Wednesday, December 12, 2012

ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள்






















 ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள்



மகான்கள் வெறுமனே சொல்லி திரிவதில்லை
உபன்யாசகர் களைப்போல்

அவர்கள் தான் சொல்லுவதை அனுசரித்து 
அதன் பலனை அடைந்து தம்மை போல் 
மற்ற ஜீவர்கள் உத்தம நிலையை அடைய 
வாழ்ந்து காட்டி நம்மை அவ்வழியில் செலுத்துபவர்கள்.

அவர்களின் சரித்திரமே படிப்பவர்களின்
மனதிற்கு பரம சாந்தியை கொடுக்கும்.

அவர்கள் சொல்வதை கடைபிடித்தால் 
முக்தியை கொடுக்கும்


ஸ்ரீதரா என்றால் திருவாகிய இலக்குமியை தரித்தவன் என்றும்
கங்காதரா என்றால் கங்கையை சிரசில் தாங்கியவன் 
என்றும் பொருள் கொள்ளலாம்

பேயாழ்வார் ஹரியும் ஹரனும்
ஒன்றென்று பாசுரம் பாடியுள்ளார்

ஸ்ரீ தியாகராஜா சுவாமியோ ஒரு ராம பக்தன் 
சிவன் ஹரி பேதம் பார்க்கலாகாது என்றும் 
அப்படி பார்த்தால் அவன் கொடிய நரகத்தில் 
வீழ்வான் என்று உணர்த்தியுள்ளார்.

போதேன்ற சுவாமிகளோ சிவ பெருமானை 
வழிபடு தெய்வமாக கொண்ட போதிலும் 
ராம நாம சங்கீர்த்தத்தினை மக்களிடையே பரப்பினார். 

அவர் அடிசுவட்டில் இன்று ஏராளமான பஜன் சமிதிகள் 
பாரெங்கும் இறைவன் நாமத்தை ஒலிக்க செய்து மக்களை 
பக்தி மார்க்கத்திற்கு இட்டு சென்று கொண்டிருக்கின்றன. 

சிவபெருமான் ராம நாமத்தின் பெருமையை பார்வதி தேவிக்கு 
விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் மூலம் உபதேசிக்கிறார்.

காசியில் மரிப்பவர்களுக்கு காதில் ஓதி அவர்களை 
முக்தி பெற வைக்கின்றார்

திரு அண்ணாமலையாக நின்று கொண்டு 
ஜோதி தரிசனம் தந்துகொண்டு அருணாச்சலா 
அருணாச்சலா என்று நினைப்போர்க்கே 
முக்தி தருபவன் அன்பே வடிவான சிவ பெருமான்.

இப்படியெல்லாம் இருக்க இன்னும் சிலர் 
தெய்வங்களிடையே பேதங்களை 
பரப்பி வருவது அறியாமையே. 

அவர்களுக்கும் அந்த பரம்பொருள் 
நல்ல புத்தியை அருள்வானாக. 
 

No comments:

Post a Comment