Friday, May 23, 2014

கணபதியே கணபதியே

கணபதியே கணபதியே 




ஓவியம் -தி. .ரா.பட்டாபிராமன் 

கணபதியே  கணபதியே
வளமாய் வாழ தருவாய்
நவநிதியே

ஆலயத்திலும் இருப்பாய்
ஆளில்லா ஆற்றங்கரையினிலும் இருப்பாய்

புகலில்லா மனிதருக்கு
புகலும்  நீயே இகழே வாராது
காத்து பாரோர் புகழும்
வாழ்வை அளிப்பவனும் நீயே

மஞ்சளில் பிடித்து
வைத்தாலும் நீ வருவாய்
மண்ணில் பிடித்து
வைத்தாலும் நீ வருவாய்
உன் மனதினில் இடம் பிடிக்க
நீ வரமருள்வாய்.  

6 comments:

  1. எளிமையான கடவுள்! ஓவியம் அசத்தல்.

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி DD
      நிச்சயம் இருக்கின்றான்.ஏனென்றால்
      அவன் கணங்களின் தலைவன் அல்லவா?

      Delete
  3. விநாயகரைப் பற்றிய பாடல் இனிமை.
    படம் கண்ணுக்குள் நிற்கின்றது.
    மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. பிறரை மகிழ்விப்பதில்தான் நம் மகிழ்ச்சி
      அடங்கியிருக்கிறது. கணபதியைக் கண்டாலும், நினைத்தாலும் அக்கணமே இன்பம் தருபவன் அவன்.

      Delete