Tuesday, July 11, 2017

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் -திருமூலர்

அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் -திருமூலர் 

இன்று யாரை பார்த்தாலும்
மனதை அடக்க வேண்டும்.
மனதை அடக்க வேண்டும் என்று
ஓலமிடுகிறார்கள்.

மனது என்றால் . என்னவென்று
புரிந்துகொள்ளாமல் பலர் பலவிதமாக
அவர்கள் மனதிற்கு தோன்றியவைகளை
வாந்தியெடுத்து வெளியிட்ட புத்தகங்களை
படித்துவிட்டு அவர்கள் புத்தகங்களை வெளியிட்டு
காசு பார்க்கின்றனர்.

சிலர் யோகா கலை  மூலம் மனதை
அடக்கலாம் என்றும் மக்களை ஏமாற்றி உலகம்
முழுவதும் மக்களை ஏமாற்றி பிழைப்பு
நடத்துகின்றனர்.

அப்பாவிகள் அவர்களை நம்பி மோசம் போய்
இருக்கின்ற மன  அமைதியையும் இழந்து தவிக்கின்றனர்,

அதனால்தான் திருமூலரும் மனதை அடக்கு அடக்கு என்பார்
அறிவில்லாதவர்கள் என்று உறுதியாக  சொல்லுகிறார்.

அப்படியானால். மனம் என்றால் என்ன?
அதை என் அடக்க வேண்டும்?
எதற்க்காக அடக்க வேண்டும் ?
ஒரு அலசல். (தொடரும்) 

2 comments:

  1. நியாயமான பேச்சு.. ஆனால் கேட்பார் யார்?..

    ReplyDelete