Sunday, March 11, 2012

அடிமுடி காணா எம்பெருமான்

























அடிமுடி காணா எம்பெருமான்
அண்ணாமலையானே
சோதி பிழம்பாய் நின்றவனே 
குளிர்ந்து மலையாய் ஆனவனே 

உண்ணாமுலை அம்மனுடன் 
உறைபவனே

கார்த்திகை தீபத்தில்
ஒளியாய் ஒளிர்பவனே

ஆதவனை சுற்றும் கோள்கள் போல்
உன்னை கிரி வலம் வரும் 
பக்தர்களை காப்பவனே 

செல்வ செருக்குற்றவரும்
கற்ற கல்வியினால் கர்வம்
கொண்டவரும் காண இயலா 
கைலாயவாசனே 

எளியோனே,எங்கும் நிறைந்தவனே
எல்லோர்க்கும் இறையோனே

உலகில் கோயில் அமைத்தோர்க்கும் 
உள்ளத்தில் கோயில் அமைத்து உள்ளத்தில் 
பூஜித்தொர்க்கும்  ஒருசேர அருள் செய்வோனே 

சிவாய நம என்றிருப்போர்க்கு 
அபாயம் தவிர்க்கும் இறைவனே
அடிபணிந்தோம் என்றென்றும் 
எல்லோரும் வாழ்கவென்று  

2 comments:

  1. நன்றி DDsir
    பகிர்வை விட படத்திற்குதான்
    பாராட்டப்படவேண்டும்
    கங்கை கொண்ட சோழபுரம்
    கோயில் சிற்பம்தான்
    இந்த பதிவிற்காக
    எடுத்துக்கொள்ளப்பட்டது
    என்னே நம் முன்னோர்களின்
    சிற்பக்கலை.
    அதற்க்கு ஈடு இணை
    எதுவும் கிடையாது

    ReplyDelete