Friday, February 10, 2012

இறைவனை நோக்கி தவம் செய்யுங்கள்

தவம் செய்யுங்கள்  
ஆனால் வரம் கேட்காதீர்கள் 

இறைவனை நோக்கி தவம் செய்யுங்கள் 
ஆனால் அவனிடம் எந்த வரமும் கேட்காதீர்கள் 

ஏனென்றால் நமக்கு எந்த பொருளை பற்றியும் 
முழுமையான அறிவு கிடையாது

நம்முடைய அறிவெல்லாம் புலன்கள் 
காட்டும் வழியை பொறுத்தது

புலன்கள் வெறும் கருவிகளே
அவைகள் அவைகள் காணும் 
காட்சி அல்லது உணர்வுகளின் 
அடிப்படையில் முடிவுகளை நமக்கு 
அறிவிக்கின்றன

புராண கதைகளை உற்று நோக்கினால்
சில உண்மைகள் புலப்படும் 

ராமாயணத்தில் தசரதன் தனக்கு 
குழந்தை வரம் வேண்டும் என்று இறைவனை 
வேண்டி  யாகம் செய்தான் 
ஆனால் புதல்வர்களால் அவனுக்கு 
பெருமை உண்டானாலும்
அவன் புத்திர சோகத்தில் 
ஆழ்ந்து ராமனை பிரிந்து 
அந்த சோகத்திலேயே 
அவன் உயிரை விட நேர்ந்தது

கும்பகர்ணன் தவம் செய்து நிலையாக இருக்க 
வரம் கேட்க நினைத்து தூக்க நிலையில் 
என்றும் ஆழ்ந்து கிடக்கும் வரம் பெற்று தன் வாழ்வில் 
பெரும்பகுதி தூக்கத்தில் கழித்து முடிவில் 
தன் சகோதரனுக்காக வீணே போரிட்டு மாண்டான்

ஹிரண்யகசிபு பிரம்மாவிடம் மரணம் வாராமல் 
இருக்க வரம் கேடடு பெற்று
முடிவில் அதனால் அகந்தை மேலிட தன்னையே 
கடவுளாக வழிபடவேண்டும் என்று அனைவரையும்
துன்புறுத்தி முடிவில் தன் மகன் மூலமாகவே 
இறைவன் கையில் சிக்கி மாண்டான் 

எனவே நம்மை படைத்த இறைவனுக்கு நமக்கு
என்ன தரவேண்டும், எப்போது தரவேண்டும் என்பது 
அவனுக்கு நன்றாக தெரியும் 
எனவே அவன் அருளை மட்டும்
 நாம் வேண்டி பெற முயற்சி செய்ய வேண்டும்

மற்றவைகளை அவன் விருப்பத்திற்கு விட்டு விட்டால் 
அனைத்தும் நன்றாக நடைபெறும்
நம் வாழ்வில் ஏமாற்றங்கள் ஏற்படாது . 
அதனால் நம் மகிழ்ச்சி என்றும் 
குறைவுபடாது வாழலாம் 

 

No comments:

Post a Comment