Monday, September 29, 2014

என்னை சிவனைப் போல் செய்திடுவாய்

என்னை சிவனைப்  போல் செய்திடுவாய் 

என்னை சிவனைப் போல் செய்திடுவாய் 



என்ற வரிகளை தினமும் காதில் கேட்கிறோம்.

எங்கு என்று பலருக்கு தெரிந்திருக்கலாம் 

ஆம் கந்த  குரு கவசத்தில் முருகபெருமானுக்கு 

வைக்கப்படும்  வேண்டுதல்களில் ஒன்று. 

ஏன் நாம் சிவனாக வேண்டும்? 

ஏன் மற்ற கடவுள்களைப் போல் ஆகக்கூடாது ?

இந்த கேள்வி எனக்கு வந்தது. 

ஜீவனாகிய நமக்குள் இறைவன் ஜீவ ஒளியாக இருக்கின்றான்.

அந்த ஒளியின் சக்தியினாலேயே இந்த உடலும் உள்ளமும் இயங்குகிறது. 

அந்த உண்மையை நம்மால் உணர இயலாது அந்த ஒளியை பல 

தீய குணங்கள் மறைத்துக்கொண்டிருகின்றன மேகங்கள் ஆதவனை 

மறைத்துக்கொண்டிருப்பதைபோல் .

மேகம் விலகினால் ஆதவன் ஒளி  வீசுவதுபோல்  நம்முள் 

இருக்கும் அந்த ஒளியும் நம் பார்வையில், வாக்கில் ,செயலில் 

ஒளி  வீசத் தொடங்கும். 

அதற்க்கு மாயையில் மூழ்கியுள்ள ஜீவனாகிய நாம் சிவமாக வேண்டும். 

நம்மால் என்ன முயற்சி செய்தாலும் அந்நிலையை அடைய முடியாது 

அதற்க்கு ஞான பண்டிதனான முருகனை நாம் சரணடையவேண்டும். 

சிவம் என்றால் அவம் பேசாதவன், நம்மை மயக்கி பாவங்களை நம்மை 

செய்யத் தூண்டி நம்மை இறைவனை அடைய இயலாதபடி நம்மை தொடர்ந்து 

பிறப்பு இறப்பு சுழலில் தள்ளும் காம க்ரோதாதிகளை வென்றவன். எப்போதும் 

எல்லா நிலைகளிலும் சம நிலையில் இருப்பவன்,பயமற்றவன், விருப்பு 

வெருப்பற்றவன் எல்லா  உயிர்களிடத்தும், அன்பு பூண்டவன், அனைத்தையும் 

மற்றவர்களுக்காக தியாகம்  செய்யக்கூடியவன் போன்ற பண்புகள் 

இருந்தால்தான் ஒரு ஜீவன் சிவனாகமுடியும். பரம்பொருளை 

அடையமுடியும். , 




நம்மை அந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முருகனை அனுதினமும் வேண்டுவோம். 

No comments:

Post a Comment