Thursday, January 29, 2015

காந்தியும் கோட்சேயும்

இந்தியா பல சமூகங்கள்,
மதங்கள் கொண்ட நாடு

அவர்கள் அனைவரும்
வேற்றுமைகளை விடுத்து
ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று
காந்தி விரும்பினார்.

பெரும்பான்மையான சமூகம்
சிறபான்மை சமூக மக்களை
அரவணைத்து செல்ல வேண்டும் என்று
அறிவுறுத்தினார்.

காந்தியின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளாத
கோட்சே காந்தியை கொன்று விட்டார்.

காந்தியும் இவ்வுலகில் இல்லை
அவரைக் கொன்ற கோட்சேயும் 
இந்த உலகில் இல்லை.

தொடந்து நடந்த பல அசம்பாவித
நிகழ்வுகளால் கலவரம் ஏற்பட்டு பல
லட்சம் அப்பாவி மக்கள் மாண்டனர்.

அந்த துயர சம்பவங்கள் ஒருகட்டுக்குள் இருந்தாலும்
ஆங்காங்கே சில மத வெறியர்களால்
இன்னும் தொடர்ந்து அரங்கேறி  வருகின்றன.

பகவத் கீதையை இருவருமே படித்தவர்கள்.
இருவருக்கும் தெரியும் பகவான் கண்ணனின்
ஆணைப்படிதான்  இந்த உலகம் இயங்குகிறது.
(விளக்கம் வேண்டுபவர்கள் இரண்டாம் அத்தியாயத்தை படிக்கவும்)

அதை தெரியாதவர்கள்தான் காந்தியின் தியாகத்தை,
எளிமையை ,நேர்மையை இழிவுபடுத்துகிறார்கள்.

அவரைக் கொன்ற கோட்சேவை பெருமைப் படுத்த நினைக்கிறார்கள்.

இருவரும் அவர்களுக்கு இறைவன் அளித்த பாத்திரத்தை செய்துவிட்டு போய்விட்டார்கள்.

ராமாயணத்தில் ராமன் ராவணனைக் கொன்றான்.
ராவணனைக் கொன்ற ராமனை தெய்வமாக போற்றுகிறது ஒரு கூட்டம்.

ஆனால் ராமனை இழிவுபடுத்தி ராவணனை போற்றுகிறது ஒரு கூட்டம்.

ராமாயணத்தை நன்கு கற்றவர்களுக்கு தெரியும் ராமன் (வைகுண்டத்தில் பள்ளி கொண்டுள்ள நாராயணன்தான் ராமாவதாரத்தில் ராமராக வந்தார் என்றும் அவரிடம் வாயில் காப்பவனாக இருந்த ஜயன் தான் ராவணனாக வந்தான் என்று தெரியும்.).அதனால் அவர்கள் அதை புரியாதவர்கள் பிதற்றும் பேச்சுக்களை கண்டுகொள்வதில்லை

ஷேக்ஸ்பியர்சொல்வதுபோல் இந்த உலகம் ஒரு நாடக மேடை. அதில் நாம் அனைவரும் நடிகர்கள். அவரவர் வரலாற்றில் அவர்களுக்கு அளித்த பாத்திரத்தை செவ்வனே செய்துவிட்டு போய்விட்டார்கள்.

அது புரியாமல் சிலர் இதுபோன்ற செயல்களை அரங்கேற்றிக்கொண்டு தாங்களும் குழம்பி இந்த நாட்டு மக்களையும் குழப்பிக்கொண்டு அனைவரின் நேரத்தையும்வீணடித்துக்கொண்டிருக்கின்றனர்

நாட்டில் மக்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கு மக்களும் தயாராக இல்லை, அவர்களை ஆளும் அரசுகளும் தயாராக இல்லை. ஊடகங்களும் தயாராகஇல்லை.

என்ன செய்வது? நம் நாட்டின் தலைவிதி அப்படி. !

No comments:

Post a Comment