Saturday, March 31, 2012

ஸ்ரீ ராம நவமி சிந்தனைகள்





ஸ்ரீ ராம நவமி சிந்தனைகள் 




இராமனை .துதி மனமே 
சீதா ராமனை துதி மனமே

கனவிலும் நனவிலும் இன்பம்தரும்
ஆத்மாராமனை துதி மனமே

நன்மையையும் செல்வமும் நாளும்
நல்கிடும் நாராயணின் அவதார 
ராமனை துதி மனமே

திண்மையும் பாவமும் சிதைத்து
தேய்த்திடும் சிவராமனை துதி மனமே

நம் மனதில் பதுங்கி நம்மை துன்புறுத்தி
வாழும் அரக்க ராஷத எண்ணங்களை
கொன்றழிக்கும் வல்வில்  ராமனை துதி மனமே

பிறபிறப்பை அறுக்கும் ராமநாமம்
அஞ்சனை மைந்தனின் நினைவில்
நிறைந்த ராம  நாமம்

ராம நாமம் சொல்லியே எளிதாக
கடந்திடலாம் இந்த சம்சார சாகரத்தை

ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்   
ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
   

No comments:

Post a Comment