Wednesday, August 22, 2012

அவனன்றி ஓர் அணுவும் அசையாது

அவனன்றி ஓர் அணுவும் அசையாது 

அவனுக்கு தெரியாமல் ஒன்றும் நடவாது

ஒரு சம்பவம் நடப்பதும் நடவாமல் தடுப்பதும் அவனே

அவனை யாரும் ஏமாற்ற முடியாது

நடப்பவை நடந்தே தீரும் 

ஒரு சர்வாதிகாரி பல லட்சம் மக்களை கொன்று குவிக்கிறான்
யாரும் அவனை தடுக்க முடிவதில்லை .வரலாற்றில் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சர்வாதிகாரி பிறக்கிறான். இறைவன் அவனுக்கு விதிக்கப்பட்ட கொலைகளை திட்டம் போட்டு அரங்கேற்று கொண்டுதான் இருக்கிறான். முடிவில் அவனும் மாண்டு போகிறான்.

ஒரு தீவிரவாதி சில நூறு மக்களை கொன்று குவிக்கிறான்
யாரும் அவனை பிடிக்க முடியவில்லை

ஒரு சுனாமியோ, புயலோ, வெள்ளமோ, பூகம்பமோ லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்குகிறது.எத்தனை  விஞ்ஞான கருவிகள் இருந்தாலும் அது வரும் நேரத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை .
வந்தால் அழிவுகளை தடுக்கும்சக்தி மனிதர்களுக்கு இல்லை  

உலகங்களை தோற்றுவிப்பதும் அதில் உயிர்களை நடமாட விடுவதும்
அவைகளை அழிப்பதும் இறைவனுக்கு மட்டுமே உள்ள தனிப்பெரும்
சக்தி

அதில் அவன் படைப்புக்கள் யாரும் தலையிடமுடியாது

நீ ஒழுக்கமாக இருக்க முயற்சி செய்

நீ உன் சுற்றங்களோடு அன்பாக இருக்க முயற்சி செய்

இயலாதவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்

இந்த அண்டத்தில் எது நடந்தாலும் அது நன்மையோ தீமையோ (உன் பார்வையில்) இறைவனின் ஆணைப்படிதான் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் 


      அதை விடுத்து உலகில் நடைபெறும் ஒவ்வொரு மாற்றங்களுக்கும் செயல்களுக்கும் காரணம் கற்பிக்க நினைத்தால் அல்லது 
தலையிட்டால் உனக்கு குழப்பமே மிஞ்சும் 



1 comment:

  1. உண்மை...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete