Tuesday, July 31, 2012

இறைவனை காண வேண்டும்

மனம் செத்துப்போக வேண்டும்
எதற்கு?

இறைவனை காண வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு.

மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு

எண்ணம் என்பது மனிதன் எங்கு சென்றாலும் கூடவே வரும்

அதை தடுக்க வேண்டும்
எப்படி தடுப்பது ?

பேச்சுக்கும் செயலுக்கும் மாறுபாடு இருக்கக்கூடாது

பாவங்களுக்கு காரணமான மனதின் எண்ணங்களுக்கு தடை விதிக்க வேண்டும்

ஏன் ? உள்ளத்தில் உருவாகும் எண்ணத்தால் அழிவு உண்டாகிறது
கடலின் அலைகள் போல வரும் என்ன அலைகள் மனிதனுக்கு துன்பங்களை தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்கின்றன

 இதை கீதையில் இரண்டாவது அத்தியாயம் 22வது சுலோகத்தில் விளக்கப்பட்டுள்ளது
எண்ணங்களின் பதிவு
அதனால் வரும் விளைவு
விளைவால் வரும் துன்பம்
துன்பம் தரும் பரிசு புத்தி பேதலிப்பு
அதன் தொடர்ச்சி புத்தி நாசம்
புத்தி நாசத்தால் அழிவு

மனம் இருக்கும் வரை அதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கும்
எண்ணம் ஓடிகொண்டிருக்கும் வரை இறைவனை காண முடியாது

பகவான் ரமணரும் இதைதான் வலியுறுத்தி கூறுகிறார்
ஆத்மாவாகிய இறைவனை உன்னுள்ளே தேடு
அவனை புத்தகங்களிலோ,
மனிதர்களிடமோ அல்லது வெளியிலோ தேடாதீர்கள் என்று.

முயற்சி செய்தவர்கள் வெற்றி பெற்றார்கள்
செய்யாதவர்கள் முட்டி மோதி கொண்டு
காலத்தை வீணாக்கி காலனிடம் போய்  சேர்கிறார்கள்   

2 comments:

  1. நல்ல கருத்துக்கள்...
    நன்றி...

    ReplyDelete
  2. கொஞ்சம் பெரிய பதிவு... ஆதலால், ஓய்வு நேரம் இருப்பின் வாசிக்கவும்.... : தெய்வம் இருப்பது எங்கே ?

    ReplyDelete