Saturday, July 25, 2015

இசையும் நானும் (32)

இசையும் நானும் (32)

இசையும் நானும் எனும் தொடரில் என்னுடைய

32 வது காணொளி. 

ஒரு தமிழ் பாடல்.

நானே இயற்றி பாடியது.

பாடல் வரிகள் கீழே.


இதயந்தன்னில்
ஆன்ம ஒளியாய்
இருந்துகொண்டு

என்னை இயக்கும்
உன்னை  என்று காண்பேனோ...இறைவா (இதயந்தன்னில் )

உதயம்தன்னில்
உலகைக் காக்க
உதித்தெழும்   ஜோதி
உன்னை காண்பது போல் (இதயந்தன்னில் )



கண்ணில் ஒளியாய்
திகழ்கின்றாய்

காதில்  நாதமாய்
இனிக்கின்றாய்

உண்ணும் உணவில் ரசமாய்
இருந்துகொண்டு உலகத்து
உயிர்களைக் காக்கின்றாய் (இதயந்தன்னில் )


காணொளி இணைப்பு.

https://youtu.be/u0ZTtC_6HWs


3 comments:

  1. மிகவும் அருமை ஐயா... மேலும் தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. நன்றி KJ.
    உங்கள் பாணி தனி -தொடருங்கள்

    ReplyDelete