Sunday, September 22, 2013

அட்சதையின் மகிமை

அட்சதையின் மகிமை 

அட்சதை என்றால் என்ன என்று
 பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம்

தெரிந்தவர்களும் அதன் மகிமையை உணராது
அதன் முக்கியத்துவத்தை உணராது
நடந்து கொள்கிறார்கள்.

பொதுவாக திருமணங்களில் மணமக்கள் மீது
திருமாங்கல்யம் முடியும்போது அனைவரும்
எழுந்து நின்று அவர்கள் கைகளில் கொடுக்கப்பட்ட
 மஞ்சள் கலக்கப்பட்ட அரிசியை
மணமக்கள் மீது தூவி ஆசிர்வதிப்பார்கள்.

அதுவும் கல்யாண மண்டபத்தின் கோடியில்
 உட்கார்ந்துகொண்டு இருக்கும் ஒருவர்
ஒருவர் என்ன பல பேர்களும் இருக்கின்ற இடத்திலிருந்தே
அட்சதையை தூக்கி பலம் கொண்ட
மட்டும் வீசி எறிவார்கள்.

அது மணமக்கள் மீது சத்தியமாய்  விழாது

 இடையில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள்,
 நின்றுகொண்டிருப்பவர்கள் தலையில் போய்தான் விழுந்து,
அப்படியே தரையில் விழுந்து அனைவரின் காலில் மிதிபட்டு  மாவாயப்போய் முடிவில் குப்பையை சென்றடையும்.

அட்சதையை வீசியவர்கள்
 தாங்கள் ஏதோபெரிய சாதனையை செய்து விட்டதைப் போல்.
அடுத்து மொய் எழுதும் படலத்திற்கு தயாராவார்கள்.

இன்னும் ஒரு சிலர் மணமக்கள்
அருகில் சென்று நின்றுகொண்டு திருமாங்கல்யம் முடியும் நேரத்தில் அட்சதையை போட்டு வாழ்த்துவார்கள்.

அவர்கள் வீசும் அட்சதையிழ்மனமக்களின்
மீது விழுமா என்பது கேள்விக்குறியே.

ஏனென்றால் மணமக்களை சுற்றி. வீடியோ ,
மற்றும் புகைப்படம் எடுக்கும் கூட்டம் நின்று கொண்டிருக்கும்.
விழும் அட்சதைகளில் 99 விழுக்காடுகள் அவர்கள் தலையில்தான் விழும்.

அட்சதை என்பது ஒரு மங்கலப்பொருள். 

அது எவர் கையிலிருந்து அளிக்கப்படுகிறதோ 
அதைபொருத்து அதன் சக்தி இருக்கும். 

ஒரு மகான்களில் கையிலிருந்து ஆசீர்வாதம் செய்து, 
உரிய மந்திரங்களை சொல்லி தூவபபடுவது . மிகவும் சக்தி வாய்ந்தது. அவைகள் நலன்களை அளிக்கும். பலன்களை தவறாது அளிக்கும்.

அதைப்போல் பெற்றோர்கள், பெரியவர்கள், தூய்மையான ஏனம் உடையவர்கள், வேத விர்ப்பன்ன்னர்கள், ஞானிகள் மடாதிபதிகள் ஆகியவர்களை வணங்கும்போது அட்சதை தூவி ஆசிர்வதிப்பார்கள்.





அதை பய  பக்தியோடு நம்முடைய அங்கவஸ்திரத்தில் பெற்றுக்கொண்டு நம் தலையின் மீது வைத்துகொண்டு,வீட்டில்  கொண்டு வைத்தோமானால் அது நம்மை அனைத்து. துன்பங்களிலிருந்தும் பாதுகாப்பதோடு, வளங்களையும் அளிக்கும்.

இப்படிப்பட்ட மகிமை பொருந்திய அட்சதையை, 
அதன் உண்மையறியாமல் அனைவர் கையிலும் கொடுத்து அவமரியாதை செய்வதை நிறுத்தவேண்டும் என்றும், மணமகள் அருகில் வைத்து அட்சதை போடா விரும்புபவர்கள் மட்டும் மணமக்களை  ஆசீர்வதிக்கலாம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே தினமலர் நாளிதழில்  என் கருத்தை  தெரிவித்தேன்  

ஆனால் இன்று வரை அது கடைபிடிக்கபடாமல் ஒரு மங்கலப் பொருளை. அனைவரில் காலடியில் பட்டு வீணாகுமாறு செய்வது  தொடருவது வேதனைக்குரியது.

AATCHADAI - is a mixture of tumeric-coloured rice and flowers. Rice is our staple food. As a cereal it drops on the ground, shoots and regrows. The bud of a flower-tree blooms / blossoms and emits a pleasant smell. A mixture of this when sprinkled over the newly-weds indicates the acceptance by the well-wishers wishing the couple a long, fragrant and productive life.http://skumaran1980.blogspot.in/2011/04/wedding-in-hindu.html

9 comments:

  1. அக்ஷதை என்பது நுனி உடையாத பச்சரிசி என்பது மட்டுமே என்பதை அனைவரும் அவசியம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

    >>>>>

    ReplyDelete
  2. இந்த நுனி உடையாத முழுப்பச்சரிசியை மஞ்சள் பொடியுடன் சிறிது நீர் விட்டுப் பிசைந்தால் அது மங்கள அக்ஷதையாக மாறி விடுகிறது.

    >>>>>


    ReplyDelete
  3. தாங்கள் சொல்லியுள்ள அனைத்துமே மிகச் சிறந்த பயனுள்ள கருத்துக்கள்.

    முஹூர்த்த நேரங்களில் மண்டபங்களில் இங்குமங்கும் வாரி இறைக்கப்படும், இந்த மங்கல அக்ஷதை மற்றும் புஷ்பங்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல், அவை கடைசியில் குப்பைக்கு மட்டுமே போய்ச்சேருகிறது என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய செயலே.

    >>>>>

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள, யோசிக்க வேண்டிய பகிர்வுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

    -oOo-

    ReplyDelete
  5. நல்ல விளக்கம் ஐயா... நன்றி...

    ReplyDelete
  6. அண்ணா,

    வணக்கம் / நமஸ்காரம்.

    கடைசியில் என் பதிவு எண்: 53 க்கு தாங்கள் ஏதும் விசேஷக் கருத்துக்கள் தங்கள் பாணியில் அளிக்காமல் இங்கு வருகை தருமாறு அழைப்பிதழ் மட்டுமே அனுப்பியுள்ளீர்கள்.

    நேயர்கள் எல்லோரும் தங்களின் விரிவான பின்னூட்டத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதை அறியவும்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. Tamil translation is not working.

      As I read about the "Atchadhai " thrown at the ground for his devotee. I have decided to write about "Atchadai".and then posted in my Blog."Ramarasam"
      As usual Tirukkazhukkunram Vethapureeswarar koyiluku varukai tanthu sakkarai Pongalai suvaikkum deiveega kazhugal pol (ippothellam kazhugal varuvathillai. -athan varugai nirupoi pala aandugal aagivittathaam) neengalum, DD yum thaan varugal thanthu karuthurai alithuleergal. ungalukku nanri.
      as usual the teachings and preachings of Periyavaa are superb.
      and the greatness of Atchadai was potrayed beautifully in your blog.
      Thank You.

      Delete
  7. Venugopal Krishnamoorthi

    நமக்கு அட்சதயின் மஹிமயும் தெரியாது...ஆசிர்வாதத்தின் பலனும் தெரியாது..கோவிலில் பிரசாதத்தை வீண் அடிப்போம்(பொங்கல் சாப்பிட்டுவிட்டு,தூணில் தடவுவது:விபூதி,குங்குமத்தை இட்டுகொண்டு தூணில் தட்டுவது)பிறகு ஏன் கஷ்டம் வராது...கேட்பவர் கேட்கட்டும் என இட்யராது எழுதுவதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு அட்சதயின் மஹிமயும் தெரியாது…

      vaitheega tirumanangalil atchathai aaseervatham enru
      manthirangalai solli vaazhthum sadangu onru undu. ketka kambeeramaaga ramyamaga irukkum. mudivil saanthi manthiram othum pothu anaithu kalaippum neengi ullathil urchaagamum, arangil oru nalla athirvalaigalum erppadum.

      ஆசிர்வாதத்தின் பலனும் தெரியாது.

      ovvoruvarum inru thangalai saarnthavargalukkum, thangal kuzhanthaigalukkumalikkum aasrrvaathangal ketka ozhivathillai. vaazhthukkalai vida vasai paduvathuthaan athigal. nallathu balikkiratho illaiyo vargal sollum theeya vakkugal nichayam balithu avargalukke emanaaga vanthukondirukkirathu.

      vazhthaavittaalum paravaayillai. vasai paadaamal irukku inthe manitha janmangal katrikondu tirunthinaal intha ulagam nanraaga irukkum. bagavaanthan avargalukku nalla buthiyai kodukavendum.

      .கோவிலில் பிரசாதத்தை வீண் அடிப்போம்(பொங்கல் சாப்பிட்டுவிட்டு,தூணில் தடவுவது:
      intha kodumaiyai pallaayiram aandugalaaga bakthargal seithuvarugiraargal. enave prasaathai kaiyil kodukkumpothu oru papperaiyum koduthu angu oru kuppai thottiyum vaithuvittaal intha prachinai theerthuvidalaam.

      விபூதி,குங்குமத்தை இட்டுகொண்டு தூணில் தட்டுவது)

      பிறகு ஏன் கஷ்டம் வராது...
      avargal mattum kashtappattaal paravaayillai matravargalaiyum kashtappaduthugiraargale .atharkku enna seiyya?

      கேட்பவர் கேட்கட்டும் என இட்யராது எழுதுவதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      intha madayan ezhuthuvathai etho ungalaipponra oru nabaraavathu padithu karuththu solgireergale. neengal vaazhga.

      Delete