Tuesday, November 26, 2013

தண்டமும் கோதண்டமும்

தண்டமும் கோதண்டமும் 

தண்டம்  என்ற சொல்லை
ஒருவரை மட்டம் தட்டுவதற்கு
அனைவரும்
பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் உண்மையில்  தண்டம்
என்ற சொல் நம்மை ஒரு
உயர்ந்த நிலைக்கு இட்டு செல்லும்
சாதனம் ஆகும் என்பதை
யாரும் அறிந்துகொள்ள வில்லை

முருகன் கையில் தண்டத்தைதான்
ஏந்தி அருள் செய்கின்றான்






அதனால் தண்டாயுதபாணி
என்றழைக்கப் படுகின்றான்

ஸ்ரீராமனோ கோ(கோக்களை -
ஜீவாத்மாக்களை காப்பதற்காக )
கோதண்டத்தை ஏந்தியுள்ளான்
அதனால் கோதண்டபாணி
என்று   அழைக்கப்படுகிறான்



பலுகெ பங்காரமயனா கோதண்டபாணி
என்று அன்போடு இராமனை
ராமதாசர்  அழைக்கின்றார்

சக்திகளைப் பெறவும் சித்திகளைப் பெறவும்
பிறவி பிணி நீங்கி மரணமில்லா வாழ்வு பெற
தவம் செய்யவும் தண்டகாரண்யம்
சென்றனர் அந்நாளில்

தண்டம் என்பது
ஒரு காக்கும்  கருவி
காக்கும் உபாயம் தேடும் இடம்

பல  தெய்வங்கள்  அதை
கையில் ஏந்திக்கொண்டு
வணங்கும் பக்தர்களுக்கு வரும்
துன்பங்களையும்
எதிரிகளையும் துவம்சம் செய்கின்றன



 ரிஷிகளும் முனிவர்களும் தண்டம் எனும்
கருவியை தாங்கிகொண்டுதான்
தவம் இயற்றுகிறார்கள்.




அவர்களுடனேயே அதை   கையில் ஏந்திக்கொண்டு
அவர்களை வணங்குபவர்களுக்கு
அருளாசி வழங்குகிறார்கள்.



இறைவனை சரணாகதி செய்யும் போது
ஒரு கோல்   தரையில்
கிடப்பதுபோல்  தரையில்
விழுந்து  வணங்கவேண்டும் .

எப்படி  ஒரு கோல்  யார்  உதவியும்  இன்றி
 நகராமல்  கிடப்பதுபோல்
நாமும்  நம்  அகந்தையை  முற்றிலும்
ஒழிக்கும்விதமாக  சாஷ்டாங்கமாக
நமஸ்காரம்  இறைவனுக்கு  செய்யவேண்டும்
என்பதை உணர்ந்து  இனிமேலாவது
 யாரையும்  தண்டம்  என்று
ஏளனம்   செய்வதை  அனைவரும்
தவிர்க்கவேண்டும்

இதைப்போல்தான்
குருவையும்  வணங்கவேண்டும்

ஏனென்றால்   சத்குருவின்
வடிவில்தான்  இறைவன்
அருள் செய்கின்றான்.



8 comments:

  1. விளக்கம் மிகவும் அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. தண்டத்தைப்பற்றிய இந்தப்பதிவு தண்டமே அல்ல ! அருமை. இனிமை. சிறப்பானது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    //தண்டம் என்பது ஒரு காக்கும் கருவி. காக்கும் உபாயம் தேடும் இடம்//

    OK OK OK OK ;)

    ReplyDelete
  3. படங்கள் எல்லாமே அழகு. அதுவும் அண்ணா வரைந்துள்ள அந்தக்கோதண்ட ராமன் .... அடடா ... என்ன அழகு ! ;)

    ReplyDelete
    Replies
    1. கோதண்டராமன் என்ன அழகு ?
      அழகுதான் கோதண்டராமன்

      Delete
  4. தண்டம்
    அறியாதன அறிந்தேன் ஐயா. நன்றி

    ReplyDelete
    Replies
    1. அறியாதனவற்றை அறிய வைப்பதும்
      தெளியாதவற்றை தெளிய வைக்கும்
      முயற்சியில் சில ஆண்டுகளாக
      இந்த மூடன் முயற்சி செய்கின்றான்.
      சாத்திர உண்மைகளை வாழ்க்கை
      நடைமுறையோடு ஒட்டி செயல்படுத்தினால்
      மனம் செம்மைப்படும். உள்ளத்தில் அமைதி
      பிறக்கும் .செருக்கு நீங்கும்
      அன்பு மலரும். நம் வாழ்வும்
      இன்ப மயமாகும். சிறக்கும்
      வருகை தந்து கருத்துக்களை
      பகிர்ந்து கொள்ளும் ஒரு சிலருக்கு
      நன்றி.(உங்களையும் சேர்த்து)

      Delete