Monday, November 2, 2015

பிறந்தவன் இறப்பதும்..

பிறந்தவன் இறப்பதும்...


கசப்பான கடந்த காலம்
கசாப்புக் கடையில் கத்தியால்
துண்டுபட்டு கிடக்கும் உடல்

அழுகி  நாற்றமெடுக்கும்
அவ்வுடலை அப்புறப்படுத்துவோரே
அறிவுடையோர்

அதுபோல்தான் நம் மனமுள்ளே
இருந்துகொண்டு நமக்கு மீண்டும் மீண்டும்
துன்பம் தந்து நம்மை கொன்றழிக்கும்
கடந்த கால துன்ப நினைவுகள்

உலகெங்கும் மூடர்கள் கடந்த கால
அழிவுகளை எண்ணியே தங்கள்
நாட்களை கடத்தி நலம் தரும்
நிகழ் காலத்தை இழக்கின்றார்

அவ்வித  மூடர்களுக்கோர்
ஒரு முழுமூடர்  தலைமை பொறுப்பேற்று
உலகில் மக்கள் மனங்களில் வெறுப்பை
விதைத்து உலகின் அமைதியை
குலைக்கின்றார்

மண்ணில் விழுந்த விதைகள்
மீண்டும் உயிர் பெறும்
மீண்டும் முளைத்து தழைக்கும்

முளைக்காதவையோ மண்ணோடு கலந்து
உரமாகி மற்ற உயிர்களுக்கு உணவாகும்

பிறந்தவன் இறப்பதும்
இறந்தவன் பிறப்பதும் என்றும் மாறாத
இயற்கை விதி என்றான் கீதையிலே கண்ணன்.

விதி இவ்வாறு இருக்கையிலே
மதியில்லா மனிதர்கள் இறந்தவர்களை   எண்ணியே
வீணே அலைந்து திரிந்து மனம் வெதும்பி
மாள்கின்றார் .

என்றுதான் இந்தமனிதகுலம் திருந்துமோ
இவ்வுலகில் வாழும் காலத்தை இன்பமாக
கழிக்க கற்றுக் கொள்ளுமோ?

No comments:

Post a Comment