Thursday, August 7, 2014

காண்போரை மயக்கும் கண்ணன்


காண்போரை மயக்கும் கண்ணன் 

ஒளிப் பிழம்பாய் இருக்கும் இறைவனை
நம்முடைய ஊனக் கண்களினால்
காண இயலாது

தன்  பக்தர்களின் மேல் அளவுகடந்த
அன்பு கொண்ட பரந்தாமன் வர்ணிக்க இயலாத
வடிவழகனாக  திருக்கோயில்களில்
காட்சி தந்து நம்மையெல்லாம்
மகிழ்விக்கின்றான்.

நம் மனதின் தாபம் போக்கி
அறியாமையினால் செய்த பாபம் போக்கி
இறையடியார்களின்  பெருமை உணராது
அவமதித்ததின்  விளைவாக அடைந்த சாபம் போக்கி
வேதனை நீக்கி நன்மைகளை அளிக்கும்
பரந்தாமனின் வித்தியாசமான் வடிவம்
கர்நாடக மாநிலத்தில் உள்ளது.

ஒரு கையில் அபய  ஹஸ்தமும், மறு கையில் வரத  ஹஸ்தமும் 
கொண்டு பொதுவாக காட்சி தரும் பரமன் இங்கு சங்கும் சக்கரமும் கையில் ஏந்தி காட்சி தருகின்றான்.




அவன் மீது கொண்ட அபரிமிதமான பக்தியினால்  அவனோடு கலந்துவிட்ட ஆண்டாளின் வடிவம் அற்புதம். கல்லிலே வடிக்கப்பட்ட உயிரோவியம்
கண்டு இன்புறவேண்டும்.





மேற்படி படங்களுக்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

https://plus.google.com/u/0/101778389614258257071/posts/BzWP1FdpuNg?cfem=1&pid=5843266241727684674&oid=101778389614258257071

1 comment:

  1. கர்நாடகக் கண்ணன் அறிந்தேன் நன்றி ஐயா

    ReplyDelete