Monday, July 17, 2017

இசையும் நானும் (203) திரைப்படம் -(கற்பகம் ) பாடல்:பக்கத்து வீட்டு பருவ மச்சான்..

இசையும் நானும் (203) திரைப்படம் -(கற்பகம்  ) 

பாடல்:பக்கத்து வீட்டு பருவ மச்சான்.. 



Song : Pakkathu Veetu Paruva Machaan
Movie : Karpagam (1963)
Singers : P. Susheela
Music : MSV, TKR


பாடல் வரிகள் 
பக்கத்து  வீட்டு பருவ மச்சான் 
பார்வையிலே படம் பிடிச்சான்
பார்வையிலே படம் பிடிச்சு 
பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான் (பக்கத்து)

மனதுக்குள்ளே தேரோட்ட 
மை விழியில் அடம் பிடிச்சான் 
மரிக்கொழுந்து வாசத்திலே 
மாந்தோப்பில் வழி மறித்தான் 
மாந்தோப்பில் வழி மறித்து 
மயக்கத்தையே வரவழைத்தான் (பக்கத்து)

தை  மாசம் தாலி கட்ட மார்கழியில் கை  பிடிச்சான்
யமுனையில் வெள்ளமில்லை 
விடியும் வரை கதை படிச்சான் 
விடியும்  வரை கதை படிச்சு 
முடியாமல் முடிச்சு வச்சான்  (பக்கத்து)

ஊரெல்லாம் உறங்கிவிடும் 
உள்ளம் மட்டும் உறங்காது 
ஓசையெல்லாம் அடங்கிவிடும் 
ஆசை  மட்டும் அடங்காது 
ஆசை மட்டும் அடங்காமல் 
அவனை மட்டும் , நினைத்திருப்பேன் (பக்கத்து)


2 comments:


  1. மறுபடியும் மறுபடியும் அணைந்து போகும் கணினியுடன் போராடி ஒருவாறு கேட்டு ரசித்தேன்!

    ReplyDelete
  2. போராடி பெரும் இன்பம் எப்போதுமே சுவையானது
    நான் ஒவ்வொரு முறையும். மவுத்தார்கானுடன் போராடித்தான் பாடலை இசைக்கிறேன்.எனக்கு அதில் ஒரு இன்பம். ஆனால் அதற்க்கு கிடைக்கும் விமரிசனங்களோ ஒன்று அல்லது இரண்டுதான். பல பாடல்களுக்கு ஒன்றுமே கிடையாது. இருந்தும் நான் என் பயணத்தை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறேன். இது 203 ஆவது வெளியீடு. I always look forward. which makes me moving otherwise I will collapse.

    ReplyDelete