Thursday, January 26, 2017

இசையும் நானும் (159)Film படகோட்டி -கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்

இசையும் நானும் (159)Film படகோட்டி -கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் 

இசையும் நானும் (159)

இசையும் நானும் (159) Mouthorgan song-தமிழ்  song-


Film படகோட்டி


by TR PATTABIRAMAN


பாடல் வரிகள்-வாலி 
இசை-விஸ்வநாதன்-ராமமூர்த்தி 

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் 
அவன் யாருக்காக கொடுத்தான் 
ஒருத்தருக்கா கொடுத்தான் -இல்லை 
ஊருக்காக கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால்,
தென்றல் வர வெறுத்திடுமா ?
மாலை நிலா ஏழை என்றால் 
வெளிச்சம் தர  மறுத்திடுமா ?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று 
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை 


படைத்தவன் மேல் பழியும் இல்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட  சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி  நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எது வந்த போதும்  பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை  வாழ்த்திடுவோம்




3 comments:

  1. நல்ல பாடல் பாடிய திரு. டி.எம். சௌந்திரராஜனையும் குறிப்பிடலாம்

    ReplyDelete
    Replies
    1. காணொளியில் அவர் படம் உள்ளதை கவனிக்க வில்லையா?

      Delete
  2. உண்மையை உரக்கச் சொல்லும் சிறப்பான பாடல்...

    ReplyDelete