Wednesday, July 30, 2014

திரு ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்

திரு ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள் 



திரு ஆடிப்பூரத்தில் அவதரித்தவளே
ஆன்மா கடைத்தேற வழி காட்டும்
திருப்பாவை பாடல்களைத்  தந்தவளே

பேதையாய் வந்தாய்  பெருமானின்
புகழ்  பாடி கோதையாய்   ஆனாய்
மாந்தர்களின் வேதை தீர நல்லதோர்
பாதையை அமைத்துத் தந்தாய்

மானிடராய் பிறந்து மாலவனின்
புகழ் பாடி மணம் வீசி மாயவனுடன்
கலந்துவிட்ட மாதரசியே

அறியாமை என்னும் உறக்கத்தில்
உழலும் மாந்தரை தட்டி எழுப்பி
ஓங்கி உலகளந்த உத்தமனின்
புகழை  பாட வைத்த  அன்னையே



என்றும் நீங்காத நிலைத்த
புகழடைந்தாய் .இந்நாளில் உன்
புகழ் பாடி ஆயர்பாடியில் வந்துதித்த
கண்ணனின் திருவடிகளை வணங்குவோம்.

1 comment:

  1. ஆயர்பாடியில் வந்துதித்த கண்ணனின் திருவடிகளுடன், சூடிக் கொடுத்த சுடர்மணியாம் அன்னையவளின் திருவடிகளையும் சேர்ந்து பற்றி வணங்குவோம்!
    கிருஷ்ணார்ப்பனம்!

    ReplyDelete