Sunday, October 26, 2014

காதறுந்த ஊசியும் கடை வழிக்கு வராது ..ஆனால் ?


காதறுந்த ஊசியும் கடை வழிக்கு  வராது ..ஆனால் ?

காதறுந்த ஊசியும் கடை வழிக்கு வாராது
என்றார் பட்டினத்தடிகள்.

அப்படி என்றால் எதுதான் நாம்  இந்த
உடலை சுடலைக்கு   விட்டு விட்டு
போகும்போது  நம்   கூட   வரும் ?

நம் காதால் கேட்ட ராம  நாமம் நிச்சயம்
நம் கூட வரும் நம்மை நரகத்தில் தள்ளாமல்
நம்மோடு  இருந்து  நம்மைக்  காக்கும்

இந்த உலகில் பிறவி    எடுத்தது  முதல்
சங்கரி புதல்வன் ஐங்கரனை நினைக்கவேண்டும்

இவ்வுலகை விட்டு நீங்கும்போது சங்கரனை
நினைக்க   வேண்டும்

காசினியை விட்டு நீங்கும் போது
சேர்த்து   வைத்த காசு நம்மோடு வாராது



காசி விஸ்வநாதனை நினைத்தால் அவன்
காதில் ஒதுவான் ராம நாமத்தை
நம் ஜன்மம் கடைத்தேற.

அதுவரைக்கும் ஏன் காத்திருக்க வேண்டும்?



இக்கணத்திலிருந்தே     ராம நாமத்தை ஜபம் செய்வோம்  
நற்கதி   அடைவோம்  . 

No comments:

Post a Comment