Wednesday, August 22, 2012

அன்னை பூமியும் அண்டங்களும்


அன்னை பூமியும் அண்டங்களும் 

இந்த அண்டத்தில் உயிர்களும் 
அவைகள் வசதியாக வாழ்ந்து மடிந்து மீண்டும் பிறந்து மீண்டும் பிறவா நிலையை அடைய வாய்ப்பும் வசதிகளும் இறைவன் அளித்துள்ளான் 
இதை போன்ற தட்ப வெட்ப நிலைமை,மற்றும், பஞ்ச பூதங்களான நிலம் நீர் நெருப்பு ,காற்று,ஆகாயம் வேறு எந்த கோளிலும் கிடையாது 

மற்ற கோள்களில் பஞ்ச பூதங்களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு தான் இருக்கும் .அவைகளில் நம் பூமியை போன்ற உயிர்கள் வாழ ஏற்ற சூழ்நிலைகள் கிடையாது. 

புராணங்களும் வரலாறுகளும் தெரிவித்துள்ள செய்திகள்படி வேற்று உலகத்து உயிர்கள் பூமிக்கு வந்து மனித உயிர்கள் போல் வாழ்ந்து உயர் நிலையை அடைந்ததாகத்தான் செய்திகள் உள்ளன 
அதேபோல் தெய்வங்களும் இந்த பூமிக்குத்தான் வந்து தவம் செய்து 
உயர் நிலையை அடைந்ததாக அடைந்ததாக செய்திகள் உள்ளன 

இறை அவதாரங்கள் எல்லாம் இந்த பூமியில்தான் நிகழ்ந்துள்ளன 

அதுவும் பாரதத்தில்தான் அதிக அளவில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடும்தவம் இயற்றி இறைவனிடம் வரங்கள் பல பெற்று 
அகந்தையினால்  பல வரங்கள் பெற்று உயிர்களுக்கு தீங்கிழைத்த அரக்கர்களும் இறைவனால் அழிக்கப்பட்டதும் இந்த பூமியில்தான்.

சொர்கத்திற்கு இணையான வாழ்க்கையும், நரகத்திற்கு இணையான துன்பங்களும் இந்த பூமியில்தான் உள்ளன 

பண்டைய நாளில் தன்னை எதிர்ப்போரை சுயனலதிர்க்காக மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் அரக்கர்களை போல், காரணமின்றி கண்டவரை எல்லாம் எல்லாம் கொன்று குவித்த ஹிட்லர்,முசோலினி, போன்ற சர்வாதிகாரிகளும் தோன்றியது இங்கேதான் 

இன்றளவும் வல்லரசு நாடுகளும், தீவிரவாதிகளும் மதவாதிகளும், சமூக விரோதிகளும் மக்களுக்கு துன்பம் விளைவித்து கொண்டு சொகுசாக வாழ்வதும் இந்த பூமியில்தான் 

எனவே மற்ற கோள்களில் மனித இனத்தை போன்ற உயிரினங்கள் கிடையாது என்பது கலப்படமற்ற உண்மை 

அதை உணராது பூமியின் வளங்களை கொள்ளையடிக்கும் வல்லரசு நாடுகள் மற்ற கோள்களுக்கு விண்கலங்களை அனுப்புவதால் எந்த பயனும் இல்லை 

உலகில் பல கோடி மக்கள் இருக்க இருப்பிடமின்றி,உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, சுதந்திரமின்றி தவிக்கும் போது அவர்களின் துன்பங்களை துடைக்க நடவடிக்கை எடுக்காமல் ஆயதங்களை உற்பத்தி செய்து இயற்க்கை வளத்தை வீணடிக்கும் வன்முறையை  கட்டவிழ்த்து விடும் அரக்கர்கள் விரைவில் அந்த இறைவனால் கடுமையாக தண்டிக்கபடுவார்கள் என்பது உறுதி

தொடர்ந்து தவறுகள் செய்யும் அவர்களை அழிக்க இறைவன் அவதாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. அவனின் கரங்களாக உள்ள பஞ்சபூதங்களே போதும். உலகில் தினம் தினம் எங்காவது புயலும், வெள்ளமும், சுனாமிகளும், பூகம்பங்களும் ,வெடி விபத்துகளும் நிகழ்ந்து கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. 

1 comment:

  1. அருமை...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete