Wednesday, November 30, 2011

துஷ்டத்தனம் செய்யும் குழந்தைகளை தந்தையான இறைவன் பார்த்துக்கொள்ளுவார்

என்னாட்டவருக்கும் இறைவா என்கிறீகள்
அப்போது அந்த சிவபெருமான் மற்ற மதத்தினருக்கும் இறைவன்தானே
ஹிந்துக்கள் அவனுக்கு குழந்தைகள் என்றால் அவர்களும் அவனுக்கு குழந்தைதானே
ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை
ஒருவன் ஆன்மீகவாதியாக இருக்கிறான்
ஒருவன் நாத்திகனாக இருக்கிறான்
ஒருவன் பண்புள்ளவனாக இருக்கிறான்
இவன் தீயவனாக இருக்கிறான்
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றனர்
ஆனால் இறைவனுக்கு அனைவரும் ஒன்றே
இறைவனை அறிந்துகொண்டால்தான் மற்றவர் மீது விருப்பு வெறுப்பு அகலும்
தன்னை அறிந்தவனுக்குதான் பிறரை அறிந்துகொள்ளமுடியும்
அனைவரையும் இணைப்பது அன்பு ஒன்றுதான்
தனக்கு நன்மை செய்பவனும்,தன்னை வெறுப்பவனும் ஞானிகளுக்கு ஒன்றாகத்தான் தெரிகிறார்கள்
துஷ்டத்தனம் செய்யும் குழந்தைகளை தந்தையான இறைவன் பார்த்துக்கொள்ளுவார்
மற்றவர்களை திருத்தும் பொறுப்பை அவனிடம் விட்டுவிட்டு அவனிடம் பக்தி மட்டும் செலுத்துங்கள்
மற்ற மதத்தினரிடம் அவர்கள் செய்வது தவறேயாயினும் அவர்களிடம் விரோதம் பாராட்டுவதை விடுத்து நம் மதத்தினரின் நம்பிக்கைகளை பலபடுத்தும் செயல்களை ஊக்குவித்தால் நன்மைகள் விளையும்

2 comments:

  1. அருமையான பகிர்வு. நல்ல சிந்தனை

    நன்றி

    ReplyDelete
  2. கொஞ்சம் மாறுபட்டு சிந்திப்போமே
    அதனால் உலகில் பகைமை மறைந்து அன்பும் அமைதியும் மலரட்டும்

    ReplyDelete