Friday, November 30, 2012

இன்று யோகி ராம்சூரத் குமார் பிறந்த தினம்


இன்று யோகி ராம்சூரத் குமார்
பிறந்த தினம்(1-12-2012)



























கங்கை நதி தீரத்தில் பிறந்து
திருவண்ணாமலையில்
வந்து யோகி ராம்சூரத் குமாராய்
மலர்ந்துமணம் வீசி
மக்களின் தாபத்தை போக்கியவர்

தன்னை ஒரு பிச்சைக்காரன்
என்றே அழைத்துக்கொண்டிருந்தவர்
தன்னை அண்டி வந்தோருக்கெல்லாம்
ஆன்மீக பிச்சை போட்டவர்
அன்பை அள்ளி அள்ளி தந்தவர்.

வழக்கம்போல் ஞானிகளை நம் நாட்டு மக்கள்
என்றும் துவக்கத்தில் அறிந்துகொண்டதில்லை
அவரை துன்புறுத்தி பல கொடுமைகளை அவருக்கு
இழைத்து மகிழ்ச்சி கொண்டனர்.

ஆனால் தான் உடல் அல்ல தான் ஒரு ஆத்மா
என்று உணர்ந்துகொண்ட அந்த ஜீவன்
அதையெல்லாம் சட்டை செய்யாது
தன்னை அண்டி வருவோருக்கெல்லாம்
அன்பையும்,ஆறுதலையும், அருளையும்
வாரி. வாரி வழங்கியது.

மனமெல்லாம் இருளை நிரப்பும்
பொருளை தேடி நம் நாட்டு மக்கள்
மேலை நாடுகளுக்குசாரி சாரியாக
செல்லும் நேரத்தில் மன இருளை போக்கும்
ஞானிகளை தேடி அனைத்தையும் விட்டு விட்டு
ஓடி வருகின்றனர் மேல் நாட்டு மக்கள்.

அவர்களில் ஒருவர்தான் இந்த ஞானியை
பற்றி வெளி உலகத்திற்கு தெரிவித்தவர்.
பிறகுதான் அனைவரும் அவரின்
தெய்வீக தன்மையை உணர தொடங்கினர்.

இன்று அண்ணாமலையில்
அவரின் ஆசிரமம் அவரின்
பெருமைகளை பரப்பிக்கொண்டிருக்கிறது


அவர் ஜபித்த மந்திரம்:

ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்
ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய  ஜெயராம்

அவர் நமக்களித்த மந்திரம்

யோகிராம் சூரத்குமார்
யோகிராம் சூரத்குமார்
யோகிராம் சூரத்குமார்
ஜெயகுருராயா

தான் என்ற அகந்தை  கொண்டவனுக்கும்
மதம் கொண்டவர்களுக்கும் மகான்களின்
மகத்துவம் புரியாது.

அது நம் மனதில் இருக்கும் வரை
இறைவனின் தத்துவம் புரியாது.

எப்படி ஒரு நாயால் ஒரு தேங்காயை
எவ்வளவு முறை உருட்டினாலும்
அதை உடைத்து அதன் உள்ளே
இருக்கும் தேங்காயை தின்ன முடியாதோ.
அதுபோல்தான் நாமே கடவுளை தேடுவதும்
.
இறைவனை அறிந்துகொண்ட
மகான்களின் பாதங்களை பற்றினால்
நம்மைபல பிறவிகளாக பற்றிக்கொண்டு
நம்மை துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும்
அறியாமையிலிருந்து
நம்மை விடுவித்துக்கொள்ளும் வழியை
நமக்கு உபதேசிப்பார்கள்.

அதற்க்கு அவர்களிடம் நம்மை பூரணமாக
அர்ப்பணிக்கவேண்டும்.
பலன் எதிர்பாராமல்அனைத்து உயிர்களுக்கு
தொண்டு, இயன்ற அளவிற்கு
தர்மமும் செய்யவேண்டும்.

அப்போதுதான்அசுத்தஎண்ணங்களால்
நிறைந்துள்ள நம் மனம் சுத்தமாகும்.
சுத்தமான மனதில்தான் இறையுணர்வு உண்டாகும்.

அப்போதுதான் தேவையற்ற விஷ யங்களிருந்து
நம் மனம் விடுபட்டு. உண்மை பொருளைநாடும்

.எத்தனையோ பிறவிகளை கடந்து வந்து விட்டோம்.
 இந்த பிறவியிலாவது. அருணை மகானை
 நினைந்து நம் எண்ணம் ஈடேற பிரார்த்திப்போம்.

ஜெய். குரு மகராஜ் .

Wednesday, November 28, 2012

எல்லாம் அவன் கையில்?


எல்லாம் அவன் கையில்?


பகுதி-2

அது சரி என் தாய் என்னை விட வயதானவள்
அவளை விட்டு விட்டு என்னை மட்டும் 
ஏன் இந்த உலகத்தை விட்டு 
கிளம்பும்படி கேட்கிறீர்கள்?என்று கேட்டேன் ?

அவள் விதி இன்னும் முடியவில்லை.
அதனால் இன்னும் அவள் இருக்கிறாள் .

அதுசரி உன் தங்கை உன்னை விட
 இரண்டு வயது சிறியவள். 
அவள் எப்படி இருக்கிறாள்?

அவள் இரண்டு ஆண்டுகளுக்கு 
முன்பே போய் சேர்ந்து விட்டாள் 
அவள் ஏன் போய் சேர்ந்தாள் ?
அவள் விதி முடிந்துவிட்டது 
அதனால் போய் சேர்ந்தாள்
நீயே சொல்கிறாய் 
அவள் விதி முடிந்துவிட்டது என்று. 

அதே விதிதான் உனக்கும்
என்றார்கள் வந்தவர்கள்.

அதற்க்கு நான் அவள் 
கடமைகளை முடித்துவிட்டாள்

நானோ என் கடமைகளை இன்னும் முடிக்கவில்லை
என் கடமைகளை முடித்துவிட்டு 
நான் வந்துவிடுகிறேன் என்றேன்

என்ன கடமை ?

என் இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடிக்க வேண்டும். 
எத்தனை ஆண்டுகளாக முயற்சி செய்கிறாய்?
ஆறு ஆண்டுகளாக முயற்சி செய்தும்
ஒன்று நடக்கவில்லை
இதிலிருந்து என்ன தெரிகிறது? 
என் கையில் ஒன்று இல்லை என்று.

பிறகு அதைப்பற்றி உனக்கு ஏன் கவலை.?

அதை இறைவன் பார்த்துக்கொள்வான்,
நீ எங்களுடன் வந்துவிடு என்றார்கள்

இல்லை இல்லை என் மனைவி 
இரண்டு ஆண்டுகளாக உடல்நலமின்றி உள்ளாள்.
அவளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை 
அவளை நான்தான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். 
அவள் உடல்நலம் சிறிது தேரட்டும் வந்துவிடுகிறேன்.

உன் மனைவிக்கு உடல்நலம் 
கெட்டு விட்டதை உன்னால் தடுக்க முடிந்ததா?
இல்லை

அவளை முழுமையாக குணப்படுத்த முடிந்ததா?
இல்லை 

அவளை முழுமையாக குணப்படுத்த முடியுமா?
முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்

அவள் இரண்டு ஆண்டுகளாக உயிரோடு 
இருப்பதே இறைவன் செயல்

அப்படியிருக்க நீ எதற்க்காக 
அவளைப்பற்றி கவலைப்படுகிறாய் ?

அதுதான் பாசம் என்ற மாய வலை.
அதில் சிக்கி கொண்டால் எத்தனை 
ஆண்டுகளானாலும் அதிலிருந்து வெளி வரமுடியாது

உன்னால் எதுவும் செய்ய முடியாது.
எந்த செயலையும் தடுக்கவும் முடியாது
இந்நிலையில் ஏன் இன்னும் நாட்களை 
கடத்தி கொண்டிருக்கிறாய்.
எங்களுடன் புறப்பட்டு வந்துவிடு

சரி வருகிறேன் நான் இன்னும் ஆன்மீகத்தில் 
சில சாதனைகளை செய்துகொண்டிருக்கிறேன். 
மீண்டும் மனித பிறவி கிடைக்குமோ 
கிடைக்காதோ தெரியாது.
 இறைவனை கண்ட பின் 
உங்களோடு வந்துவிடுகிறேன். 

அதற்க்கு இவ்வளவு பாசம் பந்தம் 
வைத்திருக்கும் இந்த பிறவி உனக்கு உதவாது.
உனக்கு துங்கபத்ரா நதிக்கரையில் ஒரு நல்ல இடம் தேர்ந்தேடுக்கப்பட்டுவிட்டது. 
அங்கிருந்துகொண்டு
 உன் சாதனைகளை தொடரலாம் என்றனர்.
மேலும் அவர்கள் சொன்னார்கள். 

நாங்கள் யாரிடமும் இது 
போன்ற விவாதங்களில் ஈடுபட்டது கிடையாது.,
இறைவன் உத்திர விட்டால் 
அவர்களுக்கு தெரியாமலே 
அவர்களை அழைத்துக்கொண்டு சென்று விடுவோம். 

நீ இறைவனுக்கு வேண்டப்பட்டவன் ஆதலால்
உன்னுடன் இவ்வளவு நேரம் உரையாடினோம். 

நன்றி உங்களுக்கு.
எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டேன். 
இனி அவன் விட்ட வழி என்று இருக்கிறேன்.
இறைவனிடம் மறு உத்திரவு கிடைத்தவுடன் 
என்னை அழைத்து செல்லுங்கள் என்றேன் 

என் மயக்கமும் தீர்ந்தது 
மாயையும் அகன்றது.

Tuesday, November 27, 2012

எல்லாம் அவன் கையில்?




 எல்லாம் அவன் கையில்?




சில நாட்களுக்கு 
முன் படுக்கையில் படுத்திருந்தேன் 
உறக்கமும் விழிப்புமற்ற நிலை. 

திடீரென்று நான்கு பேர்கள் 
என் முன் வந்து நின்றார்கள்

அவர்கள் உருவம் சரியாக தெரியவில்லை
இடையில் வேட்டி அணிந்திருந்தார்கள்
உடலில் பூணல் மட்டும் தெரிந்தது

அவர்கள் என்னை கிளம்பு, கிளம்பு என்றார்கள்
நான் எதற்கு என்று கேட்டேன்?

இந்த உலகத்தில் நீ இருக்கும் 
காலம் முடிந்துவிட்டது என்றார்கள்.

என்னை விட வயதான என் தாய் 
இன்னும் உயிரோடு இருக்கிறாள்
எனக்கு மட்டும் என்ன அவசரம் என்றேன்

அவள் இப்போது எங்கிருக்கிறாள்?

இரண்டு ஆண்டுகள் முன் என்னோடுதான் இருந்தாள்
படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத அவளை 
நன்றாகத்தான் பார்த்துக்கொண்டேன்

அப்போது என்ன நினைத்தாய்?

அவளுடைய இறுதிகாலம் 
என் வீட்டில்தான் முடிவுறும் 
என்று நினைத்தேன்

ஆனால் நடந்தது என்ன?

என்னுடைய் மனைவியின் 
உடல்நலம் மோசமாகி உயிருக்கு 
போராடும் நிலை வந்துவிட்ட்டது
அப்போது என்ன செய்தாய்?

எனக்கும் வயதாகிவிட்டதால் 
இருவரையும் என்னால் பார்த்துக்கொள்ள 
இயலாத நிலையில் என் தம்பியின் வீட்டில் 
என் தாயை கொண்டு விட நேரிட்டது.

இதிலிருந்து என்ன தெரிகிறது ?

நம் கையில் ஒன்றும் இல்லை என்று தெரிகிறது 

அப்படி என்றால் ?

எல்லாம் இறைவனின் கையில்தான் 
உள்ளது என்று தெரிகிறது

பிறகு என் இந்த உலகத்தை விட்டு
கிளம்ப மறுக்கிறாய் என்று 
கேட்டனர் வந்தவர்கள்?

எதுவுமே உன் கையில் இல்லை என்கிறாய்?
பின் வீணாக எதற்கு கவலைப்படுகிறாய்?

அதுதான் எனக்கும் புரிய வில்லை 

அதுதான் மாயை.

இன்னும் வரும்

Monday, November 26, 2012

இவ்வுடலில் உயிர் இருக்கும்போதே இன்ப வாழ்வு








இவ்வுடலில் உயிர் இருக்கும்போதே 
இன்ப வாழ்வு


நாராயணனே நமக்கே பறை தருவான் 

மற்ற கடவுள்கள் எல்லாம் நாம் கேட்கும் 
வரங்களைதான் மட்டும் தருவார்கள்.

அதனால் ஏற்படும் விளைவுகளை 
வரம் பெற்றுகொள்பவர்கள் தான் 
அனுபவிக்கவேண்டும்

ஆனால் நாராயணனோ 
நமக்கு என்ன தேவையோ
,நமக்கு நன்மை பயக்கும் வரங்களை 
அவன் கேட்காமலே தருவான். 
அதுதான் சத்தியம்.

ஏனென்றால் அவன் காக்கும் கடவுள் 
அவனுக்கு தன பக்தர்களின் மீது 
அளவில்லா பிரியம்
அதனால்தான் அவனுக்கு 
பக்த வத்சலன் என்று பெயர். 

எப்போதுமே கேட்டு பெற்ற 
வரங்களால் வம்புதான் வரும்
அகந்தை பெருகும்,அழிவு நேரும் 

பிரம்மாவிடம் வரம் பெற்ற அசுரர்கள் 
இறைவனை மறந்து அகந்தை கொண்டு 
அவர்களை படைத்தது காக்கும்
 இறைவனையே 
இகழ்ந்து அறியாமையால் எதிர்த்து 
தன்னை தானே புகழ்ந்துகொண்டு 
அழிந்துபோனார்கள். 

இறைவனிடம் வரம் கேட்காதீர்கள்
இறைவனிடம் எதையும் யாசிக்காதீர்கள் 
நம்மை படைத்த அவனுக்கு எல்லாம் தெரியும்

நம்முடைய கர்ம வினைகளுக்கு 
தகுந்தவாறு பலன்களை அளித்து, 
நம்மை தவறான வழியில் 
சென்றால் திருத்தி 
தன்னை நினைக்கும்படி 
செய்து தன்னிடம் 
அழைத்து கொள்ளுவதற்கான 
அனைத்து உபாயங்களையும் 
அவனே மேற்க்கொள்ளுவான்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் 
அழியும் மனிதர்களின் 
புகழ் பாடுவதை விடுத்து 
அழியா முக்தி நிலைஅருளும்
அவன் பாதங்களை வணங்கி 
அவன் புகழ் பாடி 
அவரவருக்கு கிடைத்துள்ள
வாழ்க்கையை நேர்மையான
முறையில் வாழ்வதுதான் 
நாம் செய்ய வேண்டியது.

இந்த கலி காலத்தில் நம்மை 
பாவம் செய்ய தூண்டக்கூடிய 
அனைத்து அம்சங்களும் நம்மை 
சுற்றி நின்றுகொண்டு
நம்மை வா வா 
என்று அழைக்கின்றன.

அவைகளின் வலையில் 
ஒரு தடவை சிக்கிவிட்டோமானால் 
அதிலிருந்து வெளியில் 
வருவது மிக கடினம்.

அதிலிருந்து
தப்பிக்கும் ஒரே வழி
இறைநாமங்களை
ஓதிக்கொண்டே இருப்பதுதான்
மற்றவருக்கு தெரியவேண்டும் 
என்ற அவசியமில்லை.

இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு 
எல்லா உறவுகளையும் விட மேலானது. 
இவ்வுலக உறவுகளில்
சுயநலம் கலந்திருக்கும். 
அவனோடு நாம் கொண்டுள்ள 
உறவு பிரிக்க முடியாதது, 
அழிக்கமுடியாதது. 

எனவே மனதில் சஞ்சலம் கொள்ளாமல்
மதி மயங்காமல் அவன் பாதங்களில்
சரண் புகுவோம்.
இவ்வுடலில் உயிர் இருக்கும்போதே 
இன்ப வாழ்வு பெற்று 
ஆனந்தமாய் வாழ்வோம். 

Sunday, November 25, 2012

ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்























ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்

அஞ்சனை மைந்தா ஆஞ்சநேயா
ஆற்றல் தேவா காற்றின் செல்வா
இசையில் மயங்கும் இங்கித வடிவா

ஈ டிணை யிலா ஈசன் புதல்வா
உத்தம சீலா உயர் வானரமே
ஊகம் நிறைந்த ஏகசுந்தரனே 
எதையும் முடிக்கும் கதை கொண்டவனே
ஏவும் கணை போல் தாவும் பரமே 
அயிராவதம்போல் வலிவாணவனே
ஒன்றாய் பலவாய் உருவெடுப்பவனே

ஓயுதலின்றி உதவிடும் குணபா 
அவ்வியம் அகற்றி அருள் தரும் மகிபா
எக்கார் மனதில் இடம் கொள்பவனே
எளியேன் சரணம் சரணம் சரணம்

சரணம் சரணம் சத்திய விரதா
சங்கர ஸ்வரூபா சரணம் சரணம்

பேரறிவாளா பிரமச்சர்யா ஆராவமுதன் 
அகம்சேர் அழகா தன் பலமஅறியாதவிப்ராகாசா
நன் மனத்துரையும் நல்ஹனுமானே
வந்தனைக்குரிய வளர்மணி தேவா
சுந்தர காண்ட சுடர்மணித்தேவா
சசிவோத்தமனே சஞ்சீவிராயா
வசீகராவடிவா வாயுகுமாரா
அடியேன் சரணம் சரணம் சரணம்
படியார் தமக்கு பாடம் புகட்டும்
துணிவே துணிவே துணிவே துணிவே
துணையே துணையே துணையே துணையே

கணமே கணமே கணமே கணமே
நினைவாய் நினைவாய் நினைவாய் வருவாய்
மரணமணுகா மந்திர விலாசா
கரணம் கடந்த கவிக்குலதிலகா

சீருபகாரா சிந்தனையாளா 
மாருதி செல்வா மன ரட்சகனே
வருவாய் வருவாய் வல்லமை வீரா
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்

கதிரவந்தன்னை கனியாய் கருதி
மதி மயங்கியவா மங்கள ரூபா
தோத்திரப் பிரியா சாத்திர தலைவா
நேத்திர மணியா நேர்மை நிலையா 
சுக்ரீவனுக்கு சூக்குமம் அருள 
பக்க துணையாய் பரிமளித்தவனே 
வாலி தன்னை வதம் புரிந்திடவே
சீலம் ராமனை தேர்ந்தேடுத்தவனே
ஊகம் நிறைந்த யுக கீர்த்த்யனே
ஆகமம் அறிந்த அறிவாலயனே
கடல்கள் கடந்து கணியாழிதனை
தடமாய் சீதையிடம் சேர்த்தவனே
சிம்ஹிஹைதன்னை ஹிம்சித்தவனே
ஜம்புமாலியை சம்ஹரித்தவனே
இலங்கினி யாளை உறங்கிட வைத்து
இலங்கை நகரை வதம் புரிந்தவனே

கால்நேமியின் கதை முடித்தவே
காலமறிந்து வாலசைப்பவனே 
துன்முகந்தன்னை துண்டாடியவா
பன்முரையாக பலம் காட்டியவா
சுயம்ப்ரபை அபயம்தந்து மணம் முடித்தவனே

பவனகுமாரா மாலிநிதன்னை பாலித்தவனே
நீலவண்ணன் நிழல் போன்றவனே
அயிராவணனை அடக்கிய வீரை
மயில்ராவணனை மடக்கிய வீரா
இந்திரசித்தின் இரும்பு பிடியில்
தந்திரமாக தப்பித்தவனே 
விஞ்சிடும் புகழால் வீறு கொண்டவனே 
தஞ்சம் புகும் நன்நெஞ்சுரைவபவனே 

அட்சயன் உடலை அணு அணுவாக 
வெட்டி சாய்த்த வீரனுமானே

வருக வருக வரகுணசீலா
தருக தருக துணிவும் தருக

பார்த்தன் கொடியில் பாங்காய் மிளிர்ந்த
கூரரிவாளா குங்கும வதனா
இலக்குவந்தானும் பிழைத் திடவேண்டியே 
மலையோடு மூலிகைதனை கொணர்ந்தவனே

வீடனந்தனக்கு நாடளித்தவனே
கூடிவாழும் குணம் கொண்டவனே

த்வாபர பீமா துணிவே சரணம்
அவாவினை அகற்றும் ஹனுமான் சரணம்

ராம நாமம் ரட்சக மந்திரம் 
ஆமென்ருனுணர்த்திய அதிசய பாலா 
ஏழிசை நிதியே எதிர்வந்தருள்க 
ஆழியை கடந்தோய் அவசரம் வருக

நவகோள்களினால் நலிகள் வராமல் 
சிவபுதிரனே காத்திட வருக 
அரணை பூரான் அரவம் இவற்றால் 
சிரமம் பெறாமல் காத்திட வருக 
சிங்கம் கரடி புலிகள் போன்றவை
எங்களை கண்டு மிரண்டிட செய்வாய் 
ஏழ்மை நிலையால் இகழ்ச்சியுறாமல் 
வாழும் முறையை உணர்த்திட வைப்பாய்
நீரில் வானில் நிலத்தில் செல்லும் போதில்
துணையாய் வருவாய் தேவா( 2 )


ஒருமை மனத்தால் உன்றன்னை துதிக்க 
அருமை மனதை அளித்திடு தேவா
அகந்தை கிழங்கின் அடிவேரறுத்து 
பதமாய் வாழும் பான்மை அருள்வாய்

ஐம்புல வெறியால் அவதியுறாமல்
அய்யா  நீயும் அமைதி அருள்வாய்

உள்ளும் புறமும் கள்ளம் ஒழித்து 
வெல்லும் ஆற்றலை விரும்பி அருள்வாய் 

எப்ப்பிழை புரினும் என்பால் இறங்கி
அப்ப்பிழை மீண்டும் புரியா நெறியில் 
காத்திடு தேவா காற்றின் புதல்வா

மாத்திரம் வாய்ந்த மாருதி செல்வா

ஜெம் ஜெம் ஜெம் ஜெம் ஜெம் ஜெம்
ஜெம் ஜெம் ஜெம் ஜெம் ஜெச்ஸ்வாஹா 

ஓம் ஹ்ரீம் வசிய ஓம் ஹ்ரீம் வசிய
ஓம் ஹ்ரீம் வசிய ஒய்யார வீரா

கத்தி கேடயம் கதை பரசுவுடனே 
குத்தும் சூலம் கூர் வாளேந்தி 
பஞ்சமுகமாய் பளிச்சிடும் தேவா
அஞ்சேல் என்று அபயம் அருள(2)

சக்கரம் சுசற்றி சடுதியில் வருக
திக்கெல்லாம் நடுங்க திடுமென வருக

விண்ணில் நீந்தி விரைவாய் வருக
மண்ணில் இறங்கி மகிமையும் தருக
எங்கெங்கே நான் இருந்திடும்போதில் 
அங்கெங்கே நீ அருள் செய்ய வருக

உன்னை விட்டால் உலகமும் இல்லை 
உன்னை விட்டால் உறவெனக்கில்ல்லை
உடலும் மனமும் உறுதிபெறவே
தடமாய் அமைவாய் தாண்டவ செல்வா

 பிரமச்சர்யா பெருந்தகையாளா 
 பரமன் வடிவா பார்த்தன் துணைவா

சரணம் சரணம் சரணம் சரணம்
சந்ஜீவிறாயா நீயே கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
காலம் தோறும் நீயே கவசம் 

சக்திதாசன் சொல்லிய கவசம்
சக்தி கவசம் சத்திய கவசம்

ஒருமனதாக இதனை ஜபிப்போர்
இருவினை தீரும் இன்பம் கொடுக்கும்
பிணிகள் விலகும் பெருமையும் சேர்க்கும் 
அணிகள் செல்வம் ஆயுளும் வளரும் 
கல்வி பெருகும் கருமம் தொலையும்
பலவகை வளமும் பாங்காய் சேரும்
துருவன்கோட்டை அருமை அனுமான் 
இருளை போக்கிஇதமும் அருள்வான் 
தசரத ராமன் தளிர் பத நிழலில்
அசையாவண்ணம் நிறுத்திட வைப்பான்

ஜெய ராம் ஜெய ராம் ஜெயஜெய ராம்
ஜெயஜெயராம் ராம் ஜெய மாருதியே

சரணம் சரணம் சத்திய விரதா
சரணம் சரணம் சரணம்சத்ரு சம்ஹரா
சரணம் சரணம் சங்கர ஸ்வரூபா
சரணம் சரணம் மலரடி சரணம்

ஓம் ஜெய ஹனுமான்
ஓம் ஜெய ஹனுமான்
ஓம் ஜெய ஹனுமான்
ஓம் ஜெய ஓம் 

ஓம் ஓம் ஓம்

Friday, November 23, 2012

அகமும் புறமும் ஒருங்கே ஒளிரட்டும் இந்நாளிலிருந்து கார்த்திகை தீபம்


அகமும் புறமும் ஒருங்கே ஒளிரட்டும் இந்நாளிலிருந்து
கார்த்திகை தீபம் 






நாமெல்லாம் 
ஆட்டுவிக்கப்படும் பொருட்களே

நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்
நாம்தாம் எல்லாவற்றையும்
செய்து கொண்டிருக்கிறோம் என்று
உண்மையில் அது இல்லை

நம்மையெல்லாம் ஒரு சக்திதான்
ஆட்டுவித்துகொண்டிருக்கிறது
அது நமக்குள் இருந்துகொண்டு
அதை செய்விக்கின்றது.

மரத்தில் இருக்கும் இலைகள்
காற்றால் அசைவதுபோல
இந்த உடலின் இயக்கம் நமக்குள்
வந்து போய் கொண்டிருக்கும் பிராண சக்தியினால்
இயங்கிகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை

நாம் சுவாசிக்கும் காற்றில் பிராண சக்தியான
ஆக்ஸ்சிஜன்  இல்லையென்றால் நம் உடலில் காற்று
வந்துபோய் கொண்டிருந்தாலும் நாம் இறந்துதான் போவோம்.

அப்படி சுவாசிக்கும் காற்று நச்சு பொருட்கள்
நிறைந்ததாக இருந்தாலும் நம் கதி அதோ கதிதான்

இந்த உலகில் நச்சு பொருட்களும்
நல்ல பொருட்களுடன் சேர்ந்தே
இறைவனால் உண்டாக்கப்பட்டிருக்கின்றன
உதாரணத்திற்காக சொல்லவேண்டுமென்றால்
பிராண வாயுவுடன் நச்சு வாயுவான
கரியமில வாயுவும் சேர்ந்துதான் இருக்கின்றன.

ஆனால் அந்த நச்சு வாயுவை தாவரங்களுக்கு
பிராண வாயுவாக இறைவன் அமைத்திருப்பது
இறைவனின் கருணை.

இதை புலப்படுத்தும் வகையில்தான்
அவன் ஆலகால விஷத்தை உண்டு
உயிர்களையெல்லாம் காப்பாற்றியதாக
புராண கதைகள் சொல்லும்.

இதைப்போல் உயிர்களை காப்பாற்ற இறைவன்
எண்ணற்ற ஏற்பாடுகளை செய்திருக்கிறான்

அப்படிப்பட்ட இறைவனை நினைந்து
உருகி பக்தி செய்து அவனுக்கு
நம் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டவர்கள்.
கடமையை செய் என்பது கண்ணன் கீதை.

இதைப்போலத்தான் நம் ஐம்புலன்களாலும் சக்தியை
இந்த உலகத்திலிருந்து நம்முடைய உடலில் உள்ள கருவிகள் பெற்றுக்கொண்டு நம்மை உயிர் வாழ செய்து கொண்டிருக்கின்றன.

இந்த உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும்
பொருட்களுக்கும் சக்தியை தருவது சூரிய ஒளியே

அது இல்லையென்றால்
இந்த உலகம் இருண்டு மறைந்துவிடும்

அந்த சூரியனில் ஒளியாய் இருந்து
அதை ஒளிர செய்பவன் இறைவன்.
அந்த ஜோதி வடிவினனாக விளங்கும்
 இறைவனை கார்த்திகை தீப திருநாளில்
 நினைந்து,தீப ஒளியில் கண்டு
வணங்கி மகிழ்ந்து இன்புறுவோம்.

Sunday, November 18, 2012

12 ராசிகளின் தோஷம் போக்கும் ராசி கணபதி

12 ராசிகளின் தோஷம் போக்கும்
 ராசி கணபதி 


நம்மில் பல பேர் 
இடர் நீக்கி இன்பம் தரும் இடம்புரியாரையும்
,நலம்தந்து வளம் சேர்க்கும் வலம் புரியாரையும் 
தான் பொதுவாக வணங்கி இருப்போம். 

விநாயக மூர்த்தங்கள் ஏராளமாக உள்ளன

அவற்றில் வித்தியாசமான 
ஒரு வடிவத்தை 2007 ஆம் ஆண்டு 
ஒரு இதழில் கண்டேன். 


பொதுவாக தடைகளின்றி ஒவ்வொரு செயலும் 
 நிறைவேற வேண்டி நாம் 
விநாயகரை வழிபடுகின்றோம். 

இந்த படத்தில் ஐந்து விநாயகர்கள் 
காட்சி தருகிறார்கள்.

பன்னிரண்டு ராசிகளின் வடிவங்களும் 
விநாயகர் வடிவத்தில் இணைந்துள்ளது.
நன்றாக கவனித்து பார்த்தால்தான் தெரியும்.

இந்த வடிவத்தை 12 ராசிகளின் தோஷத்தை 
போக்குபவராக கருதப்படுவதால் 
அனைவரும் இந்த வடிவத்தை வணங்கி 
அருள் பெற வேண்டும் என்ற நோக்கில் 
அந்த படத்தை வரைந்தேன் 

அந்த படம் இதோ.



Wednesday, November 14, 2012

விக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-3)




விக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-3)



திபெத்தில் ஒரு சிலாவடிவம் இருக்கிறது. 
விக்னராஜ விக்னேஸ்வரன் என்னும் மூர்த்தம் அது. 
மிகவும் விந்தையான விசித்திரமான ஆச்சரியமான வடிவம் அது. 

அதுபோலவே ஜ்யேஷ்டா தேவி முதலிய தெய்வங்களின்சிலைகள் இருக்கின்றன.
நம்மில் அனேகர் அவற்றைப் பார்த்திருக்கமாட்டார்கள்.    

 மாங்கோலியா, திபெத், சைனா, ஜப்பான் 
கிய இடங்களிலும் விநாயகர் சிலைகள் இருக்கின்றன.

இதில் ஒரு விந்தை என்னவென்றால், 
விநாயாகரின் மிக மிக அரிதான வடிவங்கள் அங்கு கிடைக்கின்றன
படங்கள் கிடைத்தால் பிறகு போடுகிறேன் 

பெண் வடிவில் 'கணேசினி' என்ற வடிவு ஒன்று இருக்கும்.
அது சைனாவில் இருக்கிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்
சங்கத்தார் மண்டபம் என்றொரு இடம் இருக்கிறது. 
இது சுவாமி சன்னிதியைச் சுற்றியிருக்கும் 
இரண்டாவது பிரகாரத்தில் இருக்கிறது.
முக்குறுணி பிள்ளையார் சன்னிதியிலிருந்து 
இடப்பக்கம் திரும்பி பிரகாரத்திலேயே நடந்து சென்றால் 
வடமேற்கு மூலையில் அந்த மண்டபம் இருக்கும். 
அதற்கு எதிர்ப்புறத்தில் சில விநோத சிற்பங்கள்
 இருக்கும் பெரும்தூண்களைக் கொண்ட மண்டபம் இருக்கும். 
அந்தத் தூண்களின் ஒன்றில் கணேசினியின் சிலையைக் காணலாம். 

மதுரையில் இருக்கும் புண்ணியவான்கள் 
யாராவது படங்களை எடுத்து அனுப்பி வைத்தால் பதிவில்  போடலாம்.             
சில கணேசினியின் சிலைகள் புலிக்கால்களுடன் இருப்பதைக் காணலாம்.
அந்த மாதிரி கணேசினியை 'வியாக்ரபாத கணேசினி என்று குறிப்பிடுவார்கள்.
           

 இரட்டை விநாயகர்' என்ற இன்னொரு அமைப்பும்
 ஜப்பானில் காணப்படும்.
 இரண்டு விநாயகர்கள் ஒருவரை ஒருவர் கட்டி த் தழுவிக்கொண்டு
 நிற்பதைபோன்ற வடிவம் அது. 

 நன்றி 
தகவலும் படமும் 
வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி
http://www.visvacomplex.com/main.html

விக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-2)


விக்கினவர்த்தனன்' 

இரட்டைப் பிள்ளையார் (Part-2)




இதற்கு விநாயக புராணத்தில் ஒரு கதை இருக்கிறது.

'காலரூபி' என்னும் ஒரு கொடிய சிருஷ்டி 
ஏதோ ஒரு காரணத்தால் ஏற்பட்டுவிட்டது. 
அதை அசுரன் என்பதா, அல்லது அரக்கன் என்பதா?
அதெல்லாம் அவன் இல்லை. அவன் அவனேதான்

இயற்கையின் அமைப்பில் என்னென்ன வகையான 
இடையூறுகள், தடங்கல்கள், தடைகள், இடைஞ்சல்கள்,
 கெடுதல்கள், விக்கினங்கள் எல்லாம் இருக்கின்றவோ 
அத்தனை வடிவிலும் அந்த காலரூபி தோன்றி 
அவற்றைச் செய்தான். ஆகையினால் 
அவனுக்கு 'விக்கினன்' என்ற பெயரும் ஏற்பட்டது. 
வசிஷ்டர் முதலிய ரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க 
விநாயகப்பெருமான் அவனை அடக்குவதாக வாக்களித்தார்.
முதலில் தன்னுடைய அங்குசத்தை ஏவி, 
காலரூபியைப் பிடித்துவரச் செய்தார். 
ஆனால் அவனோ யுகப்பிரளயமாக மாறிச் சுழன்று 
எல்லாவற்றையும் மூழ்கடித்தான். 
அதெல்லாம் விநாயகர் முன்னிலையில் எடுபடவில்லை. 
அதன்பின்னர் அவனால் முடிந்தமட்டும் 
விதம் விதமாகப் போரிட்டுப்பார்த்தான். 
    

முடிவில் விநாயகர், ஒரு வேலாயுதத்தை 
அவன்மீது ஏவினார். 
அதனுடைய ஆற்றல்
தாங்காது காலரூபி,

விநாயகரிடமே சரணடைந்தான்.



விக்னராஜன்
விக்னவிநாயகர்

          அப்போது அவன், "கருணாமுர்த்தியே! என்னுடைய அபசாரங்களையெல்லாம் மன்னித்து என்னையும் உங்களின் அடியானாக ஏற்றுக்கொள்ளுங்கள்," என்று கெஞ்சினான். 
          
விநாயகர், "இனி நீ என் பக்தர்களுக்குத் துன்பம் கொடுக்கக்கூடாது. என்னை வணங்காதவர்களையும் நினைக்காதவர்களையும், எனக்கு அபசாரம் செய்பவர்களையும் நீ உன்னுடைய இயல்பின்படி பல விக்கினங்களின் வடிவெடுத்து நீ பீடித்துக்கொள்ளலாம். இதற்கு மாறாக நீ நடக்கக்கூடாது," என்று ஆணையிட்டார். 
         

விக்கினன் இன்னுமொரு வரத்தையும் கேட்டுப் பெற்றுக்கொண்டான்
"தங்களுடைய திருப்பெயருடன் என்னுடைய பெயரையும் 
சேர்த்து வழங்கி யருள வேண்டும்".
         

 விநாயகர் அவ்வாறே தனக்கு 'விக்கினராஜன்' என்றும் 'விக்கினேஸ்வரன்' என்றும் பெயரைச் சூட்டிக் கொண்டார். விக்கினஹரன், விக்கினநாசனன், விக்கினகரன், விக்கினகிருது, விக்கினவர்த்தனன் என்பவை யெல்லாம் காரணப்பெயர்களாக ஏற்பட்டன.
          இன்னும் கொஞ்சம் விசித்திரமான தகவல்கள் உள்ளன..... 

    இரட்டைப்பிள்ளையார்



          விநாயகரின் இரண்டுதன்மைகளையும் பிரதிபலிக்கும்வகையில் மூர்த்தங்களை நிறுவி அந்தப்பண்டைய சைவர்கள் வணங்கினார்கள். இந்த வழக்கம், காணாபத்தியம்(கணபதி வழிபாடு) என்பது தனியரு சமயமாகத் திகழ்ந்த காலத்திலிருந்து வந்திருக்கலாம்.
 
         மேலும் பழஞ்சைவத்தில் ஆகமத்தாந்திரீகக்கூறுகள் மிக அதிகமாக இருந்தன. அவற்றிற்கும் முற்பட்ட சில கூறுகளும் இருந்தன. அவற்றில் பெரும்பகுதி இப்போது கிடையாது. 

          காணாபத்தியம் சைவத்தில் கலந்தபோது அந்தக்கூறுகளில் சில சைவத்துள்ளும் வந்துசேர்ந்தன. 
          விநாயகரை விக்கினகரனாகவும் விக்கினஹரனாகவும் வழிபடும் வழக்கம் பழமையானதுதான். இருவகைப்பிள்ளையார்களையும் தனித்தனியாக வணக்குவதோடு சிற்சில இடங்களில் சேர்த்தும் வணங்கியுள்ளனர்.

          
அப்படிபட்ட சிற்சில இடங்களில் ஒன்றுதான் மீனாட்சியம்மன் சன்னிதியின் வாயிலின் தென்புற மேடை.
         அந்த இரட்டைப் பிள்ளையார்களில் ஒன்று விக்கினஹரன்; இன்னொன்று விக்கினகரன்.
         

சிவாலயங்களில் விநாயகர் சன்னிதி தென்மேற்கு மூலையில் நிறுவப்படும்.அங்கு கிழக்குப்பார்த்தாற்போல விநாயகர் அமர்ந்திருப்பார். அவர் விகேஸ்வரன், விக்னஹரன்.
         

அதே தென்மேற்கு மூலையில் வடக்குப்பார்த்தாற்போல சில மூர்த்தங்கள் இருக்கும். அவை சப்தமாத்ரிகா என்னும் பிராஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி,  வாரஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர். அவர்களுடன் லட்சுமிக்கு மூத்தவளாகிய ஜ்யேஷ்டா தேவி தன்னுடைய புதல்வி, புதல்வனுடன் அமர்ந்திருப்பாள். அந்த இடத்திலும் ஒரு விநாயகர் மூர்த்தம் இருக்கும். அவர் விக்கினகரன். 
          
இந்த அமைப்பை மிகவும் பழமையான சிவாலங்களில் மட்டுமே காணலாம்.மீனாட்சியம்மன் கோயிலில் சொக்கநாதர் சன்னிதியைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் இருக்கின்றது. மிகச்சுத்தமாகப் பார்க்கவேண்டுமானால் சிவகங்கை மாவட்டத்து திருப்புத்தூரில் உள்ள திருத்தளீசுவரர் ஆலயத்துக்குச் செல்லவேண்டும். பிரான்மலை திருக்கொடுங்குன்றீசர் கோயிலிலும் உண்டு.
         

 நன்மை நடக்கவேண்டும் என்று நினக்கும் அதே வேளையில் கெடுதல் நடக்காமல் இருக்கவும் வேண்டினர். கெடுதலைத் தடுப்பதற்கும் தெய்வங்களை வழிபட்டனர். கெடுதலைக்கொடுக்காமல் இருப்பதற்காகவும் தெய்வங்களை வழிபட்டனர். 

(இன்னும் வரும்) 

நன்றி 
தகவலும் படமும் 
வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி
http://www.visvacomplex.com/main.html


விக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-1)

                                                              விக்கினவர்த்தனன்'
இரட்டைப் பிள்ளையார்

 விநாயகர் 'காரியசித்தி மாலை' 

விக்னகரன்
          மீனாட்சியம்மனின் சன்னிதானத்தில் அர்த்தமண்டபம்/கருவறைக்கும் முன்னால், வாயிலுக்குத் தெற்குப்புறமாக ஒரு சிறியமேடை. அங்கு இரண்டு பிள்ளையார்கள் இருப்பார்கள். இருவரையும் சேர்த்து 'இரட்டைப்பிள்ளையார்' என்று அழைப்பார்கள். இங்கு பூஜையாகித்தான் கருவறைக்குள் செல்வார்கள்.

          பிள்ளையாருக்கு இரண்டுதன்மைகள் உண்டு. ஆகமங்களில் அது சொல்லப்பட்டிருக்கும். விநாயகர் வழிபாட்டு நூல்களில் 'காரியசித்தி மாலை' என்று ஒன்று உண்டு. இதனைச் சங்கடஹர சதுர்த்தியன்று படிப்பார்கள். மற்றபடிக்கு,  காரியசித்திக்காகவும் படிப்பார்கள். 
 இதற்குத் துணைநூல் ஒன்று உண்டு. காரியசித்தி மாலையைப் படித்து, அதனால் காரியவெற்றி பெற்றவர்கள், இந்த துணைநூலைப் படித்து விநாயகருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதற்காக
இந்த நூல்.


          காரியசித்தி மாலை 'அட்டகம்' என்னும் பிரபந்தவகையைச் சேர்ந்தது. இந்த நூல் 'பஞ்சகம்' அல்லது 'பஞ்சரத்தினம்'  என்ற வகையைச் சேர்ந்தது
அந்நூலின் கடைசிப் பாடலில்,

      வேண்டிய அடியார்க்கெல்லாம்
            விக்கினம் கெடுப்பாய் போற்றி
      வேண்டி வந்தனை செய்யார்க்கு
            விக்கினம் கொடுப்பாய் போற்றி
      வேண்டுவார் வேண்டிற்றெல்லாம் 
            விளைத்தருள் விமல போற்றி
      மாண்ட துட்டர்க¨ளைக்கொல்லும்
            மறமிகு மள்ள போற்றி.


          இந்தப்படலின் முதலிரு அடிகளைக் கவனியுங்கள். முதல் அடியில் 'விக்கினம் கெடுப்பாய்' என்றும் அடுத்த அடியில் 'விக்கினம் கொடுப்பாய்' என்றும் வருகிறதல்லவா?
                                               அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.
          இரண்டையுமே செய்பவராகத்தான் பழஞ்சைவர்கள் விநாயகரை வணங்கியிருக்கிறார்கள்.
இப்போது, ஒரு காரியத்தைத் தொடங்குமுன்னர், அக்காரியத்தைத் தொடங்குவதற்குத் தடங்கல் இல்லாமலும், தொடங்கிய காரியம் தொடர்ந்து நடக்கவும், அக்காரியத்தில் விரவியிருக்கும் இயற்கையான தடைகள் ஏற்பட்டுவிடாமலிருப்பதற்கும், அக்காரியம் வெற்றி பெறுவதற்காகவும் விநாயகரை வணங்குகிறோம்.

 இதில் மூன்று வெவ்வேறு குறிக்கோள்கள் அடங்கியிருக்கின்றன அவற்றில் பாசிட்டிவ் நெகட்டிவ் ஆகிய இரண்டுமே அடங்கியுள்ளன
 காரியத்தடையை நீக்குவதும்காரியசித்தி கொடுப்பதும் பாசிட்டிவான தன்மைகள்.
வணங்கப்படவில்லையென்றால் காரியத்தடையையோ தோல்வியையோ ஏற்படுத்துவது நெகட்டிவான அம்சம்.
இரண்டையுமே விநாயகர்தான் செய்கிறார்.
 இடையூறுகள் தடங்கல்கள், தடைகள் போன்றவற்றை விக்கினம் என்று சொல்கிறோம் அல்லவா? 
                    விக்கினத்தை அகற்றுபவன் அல்லது அழிப்பவன் 'விக்கினஹரன்'. 
 விக்கினங்களைச் செய்பவன் அல்லது ஏற்படுத்துபவன், 'விக்கின கரன்' அல்லது 'விக்கின கிருது'.
 விநாயகர் கவசத்தில் பார்க்கிறோமல்லவா -- அந்த ஏழாவது பாடலில்....

ஏகதந்தர் பகல்முழுதும் காக்க; இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் *விக்கினகிருது* காக்க; இராக்கதர்,பூதம், உறுவேதாளம்,
மொகினி,பேய், இவையாதி உயிர்த்திறத்தால் வரும்துயரும்,   முடிவிலாதவேகமுறு பிணிபலவும் விலக்குபு பாசாங்குசர்தாம் விரைந்து காக்க.

இதே பொருளில் உள்ளதுதான் 'விக்கினவர்த்தனன்' என்னும் பெயரும்.

அக்கினியில் சித்தீசர் காக்க; உமாபுத்திரர் தென்னாசை காக்க;
மிக்க நிருதியில் கணேசுரர் காக்க; *விக்கினவர்த்தனர்*   மேற்கென்னும்           திக்கதினில் காக்க; வாயுவில் கசகன்னன் காக்க;திகழ் உதீசிக்க நிதிபன் காக்க; வட கிழக்கில் ஈசநந்தனரே காக்க.

          ((இன்னும் வரும்) 
 தகவலும் படமும் 
வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி
http://www.visvacomplex.com/main.html

கரன்ஸி நோட்டின் அதிசயப் பிள்ளையார்



கரன்ஸி நோட்டின் அதிசயப் பிள்ளையார்


சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனீசியாவில் ஒரு கரன்ஸி நோட்டு வெளியிடப்பட்டது.

 இருபதினாயிரம் ரூப்பியா நோட்டு அது. அந்தச் சமயத்தில் அதன் மதிப்பு யூஎஸ் ஒரு டாலர் எண்பத்தைந்து காசுகள்; இந்திய மதிப்பு     எண்பத்து நான்கு ரூபாய்கள். 

அதில் உள்ள அதிசயம் என்னவென்றால் அதில் ஒரு விநாயகர் உருவம் இருப்பதுதான். 


ஏனெனில் இந்தோனீசியா முஸ்லிம் பெரும்பான்மையினரைக் கொண்ட நாடு. 

மேலும் விவரங்களுக்கு 

http://www.visvacomplex.com/main.html



அபூர்வ திருக்கோயில்கள்



அபூர்வ திருக்கோயில்கள்  

மயூராரூடர்


சிவபுரிப்பட்டி என்னும் சிறு கிராமம் சிங்கம்புணரியிலிருந்து 

இரண்டு மைல் தூரத்தில் இருக்கிறது. வட சிவகங்கைச்சீமையில் உள்ளது.
இது ஒரு புராதனமான கோயில்.    
சிவபுரியில் இருப்பது தான்தோன்றீஸ்வரர் கோயில்.
    

சிவபுரிக் கோயிலின் முக்கிய தெய்வங்கள் திருத்தான் தோன்றீஸ்வரர் தர்மசம்வர்த்தினி ஆகியோர்.
ஒரு காலத்தில் இந்த கோயில்  இன்னும் பெரிதாக இருந்திருக்கிறது. இன்னும் இரண்டு வெளிப்பிரகாரங்கள் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் கோயிலின் வெளிப்புற மதிற்சுவற்றின்மேல் வைக்கப்படும் நந்தி சிலைகள் ஏராளமாக ஆங்காங்கு இருக்கின்றன.
இடைக்காலப் பாண்டியர் காலத்துச் சிலைகளும் சிதிலமடைந்துபோய் 

கோயிலுக்கு வெளியில் இருக்கின்றன.
கோயிலில் பல மர்மங்கள் இருக்கின்றன.
இதுவும் ஒரு மர்மஸ்தலம்தான்.
  
இந்தக் கோயிலில் சில அற்புதமான சிலைகள் இருக்கின்றன.

இந்தக் கோயில் பெரியதாக இருந்தபோது அதில் இருந்திருக்கவேண்டும். 
இப்போது தான்தோன்றீஸ்வரரின் சன்னிதிக்கு முன்பாக உள்ள 
மகாமண்டபத்தில் வடமேற்கு மூலையில் இருட்டில் இருக்கின்றன.
    

அவற்றில் ஒரு முருகன் சிலை இருக்கிறது.........   


 

இங்கே காணலாம்.

 இந்தச் சிலை அற்புதமானது மட்டுமல்ல. அரியதும்கூட.
 மயில்வாகனத்தின் மீது முருகன் அமர்ந்திருக்கிரார்.

 

சிற்பக்கலையின் எல்லையைச் சிற்பி தொட்டிருக்கிறார்.
மயிலின் கால்களைப் பாருங்கள். மெல்லிய கால்கள். தனியாக முப்பரிமாணத்தில் இருக்குமாறு குடைந்து செய்துள்ளார். பாதங்களின் விரல்களில் உள்ள கணுக்களைக்கூட செதுக்கியுள்ளார். நகமும் தத்ரூபமாக இருக்கும். மயிலின் கழுத்தும் அப்படித்தான். மயிலின் அலகும் அதில் அது கௌவிக்கொண்டிருக்கும் பாம்பும்கூட அதே மாதிரிதான். பாம்பு சுருண்டுகொண்டு தொங்குகிறது.
வலது, இடது கீழ்க்கைகளும் அப்படித்தான். இடது கையின் விரல்கள் தனித்தனியாக நளினமுடன் விளங்குகின்றன.
ஒரு முகமுடைய இந்த முருகனுக்குக் கைகள் ஆறு.
வலது மேல்புறக்கைகளில் சக்தியாயுதமும், கத்தியும். வலது கீழ்க்கரம் அபயமுத்திரை காட்டுகிறது.
இடது மேல்கரங்களில் வஜ்ராயுதமும் கேடயமும். இடதுக் கீழ்க்கை மயிலின் கழுத்தில் உள்ள லகானைப் பிடித்தவாறு இருக்கிறது.
வலது பாதம் கலனை என்னும் கால்மிதியில் வைக்கப்பட்டிருக்கிறது. சேணத்திலிருந்து தொங்குவது கலனை. 


திருப்புகழில் அருணகிரிநாதர் 'பற்கரை விசித்ரமணி பொற்கலனையிட்ட நடை, பட்சியெனும் உக்ரதுரகமும்' என்று மயிலைக் குதிரைபோல் சித்தரிக்கிறார். அதில் குதிரைக்கு இருப்பதுபோலவே பொன்னால் ஆகிய கலனை இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அழகிய எளிமையான ஆபரணங்கள்.

இந்தத் திருக்கோலத்தை 'மயூராரூடர்' என்று குறிப்பிடுவார்கள்.
ஒருமுறை ஆதிசங்கரின்மீது ஆபிசார மந்திரப் பிரயோகம் செய்விட்டனர். அதனால் அவருக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. அப்போது அவர் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு அவர்மேல் ஸ்ரீஸ¤ப்ரஹ்மண்ய புஜங்கம் என்னும் ஸ்தோத்திரத்தைப் பாடினார். வயிறு உபாதையும் அகன்று தீர்ந்துவிட்டது. 

அந்த அழகிய ஸ்தோத்திரத்தின் மூன்றாவது பாடல்:

மயூராதிரூடம் மஹாவாக்யகூடம் 
மனோஹாரிதேஹம் மஹாசித்தகேஹம்
மஹீதேவதேவம் மஹாவேதபாவம்
மஹாதேவபாலம் பஜே லோகபாலம்


    அந்த முதல் அடியில் சொல்லப்பட்ட மயூராதிரூடம் என்பது இந்தத் திருக்கோலம்தான்.

குமாரேச ஸ¥நோ, குஹாஸ்கந்தஸேநா
பதே சக்திபாநே, மயூராதிரூட
புலிந்தாத்மஜா காந்த, பக்தார்த்திஹாரின்
ப்ரபோ தாரகாரே, ஸதா ரக்ஷ மாம் த்வம்



மயிலின்மீது அமர்ந்தவனே மகாவாக்கியங்களின் சாரமாக விளங்குபவனே
மகாதேவனின் மைந்தா! அழகிய உடல் அமைந்தவனே சித்தர்களின் மனதில் இருப்பவனே மகாவேதங்களாக விளங்குபவனே உலகங்களையெல்லாம் காப்பவனே உன்னைத் துதிக்கிறேன்.

குமாரா! பிரபஞ்சத்தின் நாயகனின் மைந்தா!  இருதயமாகிய குகையில் குகனாக  உறைபவனே! ஸ்கந்தா! தேவசேனையின் தலைவா! சக்தி ஆயுதத்தைக் கொண்டவனே! மயிலின்மீது அமர்ந்தவனே! குறமகளின் நாயகா! பக்தர்களின் தோஷங்களைப் போக்குபவனே! தாரகனை அழித்தவனே! எப்போதும் என்னை நீ காக்க!

 இந்த அரிய சிற்பத்தைக் காண்பதற்காவது 

நீங்கள் சிவபுரிக்குச் சென்றுதான் ஆகவேண்டும்

தகவலும் படமும் 
வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி
http://www.visvacomplex.com/main.html

Tuesday, November 13, 2012

ஒரு வேடன் ரிஷியானான் எப்படி?



ஒரு வேடன் ரிஷியானான் எப்படி?
இராமாயண காவியத்தை இயற்றினான்

விவரங்களுக்கு படியுங்கள். 

FROM A HUNTER TO A RISHI


    This is a story. A very old story. 

    There was this hunter who was also a robber. 
    He used to kill animals, birds, etc., and take them home to his family. And he also used to waylay passers-by and rob them. He would also kill them without mercy.

    One day, a group of mendicants passed-by. 

    As usual, the hunter stopped them and ordered them to lay down everything that they possessed. They did so.
    Except one.
    He was a rishi.
    Must be a small-timer. Because we do not know his name. 

    He addressed the hunter, thus:
    "Before I impart with whatever I have, answer me some questions. Why do you do this?"
    The hunter answered, "I am doing it for me and my family"
    The rishi said, "Very well. Whatever you are doing, you are sharing with your family. But whatever that you are doing is sinful. Which will pursue you constantly from birth to birth. This will cause you a lot of misery. Pray tell me. Will your family to whom you seem to be so much attached, and for whom you are incurring so much sin - will they share your sins equally?"

    The hunter could not answer.

    He said,"How would I know that?"
    The rishi said,"You'd better ask your family and then tell me. And then you 

can take my belongings. I promise to wait here until you return".

    The hunter went back and asked his dear wife and adoring children, "Dear ones. You have lived in comfort and joy and have been free from hunger and want because I have been providing you with everything that I could possibily give you. But in the process, I have been incurring a lot of sin. This burden of sin is going to cause me a great deal misery that I am going to suffer in all my births. Would you share with me whatever sin that I have accumulated because of you?"

    The dear wife and the adorable children simply said, "Muunjap paar! Get lost!". 

    Our hunter was really lost now.
    He came back and told the answer to the rishi and told him that he was really lost now. 
    The rishi told him, he was lost because he had lost his peace.
    The hunter asked him what he should do to lose his lostness and regain his peace. 
    The rishi said, "Go then and meditate". 
    Now the hunter was really really really lost.
    "Hey. How do I meditate? In the first place, what the heck is meditation?"

    "That you have to find out yourself, buddy. You can't find out unless you meditate". 

    Now this fellow was in a mess. He was in a fix and a jam. He started to say,
    "You must tell me some more before I......"

    "Now stop this gabbering and get lost, you!", said the rishi and went off very swiftly. 

    This fellow was now in a terrible quandary - more than our friend AruNagiri would be, centuries later, when he would be saved by a monk when he tried to commit suicide. The monk told him to 'keep quiet' - 'sollaRa; summaa iru'.
    Ooooer...These terrible monks.

    So the hunter went and sat alone and was wondering how on earth he was going to meditate. 
    By and large, another rishi came along.
    He asked our friend, the hunter what he was trying to do. 
    The hunter told him the story and asked him, "How do I meditate?"
    The rishi said, "Very simple. Very very simple. Just repeat these two syllables 

- 'Raa and Maa'"
    The poor blighter could not remember the sequence of these two syllables. 

He failed disasterously. 
    So the rishi pointed to a nearby tree, and asked him "What is that?"
    "Oh, that? That is a tree - 'maraa'. Simple. Very very simple. Very very very simple". 
    "Thats it! Thats just it! You goddit, sonny boy! Thatsit! Just keep on repeating hat word again and again and again and again and again and again." 

    The hunter found a shady tree and sat down and repeated the word again    and again and again and again and again and again........
    Until he got lost.
    He got lost in a cocoon of termite hill.
    At long last, he was aroused by the rishi who had taught him the syllables.
    The robber hunter came out of the termite hill.
    He was transformed.
    A Rishi was there instead of a robber hunter.
    He had metamorphosised within the cocoon of the termite hill.
    Thus was born Valmiki - He of the Termite Hill.
 நன்றி-மூலம்
VIDYALANKARA
DR.S.JAYABARATHI

JayBee
vallmeekiPadam-google.

Tuesday, November 6, 2012

மனிதர்களை நம்புவதை விட


மனிதர்களை நம்புவதை விட

இன்ப துன்பங்களை 
அனுபவித்து தீர்க்கவே
இந்த மனித பிறவி
இதை யாராலும் தவிர்க்க முடியாது

ஒரே மனம்தான் இன்பத்தையும் 
துன்பத்தையும் அனுபவிக்கிறது

ஒரே செயல் ஒருவருக்கு துன்பமாகவும்
மற்றவர்க்கு இன்பமாகவும் தோற்றமளிக்கிறது

உண்மையில் துன்பம் என்றோ 
இன்பம் என்றோ உலகில்
ஏதும் இல்லை

நடுநிலையில் மனதை வைத்து பார்த்தால்
இந்த உண்மை விளங்கும்

இதற்க்கு தெளிவான சிந்தனை வேண்டும்

எந்த பிரச்சினையையும் 
உணர்ச்சி வசப்படும்போது
அணுகினால் தீர்வு பிறக்காது

கடவுளை வணங்கிவிட்டால் மட்டும்
நம் பிரசினைகள் தீர்ந்துவிடுமா?

சிலவற்றை இதயம் கொண்டு அணுகவேண்டும்
சிலவற்றை அறிவுபூர்வமாக தீர்வு காண வேண்டும்
சிலவற்றை இறைவனிடம் விட்டுவிடவேண்டும்

இதில் தடம் மாறுவதால்தான் இன்று உலகில்
அனைத்தும் தீர்க்க முடியாதபிரச்சினைகளாக மாறி
எல்லா நாடுகளும் பலவிதமான சிக்கல்களில்
மாட்டிகொண்டு தவிக்கின்றன

கணத்திற்கு கணம் குணம் மாறும்
மனிதர்களை நம்புவதை விட
குணக்குன்றான கடவுளை நம்பினால்
நிச்சயம் நல்ல தீர்வு அமையும்.

Saturday, November 3, 2012

காஞ்சி மாமுனிவர்





காஞ்சி மாமுனிவரை ஒருவர்
கேள்வி கேட்டார்.

நீங்கள் உலக மக்கள் தொகையில்
ஒரு சிறு பிரிவுக்கு குருவாக இருக்கிறீர்கள்
ஆனால் உங்களை ஜகத் குரு
என்று அழைத்துகொள்கிறீர்களே

அது எப்படி என்று.?

அதற்கு அவர் பதிலளித்தார்
ஜகத்துக்கு நான் குரு இல்லை
ஜகம்தான் எனக்கு குரு என்று.

அவர் வாழ்வே ஒரு
உபதேசம்

பத்ராசலம் ராமதாசர்


பத்ராசலம் ராமதாசர்















பத்ராசலத்தில் தனக்கு கோயில்
கோயில் எழுப்பிய கோபண்ணாவை
அரசன் சிறையில் அடைத்து
12 ஆண்டுகள் கொடுமைப்படுத்தியதை
ஏன் தடுத்து காப்பாற்றவில்லை
என்று சிலர் கேட்கிறார்கள்.
ஸ்ரீராமன் தர்மத்தின் வடிவம்.

தாசில்தார் பொறுப்பில் இருந்த
கோபண்ணா அரசு பணத்தை
எடுத்து கோயில் கட்டியது அரசு பணத்தை
கையாடல் செய்தமைக்கு ஒப்பாகும்.

அதனால் அரசன் அவருக்கு கொடுத்த
தண்டனை சரியானதே

அவர் இறைவனுக்கு கோயில்
கட்டவேண்டுமென்று நினைத்தால்,
அவர் தன் கையில் உள்ள பணத்தை
போட்டு கட்டியிருக்கவேண்டும்
அல்லது பொது மக்களிடம்
பணம் வசூல் செய்தோ அல்லது
அரசனின் அனுமதி பெற்று
பணியை செய்திருக்க வேண்டும்.

தண்டனைக்காலம் முடிவடைந்தபின்
அவரை ராமபிரான் ஆட்கொண்டான்.
அருள் செய்தான்,

எனவே இறைப்பணி யானாலும்
சட்டத்திற்கு புறம்பாக செய்யும்
எந்த செயலையும்
இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை

Friday, November 2, 2012

தர்மமே ஸ்ரீராமனாக வடிவெடுத்து வந்தது







தர்மமே ஸ்ரீராமனாக
வடிவெடுத்து வந்தது என்பார்

அதனால்தான் ஸ்ரீராமனை
வழிபடுபவர்களும்தர்மத்தை
வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்
என்பது விதி.

ஸ்ரீராமனை அடைய நினைப்பவன்
இந்த உலக போகங்களில்
மூழ்கிட நினைத்தால்
அவன் அருள் கிட்டாது

அதனால்தான் ஸ்ரீ தியாகராஜா ஸ்வாமிகள்
மன்னன் அளித்த நவ நிதியையும்
ஏற்க மறுத்துவிட்டார்.

ராம பக்தர்கள் இந்த உண்மையை
அறிந்துகொள்ளவேண்டும்.