Thursday, April 30, 2015

உத்தமன் ராமனை உதயத்தில் எழுகையில் உள்ளத்தில் நினைவாய் மனமே


உத்தமன் ராமனை உதயத்தில் எழுகையில்
உள்ளத்தில்  நினைவாய் மனமே 

                                                                              ( ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன்)



உத்தமன் ராமனை உதயத்தில் எழுகையில்
உள்ளத்தில்  நினைவாய் மனமே
அனுதினமே  (உத்தமன்)

தர்மத்தை நிலைநாட்ட  தரணிக்கு வந்தவன்
தந்தை சொல் காக்கவே அரியணை விடுத்து
ஆரண்யகம் சென்றவன் (அந்த உத்தமன் )

காண்போர் அனைவரையும் அன்பால்
தன்வசம் ஈர்த்தவன் (2)
கல்லாய்கிடந்த அகலிகைக்கு
கருணை காட்டி உயிர் கொடுத்தவன் (அந்த)

அனைவரின் நலம் நாடி வேள்விகள் செய்த
தவசிகளை அரக்கர்களிடமிருந்து காத்தவன்
பெருமை வாய்ந்த  சூரிய குலத்தில்
அடியவர்களை  காக்க  உதித்தவன் (அந்த)


 ( ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன்)

அன்னை  சீதையுடன்
அருள் வடிவாய் காட்சி தருபவன்
"ராமா" ராமா" என்று பாடி பரவிய பக்தர் தமை
பரிவோடு கண்ணிமைபோல் காப்பவன் (அந்த)







                                                  ( ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன்)

அனைவரின் நலம் நாடும்
அனுமனின் இதயத்தில் உறைபவன்
அபயம் என்றுவருவோரை
அரவணைத்து அருள்பவன் (அந்த)



                                                        ( ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன்)

அகிலத்து மாந்தர் வாழ்வில் அமைதியும்
ஆனந்தமும் என்றும் நிலைத்திட
பிறருக்கு இன்னல் இழைக்கும் மனிதர்
திருந்தி வாழ்ந்திட அருள் செய்யும் (அந்த) 

2 comments:

  1. அரவணைத்து அருள்பவனுக்கு வணக்கங்கள்...

    ReplyDelete
  2. நன்றி நன்றி நன்றி

    ReplyDelete