Friday, December 7, 2012

பரம்பொருள் ஒன்று


பரம்பொருள் ஒன்று

ஆனால் இந்த அண்டங்களை நிர்வகிக்க  
பரம்பொருளை ஆத்மாவாக கொண்டு 
இயங்கும் கடவுள்கள் கோடி கோடி .   

கடவுள்களிடம் பேதம் இல்லை

ஆனால் கடவுள்களை வணங்குபவர்கள்தான்
அவர்களிடையே உயர்வு தாழ்வு
 கற்பித்து சண்டையிட்டு மடிகின்றனர்

ஆதி காலத்தில் இந்த பேதங்கள் கிடையாது.

இடையிலே இவ்வுலகத்தில் அவதரித்த மகான்கள்
பரம்பொருளின் உண்மை தன்மையை விளக்கியபோது 
அவைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டன. 

மேலும் அந்த மகானின் சீடர்கள் மகான்கள்
வலியுறுத்திய உண்மைகளை சரியாக
புரிந்துகொள்ளாமல் அவற்றை திரித்து
மக்களிடையே தெய்வங்களை 
பற்றி உயர்வு தாழ்வு கற்பித்துவிட்டனர்.  

அது இன்று மக்கள் மனதில் வேரூன்றி 
பரம்பொருளின் உண்மை நிலையை பற்றி 
அறிய முடியாமல் செய்துவிட்டது.
என்பதுதான் உண்மை.

உண்மையில்கடவுள்களிடையே 
உயர்வு தாழ்வு என்ற பேதம் இல்லை.  
அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை 
அவைகள் செய்து கொண்டிருக்கின்றன. 

கீழே  கண்ட  படத்தில் பாற்கடலில் பாம்பணைமேல்
பரந்தாமன் அமர்ந்திருக்க அவனை சுற்றி அனைத்து 
பிரதான தெய்வங்களும் தாமரை மலரை கையில் ஏந்தி 
அவனை வாழ்த்துவதை கண்ட பிறகாவது 
கடவுள்களிடம் உயர்வு தாழ்வு கற்பிக்கும்.
மக்களின் மனோபாவம் மாறவேண்டும்

2 comments:

  1. ஆனால் கடவுள்களை வணங்குபவர்கள்தான்
    அவர்களிடையே உயர்வு தாழ்வு
    கற்பித்து சண்டையிட்டு மடிகின்றனர்


    // நல்ல பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete