுள் உள்ளதை உணர்ந்த ஆத்ம ஞானிகள் எங்கும் செல்வதில்லை.
அவர்களுக்கு எதுவும் தேவையில்லை

சராசரி மனிதனுக்கு தேவையில்லாமல் எதுவும் இல்லை
அதனால் அவன் தேவைகள் நிறைவேறும்வரை ஒவ்வொரு கோயிலாக ஏறி இறங்கி கொண்டிருக்கின்றான்
எல்லாம் உண்மையே .
அவரவர்களின் ஆன்மீக முதிற்சிகேர்ப்ப இறைவனை அடையும் வழியை
தேர்ந்தெடுத்து கொள்வது அவரவர் கையில்தான் உள்ளது

Tuesday, November 29, 2011

யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்றமுடியாது

யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்றமுடியாது

இன்று ஆலயங்களுக்கு மக்கள் அதிகம் செல்லுகிறார்கள் ஆலய விழாக்களுக்கு மக்கள் லட்சக்கணக்கில் கூடுகிறார்கள்
விரதம் இருந்து மாநிலம் விட்டு மாநிலம் ஆலயங்களுக்கு செல்லுகிறார்கள்
இருந்தும் நாட்டில் கொள்ளை,திருட்டு,பிறரை ஏமாற்றுதல் ,பெண்களை கொடுமைபடுத்துதல் கொலைசெய்தல், போன்ற குற்றங்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன.
விரதம் இருக்கும் காலத்தில் மட்டும் மாமிச உணவை,குடியை,போதை பொருளை தவிர்க்கிறார்கள்
எதற்காக செல்லுகிறீர்கள் என்று கேட்டால் ஒரு மன நிம்மதி கிடைக்கிறது
நினைத்த காரியம் நிறைவேறுகிறது என்றெல்லாம் சொல்லுகிறார்கள்

விரதம் முடிந்த பிறகு சில நாட்கள் விட்டிருந்த கெட்ட பழக்கங்களை எல்லாம் வருடம் முழுவதும் ஒழுங்காக கடைபிடித்து ,தீய வழியில் வாழ்க்கை வாழ்ந்து தானும் அழிந்து தங்கள் குடும்பம் மற்றும் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கிறார்கள்
இதனால் இன்று சிறைசாலைகளில் கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது.
நீதிமன்றங்களில் வழக்குகள் லட்சகணக்கில் தேங்கி கிடக்கின்றன
மக்களிடம் ஒழுக்கம் இல்லை மாறாக ஒழுக்க கேடுகள் பெருகிவிட்டன
ஒவ்வொரு ஆண்டும் இதே கதைதான்
இதனால் யாருக்கு நன்மை?
இந்த ஆன்மீகத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்குதான் நன்மை
ஒரு மனிதன் எதை செய்தாலும் அதன் பதிவுகள் அவன் மனதில் நிலைத்துவிடும்
நன்மையோ அல்லது தீமையோ இரண்டும் பதிவாகும்
ஒரு மாதம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாள் நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிட்டு பிறகு அதற்க்கு நேர்மாறான வாழ்க்கை வாழ்வதால் எந்த பயனும் இல்லை
தீயவை தீய பயத்தலால் தீயினும் அஞ்சப்படும் என்று திருவள்ளுவர் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்
தீ என்ற சொல் நெருப்பு .
நெருப்பு எல்லாவற்றையும் எரித்து சாம்பலாகிவிடும்
அதைபோல் தீய எண்ணங்கள் அதன் விளைவால் தீய செயல்கள்,தன்னையும், தன் குடும்பத்தையும் அழித்துவிடும்.
உண்மையான் பக்தி இறைவனிடம் இருந்தால்தான்
மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றும்,அன்பு தோன்றும்,பண்பு தோன்றும்
அதை விடுத்தது வெளிதோற்றத்தில் மட்டும் பக்தனாக வேஷம் போடுவதால்
போடுபவனுக்கும் பயனில்லை இந்த சமூகத்திற்கும் பயனில்லை.

யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்றமுடியாது

Monday, November 28, 2011

விழித்துகொள்ளாவிடில் நஷ்டம் நமக்குதான்

பிறவியை பெருங்கடல் என்கிறார் திருவள்ளுவர்
பெருங்கடல் என்றால் ஆழம் காணமுடியாதது
ஆபத்துகள் நிறைந்தது
கரையை விட்டு புறப்பட்டால் மறு கரையை காண்போமா
அல்லது நடு கடலில் மூழ்கி விடுவோமா என்று யாருக்கும் தெரியாது
கடலில் திமிங்கிலங்களும்,சுழல்களும் ,சுறாக்களும் போன்ற
எண்ணற்ற பேராபத்துக்கள் நிறைந்துள்ளது
அதைபோல்தான் நம் வாழ்க்கையும்
நாம் நம் ஆயுட்காலத்தில் உறக்கத்தில் தினமும்
அனைத்தையும் மறந்து கிடக்கிறோம்.
அப்போது நம் உடலையும்,உயிரையும்,உடைமைகளையும்
பாதுகாப்பது யார்?
ஆனால் நாம் விழித்திருக்கும் நேரம் நம்முடைய உடலையும்,உயிரையும் ,உடைமைகளையும் மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறோம்
சில நேரங்களில் நம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தடம் புரண்டு விடுகின்றனவே,
அது ஏன் என்றுயாரும் நினைத்து பார்ப்பதில்லை
நம்முடைய சக்தியையும் மீறி எதோ ஒரு சக்தி நம்மை ஆட்டி படைக்கிறது
என்பதை ஏற்று கொள்ள மறுக்கிறோம்
நமக்கு அனைத்து வசதிகளிருந்தும் நம்மால் எதுவும் செய்ய முடியாமல் வாய் மூடி மெளனமாக இருக்கிறோமே அது ஏன்?
நமது தேவைக்கு மீறி நாம் சேகரிக்கும் பொருட்கள் நமக்கு நிச்சயம் பயன்படாது
ஒரு சிறு குண்டூசி உட்பட
நாம் எவ்வளவு எச்சரிக்கையாய் இருந்தாலும்,
விபத்துக்கள் ஏற்படுகின்றன,நோய்கள் வருகின்றன.மரணம் வருகிறது நம்மால் ஒன்றும் தடுக்கமுடியவில்லையே
நாம் மயக்கத்தில் அல்லது உறக்கத்திலே இருக்கும்போது
நம்மை காப்பற்றிகொண்டிருக்கும் கடவுள் மீது நமக்கு
ஏன் நம்பிக்கை வருவதில்லை?
எல்லாவற்றிற்கும் காரணம் அகந்தை
அகந்தை இருக்கும் இடத்தில,காமம் இருக்கும்,மோகம் இருக்கும்,
கோபம் இருக்கும்,கர்வம் இருக்கும்,பொறாமை இருக்கும்,
இவ்வளவு நல்லவர்களை நம் கூட்டாளிகளாக வைத்து கொண்டிருந்தால்
நமக்கு நன்மைகள் எப்படி கிடைக்கும்?
அகந்தை இருக்கும் வரையில் நமக்கு மன அமைதி கிடைக்காது
அகந்தை இருக்கும் வரையில் பிறர் மீது அன்பு செலுத்த முடியாது
நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது
இறைவன் மீது பக்தி செலுத்த முடியாது
இறைவனின் மீது நம்பிக்கை வராது
நம்முடைய வழிபாடுகள் எல்லாம் போலியாகத்தான் இருக்கும்
சாத்திரங்களை தினமும் படிப்பதாலோ,தோத்திரங்களை சொல்லி வழிபாடு செய்வதாலோ,தினமும் ஆலயங்களுக்கு சென்று வருவதாலோ
எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை
இன்று வழிபாட்டு தலங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது
மக்கள் கோடிகணக்கில் பணத்தை கொட்டுகின்றனர்
மத(பாதகர்கள்) போதகர்கள் இறைவனை பற்றி வாய் கிழிய பேசி மக்களை
மூளை சலவை செய்கின்றனர்
சொகுசு கார்களில்உலா வரும் காவிகள் கடவுளை கண்டதாக
பிதற்றி மக்களை மயக்கி காசு பார்கின்றனர்
தம் உயிரை காப்பாற்றிக்கொள்ள வக்கில்லாமல் ஆயுதம் தாங்கிய காவலாளிகளை துணைக்கு வைத்துகொண்டிருக்கும் இந்த போலிகள் தங்களிடம் வருபவர்களை காப்பாற்றுவதாக சத்தியம் செய்கின்றனர்
அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி,தங்களின், செல்வம், மானம் மரியாதையை அனைத்தையும் அவர்களிடம் ஒப்புவித்து மக்கள் ஏமாந்துபோகின்றனர்
பாமரன் ஏமாந்தால் பரவாயில்லை
ஆனால் மேதாவிகள் என்றழைக்கபடுபவர்களும் இந்த வலையில் வீழ்வது வேதனைக்குரியது
நம் உள்ளமே கோயில்
அந்த கோயில்தான் இறைவன் உறையும் இடம்
அந்த இடத்தில கள்ளம் இருந்தால் அவன் எவ்வாறு அங்கு இருப்பான்?
அங்கு ஆசைகள் என்னும் பேய்கள் எப்போதும் எதையாவது நாடி அங்கும் இங்கும் அலைந்துகொண்டு கூச்சல் போட்டுகொண்டிருந்தால் மனசாட்சியான
இறைவனின் குரல் நமக்கு எப்படி கேட்கும்?
பிறர் உயர்வு கண்டு மகிழாமல் அழுக்காறு என்னும் அசுத்தம் கலந்த ஆறு ஓடி கொண்டிருந்தால் அந்த உள்ளத்தில் அமைதி எங்கு தவழும்?
உள்ளத்தில் உள்ள துர்நாற்றம்தாம் உடலில் துர்நாற்றமாக வீசுகிறது
இந்த உடலுக்குள் செல்லும் எதுவும் எந்த வழியாக வந்தாலும்
அது சகிக்க முடியாத நாற்றம் வீசுகிறது.
அந்த நாற்றத்தை மறைக்கவே நாம் பல்லாயிரம் ரூபாய்களை
ஆயுள் முழுவதும் செலவழிக்கிறோம்.
முடிவில் மரணத்திற்கு பிறகு நாற்றம் தங்க முடியாமல்
மண்ணில் புதைத்தோ அல்லது எரித்தோ அந்த உடலை அப்புறபடுத்துகிறோம்.
பிறரை வஞ்சித்து அளவுக்கு மீறி சொத்து சேர்த்து ,
அதர்மவழியில் வாழ்க்கைவாழ்ந்து
சூது நிறைந்த மனம் கொண்டு நிம்மதியற்ற வாழ்வு வாழும் மனிதர்கள்
இவைகளிலிருந்து விடுபடவேண்டுமென்றால் இறை நாமத்தை அல்லும் பகலும் ஓதிக்கொண்டே இருக்கவேண்டும் .
அதற்காக எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருந்துகொண்டு பொறுப்பற்ற முறையில் ஊர் சுற்றுவது அல்ல
நம் கடமைகளிடையே தான் அதை செய்ய வேண்டும்
நாம் நம்மை அறியாமல் மூச்சு விட்டுகொண்டிருப்பதைபோல
அப்போது மனதின் இரைச்சல் அடங்கி
இறைவனின் இனிய நாதம் கேட்கும் .
நாதம்தான் தான் இறைவன்.
இந்த மாற்றம் வெளியில் மட்டும் நிகழ்ந்தால் பயனில்லை
நம் உள்ளத்தில் இந்த மாற்றம் நிகழ வேண்டும்
விழித்துகொள்ளாவிடில் நஷ்டம் நமக்குதான்
,

Sunday, November 27, 2011

எவ்வளவு காலம் மூடர்களோடு சேர்ந்துகொண்டு நாமும் மூடர்களாய் இருக்க போகிறோம் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்

பிறவி பெருங்கடல் நீந்துவர்
நீந்தார் இறைவனடி சேராதார்
என்றார் திருவள்ளுவர்.
மானிட பிறவி கிடைப்பது அரிதினும் அரிது
கிடைதற்க்கரிய பொருள் கிடைத்தால்
என்ன செய்ய வேண்டும்?
அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்
பாதுகாத்து அதை நல்ல முறையில்
பயன்படுத்தி பலன் பெற வேண்டும்
அவ்வாறு செய்யாமல் அதை பயன்படுத்தாமல்
வீணடித்தால் யாருக்கு நஷ்டம்?
அந்த பிறவியை அளித்த இறைவனுக்கு
நன்றி சொல்லவேண்டாமா?
அந்த பிறவியை நம் மீது கருணை கொண்டு
நமக்கு அளித்த இறைவனை பற்றி
அறிந்துகொள்ள வேண்டாமா?
அவ்வாறு செய்யாவிடில் இந்த பிறவியால் நமக்கு பயன் ஏது?
ஆனால் அதை விடுத்து நாம் இறைவனை மறந்து விடுகிறோம்
அவனை பற்றிய சிந்தையே இல்லாமல் அழியும்
இந்த உடல் மீது பற்று வைத்து
அதை பராமரிப்பதில் ஆயுள் முழுவதும்
செலவிட்டு முடிவில் மரித்து விடுகிறோம்
பிறகு அடுத்த மானிட பிறவி எப்போது கிடைக்கும்
என்று பலகாலம் என்று
ஏங்கி ஆவியாய் உழலுகிறோம்
இந்த நிலை நமக்கு தேவையா?
இதைபோல் எவ்வளவு காலம் மூடர்களோடு சேர்ந்துகொண்டு
நாமும் மூடர்களாய் இருக்க போகிறோம் என்பதை சிந்தித்து
பார்க்கவேண்டும்
எனவே கிடைத்த இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு
ஹரி மீது பக்தி செலுத்தி அவன் அருளை பெற்று
மாளா பிறவியிலிருந்து மீள அனைத்து முயற்சிகளையும்
மேற்கொள்ளுவதே அறிவுடையோர் செய்யும் செயலாகும்

கடமைகளை சரியாக செய்து அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடவேண்டும்

பொதுவாக பகவத் கீதையில் மூன்று யோகங்கள்
முக்கியமாக வலியுறுத்தப்படுகின்றன
அவை கர்ம யோகம், பக்தி யோகம் ,ஞானயோகம்
கர்மயோகம் என்பது அவரவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை
ஆத்மா சுத்தியுடன்,பலன் எதிர்பாராமல் செய்யவேண்டும்
ஏனெனில் பலனில் மனதை வைத்தால் செய்ய வேண்டிய
கர்மம் சரிவர செய்ய முடியாமல் போகும்
கர்மத்தை ஒழுங்காக முறைப்படி செய்தால் அதன் பலன்
தானே நமக்கு வந்து சேரும்
எனினும் அதன் பலன் நமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ
அமைவது நம்முடைய வினைபயனையும் இறைவனின் சித்தத்தையும்
பொறுத்துதான் அமையும்
உதாரணத்திற்கு ஒரு விவசாயி அனைத்து பணிகளையும் முறையாக செய்தாலும்
விளைச்சல் பல காரணிகளை பொறுத்தது. வெயிலானால் பயிர்,காய்ந்து போகலாம்,மழை,வெள்ளம் ஆகியவற்றால் சேதமாகலாம்.பறவைகள்,
மிருகங்களால் மகசூல் பாதிக்கப்படலாம்.
அதனால்தான் நம்முடைய கருமங்களை,கடமைகளை சரியாக செய்து அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடவேண்டும் என்று பகவான் கண்ணன் கூறுகிறான்.
அவனிடம் விட்டுவிட்டால் எது வந்தாலும்
அது அவனின் பிரசாதமாக ஏற்றுகொள்ளும் மனநிலை நமக்கு கிடைக்கும்
எது நடந்தாலும் நம் மனநிலை பாதிக்காது
மனம் பாதிக்கபடாமல் இருந்தால் உடல்நலம் பாதிக்காது
இதை நன்றாக உணர்ந்துகொள்வதே ஞானயோகம்
நம் கடமைகளை சரியாக செய்வதுடன் அவன் மீது பக்தியும் செலுத்துவோம்
இறைவனை முழுவதுமாக நம்புவோம்
நம் வாழ்க்கை அமைதியாக மகிழ்ச்சியாக போய்கொண்டிருக்கும்
.

Saturday, November 26, 2011

மூட நம்பிக்கைகளுடன் ஆன்மீகம் என்ற பெயரில் உயிர்பலி, அர்த்தமற்ற சடங்குகள்

உலகத்தின் ஆதி குரு தஷிணாமூர்த்தி
அவர் மௌன குரு
அவர் பிரம்ம ஞானத்தை நான்கு சனகாதி
முனிவர்களுக்கு உபதேசித்தார்
அந்த உபதேசம் அவர்களோடு நின்றுவிட்டது.
உலகத்தின் அனைத்து மக்களுக்கும் போய் சேரவில்லை
மக்கள் அறியாமையிலேயே உழன்று கொண்டிருந்தனர்
அடுத்து பகவான் கிருஷ்ணன் அவதரித்தான்
அவன் பிரம்ம ஞானத்தை அர்ஜுனனுக்கு உபதேசித்தான்
பகவான் திருமுகத்திலிருந்து உபதேசம் வந்ததால் அவன்
ஜகத் குரு என்று அழைக்கபட்டான்
அந்த உபதேசத்தை பகவத் கீதையாக வியாசர் மகாபாரத காவியத்தில்
இடம்பெற செய்தார் அந்த மகாபாரதத்தை விநாயக பெருமான் தன்
தந்தத்தை ஒடித்து எழுதினர்.
அப்படி இருந்தும் பிரம்ம ஞானம் பாமர மக்களுக்கு புரிந்து கொள்ளும்
வகையில் இல்லை.
எனவே அவர்கள் வாழ்வில் எந்த ஆன்மீக முன்னேற்றமும் இல்லாமல்
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு மடிந்து கொண்டிருந்தனர்.
பகவான் நாராயணன் மூன்றடியால் மூவுலகையும் அளந்தான்
பிரம்ம லோகத்தில் பகவானின் காலடி வைத்தபோது அதற்க்கு
பிரம்மா அபிஷேகம் செய்த நீர் நாம் வாழும் பூவுலகத்திற்கு
சிவபெருமான் உறையும் கைலாய மலையில் விழுந்து கங்கையாக
பெருக்கெடுத்து ஓடி யுகம் யுகமாக நம் பாவங்களை கழுவி ஆன்மாக்களை
கரைஏற்றி கொண்டிருக்கிறது
எனவே மீண்டும் சிவபெருமான் காலடியில் ஆதி சங்கரராக அவதாரம் செய்து
இந்தியா முழுவதும் தன் காலடிகளால் நடந்து பகவத் கீதைக்கு உரையெழுதியும்
பிரம்ம ஞானத்திற்கு விளக்கங்கள் எழுதியும் அவைகளை மக்களிடையே
பரப்ப மடங்களையும் நிர்மாணித்தார்.
மனிதர்களில் ஜாதி, உயர்வு தாழ்வு பாராட்டுதல் போன்ற விரும்பத்தகாத
குணங்களினால் இறைவனின் எண்ணம் நிறைவேறவில்லை
பகவான் நாராயணன் ராமானுஜராக அவதரித்து
மக்களிடையே உயர்வு தாழ்வு கூடாது
இறைவனிடம் பக்தி செலுத்துபவர்கள் அனைவரும் ஒரேகுலம்,
இறைவன் அனைவருக்கும் உரியவன்,
இறைவனிடம் தன்னை முழுவதுமாக சரணடைவதின் மூலம் அவன் அருளை பெற்று உய்யலாம் என்றும்
வைணவருக்கே உரியதென கருதப்பட்ட நாராயண மந்திரத்தை அனைவருக்கும் அளித்து பிரம்ம ஞானம் பெறுவதை எளிமையாக்கினார்
இருந்தும் மக்களுக்கு பிரம்ம ஞானம் போய் சேரவில்லை .
அவருடைய உபதேசம் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே நின்றுவிட்டது
சிறு தெய்வ வழிபாடு கூடாது என்று வலியுறுத்திய ராமனுஜரின் அறிவுரைகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது
எங்கு பார்த்தாலும் சிறுதெய்வ வழிபாடுகளதான்
மூட நம்பிக்கைகளுடன் ஆன்மீகம் என்ற பெயரில் உயிர்பலி,
அர்த்தமற்ற சடங்குகள் போன்றவைகளுடன் நடந்துகொண்டிருக்கின்றது.
அதனால் அன்பே இறைவான் இறைவனை உள்ள சுத்தியுடன் வணங்காமல்
அமைதியான,மகிழ்ச்சியான வாழ்க்கை வாழாமல்
அதர்ம வழியில் பொருள் சேர்த்து பிறரை வஞ்சித்து துன்புறுத்தி
மதத்தின் பெயரால் ஒருவொருக்கொருவர்
சண்டையிட்டு மடிந்துகொண்டிருக்கின்றனர்.
உண்மையான இறைவழிபாடு என்பதை
மக்களுக்கு உணர்த்த தொடர்ந்து இறைவனிடமிருந்து
அவனின் தூதர்கள் இவ்வுலகில் அவதரித்து
மீண்டும் மீண்டும் காலத்திற்கு ஏற்றாற்போல் பகவானின் உபதேசங்களை
பரப்பி வந்துகொண்டிருக்கின்றனர். அவைகளை தொடர்ந்து சிந்திப்போம்

இறைவனை தேடி..


இறைவனை தேடி...
இறைநாமத்தை எந்நேரமும் பஜித்திடுவாய்
அவன் வடிவான சத்குருவின் வடிவத்தினை
மட்டும் தியானம் செய்திடுவாய்
(சுவாமி சச்சிதானந்தா -ஆனந்தாச்ரமம்)

இறைவன் எடுப்பான் வடிவங்கள் பலகோடி
பலன் எதிர்பாராது உன் கடமையை செய்தால்
நேரில் வந்து நின்றருள் செய்வான் உன் வாசல் தேடி
(பண்டரிநாதன்-பண்டரிபுரம்)

ஒன்றும் இயலா நிலையில் தன்னையே
நினைந்துருகும் பக்தனின் பாரத்தை
தன் தலையில் சுமந்து முதுகில்
பிரம்படியும்படுவான் அந்த பரம்பொருள்
(மதுரை சொக்கன்)

செல்வசெருக்கும் பொய்யுரைப்போரும்
தெய்வங்களானாலும் தேடினாலும்
கிடைக்கமாட்டான் அடிமுடி காண இயலா
ஜோதிவடிவான் எம்பெருமான்
(திருவண்ணாமலையான்)

இறைவா உன்னை நான் எதற்காக சரணடையவேண்டும்?

இறைவா உன்னை நான்
எதற்காக சரணடையவேண்டும்?
தாயும்மானவர் கூறுகிறார்
வன்பிறவி வேதனைக்கும் வஞ்ச நமன் வாதனைக்கும்
அஞ்சி அஞ்சி உன்னை சரணடைந்தேன் பராபரமே என்று.
பிறப்பதற்கு முன் நாம் நம் தாயின் வயிற்றில் மல மூத்திரம்
கலந்த துர்நீரில் மிதந்துகொண்டு வயிற்றில் உணவை
செரிப்பதர்க்காக உள்ள ஜடராகினியின் அனலில்
புழுபோல் துடித்து கொண்டு வேதனையில் தவிக்கும்போது
எப்போது இந்த சிறையை விட்டு வெளிஉலகத்திற்கு
செல்லபோகிறோம் .இனிமேல் இந்த கற்ப வாசத்தில்
மாட்டிக்கொள்ளகூடாது என்றுநினைக்கிறோம்.
ஆனால் பிறந்தவுடன் நம் வினைப்பயனால் வந்த விதி வசத்தால்
உலக மாயையில் மூழ்கிவிடுகிறோம்.
பிறகு உலகில் கணக்கற்ற ஆசைகளில் சிக்குண்டு
அழியும் பொருட்கள்,மனிதர்கள் மீது மோகம் கொண்டு
கண நேரத்தில் தோன்றி மறையும் இன்பங்களுக்காக
வாழ்நாள் முழுவதும் நம் உடலை,மனதை வருத்திகொள்ளுகிறோம்
இந்த உடல் மீது வைத்த அபரிமிதமான பற்றினால் நம் மனம்
மரணத்தின் போது இவ்வுலக பொருட்களை பிரியமனமில்லாமல்
மரணவஸ்தை(வாதனை)படுகிறோம்
ஆனால் ஒவ்வொரு பிறவி எடுக்கும்போதும்
,மரணத்தின்போதும் கணக்கற்ற முறை
துன்பத்தை அனுபவித்தும் நாம் திருந்துவதில்லை.
எனவே இந்த புதைகுழியிலிருந்து வெளியேற வேண்டுமானால்
இறைவனை சரணடைவதை தவிர வேறு வழியில்லை,
ராம நாமத்தை உச்சரித்துகொண்டிருந்தால் நம்மை
மீண்டும் இந்த உலகில் தள்ளும் மனதின்
நச்சரிப்பிலிருந்து விடுபட்டு
நம் ஆத்மாவிற்கு விடுதலை கிடைக்கும்.

Thursday, November 24, 2011

ராமாயணத்தில் என்ன இருக்கிறது?

ராமாயணத்தில் என்ன இருக்கிறது?
வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளவேண்டும்
என்பதை அது கற்றுகொடுக்கிறது?
ராமா உனக்கு நாளைக்கு மணிமகுடம் என்றார்கள்
ஆனால் அடுத்த நாள் காலை
காலை வாரிவிட்டார்கள் காட்டிற்கு போ என்று
ஆனால் பதவி மோகம் அற்ற
ராமன் அமைதியாக அதை எதிர்கொண்டான்
புதிய இடங்களை பார்க்கலாம்,கானக வாழ்கை எப்படி இருக்கும்
அதையும் நேரில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்
,எல்லாவிதமான மக்களுடன் பழகலாம்,
பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ளலாம்
தவம் செய்யும் முனிவர்கள்,தவசிகள் ஆகியோரை சந்தித்து அவர்களிடம் ஆசியை பெறலாம் என்றெல்லாம் நினைத்து அதை மகிழ்வுடன் ஏற்றுகொண்டான்
எல்லோரும் இல்லற வாழ்க்கை நிறைவு செய்தபின் துறவு வாழ்க்கை மேற்கொள்ளுவார்கள்
ஆனால் ராமனுக்கு இல்லற வாழ்க்கையின் துவக்கத்திலேயே துறவு வாழ்க்கை அமைந்தது.
ராமன் இருக்குமிடம்தான் அயோத்தி என்று சீதை அரண்மனை போக வாழ்க்கையை துறந்து ராமனுடம் கானகம் செல்ல தீர்மானித்தாள்
.உண்மையான அன்பு அப்படிதான் எண்ண வைக்கும்
ஆனால் பெண்கள் இக்காலத்தில் தன்னிடம் காசிருந்தால் கணவனையும் மதிக்கமாட்டார்கள் காத்து வளர்த்த பெற்றோரையும் மதிக்கமாட்டார்கள். எல்லாம் சுயநலம்.
வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழ பழகிகொண்டால் மனம் அமைதியடையும், புதிய அனுபவங்கள் கிடைக்கும்.எவ்வளவு கடினமான பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனஉறுதியும் கிடைக்கும்.
ஆனால் இன்று என்ன நடக்கிறது?
சாதரணமான பிரச்சினைகளை கூட சமாளிக்கும் மன உறுதி இல்லை,மன தெளிவு இல்லை
யாரை பார்த்தாலும் மது,போதை ,கஞ்சா என பலவிதமான போதை பழக்கத்திர்க்கு ஆளாகி நோய் தாக்கி அழிந்து போகின்றனர்.
ஒருவொருக்கொருவர் அன்பில்லை .அதனால் மன இறுக்கம் ஏற்பட்டு குற்றங்கள் பல்கி பெருகிவிட்டன
அதனால் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மன நோய்க்கு ஆளாகி மனநல காப்பகங்களும், சிறைச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன
எதற்கெடுத்தாலும் போராட்டம் வன்முறை. அவர்களுக்கும் நிம்மதியில்லை, அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நிம்மதியில்லை அதனால் ஆள்பவர்களும்,நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள்
பிறர் சொத்திற்கு ஆசைப்பட்டு பிறரை ஏமாற்றி ,வஞ்சித்து வாழ்க்கை நடத்துகின்றனர்
தினமும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பேராசையை ஒரு சிலர் பயன்படுத்திக்கொண்டு கோடி கோடியாய்ஏமாற்றுகிறார்கள்
எதற்கெடுத்தாலும், உரிமை கோரி எதிர்த்துகொண்டிருந்தால்
வாழ்க்கை முழுவதும் போராட்டம்தான்.
வாழ்க்கையில் எந்த சுகத்தையோ மகிழ்ச்சியையோ அனுபவிக்கமுடியாது
நர்சரியில் வளர்க்கப்படும் மர கன்றுகள் அங்கேயே நடப்படுவது கிடையாது
வேறு இடங்களில் எடுத்து நடபட்டால்தான் நல்ல மகசூல் கொடுக்கும்
அதைபோல்தான் வாழ்க்கையும் .இதை புரிந்துகொண்டால்போதும்
எந்த பிரச்சினையும் நம்மை பாதிக்காது.
பிரச்சினைகள் நம்மை மனதளவில் உறுதியாக்கி
நம்மை வலுப்படுத்தும் காரணிகளாக அறிந்துகொள்ளவேண்டும்
இந்நிலை மாறவேண்டுமென்றால் வாழ்க்கையை புரிந்துகொண்டு
சகிப்புதன்மையுடன் பிரசினைகளை அணுக கற்றுக்கொள்ளவேண்டும்
இறைவனிடம் நம்பிக்கை வேண்டும் அவனிடம் பக்தி வேண்டும்
பக்தியுடையார் காரியத்தில் பதறார் என்றான் மகா கவி பார்ரதி
இறைவனிடம் நம்பிக்கை வைத்தால் அவன் வழி காட்டுவான் நல்வழியை

Tuesday, November 22, 2011

துஷ்டர்களை அழித்து நல்லவர்களை காக்க வேண்டியே

ராமன் எதற்காக தன் அரசாளும் உரிமையை
விட்டுவிட்டு காட்டுக்கு போனான் ?
ராமன் பரம்பொருள்
அவன் இவ்வுலகிற்கு வரும்போதே
பல திட்டங்களுடந்தான் வந்தான்
அவன் தந்தை தசரதன் போல்
பல மனைவிகளை மணந்து கொண்டு
போக வாழ்க்கை நடத்த அல்ல
அவன் நினைத்த திட்டங்களைஎல்லாம்
அவன் நிறைவேற்ற வேண்டுமென்றால்
அவன் அயோத்தியை விட்டு கிளம்பவேண்டும்.
அதற்காகத்தான் இந்த நாடகம்.
ஏனென்றால் அவனை காண்பதற்காக தரிசனம் பெறுவதற்காக
ஏராளமான மக்கள்,முனிவர்கள் ,ரிஷிகள்,தவசிகள்,
பக்தர்கள் மிருகங்கள் வழி மீது விழி வைத்து
காத்து கிடந்தனர்.
எனவே திருமணம் செய்துகொண்டு
அயோத்தியில் உட்கார்ந்துகொண்டு
அயோத்தியை மட்டும் நிர்வாகம் செய்துகொண்டிருந்தால் போதுமா?
அரக்கர்களாலும்,ராட்சதர்களாலும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து கொண்டிருக்கும்,தேவர்களும்,
மனிதர்களும்,தவசிகளும், மனமுருகி விடுத்த
பிரார்த்தனையினால் அல்லவோ அவன் வானுலகிலிருந்து
இப்பூவுலகிற்கு இறங்கி வந்துள்ளான்.
துஷ்டர்களை அழித்து நல்லவர்களை காக்க வேண்டியே
அவன் அயோத்தியை விட்டு புறப்பட்டான்
அனைவரையும் சந்திக்க நடந்தே நாடு முழுவதும் சென்று
தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றிய ராமன்
அவன் நினைத்த காரியங்களை முடித்தவுடன் விமானத்தில்
அயோத்தி திரும்பி அனைவரும் போற்றும் வண்ணம்
அரசை நிர்வாகம் செய்தான்.
நம்மை போன்ற பாமர மக்களுக்காக இப்பூவுலகில்
அவதாரம் செய்துநமக்கு நல்வழி காட்டி
நம்மை ஆட்கொண்ட அந்த பரம்பொருளை நினைத்து
மனம் உருகி வழிபட்டால் நம் துன்பமும் தீரும்
நம் நாட்டை பிடித்த பீடைகளும் விலகும்

தமக்கு உரிமையில்லாத பொருள் மீது முடிவு எடுக்க

தமக்கு உரிமையில்லாத பொருள் மீது முடிவு எடுக்க
யாருக்கும் அதிகாரமில்லை
அவ்வாறு செய்தால் அது சாதகமாக முடிவதைவிட
பாதகமாகவே முடியும்
ராமாயணத்தில் தசரதன் ராமனை தன் மூத்த மகன்
என்று முடிவு செய்துகொண்டு அவனுக்கு மகுடம் சூட்ட
தீர்மானிக்கிறான்.
உண்மை என்னவெனில் பரம்பொருளான
ராமன் அவன் மனைவியான் கோசலையின் கற்பத்தில்உதித்ததால்
அவன் ராமனின் தந்தையாக இவ்வுலகோரால் அறியபட்டான்
ஆனால் ராமன் அவனின் மரபணுவில் உதித்தவன் அல்லவே
இந்நிலையில் அவனுக்கு ராமன் உரிமையில்லாதவன் ஆகின்றான்
அனைவரும் மகிழ்கின்றனர்
.ராமனுக்கு மகுடம் சூடும் வைபவத்தை ஆவலுடன்
எதிர்பார்கின்றனர் ஒருவரை தவிர.
அது கூனி என்ற மந்தரை என்று அனைவரும் அறிவர்
ராமாயணத்தை படிப்பவர்கள்
,ராமனை விரும்புபவர்கள் அனைவரும்
மந்தரையை திட்டி தீர்ப்பார்கள்
அதே போல்தான் கைகேயியும்
கோசலையை விட ,தன் மகன் பரதனை விட ராமனிடம்
அதிக அன்பு பாராட்டிய அவள் ஏன் அப்படி ஒரு கொடூரமான
தண்டனையை ராமனுக்கு கொடுத்தாள்?
இவ்வளவு நடந்தும் கோசலை ஏன் மெளனமாக இருந்தாள்?
முக்காலமுமறிந்த வஷிஸ்டர் போன்ற ரிஷிகள் ராமன்
வனம் செல்வதை அறிந்திருந்தும் மெளனமாக இருந்தது ஏன்?
இலக்குவனோ தன் நிலைமறந்து
வானுக்கும் மண்ணுக்குமோ அல்லவா குதித்தான்
இப்படி பல கதா பாத்திரங்கள் ராமாயணத்தில் உள்ளன
ராமன் பரம்பொருள் என்று
அறிந்தவர்கள் மெளனமாக இருந்தனர்
அறியாதவர்கள் அழுதனர், புலம்பினர்,
கைகேயியும்,பரதனையும் பழித்தனர்
தசரதன் துக்கத்திலேயே தன் உயிரை விட்டான்
பரம்பொருள் என்ன செய்யும்,எதை செய்யும்
என்று அதற்க்கு தான் தெரியும்
ஆனால் செய்வது எல்லாம் இந்த உலகமும்
அதன் மக்களும் மேன்மை பெறுவதற்கே
நாமும் ராமன் பாமர மனிதன் அல்ல
அவன் பரம்பொருள் என்று உணர்ந்து
அவனிடம் சரணாகதி செய்து நம் வாழ்ந்து வந்தால்
நம்மை அவன் அருள் நம்மை அரண்போல் நின்று காக்கும்


ராமாயணம் என்றால் ராமன் நடந்து காட்டிய வழி
என்று ஒரு பொருள் உண்டு.
பரம்பொருளான ராமன் இந்த உலகில் மனிதனாக
அவதாரம் செய்து பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகள் ஆகிவிட்டன
எல்லா மொழிகளிலும் ராமாயணம் இருக்கிறது
ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும்?
எப்படி கடமைகளை நிறைவேற்றவேண்டும்?
எப்படி தர்மங்களை கடைபிடிக்கவேண்டும்?
எப்படி நீதி தவறாமல் ஆட்சி செய்ய வேண்டும்?
ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரின் கடமைகள் என்ன ?
கம்ப ராமாயணத்தை இன்று அனைத்து மதத்தினரும் படித்து
தெளிந்து போற்றுகின்றனர்
ராமனை கடவுளாக கண்டு போற்றி பாடி
முக்தியடைந்தவர்கள் ஏராளம்.
இன்றும் அவன் நாமத்தை ஜபம் செய்து மனசாந்தி பெற்று
நிறைவான வாழ்க்கை வாழ்பவர்கள் ஏராளம்.
ராமனை ஒரு பாமர மனிதனை போல் சித்தரித்து
அவனை இழித்தும் பழித்தும் பேசுபவர்களும் இந்நாட்டில் உண்டு
பூமாலைகளும் பாமாலைகளும் சூட்டி மகிழும் பக்தர்களிடையே
அவனுக்கு செருப்பு மாலை சூட்டி மகிழ்ந்தவர்களும் நம்மிடையே உண்டு
மேலோட்டமான பார்வைக்கு ராமனின் சில செயல்கள்
தவறாக தோற்றம் அளிக்கலாம்
அதை வைத்துகொண்டு அவனின் பெருமைகளையும்
அருமைகளையும் யாராலும் மறைக்கவோ
மறுக்கவோ முடியாது
எனவேதான் பல யுகங்கள் கடந்தும் அவன் பெருமை
போற்றப்பட்டு தெய்வமாக அவன் பக்தர்களின் நெஞ்சில்
வாழ்ந்து வருகிறான்.
காசியில் விஸ்வநாதபெருமானே அங்கு மரிக்கும்
மனிதர்களின் காதில் ராம நாமத்தை ஓதி
அவைகளின் ஆத்மா முக்தி அடைய உதவுவதே இதற்க்கு சான்று
எனவே நாம் அனைவரும் உயிருடன் இருக்கும்போதே
ராம நாமத்தை உச்சரித்து பிறவி பெருங்கடலை
கடக்க முனைவோம்.
ஏனெனில் நாளை என்ன நடக்கும் யாரறிவார்

Sunday, November 20, 2011

ஆராயாது தவறு செய்தால் தண்டனை

ராமாயணம் என்ன தெரிவிக்கிறது ?
அரசனானாலும் ஆராயாது தவறு செய்தால் தண்டனை
அனுபவிக்கத்தான் வேண்டும் என்று தெரிவிக்கிறது.
தசரதன் ஆராயாது வெறும் ஒலியை மட்டும் கருத்தில் கொண்டு
பார்வையற்ற ஒரு வயோதிக தம்பதிகளின் ஒரே மகனை அம்பை விட்டு
கொன்றதற்கு அந்த தம்பதிகளின் மரணத்திற்கும்
சாபத்திற்கும் பின்னாளில் ஆளாக நேர்ந்து
தன் உயிருக்குயிரான ராமனை பிரிந்து
அந்த சோகத்திலேயே தன் உயிரை இழந்தான்
இதைபோல் ஏராளமான கருத்துக்களும் நீதிகளும்
ராமாயணத்தில் அடங்கியுள்ளான
அவைகளை கருத்தூன்றி படித்து நம் வாழ்வில்
அதை கடைபிடித்தால் துன்பங்கள்
நேராது தற்காத்துகொள்ளலாம்
பரப்ரம்மமே ராமனாக உருவெடுத்து வந்ததால்
தவறு செய்தவன் தந்தையாகினும் அவன்
தன் வினைபயனால் விளைந்த விதியை
அனுபவித்துதான் ஆகவேண்டும் என்பதை
இதன் மூலம் புரிந்துகொள்ளவேண்டும்
நாம் அதர்ம வழியில் செல்லாமல்
ராம நாமத்தை உச்சரித்து
நமக்கு கிடைத்த வாழ்க்கையை
வாழ்ந்து வந்தால் நம்மை அரண் போல்
நின்று காப்பான் கோதண்டத்தை ஏந்திய ஸ்ரீராமன்

குழந்தைத்தனமாக நடந்துகொண்டால்

அழுதால் உன்னை பெறலாமே
என்று இறைவனை
பற்றி பாடினார் ஒரு பக்தர்
ஆம் திருஞானசம்பந்தர் இறைவனை நோக்கி அழுதார்
உடனே அன்னை பார்வதி ஞானப்பால் அளித்தார்
உடனே கண்ணால் கண்ட இறைவனை பற்றி
பாடல்கள் வாக்கில் வந்தது
குழந்தை அழுதால் தாய் எங்கிருந்தாலும்
என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும்
குழந்தையின் அழுகுரல் கேடடு ஓடி
வந்து அணைத்துக்கொண்டு குழந்தையை
சாந்தபடுத்துகிறாள்
இவர்களுக்கு மட்டும் சாத்தியமான இந்த
அன்பு மற்றவர்களுக்கு ஏன் சாத்தியப்படவில்லை/
இதல் ஒன்றும் ரகசியமில்லை
மற்றவர்கள் இறைவனிடம் காட்டும் அன்பு
போலியானது
நாம் இறைவனிடம் காட்டும் அன்பு
குழந்தைகளின் களங்கமற்ற உள்ளம் போல்
தூய்மையானது அல்ல
நம் உள்ளங்களில் பொய்கள்தான் நிரம்பி வழிகிறது
அகந்தை சேற்றால் உள்ளத்தில்
இறைஅருள் நுழைவதற்கு சிறிது கூட இடமில்லை
நம் உள்ளம் இரும்புபோல் அன்பில்லாமல்
இறுகி பாறைபோல் உள்ளது
அதில் மற்ற உயிர்கள் மீது இரக்கமோ
,இறைவனை நினைத்து உருக்கமோ
இல்லாமல் சுயநலம் காரணமாக இறுக்கமாக உள்ளது
இறைவன் நமக்கு ஏமாற்றங்கள்,நோய்கள்,
துன்பங்கள்,சோகங்கள் என பல
சோதனைகளை தொடர்ந்து அளித்தாலும் நமக்கு ஆன்மீக விழிப்பு
ஏற்பட முடியாத அளவிற்கு உணர்வற்றவர்களாக் இருக்கிறோம்
என்ன செய்ய?
உள்ளத்தில் இறைவனிடம் முழுமையான சரணாகதி கிடையாது
இறைவனிடம் கொண்டுள்ள அவநம்பிக்கையே நம்
தோல்விகளுக்கு முழு காரணம்
குழந்தை உள்ளம் கொண்டவர்களாக இருந்தால்
இறைஅருள் தானே நம்மை தேடி வரும்
குழந்தைத்தனமாக நடந்துகொண்டால்
மனதில் இருள்தான் நிறைந்திருக்கும்

தீய எண்ணங்கள் அழியும்வரை

ஆசைகளே துன்பத்திற்கு காரணம் என்றான் புத்தன்
ஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும் துன்பம் என்றார் திருமூலர்
ஆசைகளுக்கு அளவே இல்லை
ஒரு ஆசை நிறைவேறியதும் அடுத்த ஆசை தயாராக நிற்கிறது
ஆசை நிறைவேறாவிடில் ஏக்கமாக மாறுகிறது
தீரா கோபமாக உருவெடுக்கிறது
தனக்கு கிடைக்காதது மற்றவருக்கு கிடைத்தால் மனதில் பொறாமை
தோன்றுகிறது
பொறாமை கொண்டஉள்ளம் பொறாமை கொண்டவனையும் அழிக்கும்
பொறாமை கொள்ள செய்தவனையும் அழிக்கும்
ஆசைகள் இருப்பதில் தவறில்லை
அதை நேர்மையான முறையில் நிறைவேற்றிகொள்வதிலும் தவறில்லை
ஆசை பேராசையாக மாறினால்தான் அது அனைவருக்கும்
ஆபத்தை விளைவிக்கும் அணுகுண்டாகிறது
ஒரு நாட்டை ஆள்பவனின் பேராசையால்
அவன் போர் தொடுக்கும் நாட்டு மக்களும்
அவன் நாட்டு மக்களும் காரணமின்றி விரோதம்
பாராட்டி போரிட்டு அழிகின்றனர்.
அதே போல்தான் குடும்பங்களும் சீரழிகின்றன
ராமாயணத்தில் ராவணன் செய்த தவறால் இலங்கையும் அதன் மக்களும் அழிந்தனர்
மகாபாரதத்தில் துரியோதனன் கொண்ட பேராசையால் அவன் குலமே அழிந்தது
இந்த நிலை பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்றும் அதே நிலைதான்
மக்களோ தலைவர்களோ எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை
இந்த உலகம் அழியும் வரை அப்படியேதான் இருக்கும்
ஒவ்வொரு மனிதனின் மனதில் உள்ள
தீய எண்ணங்கள் அழியும்வரை இந்நிலை
தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்
அதற்காக இப்படியே இதை விட்டுவிட
இறைவனும் விடுவதில்லை
அவன் அனுப்பிவைக்கும்
இறையடியார்களும் விடுவதில்லை
அவர்கள் மனித குலத்தை
நல்வழிபடுத்தும் முயற்சிகளை
செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்
நாம்தான் நம் மனதை தீய வழிகளில் செல்லாமல்
தடுத்து நல்வழியில் வாழ்க்கை நடத்த முயற்சி செய்ய வேண்டும்
அதற்க்கு எளிய வழி இறைவனை
எந்நேரமும் நினைத்து கொண்டு இருப்பதுதான்

பிற உயிருக்கு துன்பம் விளைவித்தால் எப்பிறவியில்தான் கடைத்தேறுவது?

அன்பே சிவம் என்கிறார்கள்
அன்பே சக்தி
அன்பே கடவுள் என்கிறார்கள்
சிவ பெருமானை வழிபடும் தெய்வமாக கொண்டவர்கள்
சைவர்கள் என்று சொல்லிகொள்ளுகிறார்கள்
சைவர்களில் இன்று அனேகம்பேர் அசைவ உணவு
உட்கொள்ளுபவர்களாக மாறிவிட்டனர்
அதேபோல்தான் சக்தி வழிபாடு செய்வவர்களும்
கடவுள் மீது மட்டும் அவர்கள் அன்பு செலுத்துவதாக நினைத்துகொண்டு
வழிபாடு செய்கிறார்கள்
ஆனால் கடவுள் படைத்த உயிர்கள் மீது அன்பில்லாமல் ஈவு இரக்கமின்றி
அவைகளை கொன்று அதன் மாமிசத்தைஉண்பது எந்தவிதத்தில்
அவர்களுக்கு கடவுளின் அருளை பெற்றுத்தரும் என்பதை
சிந்தித்து பார்த்தால் அவர்கள் செய்வது பெருந்தவறு என்பதை
உணர முடியும்
உயிரை கொடுக்க வக்கில்லாத மனித பிறவிகளுக்கு
மற்றொரு உயிரை போக்க எந்தவித நியாயமும் இருக்க வாய்ப்பில்லை
போதாத குறைக்கு அந்த மாமிசத்தை கடவுளுக்கு
படையல் வேறு செய்து அதை உண்கிறார்கள்
ஒரு உயிரை பலி என்ற பெயரில் கொல்வதால்
எப்படி நன்மைகள் கிடைக்கும் என்பதை அவர்கள்
சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்
புத்த பகவான் வலியுறுத்திய இந்த மதத்தை
சார்ந்தவர்களும் உயிர் கொலையையே தங்கள்
வாழ்க்கை கொள்கையாக கொண்டுள்ளனர்
இப்படி மதத்தின் உண்மையான கொள்கைகளை
கடைபிடிக்காமல் போலியாக உலகை ஏமாற்றி தங்களையும்
ஏமாற்றிக்கொண்டு மக்கள் வாழ்ந்துவருகின்றனர்
அதனால்தான் இன்று உலகில் எங்கும் அமைதியில்லை
மக்கள் மனதிலும் அமைதியில்லை
இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் நற்பலன்களும்
தீயபலன்களும் நாம் முற்பிறப்பில் செய்த நல்வினை,
தீயவினைகளை பொறுத்தே அமைகின்றன .
கிடைத்த இப்பிறவியிலும் பிற உயிருக்கு துன்பம் விளைவித்தால்
எப்பிறவியில்தான் கடைத்தேறுவது?
இந்த உண்மையை உணர்ந்துகொண்டு தங்களை
திருத்திகொளபவர்கள் இறைவனின் அருளுக்கு
விரைவில் பாத்திரமாக முடியும்

Saturday, November 19, 2011

உண்மையான மார்க்கம்

இறைவன் நாம் எதுவும் நாம் கேட்காமலேயே
நாம் உயிர் வாழ அளித்திருக்கிறார்
அவற்றில் சிலவற்றைத்தான்
நாம் அறிந்து வைத்துள்ளோம்
நாம் அறியாதது ஏராளம்
அவற்றை நாம் கணக்கிடமுடியாது
ஒரு வரையறைக்குட்பட்ட நம் புலன்கள் மூலம்
தெரிந்துகொள்ளமுடியாது
நம் உடலில் என்ன நடக்கிறது என்பதை
அறியும் சக்தியே நமக்கு இல்லை
எல்லாவற்றிற்கும் ஒரு கருவியின் உதவியை நாடுகிறோம்
இல்லாவிடில் மற்றவரின் உதவியை நாடுகிறோம்
இந்நிலையில் கர்வம் கொண்டு பிதற்றுவது தேவையற்றது
இறைவனுக்கு நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும்
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அது முடியாது
கடவுளே இல்லை என்றும் கடவுளை கற்பித்தவன்
முட்டாள் என்றும் பிதற்றுகின்றனர்
அவர்களால் விவரிக்க முடியாதவற்றை
இயற்க்கை என்று மழுப்புகின்றனர்
இந்த அண்ட சராசரங்கள் ,உயிர்கள் அனைத்தும்
ஒரே மூல பொருளான இறைவனிடமிருந்துதான்
வந்துள்ளன
இந்த உலகத்தின் கண்டுபிடிப்புகள் எல்லாம்
ஏற்கெனவே உள்ள மூலபொருட்களிளிருந்து
தான் வெளிவந்துள்ளன
எனவே அகந்தையை விட்டுவிட்டு
இறைவனை சரணடைந்து நம் கடமைகளை
பிறர் மனம் நோகாமல்,பிறரின் வாழ்வை கெடுக்காமல்
அன்பு செய்து வாழ்வதே உண்மையான மார்க்கம்

நமக்கு சாந்தியும் விடுதலையும் நிச்சயம்

உயிரை ஆன்மா இயக்குகிறது
உயிர் உடல் எடுத்து மனதுடன் சேர்ந்துகொண்டு
ஒவ்வொரு பிறவியில் செய்த
நல்வினைகள் தீவினைகளுக்கு ஏற்ப
இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது
தெய்வங்களே மனித உடலில் வந்தால் கூட
இன்ப துன்பங்களை ஏற்று அனுபவித்தாக வேண்டும்
இதற்க்கு அவதாரங்களே சாட்சி
ஆனால் அவதாரங்கள் சாட்சியாக இருந்துகொண்டு
தன் ஆன்ம ஸ்வரூபத்தை அறிந்து கொண்டுள்ளதால்
இன்பதுன்பங்களினால் பாதிக்கபடுவதில்லை
ஆத்மா ஞானம் பெற்றவர்களும் பாதிக்கபடுவதில்லை
தான் ஆத்மாதான்,உடல் அல்ல என்று அறிந்துகொள்ளும்வரை
இந்த நிலை தொடரும்
ஞானம் பெறும்வரை இந்த உடலும் மனமும் கிரகங்களின்
கட்டுப்பாட்டில்தான் இருக்கும்
அதிலிருந்து விடுபடவேண்டுமென்றால் அமைதியாக
வினைகளை அனுபவித்துதான் தீர்க்கவேண்டும்
நம் இதயம் உடலில் உயிர் உள்ள வரை விடாமல்
துடித்துகொண்டிருக்கிறது
அப்படி துடித்தாலும் ஒரு துடிப்புக்கும் மற்றொரு துடிப்புக்கும்
இடையில் அது ஒய்வு எடுத்துகொள்ளுகிறது
அதைபோல்தான் நாமும் இவ்வுலகில் வாழும்போதே
இன்ப துன்பங்களிலேயே முழுவதும் மூழ்கிவிடாமல்
இடையிடையே நம் மனதை இறைவனிடம் செலுத்தி வந்தால்
நமக்கு சாந்தியும் விடுதலையும் நிச்சயம் கிடைக்கும்.

நாம் ஏன் கடவுளை காணமுடியவில்லை?

கடவுள் எல்லா இடத்திலும் நிறைந்துள்ளார்
கடவுள் எல்லா உயிரிலும் கலந்துள்ளார்
இருந்தும் நாம் ஏன் கடவுளை காணமுடியவில்லை?
கடவுள் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆத்மாவாக
இருந்துகொண்டு அதை இயக்குகின்றான்
மின்விசிறி,மோட்டார் போன்றதுதான்
நம் உடலும் ஒரு இயந்திரம்
ஒரு இயந்திரம் பழுதில்லாமல் இருந்தால்
அதற்க்கு வேண்டிய சக்தியை
கொடுத்தால் இயங்க தொடங்கும்
அதை பயன்தரும் வகையில் இயங்க வைக்க
அல்லது நிறுத்த மற்றொரு சக்தி தேவைப்படும்
எல்லாம் இருந்தும் உடலில் உயிர் இல்லாவிட்டால்
உடல் இயங்காது .உயிர் இருந்தும் அதில் உள்ள ஆத்மா
என்ற இறைசக்தி இல்லாவிடில் அப்போதும் அந்த
உடலால் பயன் ஏதுமில்லை
ஆனால் இந்த உண்மையை யாரும் உணர்வதும் கிடையாது
உணர்ந்துகொள்ள முயற்சியும் மேற்கொள்ளுவது கிடையாது
உடல்தான் ஆத்மா என்று நினைத்துகொண்டு
அதை பராமரிப்பதிலேயே ஆயுள் முழுவதையும்
வீணடிக்கிறார்கள்
தாம் உடல் அல்ல ஆத்மாதான் என்ற உண்மையை
அறிந்துகொள்ள பல கோடி பேரில் சிலரே
முயர்ச்சி செய்து ஆன்ம ஞானம் பெறுகிறார்கள்
நாம் எதை பற்றி அதிகம் சிந்தனை செய்கிறோமா
நாம் அதுவாகவே ஆகிறோம் என்பது உண்மை
நாம் இறைவனை பற்றி சிந்திக்க தொடங்கினால்
நாம் அவனை பற்றி அறிந்துகொள்ள இயலும்
அறிந்துகொண்டால் இந்த மயக்கத்திலிருந்து
விடுபட்டு உண்மையானவிடுதலையை அடையமுடியும்
அவரவர்களுக்கு உள்ள கடமைகளை செய்துகொண்டே
மிகவும் எளிதான ராம நாமத்தை
உச்சரித்துக்கொண்டே இருப்பதுதான்

Thursday, November 17, 2011

உண்மையான ஆன்மீகம் என்றால்

இறைவன் இந்த அண்டத்தில் பல்லாயிரகணக்கான கோள்களையும் விண்மீன்களையும் படைத்துள்ளான் நாம் வசிக்கும் பூமியும் ஒன்று.
ஒவ்வொரு கோளும் அதன் அளவிற்க்கேர்ப்ப
ஜடபோருட்களும்,வாயுக்களும்,காந்த சக்தியும் கொண்டு
ஒன்றைஒன்று மோதிக்கொள்ளாமல்
அதனதன் பாதையில்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சுற்றி வந்துகொண்டிருக்கின்றன
கோள்களுக்கு வேண்டிய அனைத்து சக்தியையும்
சூரியன் தன கிரணங்கள் மூலம் வழங்கிகொண்டிருக்கிறது
நம்மை சுற்றியுள்ள கடல் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு
கரையை தாண்டாமல் மனித குலத்திற்கு வேண்டிய அனைத்தையும்
தந்துகொண்டிருக்கின்றது
இந்த பூமியில் வசிக்கும் மக்கள் மட்டும்
சுயநலத்தின் காரணமாக அவரவர் வேலைகளை விட்டுவிட்டு
மற்றவர்கள் வாழ்க்கையில் தலையிடுவதும், ஆதிக்கம் செய்வதும்,
பிறரை அழிப்பதும்,தன்னைவாழவைக்கும்
இயற்கையை பாழ்படுதுவதும் பிறரை துன்பத்தில் ஆழ்த்தி தானும் அழிந்துகொண்டிருக்கின்றனர்.
எவ்வளவோ முறை இறைவன் நேரடியாக அவதாரங்கள் செய்து
மக்களுக்கு நல்வழி காட்டியும்,தன அடியார்கள் மூலமாக வாழ்ந்து காட்டியும்
இந்த மனித சமூகம் திருந்துவதாக தெரியவில்லை.
இறைவன் சுனாமி, பூகம்பங்கள் வெள்ளம் கொள்ளை நோய்கள்,
போன்ற இடர்பாடுகளை அளித்தும் அறிவில்லாமல்
அகந்தை தலைக்கேறி இறைவனே இல்லை என்றும்
மறுபிறவி இல்லை என்றும் பிதற்றுவதும்
தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருக்கிறது.
இறை நம்பிக்கை உள்ளவர்களும் தவறான வழிமுறைகளை பின்பற்றி
அமைதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
இதற்க்கெல்லாம் ஒரே பதில் அகந்தையை விட்டுவிட்டு
இறைவனை முழுமையாக சரணடைவதுதான்
ஆன்மீகம் என்றால் பிரசினைகளை எதிர்கொள்ள பயந்து ,குடி போதை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகி காவி வேட்டி கட்டிக்கொண்டு தாடி வளர்த்துகொண்டு சோம்பேறியாக கோயில் கோயிலாக சுற்றுவதுதான் ஆன்மிகம் என்று நினைக்கும் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி கொண்டு வருகிறது
உண்மையான ஆன்மீகம் என்றால் அவரவர் தன பொறுப்பை உணர்ந்து,தன கடமைகளை பலன் எதிர்பாராமல் செய்வதுடன் துன்புற்றோர்க்கு உதவுவதும் அனைத்து உயிர்களிடம் அன்பு பாராட்டுவதும், பிறர் முன்னேற்றம் கண்டு பொறாமை கொள்ளாமல் இருப்பதும்,இறைவனை எந்நிலையிலும் மறவாமல் இருப்பதும்தான்

Wednesday, November 16, 2011

மந்த்ரம் என்றால் என்ன?

மந்த்ரம் என்றால் என்ன?
மனதை எந்த எண்ணம் திறமுடையதாக வைக்கிறதோ அதுவே மந்த்ரம்
திறமுடையதாக என்றால் என்ன பொருள் ?
நினைக்கின்ற எண்ணங்களை செயல்படுத்த ,மன திண்மையை உண்டாக்குவது
என்னதான் உடல் வலிமையாய் இருந்தாலும் மனம் ஒத்துழைக்க மறுத்தால்
எந்த பணியையும் வெற்றிகரமாக செய்யமுடியாது
அதே போல்தான் மனமும்
இரண்டும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் நினைத்ததை சாதிக்கமுடியும்
இவ்வுலகத்தில் ஒவ்வொரு உயிரும் அவைகளுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட
கடமைகளை முடிக்கவே பிறவிஎடுக்கின்றன
மனம் காமம் கோபம்,கஞ்சத்தனம் ,ஆசைகள்,ஆணவம்,பொறாமை போன்ற ஆறு தீய குணங்களால் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது தவிர்க்கமுடியாதது
அதற்க்கு காரணம் மனதில் உள்ள கடந்த கால நினைவு பதிவுகள்,
ஒவ்வொரு கணமும் நம் புலன்களின் மூலம் மனம் பெரும் தகவல்கள்.
இரண்டும் சேர்ந்து மனிதனை எண்ணங்கள் ஆட்டி படைக்கின்றன.
மனதை சுலபமாக அடக்க முடியாது
எனினும் முயற்சியால் ,இறைவனின் அருளால்
அதில் தோன்றும் எண்ணங்களை நெறிப்படுத்தி
நமது நோக்கங்களை அடைய முடியும்
அதற்க்கு எளிதான் வழி
இறைவன்நாமத்தை ஓயாமல் உச்சரிப்பதுதான்
ராம நாமம் அதற்க்கு துணை புரியும்

Sunday, November 13, 2011

இறைவனை அடையவிடாமல் தடுக்கும் முதல் எதிரி காமம்தான்

இறைவனை அடையவிடாமல் தடுக்கும் முதல் எதிரி காமம்தான்
காம உணர்வால் தோன்றிய மனிதன் பால பருவத்தை தாண்டும்போது அதன் வலையில் சிக்கி கொள்கிறான்
அவன் இறக்கும் வரை அது அவனை விடுவதில்லை
அவனது நாடி நரம்புகள் தளர்ந்து போனாலும் அவன் மனதில் உள்ள கடந்த கால பதிவுகள் அவனை தொல்லைபடுத்தி கொண்டு வருகின்றன
இறைவனை அடைய அவன் ஆசைகளை விட்டொழிக்க வேண்டும்
ஆனால் அது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது
அதனால்தான் முற்காலத்தில் முதுமை அடைவதற்குள் தன கடமைகளை நிறைவு செய்து விட்டு பொறுப்புகளை இளையவர்களிடம் ஒப்புவித்துவிட்டு கானகம் சென்று தவ வாழ்க்கையில் ஈடுபட்டனர்.
ஆனால் இன்று உடலில் இருந்து உயிர் நீங்கும் வரை என்றும் தீராத திருப்தியே அடைய முடியாத சம்சாரத்தை விட்டு விலக யாரும் விருப்பபடுவதில்லை
அதனால்தான் வாழ்வின் இறுதிகாலத்தில் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாகின்றனர்
நமக்கு உடல் மீது பற்று இருக்கும் வரை காமத்திலிருந்து விடுபட்டு மனதை இறைவனை நோக்கி திருப்ப வாய்ப்பிலை
உணவு கட்டுப்பாடு,மனக்கட்டுப்பாடு,ஆசைகளை தூண்டும் செயல்களிலிருந்து விலகி நிற்றல்,தன்னலமற்ற சேவையில் ஈடுபடுதல் பொறுமையை கடைபிடித்தல் ,இறைவனிடம் ஆழ்ந்த பக்தி செலுத்துதல் போன்றவற்றால்தான் மனம் அமைதியடைந்து இறைவனை நோக்கி மனம் திரும்பும்.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை

விலங்குகள் போல் வாழ்ந்து

உயிர் இந்த உலகோடு தொடர்பு கொள்ள தேவை மனம்
மனம் புலன்கள் வழியாக வெளியுலகை தொடர்பு கொள்ளும்
புலன்களுக்கு அக கருவிகள்ஐந்தும் புற கருவிகள் ஐந்தும் உள்ளன
மனம் அனைத்தையும் பதிவு செய்து வைத்துகொள்ளுகிறது
தேவைப்படும்போது அந்த தகவல்களை பயன்படுத்திகொள்ளுகிறது
புத்தி தகவல்களை அலசி ஆராய்ந்து மனதின் செயல்பாடுகளை
கட்டுபடுத்தி நெறிப்படுத்துகிறது
மனதின் சக்தி அதில் மேலோங்கிய குணங்களின் அடிப்படையில்
இருக்கும்
புத்தியை விட மனம் அதிக சக்தி வாய்ந்தது
இருந்தும் முயற்சி செய்தால் புத்தியின் துணை கொண்டு அதை நெறிப்படுத்தலாம்
உலகில் உள்ள அனைத்தும் மற்றும் தெய்வங்களும் இந்த மூன்று
குணங்களுக்கு கட்டுப்பட்டவை
அவை சத்வம் ரஜஸ் தமஸ்
இவை மூன்றில் எந்த குணம் மேலோங்கியிருக்கிறதோ
செயல்பாட்டின் வேகம் அதை பொருத்து அமையும்
சத்வ குணம் மேலோங்கியிருக்கும்போது அமைதி,பொறுமை,தெளிவு
போன்ற குணங்கள் மேலோங்கியிருக்கும்
ரஜஸ் இருக்கும்போது வேகம்,அவசரம் கோபம் பொறுமையின்மை,சிந்திக்கும் திறன் பாதிப்பு போன்ற
குணங்கள் வெளிப்படும்
தமஸ் குணம் மேலோங்கியிருக்கும்போது மந்த தன்மை,பொறுமையின்மை,சுயமாக சிந்திக்கும் திறனின்மை,முரட்டுத்தனம் பயம்,போன்ற குணங்கள் மேலோங்கியிருக்கும்
இந்த குணங்கள் நாம் உண்ணும் உணவு,மனதிற்கு நாம் அளிக்கும் தகவல்களை பொருத்து மாறிகொண்டிருக்கும் அதன் செயல்பாடுகள் அவ்விதமே அமையும்
இவை மூன்றையும் கட்டுபாட்டில் வைத்திருப்பவன் வெற்றிகளை குவிக்கிறான்
ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களுக்கு மட்டும் ஆட்படுபவன் பாவ செயல்களில் சிக்குண்டு துன்பபடுகிறான்.
சத்வ குணம் மேலோங்கும்போதுதான் ஞானத்தை அடையும் வழியை தேடி மனம் செல்கிறது
எனவே அதில் நின்று அரிதாக கிடைத்த பிறவியை நல்ல வழியில் பயன்படுத்தி மீண்டும் பிறவா நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும்
விலங்குகள் போல் வாழ்ந்து கிடைத்த வாழ்க்கையை வீணடிக்ககூடாது
உலக மாயையில் மூழ்காமல் இறைவனை நினைத்துகொண்டு நம் செயல்பட்டு வந்தால் ஞானம் இயல்பாக சித்திக்கும்

Saturday, November 12, 2011

வினையால் வந்த இவ்வுடம்பு

வினையால் வந்த இவ்வுடம்பு வினை தீர்ந்தவுடன் விழுந்துவிடும்
என்றார் ரெட்டியப்பட்டி ஸ்வாமிகள்
ஏற்கெனவே பல பிறவிகளில் செய்த நல்வினைகள்
,தீவினைகள் காரணமாக இந்த பிறவி ஏற்பட்டுள்ளது
.மனிதர்களில் சிலர் பிறக்கும்போதே,அங்கம்,குறையுள்ளவர்கலாகவும்
,சிலர் மன நோயுடனும் பிறக்கிறார்கள்.
சிலர் வாழ்நாள் முழுவதும் துன்பத்திலும் தீரா நோயிலும் உழன்று வாழ்கையை கழிக்கின்றனர்.
சிலர் வாழ்க்கை சுகமாக போகின்றது.
சிலருக்கு எல்லாம் இருந்தும் மனதில் அச்சம்
,சிலருக்கு,எதிலும் திருப்தியில்லை,
சிலர் இருப்பதைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதைவிட்டுவிட்டு கவலைபட்டுகொண்டே நாட்களை தள்ளுகின்றனர்.
சிலர் பிறருக்கு கெடுதல் செய்வதையே தங்கள் வாழ்வின் நோக்கமாக கொண்டு பிறரை துன்புறுத்தி. தாங்களும் முடிவில் அழிகின்றனர்.இன்று அனைவரின் மனதிலும் சுயநலம்தான் மேலோங்கியுள்ளது.அதனால்தான் அவர்களும் நிம்மதியாக இல்லை மற்றவர்களையும் அவர்கள் நிம்மதியாக இருக்க விடுவதில்லை
இப்படியாக ஒவ்வொருவரின் வாழ்க்கை ஒவ்வொரு விதமாக இருக்கிறது.
செய்யும் வினைகளினார்ல் பாவ புண்ணியங்கள் ஏற்படுகின்றன.
அதனால்தான் பகவான் கண்ணன் கீதையில் பலனை எதிர்பாராமல்
உங்கள் கடமைகளை செய்யுங்கள் என்று சொன்னான்.
அப்போது நீங்கள் வினைகளில் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள்.
ஆனால் யார் அந்த அறிவுரையை கேட்கிறார்கள்.
அதனால் இந்த மானிட சமூகமே வினைகளின் பயன்களில் சிக்குண்டு
துன்ப கடலில் மூழ்கி அல்லபட்டுகொண்டிருக்கின்றன.
இதிலிருந்து விடுபடும் ஒரே வழி இறைவனின் பாதங்களை சரணடைவதுதான்
மிக சுலபமான வழி அவன் நாமத்தை ஓதுவதுதான்.
பற்றுகளை விடுவதற்கு பற்றர்வர்களின் தாள பற்றவேண்டும்
ஸ்ரீ ராமனாக அவதரித்த ஸ்ரீமான் நாராயணனின் பாதங்களை பற்ற வேண்டும்
ராம நாமத்தை சொல்லிகொண்டிருந்தால்வினைகளும் நீங்கும்.
மன நிறைவான் வாழ்க்கையும் சித்திக்கும்

Friday, November 11, 2011

கடவுள் எங்கே இருக்கிறார்?

கடவுள் எங்கே இருக்கிறார்?
இந்த கேள்வி உலகத்தில் மனிதர்கள் தோன்றிய நாள் முதல் உண்டு
பதில் கிடைத்ததா?
சிலருக்கு கிடைத்தது/பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை
திருமூலரின் திருமந்திரத்தில் பதில் உள்ளது
ஆனால் அதை பாராயணம் செய்வதற்கு மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள் அதை படித்தவர்கள்
அதில் கூறியுள்ளதை நடைமுறைபடுத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை
கடவுளை இன்று எல்லோரும் கோயிலில் தேடுகிறார்கள்
கோயிலில் உள்ள சிலையை பார்த்துவிட்டு அர்ச்சனை,அபிஷேகம் செய்து விட்டு வந்தால் கடவுளை கண்டதாக நினைத்து கொள்கிரார்கள்
சிலர் கண்ணை மூடிக்கொண்டு இருட்டில் கடவுளை தேடுகிறார்கள்
சிலர் கடவுளை கண்டதாக பிதற்றும் போலிகளிடம் சென்று கடவுளை காட்ட சொல்கிறார்கள்
சிலர் வானத்தில் கடவுளை தேடுகிறார்கள்
கடவுள் நம்பிக்கையில்லா வாய்சவடால் அரசியல்வாதிகள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதாக ஊரை ஏமாற்றுகிறார்கள்
ஆனால் திருமூலர் என்ன சொல்கிறார்?
வானத்தில் கடவுளை தேடும் மதி இல்லாதவர்களே
தேனுக்குள் இருக்கும் இனிப்பு சிவப்பு அல்லது கருப்பு நிறமா?
தேனுடன் இனிப்பு கலந்து நின்று இனிப்பது போல்
மனிதனின் உடலுக்குள் ஈசன் ஒளிந்திருக்கின்றான்
அவனை உங்களுக்குள் தேடி கண்டு உணர்ந்துகொள்ளுங்கள்.
உணர்ந்துகொண்டால் இறைவன் எல்லா உயிரிலும் கலந்துள்ளான் என்பதை உணர்ந்துகொண்டு
அகந்தையில்லாமல் எல்லா உயிருடனும் அனுசரித்து வாழ்ந்து ஆனந்தமாக வாழலாம்
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.

பிரம்மம்தான் உண்மை

பிரம்மம்தான் உண்மை
இந்த உலகம் மாயை என்றார் ஆதி சங்கரர்
அது எப்படி?
நாம் காணும் காட்சிகள் அனைத்தும் நம் மனதில் உள்ளன
வெளியில் ஒன்றும் கிடையாது
மனம் உறக்கத்தில் ஆழும்போது எந்த உலகமோ,எண்ணங்களோ இல்லை
உறக்கத்திலிருந்து விழித்ததும் அனைத்தும் தோன்றுகின்றன
மனம் உறக்கத்தில் இருக்கும்போது கனவுகள் காண்கிறது அதில் பல காட்சிகள் வருகின்றன
ஆனால் விழித்ததும் அந்த காட்சிகள் வருவதில்லை
ஆழ்ந்த உறக்கத்தில் எதுவுமே இல்லை
ஆனால் இந்த மூன்று நிலைகளையும் ஒன்று கண்காணித்து கொண்டிருக்கிறது
அது தான் ஆத்மா
அதுதான் பிரம்மம்
அதுவே உண்மை
அதை அறிவதற்காகவே இந்த பிறவி அளிக்கபட்டிருக்கிறது
அதை அறிந்துகொண்டால் இரவில்லை,பகலில்லை
இன்பமில்லை துன்பமில்லை
பிறப்பில்லை,இறப்பில்லை
தடையற்ற ஆனந்தம்தான் உண்டு.
இதைதான் பகவான் ரமணர் நமக்கு கண்டு அளித்துள்ளார் நாமும் அவர்காட்டிய வழியில் முயற்சி செய்தால் அந்த நிலையை அடையலாம்.

Thursday, November 10, 2011

பிறவி பெரும்கடலை கடக்கும் உபாயம்

ஏன் இந்த மனித பிறவிக்கு இவ்வளவு முக்கியத்வம் கொடுக்கப்பட்டிருகிறது?
மனித பிறவியை விட அதிக சக்தி வாய்ந்த அரக்கர்கள், தேவர்கள். தெய்வங்கள் போன்ற
பிறவிகளைவிட மனித பிறவி எவ்வாறு உயர்ந்தது?
இதை ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கவேண்டும்
நாம் வாழும் இந்த பூமி இந்த அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து உலகங்களை விட
உயர்ந்தது
இங்குதான் மனிதரோ,தேவர்களோ,தெய்வங்களோ தங்கள் வினைகள் தீர
பிறவிஎடுத்து வினைகளை அனுபவித்து தீர்ப்பது மட்டுமல்லாமல் இறைவனை பூஜித்து
இறைவனை அடையமுடியும்
மற்ற உலகங்கள் எல்லாம் மாயையால் நிரம்பியது.
அங்கிருப்பவர்கள் அகந்தையால் தான் பெற்றிருக்கும் சக்திகளை கொண்டு
இறைவனை மறந்து வாழ்பவர்கள்
இதிஹாச புராணங்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை புலப்படும்
மனிதர்களை ஆட்டி வைக்கும் நவக்ரகங்கள் இந்த பூமியில் வந்து
தவம் செய்து தங்கள் வினைகள் தீர இறைவனை வழிபட்டிருக்கின்றன
எனவே பல பிறவிகளில் செய்த புண்ணியங்களின்
பயனாக அரிதாக கிடைத்த இந்த மானிட பிறவியை
உலக மாயையில் மூழ்கி வீணடிப்பவர்கள்
துன்ப கடலில் மூழ்குவதை தவிர வேறு வழியில்லை
பிறவி பெரும்கடலை கடக்கும் உபாயம்
இறைவனின் திருவடியினை முழுவதுமாக சரணடைவதுதான்.
நம் மனதை திசை திருப்பும் புரட்டர்களின் வார்த்தைக்கு
செவிமடுக்காமல் நாளை என்று தள்ளி போடாமல்
இந்த நிமிடம் முதலே இறைவனை நோக்கி மனதை திருப்ப வேண்டும்.
அனேக வழிகள் இருந்தாலும் எளிய வழி ராம நாமத்தை உச்சரிப்பதுதான்.

Wednesday, November 9, 2011

ஒவ்வொரு உயிரின் உள்ளே ஆன்மா உள்ளது

ஒவ்வொரு உயிரின் உள்ளே ஆன்மா உள்ளது
அது அந்த உடலில் தங்கியிருக்கும்வரை அந்த உயிர் இயங்கும்
அது நீங்கியபின் அந்த உடல் வெறும் சடலமே
இந்த ஆன்மாவை பற்றிய அறிவு மனித உயிர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
தேவர்களும் கடவுள்களுமே மனிதர்களைவிட அதிக சக்திகளை பெற்றிருந்தாலும் தங்களை இயங்குவது /தங்களை இயக்குவது ஆன்மாவாகிய பரப்ரம்மம் என்பதை அறியாதவர்களாகதான் இருக்கிறார்கள் என்பதை இதிஹாச புராணங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்
இறைவன் கண்ணனாக அவதாரம் எடுத்து பகவத்கீதையில் இந்த ஆன்மாவை பற்றி விரிவாக விளக்கியுள்ளான்.
பகவத் கீதைக்கு பல ஆசாரியர்கள் விளக்க உரை எழுதியுள்ளார்கள்.
இன்னும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
சமீப காலத்தில் வாழ்ந்த பகவான் ரமண மகரிஷியும் எளிய தமிழில் விளக்கம் அளித்துள்ளார். இவைகளை படித்தால் மட்டும் போதாது.
நம் உடலில் உள்ள ஆன்மா குறித்து அமைதியாக சில நிமிடங்கலாகவாவது சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு இருந்தும் மனிதர்கள் இந்த ஆன்மாவை பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஆன்மா தாங்கும் இந்த உடல்தான் ஆன்மா என்று அதை பராமரிப்பதிலேயே தன ஆயுட்காலம் முழுவது செலவிட்டு வீணே மடிகின்றனர்.
வேகமாக ஓடிகொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் எல்லோரும் சாஸ்திரங்களை படித்து புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்த வாய்ப்பிலை.
உலக காரியங்களை செய்துகொண்டே ராம நாமத்தை ஜபம் செய்து வந்தால் இயல்பாக ஆன்ம ஞானம் சித்திக்கும்
இது ஞானிகள் உலகிற்கு தங்கள் அனுபவத்தால் கண்டு தெரிவித்த உண்மை.

அரிது அரிது மானிடராய் பிறத்தல்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று
அவ்வை மூதாட்டி அன்றே சொன்னாள்
இன்றைய விஞ்ஞானமும் அதைதான் சொல்கிறது
பல லக்ஷம் விந்தணுக்களில் ஒன்றுதான்
பெண்ணின் கருமுட்டைக்குள் நுழைந்து கருவாக மாறுகிறது.
அதுவும் கருப்பையில் வளர்ந்து குழந்தையாக உருபெற்று
இவ்வுலகிற்கு வருவதற்குள் படும் துன்பங்கள்,ஆபத்துக்கள் ஏராளம்.
தாய் கருவை கலைத்துவிடலாம்
நோய் கிருமிகள் தாக்கி கருவை அழித்துவிடலாம்.
இன்னும் எத்தனையோ ஆபத்துக்கள்
அப்படி பிறந்து வந்தாலும் அதன் ஆயுள் 100 வயது
என்று வைத்துக்கொண்டால் அதில் 50
ஆண்டுகளுக்குமேல் தூங்கியே கழித்துவிடும்.
மீதி 15 ஆண்டுகள் ஒன்றும் அறியா இளமை பருவம்
மீதம் 35 ஆண்டுகளில் நோய்கள்,பசி,முதுமை ,துன்பங்கள் ஆகியவை வாட்டி வதைத்து விடும்
ஆனால் இதை தவிர கவலைகள்,தானே ஏற்படுத்திகொண்ட
தீய பழக்கங்கள் என இறைவன் அளித்த பிறவியை
யாரும் நல்ல வகையில் பயன்படுத்துவது கிடையாது.
இறைவனுக்கு அடிமையாகாமல் போதைக்கும்,பேதைக்கும் அடிமையாகி
வாழ்வை தொலைப்பவர்கள் ஏராளம்
ஆன்மீக விழிப்புவருவதற்குள் மரணம் ஆடகொண்டுவிடும்.
எனவேதான் இறைவன் அளித்த இந்த பிறவியை வீணடிக்காமல்
ராம நாமத்தை ஜபம் செய்யவேண்டும்.
கடவுள் இல்லை என்பவர்களின்
மாய வலையில் சிக்கி மோசம் போககூடாது.

Monday, November 7, 2011


இன்று உலகில் மனிதர்கள் ஆசைகளின் பின்னே ஓடி முடிவில் நிம்மதியில்லா வாழ்க்கை வாழ்ந்து மடிகின்றனர். இன்று ஏழையும் நிம்மதியாக இல்லை பணக்காரனும் நிம்மதியாக இல்லை. உலக பொருட்களை தேடி ஓய்ந்த பின்னர் அமைதியை நாடி ஓடுகின்றனர். இவர்களை வைத்து காசு பண்ணும் போலி காஷாய வியாபாரிகளிடம் சிக்கி இருக்கின்ற பொருளையும் இழந்து புதிய சிக்கல்களில் மாட்டிகொண்டு தவிக்கின்றனர். இவைகளிலிருந்து தப்ப வேண்டுமானால் இறை நாமத்தை ஜபம் செய்யவேண்டும். பேராசையை விட்டொழிக்க வேண்டும். புலியை பார்த்து பூனை சூடு போட்டுகொள்வதுபோல் செய்யாமல் தனக்கு உள்ள திறமைகளை கருத்த்தில் கொண்டு நேர்மையாக வாழ பழகிக்கொள்ள வேண்டும்.ஒழுக்கமாக வாழ பழகவேண்டும். நேரம்கிடைக்கும் போதெல்லாம் ராம நாமத்தை ஜபித்து வந்தால் நல்ல அமைதியான மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்

Sunday, November 6, 2011

கடவுள் ஏன் நம் கண்களுக்கு தெரிவதில்லை?
ஒரு தாய் தன மகனுக்கு தந்தையை காட்டாவிடில் தந்தை அவன் எதிரே இருந்தாலும் அவனுக்கு தந்தை யார் என தெரிய வாய்ப்பில்லை
அதுபோல்தான் கடவுள் நம் எதிரே இருந்தாலும் சத்குரு கருணை இல்லாவிடில் அவனை நாம்
காணமுடியாது.
மேலும் உண்மை வடிவான் கடவுளை பொய்களால் நிரம்பிய மனம் கொண்டவர்களால் அவனை என்றும் காண முடியாது
அன்பே வடிவான் கடவுளை அன்பில்லாதவ்ர்களால் எவ்வாறு காண இயலும் ?

Saturday, November 5, 2011

இதுதான் உண்மை


இறைவனுக்கு எல்லோரும் ஒன்று
அவனை போற்றுபவனும் தூற்றுபவனும் ஒன்று
எப்படி
அவனை போற்றி துதித்த ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் தான் உறையும்
கோயிலிலேயே சிலை அமைத்து அடியார்கள் வழிபட அனுமதித்துள்ளான்
அதே போல் கடவுளே இல்லை என்ற நாத்திகவாதிகளுக்கும் கோயிலுக்கு வெளியே போது இடங்களில் சிலைகள் அமைத்து அவர்களும் அவர்களை பின்பற்றுபவர்கள் மலர் தூவி ,மாலைகள் அணிவித்து மகிழ அனுமதித்துள்ளான்
என்னதான் நாத்திகவாதிகள் கடவுளே இல்லை என்று வாய் கிழிய கூச்சல் போட்டாலும்
கடவுளின் அனுமதியின்றி இவ்வுலகில் எதுவும் நடைபெற முடியாது என்பதை பக்தர்கள் உணருவார்கள்.
ஆனால் நாத்திகவாதிகள் அதை ஏற்றுகொள்ளாவிட்டாலும் அதை பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை
இதுதான் உண்மை

Friday, November 4, 2011


அவரவர் தன கடமைகளை ஒழுங்காக செய்து வந்தால் இறைவன் தானே அவர்களை தேடி சென்று அருள் புரிவான்
குகன் கங்கை கரையில் ஒரு படகோட்டி .ராமபிரான் அவன் இருக்கிமிடம் சென்றே அருள் செய்தான்
ஜடாயு தசரதனின் நண்பன் என்ற காரணத்தால் தன தந்தையை போல் கருதி அவனுக்கு ராமபிரான் ஈம கிரியைகளை செய்தான்
முனிவர்களுக்கு சேவை செய்து ராமபிரானிடம் பக்தி செய்து வந்த சபரிக்கு தானே நேரில் சென்று அருள் செய்தான்.
தன கடமைகளை ஒழுங்காக செய்து கொண்டு ராமபிரானை நினைத்து வணங்கி வந்தால் இக்காலத்திலும் அவன் அருள் நிச்சயம் கிட்டும்

உங்கள் மனதில் ராம ராஜ்ஜியம் உருவாகும்


இவ்வுலகில் செல்வத்திற்கு அதிபதியாகிய
இலக்குமிதேவியை வழிபட்டால்தான் செல்வம் வருமா?
வழிபடாவிட்டால் செல்வந்தராக முடியாதா?
இலக்குமிதேவி இந்து கடவுள்
மற்ற மதத்தினர்கள் இந்துக்களை விட
பெரும் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்களே?அது எப்படி?.
அவர்கள் இலக்குமிதேவியை வழிபாடு செய்வதில்லையே?
மனிதர்கள் செய்யும் நல்வினைகளால் புண்ணியம் சேருகிறது.
தீவினைகளால் பாவம் சேருகிறது.
நல்வினைகளால் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையும் தீவினைகளால்
துன்பகரமான் வாழ்க்கையும் அமைகிறது என்பதுதான் உண்மை.
மனிதர்களின் வாழ்க்கையை நாம் கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை
புரியவரும்.
செல்வம் படைத்தவர்கள் தனக்கு உண்மையான தேவையை மட்டும்
வைத்துக்கொண்டு ஏழைகளுக்கும் துன்பப்படுவோர்களுக்கும் உதவவேண்டும்.
அவ்வாறு செய்யாவிடில் என்ன நடக்கும்
அவர்கள் தீராத நோயால் அவதிபடுவார்கள்.அல்லது
செல்வம் கொள்ளை போகும் அல்லது அவர்கள்
சேர்த்து வைத்த செல்வமே அவர்கள் உயிரை குடித்துவிடும்.
அதனால்தான் செல்வத்தின் பயன் ஈதல் என்றனர் நம் முன்னோர்.
அந்த எண்ணம் வரவேண்டுமானால் இறைவனை நினைத்துகொண்டே இருக்கவேண்டும்.
கர்ணன் தன செல்வத்தை எல்லாம் தானம் செய்து அழியா புகழ் பெற்றான்.
நம்முடைய பாரம்பரியத்தை பார்க்கும்போது தர்மம் செய்ய வறுமை தடை இல்லை என்பதை பலர் வாழ்ந்து காட்டியுள்ளனர்.
அவர்களை தெய்வங்களே நேரில் வந்து பாராட்டி அருள் செய்துள்ளனர்.
நேர்மையாக் உழையுங்கள். தவறுகள் செய்யாதீர்கள்
இறைவன் பார்த்துகொண்டு இருக்கின்றான் உங்கள் உள்ளத்தில் இருந்துகொண்டு.
தருமம் செய்ய தொடங்குங்கள் விளம்பரமிலாமல்
செல்வம் தானே வரும்
ராம நாமம் சொல்லிகொண்டிருந்தால் ராமனை போல் பற்றற்ற வாழ்க்கை சித்திக்கும்.
உங்கள் மனதில் ராம ராஜ்ஜியம் உருவாகும்.

மனமும் உடலும் இணைந்தது உயிர்


மனமும் உடலும் இணைந்தது உயிர்.
மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு
அந்த எண்ணங்கள் அதன் நோக்கத்தை பொருத்து தீயவை அல்லது நல்லவையாக
கருதப்படுகின்றன
நல்ல எண்ணங்கள் உள்ளத்தில் நிலவும்போது மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
அது உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.பிறர் மீது அன்பு கொள்ள வைக்கிறது. பிறருக்கு உதவி அல்லது நன்மை செய்ய தூண்டுகிறது ஆனால் தீய எண்ணங்கள் அதற்க்கு எதிர்மறையான் விளைவுகளையே ஏற்படுத்துகிறது.
தீய எண்ணங்கள் உடலில் நோய்களை உண்டாக்கி பாதிப்பையும் துன்பத்தையும் ஏற்படுத்துகின்றன.
ஆனால் இதிலிருந்து எப்படி தப்பிப்பது. ?
இறைவன் எப்போதும் நன்மையே செய்பவன்.
அவனையே நாம் நினைத்துகொண்டிருந்தால் மனதில் தீய சிந்தனைகள் தோன்றாது.
அதற்க்கு மிக சுலபமான வழி ராம நாமம் சொல்வதுதான். ராம நாமம் சொல்வதால் ஏற்கெனவே வழிபடும் கடவுள் அல்லது சார்ந்துள்ள மதம் தடையாக் இருக்குமா என்று சிலருக்கு ஐயம் எழக்கூடும்
அது தவறு. ராம நாமம் இன்று உலகில் மதத்தை சார்ந்தவர்கள் மற்றும் எந்த மதத்தை சாராதவர்களாலும்
உச்சரிக்கப்பட்டு வருகிறது. ஏன் பல கோடி தெய்வங்களும் உச்சரித்து வருகின்றன.
அதே நேரத்தில் அவரர்களுக்கு உள்ள கடமைகளையும் விருப்பு வெறுப்பின்றி
செய்து வரவேண்டும். கடமைகளை ஒழுங்காக செய்யாது வழிபாடு மட்டும் செய்வதால் யாதொரு பயனும் இல்லை

Thursday, November 3, 2011


ராமா ராமா என்று சொல்லிகொண்டிருந்தால் முக்தி கிடைக்குமா?
ஏன் கிடைக்காது?
காட்டில் வழிப்பறி செய்த ரத்னாகரன் என்பவன் மரா மரா என்று ராம நாமத்தை மாற்றி சொல்லியும் தான் செய்து வந்த பாவ தொழிலை விட்டுவிட்டு மனதை நல வழியில் திருப்பி இறைஅருள் பெற்று வால்மீகி மகரிஷியாகி இராமாயண காவியத்தை படைக்கவில்லையா?
நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த நம் தேசபிதா மகாத்மா காந்தி ராம நாமத்தை தான் உச்சரித்து ஆன்மீக பலம் பெற்றது மட்டுமல்லாமல் நாட்டு மக்களையும் ராம நாமத்தை உச்சரிக்க வைத்தது மட்டுமல்லாமல் வெவேறு மதம்,ஜாதி அனைத்தையும் கடந்து ஒன்றிணைந்து நம் நாடும் ஆங்கிலயரிடமிருந்து சுதந்திரம் பெறவில்லையா?
முக்தி என்பது மரணத்திற்கு பின் கிடைப்பது அன்று
இவ்வுலகில் வாழும்போதே பெறப்படுவது
யாருக்கும் எதற்கும் அடிமைப்படாமல் அமைதியாக ,மன நிறைவுடன் வாழ்வதுதான் முக்தி
அமைதியில்லா மனதை அமைதியுற செய்வது ராம் நாமம்
நம்பிக்கையுடன் சொல்லி வந்தால் அதன் பயனை உணர முடியும்.
இது சத்தியம்

Tuesday, November 1, 2011

புன்னகை


புன்னகை தவழும் முகத்தை காண்பது இன்பம்
அது காண்பவர் முகத்திலும் புன்னகையை
வரவழைக்கிறது.எந்த உறவானாலும் ஒருவருக்கொருவர்
உள்ளன்போடு உறவாடி மகிழ்ச்சியோடுதான்
வாழ விரும்புகிறார்கள்.எல்லாவற்றிலும்
மோன நிலையில் புன்னகை தவழும் இறைவடிவங்களை
தரிசிப்பதே இன்பத்தை தரும்.மன சாந்தியை தரும்.
இதை உணர்ந்தவர்கள் அடிக்கடி ஆலயங்களுக்கு
சென்று இறைவனை தரிசித்து இன்பம் பெறுகின்றனர்.