Friday, December 15, 2017

நான் யார்?

 நான் யார்?

நான் யார் ?

இந்த கேள்விக்குப்பதில்

நான் "ஆன்மா"

அது எங்கிருக்கிறது?

அது எல்லா உயிர்கள் உள்ளும் இருக்கிறது.

அது அவனா இல்லை அவளா இல்லை அதுவா ?

அது அவனும் இல்லை அவளும் இல்லை. அது ஒரு "அது"தான்.

அவன் அல்லது அவள் அதுதங்கியுள்ள உடலுக்குத்தான்.

அந்த ஒரே வஸ்துதான் எல்லா உயிர்கள் உள்ளேயும் இருக்கிறது.

அது தங்கியுள்ள  உடல்கள் இயற்கையிலிருந்து  உருவாகி அதையே உண்டு வளர்ந்து முடிவில் அந்த இயற்கையிலேயே கலந்து விடும்.

அப்படியானால் உயிர்களிடையே ஏன் இத்தனை வேறுபாடுகள்?

இவ்வளவு குண பேதங்கள்?

எல்லாவற்றிற்கும் காரணம் "மனம்" அதில் வந்து போகும் எண்ணங்கள்.

மனம் என்றால் என்ன?

நாம் உண்ணும் உணவில் கழிவுகள் நீங்கியது போக ,உடல் இயங்க தேவைப்பட்ட சத்துக்கள் பயன்படுத்தியது போக மிகவும் துல்லியமாக வடிகட்டப்பட்ட மிகுதி.

அதுதான் மனமாக  மாறுகிறது.

அதிலிருந்துதான்,"நான்" "எனது" மற்றும் காமம், க்ரோதம் ,லோபம், மோகம் மாச்சரியம்  மதம், என்னும் 6 விதமான எண்ணங்கள் ஏற்பட்டு நம்மை
குழப்பி நாம் "ஆன்மா" என்பதை மறக்கடிக்க  செய்து விடுகின்றன.

எல்லாம் இயற்கையிலிருந்து உண்டாகி அதையே உண்டு வளர்ந்து மீண்டும் அதிலேயே கலந்துபோகும் இந்த உடலையே "நான்" என்று தவறாக எண்ணிக்கொண்டே இருப்பதால் நாம் மீண்டும் இவ்வுலகில் பிறந்து இறந்து கொண்டிருக்கிறோம்.

எப்போது இந்த அறியாமை நம்மை விட்டு போகிறதோ அப்போதுதான் நமக்கு பிறப்புஇறப்பு சங்கிலி அறுந்துபோகும். 

2 comments:


  1. Vs Krishnan
    5:30 AM (31 minutes ago)

    to me
    Dear Sri Pattabhi,

    Very brilliantly said. It is only when one ceases to identify himself with the body and realize that "I am the ever existing reality, the Atma" he is liberated from the cycle of life and death.

    Krishnan

    ReplyDelete
    Replies
    1. Dear Sri VSK
      As long as we do "Atma vichaara" through our mind the question of self realisation will never take place.Only when we observe our mind and remain in silence the truth will emerge automatically. But it is very difficult to silence our mind.

      Delete