Thursday, December 13, 2012

சத்குரு என்பவர் யார்?


சத்குரு என்பவர் யார்?

























எந்த மனிதர் முன்பு நீங்கள் எதுவும் கேளாமலே 
உங்கள் மனம் கேள்வியின்றி, குழப்பமின்றி 
சஞ்சலமின்றி தானே அமைதியாகி நிற்கின்றதோ 
அவர்தான் உங்கள் சத்குரு. 

எவர் உங்கள் மீது வரம்பில்லாமல் அன்பை பொழிகிராரோ,
எவர் நம்மிடமுள்ள குறைகளை பலரறிய போட்டு உடைக்கின்ராரோ 
அப்போது நமக்கு அவர் மீது கோபம் உண்டாகாமல் 
மகிழ்ச்சி உண்டாகின்றதோ, அவர்தான் நம்முடைய சத்குரு. 

எவரை நாம் நேரில் பார்க்காவிட்டாலும் 
நம் மனதில் நினைவாகவும் நிழலாகவும் இருந்துகொண்டு 
அவரை நினைத்த மாத்திரத்திலேயே 
நமக்கு பேரானந்தத்தை அளிக்கிறாரோ 
அவர்தான் நம்முடைய சத்குரு. 

எவரை பார்த்தாலே நம் உள்ளம் பரவசமாகி
வேறு எந்த சிந்தனையுமின்றி நம்மை மகிழ்ச்சியில் 
திளைக்க வைக்கின்றதோ அவரே நம் சத்குரு.

அப்பேர்ப்பட்ட உண்மையான் சத்குருவை 
அடைந்தவன் மோட்ஷம் என்று ஒன்றை 
தனியாக நாடவேண்டிய அவசியமில்லை. 

ஏனென்றால் அவன் அதில்தான் இருக்கிறான். 
TR Pattabiraman 

2 comments:

  1. Replies
    1. வருகைக்கும் கருத்துக்களை
      பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி.

      Delete