Wednesday, February 1, 2012

கடவுளை நம்பினால்


பிற உயிர்க்கு கேடு விளைவித்தால் பாவம்
நன்மை செய்தால் விளைவது புண்ணியம் 
இரு தரப்பட்ட வினைகளால் விளையும் 
இன்ப துன்பங்களை அனுபவித்து தீர்க்கவே
இந்த மனித பிறவி

இதை யாராலும் தவிர்க்க முடியாது
ஒரே மனம்தான் இன்பத்தையும் 
துன்பத்தையும் அனுபவிக்கிறது
ஒரே செயல் ஒருவருக்கு துன்பமாகவும்
மற்றவர்க்கு இன்பமாகவும் தோற்றமளிக்கிறது
உண்மையில் துன்பம் என்றோ இன்பம் 
என்றோ உலகில் ஏதும் இல்லை

நடுநிலையில் மனதை வைத்து பார்த்தால்
இந்த உண்மை விளங்கும்

இதற்க்கு தெளிவான சிந்தனை வேண்டும்
எந்த பிரச்சினையையும் உணர்ச்சி வசப்படும்போது
அணுகினால் தீர்வு பிறக்காது

கடவுளை வணங்கிவிட்டால் மட்டும்
நம் பிரசினைகள் தீர்ந்துவிடுமா?

சிலவற்றை இதயம் கொண்டு அணுகவேண்டும்
சிலவற்றை அறிவுபூர்வமாக தீர்வு காண வேண்டும்
சிலவற்றை இறைவனிடம் விட்டுவிடவேண்டும்

இதில் தடம் மாறுவதால்தான் இன்று உலகில்
அனைத்தும் தீர்க்க முடியாதபிரச்சினைகளாக மாறி
உலகில் மக்கள் பலவிதமான சிக்கல்களில்
மாட்டிகொண்டு அமைதியில்லாமல் தவிக்கின்றனர் 

கணத்திற்கு கணம் குணம் மாறும்
மனிதர்களை நம்புவதை விட
குணக்குன்றான கடவுளை நம்பினால்
நிச்சயம் நல்ல தீர்வு அமையும்

1 comment:

  1. அருமையாகச் சொன்னீர்கள் ! பாராட்டுக்கள் ! நன்றி !

    ReplyDelete