Monday, November 25, 2013

காஞ்சி வரதப்பன்

காஞ்சி வரதப்பன் 




பக்தர்களை  வா வா என்றழைத்து
வரம்பின்றி வரங்களை
அள்ளித் தரும் வள்ளல் அவன்

அத்திகிரி மலைமேல்
நின்றுகொண்டு ஆண்டாண்டு காலமாய்
அடியவர்களை அன்போடு காத்து வரும்
நேயன் அவன்

தன்னை படைத்த நாரணனுக்கு
படைப்பு தொழிலை செய்யும் பிரம்மன்
வேள்வி செய்து கிடைத்த
அழகு மூர்த்தி அவன் .

ஆண்டு முழுவதும் அழகாக
அலங்காரம் கொண்டு பவனி வருவான்
பக்தியோடு பணிவோரின் அகங்காரம் அகற்றிடுவான்

யார் அவன்?
அவன்தான் காஞ்சியிலே
குடி கொண்டிருக்கும்
தேவாதிராஜன், அத்திகிரி  அருளாளன்.
பிரம்மனும் ஆராதித்த பேரருளாளன்.
அடியவர்களோடு நேரில் உரையாடிய
வரதராஜபெருமான்


7 comments:

  1. வரம்பின்றி வரங்களைஅள்ளித் தரும்
    வள்ளல் காஞ்சி வரதனைப் பற்றி
    வண்ணமிகு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தும் உள்ளங்கள் வாழ்க வாழ்கவே.

      Delete
  2. ஆகா... கைவண்ணமும் அற்புதம்...

    வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
  3. ஒரு வயசானவர் வீட்டு வாசலில் கயிற்றுக்கட்டிலில் படுத்தவாறே
    ‘அடே, கஞ்சி வரதப்பா’ என்றாராம். அதைக்கேட்ட ஒரு ராப்பிச்சைக்காரன்: ‘எங்கு வரதப்பா?” ன்னு கேட்டானாம்.

    காஞ்சி வரதனை ‘கஞ்சி வரதன்’ என்றும் சொல்வதுண்டு. இவன் வயிற்றுப்பசிக்கும் குடிக்கும் ’கஞ்சி’ என நினைத்து விட்டான்.

    அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. காஞ்சி வரதனை வரைந்துள்ள கரங்கள் வாழ்க வாழ்கவே ! ;)

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தும் உள்ளங்கள் வாழ்க வாழ்கவே. வருகைக்கு நன்றி

      Delete