Thursday, July 17, 2014

எல்லா பிணிகளுக்கும் ஒரே மருந்து?

எல்லா பிணிகளுக்கும் ஒரே மருந்து?





நாம் இந்த உலகில் ஒரு உடலில்
பிறந்துவிட்டோமே
அதுவே ஒரு பிணி

அதுதான் பிறவிப்பிணி

அதனுடன் இந்த உடலில் கூடவே ஒட்டிக்கொண்டு
இந்த உடலை விட்டு உயிர் நீங்கும்வரை
தங்கி நம்மை துன்புறுத்துவது பசிப்பிணி

இந்த பிறவிப்பிணியும் பசிப்பிணியும் நமக்கு
அற்பமான சில இன்பங்களை தருவதுபோல் போக்கு காட்டி
வாழ்வில் பெரும்பகுதியை நம்முடைய உழைப்பையும் சக்தியையும்
உறிஞ்சுவதோடு நம்மை மீளாத துன்பத்திலேயே எப்போதும் வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை

இதைத் தவிர நம்மை எப்போதும் தன் கட்டுப்பாட்டிலேயே
வைத்துக்கொண்டு அதன் போக்கில்
ஆட்டிவைத்துக்கொண்டிருக்கும்
மனதை பற்றிக்கொண்ட பிணிகள் வேறு.

அதை எத்தனை பிணிகள் பற்றிக்கொண்டிருக்கின்றன என்று
நம்மை படைத்த ப்ரம்மாவிர்க்கே தெரியாது
.

அவரே  இந்த புவியில் பலமுறை வந்து தவம் செய்து பிணிகள்
நீங்கப்பெற்று பல திருக்கோயில்களை அமைத்து
தெய்வங்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார். என்பது
அனைவருக்கும் தெரியும்.

இந்த உடல்தான் எல்லாம் என்று  நினைத்துக்கொண்டு
அதன் மீது பற்றுக்கொண்டு அதை பராமரிக்கும் நாம்
அதில் உண்டாகும் ஏராளமான
பிணிகளுக்கு வைத்தியம் செய்வதிலேயே
ஆயுள் கழிந்துவிடுகிறது

அப்படியும் அந்த உடல் இவ்வுலகில் தங்குவதுமில்லை.
நோயின்றி முழுவதுமாக குணமடைவதும் இல்லை.

பல பிணிகளுக்கு மருந்தே இல்லை .
பலருக்கு என்ன பிணிகள் என்று கண்டு அறிவதே
பெரும் சிக்கலாகி விடுகிறது.

கணக்கற்ற பிணிகள் ,கணக்கற்ற வைத்தியர்கள்
முடிவில் உடலில் நோய் என்ற நிலை  மாறி உடலே
நோயாகிவிடுகிறது.

எனவே எல்லாப் பிணிகளுக்கும்
ஒரே மருந்து ராம நாமம்தான்


அதை ஓதினால் போதும்
எல்லாப் பிணிகளும் ஓடிவிடும்.

இந்த மனம்  மற்றும் உடல்மீது உள்ள
பற்றுக்கள் அனைத்தும்  அற்றுப்போய்விடும்.

பல கோடி பிறவிகளில் நாம் சேர்த்து வைத்த பாவ மூட்டைகள் தீயில்
விழுந்த பஞ்சுப்பொதிகள் போல் எரிந்து சாம்பலாகிவிடும்.

நம்பிக்கையோடு சொல்லுங்கள் ராம நாமம்
நலம் பெறுங்கள்.

உங்களை கவசம் போல் காக்கும்
ராம நாமத்தின் மகிமை உணர்ந்தவன்
என்ற முறையில் மீண்டும் சொல்கின்றேன்.

ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயராம் எப்போதும்,எந்நேரமும் 

4 comments:

  1. ராம நாமத்தைச் சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்...

    ReplyDelete
  2. //பல பிணிகளுக்கு மருந்தே இல்லை! பலருக்கு என்ன பிணிகள் என்று கண்டு அறிவதே பெரும் சிக்கலாகி விடுகின்றது!.//

    எனவே எல்லாப் பிணிகளுக்கும் - ஒரே மருத்துவன் ஸ்ரீராமன் தான்!..

    ஓம் ஸ்ரீராம் ஜயராம் ஜயராம்!..

    ReplyDelete
  3. சிறந்த மருந்து ஐயா.... நன்றி...

    ReplyDelete