Sunday, July 5, 2015

ஒரு கணமும்இருக்க முடியுமோ

ஒரு கணமும்இருக்க முடியுமோ 





ஒருகண  நேரமும் இருந்திட  இயலுமோ
உன் வேய்ங்குழலின் இனிய கானத்தை
கேளாது  குருவாயூரப்பனே


அதிகாலை வேளையில் உன் ஹரிநாம
சங்கீர்த்தனம் காற்றில் மிதந்து வரும் போது
வாக சார்த்து என்னும் உன் தெய்வீக வடிவம்
என் கண் முன் தோன்றாதிருக்குமோ
குருவாயூரப்பனே

ஒரே ஒரு மயிலிறகைக் காண நேரினும்
குழற் கற்றையுடன் கூடிய
 ஒளி  வீசும் உன் திவ்ய முகம்
என் கண் முன் மின்னலெனத்
தோன்றி மறையுதே
குருவாயூரப்பனே


உன் திவ்ய சரித காட்சிகளை
நாடகமாய் காண்கையில்
உந்தன்  தெய்வீக லீலைகள் யாவும்
என் கண் முன் தோன்றி  பரவச
நிலையில் வைத்திடுமே

குருவாயூரப்பனே



காண்போர் உள்ளங்களை
கொள்ளை கொள்ளும் உன்
கள்ளபார்வையும் அருளை
அள்ளி தரும் கவின் மிகு வடிவமும்
என்னை என்றென்றும் நீங்காத
ஆனந்த  வாரிதியில்  ஆழ்த்திடுமே
குருவாயூரப்பனே .
l
Chowaloor Krishnankutty
அவர்களின் 'ஒருநேரமேங்கிலும்" என்ற பாடலை தழுவி எழுதியது

2 comments: