Tuesday, August 19, 2014

வருவாய் வருவாய் வடிவழகன் கண்ணா

வருவாய் வருவாய் 
வடிவழகன் கண்ணா 

தருவாய் தருவாய்
தடையில்லா ஆனந்தம்
தரணியில் உள்ள
மாந்தர்கள் அனைவருக்கும்

வசுதேவர் தேவகி மைந்தனாய் நடுநிசியில்
சிறையில் பூத்த ஒளி சுடரே

கோகுலத்தில் யசோதை நந்தகோபன்
மகனாய் வலம் வந்து லீலைகள்
புரிந்த அழகுத் தெய்வமே


மதம் என்னும் பேய் பிடித்து
அலைகின்றார் மக்கள். அன்பின்றி
அனைவருக்கும் ஆற்றொணா
 கொடுமைகள் செய்கின்றார்.

அன்பின்றி ஆணவத்துடன் நடக்கின்றார்
பண்பின்றி பாதகங்கள் செய்கின்றார்.

எத்தனையோ  கோடி இன்பங்கள் நீ 
அளித்திருந்தும் வாழ்நாள் முழுவதும்
அழுது புலம்பித் திரிகின்றார்.

அனைவருக்கும் நல்ல புத்தி கொடு
தீமைகளை எதிர்த்து ஒழிக்க சக்தி கொடு

உந்தன் திருவடியில் என்றும்
மாறாத பக்தி கொடு.

மணம்  வீசும் மலர்களால்
உன்னை அலங்கரித்தேன்



அறுசுவை பண்டமும் இனிய
கனிகளும்உனக்களித்தேன்.

உந்தன் அழகு திருமுகத்தை
கண்டு உளம் களித்தேன்.

கண்ணா நீ என்றென்றும்
என் இதயத்தை விட்டு
நீங்காதிருந்து இன்பம் தருவாய். 

No comments:

Post a Comment